புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு' Poll_c10பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு' Poll_m10பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு' Poll_c10 
42 Posts - 63%
heezulia
பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு' Poll_c10பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு' Poll_m10பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு' Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு' Poll_c10பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு' Poll_m10பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு' Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு' Poll_c10பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு' Poll_m10பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு' Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு'


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 19, 2012 9:02 am

`மூடி வைத்தால் போதும், அதைத் தேடிக் கண்டுபிடிப்பதிலே மனிதன் தன் முழு நேரத்தையும் செலவிட்டுக் கொண்டிருப்பான்'-என்ற தத்துவ வார்த்தை அடிப்படையில் பேசக்கூட வாய்ப்பின்றி மூடி வைக்கப்பட்டு, மக்களின் சிந்தனையில் பெரும் நேரத்தை அபகரித்துக் கொண்டிருந்தது, செக்ஸ் விஷயங்கள்.

`அதை மூடி வைக்காமல் விஞ்ஞான ரீதியாக திறந்து வைத்தாலும் மக்கள் பார்த்து தெளிவடைவார்கள்' என்பதை உணர்த்தும் விதத்தில் அமைந்தது, சென்னையில் நடந்த 6-வது சர்வதேச பாலியல் மற்றும் குழந்தை பேறு மாநாட்டு கண்காட்சி!

`அப்படியா' என்ற ஆச்சரியமும், `அடடே தெரியாமல் போய்விட்டதே இந்த விஷயம்' என்ற வியப்பும், `இதுக்கும் சிசிக்சை இருக்குதா' என்ற மகிழ்வும் ஒரு சேர கண்காட்சியில் ஏற்பட, இன்னொரு புறத்தில் ஆயிரம் டாக்டர்கள் கலந்து கொண்ட மாநாடும் நடந்து கொண்டிருந்தது.

மாநாட்டை நடத்திய பாலியல் நிபுணர் டாக்டர் டி.காமராஜ் `அதிர்ச்சி குண்டை' மாநாட்டில் வீசினார். அது, `ஆண்மைக்குறைவு கொண்டவர்கள் உலகிலே அதிகமாக இருக்கும் நாடு' என்ற நிலையை 2020-ம் ஆண்டில் இந்தியா பெற்று விடும்' என்பது!

அதற்குரிய காரணங்களை அவர் அடுக்கிய போது மாநாட்டில் அதிர்ச்சி அலை அடிக்கத்தான் செய்தது.

"உலகிலேயே மக்கள் தொகை அதிகம் சீனாவில்தான் என்றாலும் அங்குள்ள பெண்கள் ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், அவர்களுக்கு இனப்பெருக்கம் ஒரு தண்டனைக்குரிய விஷயம் என்பதுபோல் ஆகிவிட்டது. அதனால் இயல்பாகவே அவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்துவிட்டது. மேலும் சீனாவில் இளைஞர்களைவிட நடுத்தர வயதினர்களும், முதியவர்களும் அதிகம். அதனால் ஆண்மைக்குறைவு என்ற பிரச்சினை, சீனா மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இல்லை.

இந்தியாவில் இளைஞர்கள் அதிகம். கேரளாவைத் தவிர மற்ற மாநிலங்களில் எல்லாம் ஆண்கள் அதிகம். இனப்பெருக்க விஷயத்தில் பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இங்கே கிடையாது. அதனால் செக்ஸ் ஈடுபாடு இந்தியர்களுக்கு அதிகம்.

பெரும்பான்மையான ஆண்களால் நிறைந்த இந்தியாவில் இப்போது சர்க்கரை நோய் தாறுமாறாக உயர்ந்துகொண்டிருக்கிறது. அதனால் உலகிலே சர்க்கரை நோயாளிகளின் தலைநகர் என்ற இடத்தை இந்தியா பிடிக்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்களில் 50 சதவீதம் பேர் ஆண்மைக்குறைவால் பாதிக்கப்படுவார்கள் என்பது மருத்துவ ரீதியான கணிப்பாகும். இப்படிப் பட்ட பல்வேறு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பார்த்தால் அடுத்த பத்தாண்டுகளில் உலகிலே ஆண்மைக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள்.

இப்போதே விழிப்புணர்வு அடைந்து, ஆண்மைக் குறைவு வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். வந்தாலும் அதற்கான சிகிச்சைகளை உடனடியாக முறைப்படி பெற வேண்டும். அதற்கான சூழ்நிலைகள் பற்றித்தான் இந்த மாநாட்டில் பெருமளவு விவாதித்தோம்.

30 முதல் 50 வயதுவரை உள்ளவர்களுக்குத்தான் ஆண்மைக்குறைவு பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது. அதனால் அந்த வயதினர் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணவு முறைகளை சீரமைத்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், நீரிழிவு, மனஅழுத்தம் இன்றி வாழும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். தேவையான தூக்கமும், தேவையான ஓய்வும் மிக முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். உடல் குண்டாகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்..''-என்றார். மாநாட்டில் வெளிநாட்டு பாலியல் நிபுணர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

***

மாநாட்டிலும், கண்காட்சியிலும் சாதாரண மக்களில் பெரும்பாலானவர்களுக்கு எழுந்த ஒரு கேள்வி இது!

அது..

`கணவன்- மனைவி இருவரும் சுதந்திரமாக செக்ஸ் இன்பத்தை அனுபவிக்க தகுதியானவர்கள். இருவருக்குமே அந்த வேட்கையும், விருப்பமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கணவர் தனக்கு விருப்பம் ஏற்படும்போது மட்டும் ஆர்வத்தை வெளிப்படுத்தி, மனைவியை அழைக்கிறார். மனைவியோ தனக்கு விருப்பம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த தயங்குகிறாள். இதனால் அவள் விரும்பும்போது, அவள் ஆசை நிறைவேறுவதில்லை. இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது? மனைவி தன் விருப்பத்தை கணவரிடம் எப்படி தெரிவிப்பது?' என்ற கேள்விதான் அது.

மாநாட்டிற்கு தலைமைதாங்கிய சிங்கப்பூரை சேர்ந்த சர்வதேச பாலியல் நிபுணர் டாக்டர் கணேசன் அடைக்கண், இது தொடர்பான பல சந்தேகங்களுக்கு விடையளிக்க தயார் ஆனார்.

* மனைவிக்கு `ஆசை' ஏற்படுகிறது. அதை எப்படி கணவரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் தயங்குகிறார்களே?

தயக்கம் என்பது ஒன்று அல்லது இரண்டு முறைதான். அதற்கு மேல் தயக்கம் போய்விடும். சகஜம் வந்துவிடும். கணவரை முகத்திற்கு நேராகப் பார்த்து தனது ஆசையை வெளிப்படுத்த மனைவி தயங்கினால், ஒரு எஸ்.எம்.எஸ். மூலம் தன் ஆசையை வெளிப்படுத்தலாம். பட்டும்படாமலும் கோடிட்டு காட்டும் வகையில் ஈ.மெயில் தட்டி விடலாம். ஒரு துண்டு சீட்டில் எழுதி அவர் கையில் கொடுக்கலாம். தேவையற்ற தயக்கம்தான் இதில் `ஸ்டார்ட்டிங் டிரபிளை' உருவாக்குகிறது.

* மனைவி மனதளவில் தயாராகிவிடும்போது, அவள் உடலைப் பார்த்து கணவரால் அவள் விருப்பத்தை புரிந்துகொள்ள முடியுமா?

கணவர் அதற்குரிய மனநிலையில் இருந்தால், அதை அவரால் புரிந்துகொள்ள முடியும். மனைவி எப்போதும் பேசுவதற்கும், அப்போது பேசுவதற்கும்- மனைவி எப்போதும் காபி தருவதற்கும் - அப்போது தருவதற்கும், மனைவி எப்போதும் அருகில் நின்று தொடுவதற்கும் - அப்போது தொடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். மனைவியின் குரல், உடல்மொழி, அணுகுமுறை போன்றவைகள் மூலம் கணவரால் அதை உணரமுடியும்.

* சரி மனைவியின் இத்தகைய `விருப்பம்' கணவருக்கு புரிகிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த நேரத்தில் அதைவிட முக்கியமானதாக இன்னொன் றை அவர் கருதினால், மனைவியின் `விருப்பத்தை' கண்டுகொள்ளாதவர்போல் இருந்துவிடலாமா? அல்லது `உன் விருப்பம் எனக்கு புரிகிறது. ஆனால் இன்னொரு நேரத்தில் வைத்துக்கொள்ளலாம்` என்று தவிர்க்கலாமா?

மனைவியின் விருப்பத்தை கண்டு கொள்ளாதவர்போல் இருந்து விடக்கூடாது. அது தவறு. `ஒரு முத்தம்... ஒரு தழுவல்.. வருடலைக் கொடுத்துவிட்டு, இப்போது வேண்டாம். இன்னொரு நேரத்தில் வைத்துக்கொள்ளலாம்' என்பது நாகரீகம். ஆனால், `ஆகா இது எனக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பு. இதற்காகத்தானே நான் காத்திருந்தேன்' என்று கூறிக்கொண்டு, தலைபோகிற வேலையாக இருந்தாலும் அதை தள்ளிவைத்துக்கொண்டு மனைவியை அள்ளிக்கொண்டால், அளவிட முடியாத ஆத்ம நெருக்கம் அந்த கணவன்- மனைவி இடையே ஏற்படும்.

* மனைவி கண்டுகொள்ளாமலே இருந்தால், அவளுக்கு தன் விருப்பத்தை கணவர் எப்படி எல்லாம் தெரிவிக்கலாம்?


ரொமான்ஸ் புத்தகங்கள் வாசிக்கச் சொல்லலாம். அதற்குரிய படங்களை காணவைக்கலாம். மகிழ்ச்சி நிறைந்த அவர்கள் புதுமண வாழ்க்கை நாட்களை அசைபோடச் செய்யலாம். காலையில் இருந்தே அவரது செயல்களில் இருக்கும் சிறப்பை மட்டும் குறிப்பிட்டு பாராட்டிக்கொண்டே இருக்கலாம். திடீரென்று கட்டிப்பிடித்தல், செல்லமாக கடித்தல் இப்படி எல்லாம் தொடரலாம். மனைவியின் உடலும், மனமும் `ஓ.கே' என்று ஏற்றுக்கொண்டால் அதை சிக்னல் மூலம் அவளே வெளிப்படுத்த தொடங்கிவிடுவாள்.

* கணவரது ஆசையை நிறைவேற்றாமல் மனைவி செக்சில் இருந்து விடுபட நினைப்பதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?


தலைவலி, சோர்வு, அதிகாலையிலே எழ வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்பது போன்ற காரணங்களால் முதல் நாள் இரவில் செக்சை தவிர்க்க நினைக்கிறார்கள். ஆனால் திருப்தியான தாம்பத்யம் தலைவலி போன்ற உபாதைகளையும், சோர்வையும் விரட்டி உற்சாகத்தை தரும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

* திருப்தியான தாம்பத்யத்தில் உருவாகும் அதிகபட்ச பலன் என்று எதை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?

இருவரும் முழு திருப்திபடும்போது, இன்னொரு தவறான உறவு இருவருக்குமே ஏற்படாது. மனநெருக்கடியின்றி மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். இருவரின் செக்ஸ் திறன் மேம்படும். அது அவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். ஆனந்தமாக வாழ்வார்கள்.



பாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக