புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
1 Post - 1%
prajai
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
1 Post - 1%
prajai
ஒருவனின் கதை ....! I_vote_lcapஒருவனின் கதை ....! I_voting_barஒருவனின் கதை ....! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவனின் கதை ....!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 21, 2011 4:12 pm

ஒருவனின் கதை ....! AWIN0120062-29

ஒரு கரப்பான்பூச்சியைக் கொல்வதென்ன சாதாரண காரியமா..? அதுவும் என் போன்றொரு
பயந்தாங்கொள்ளிக்கு. என் வீட்டின் பரண்தான் அதன் வாழ்விடமாக இருந்திருக்க
வேண்டும். எங்கள் வீட்டு ஓனர் ஒரு மாங்கா மடையன். ஒன்றாம் தேதியானால்,
மிகச் சரியாக நான் பல்விளக்கி, வாய் கொப்பளிக்கும் நேரத்தில் வாட‌கை
ரசீதோடு வந்து நின்று சிரிப்பான். வீட்டில் ஏதாவது குறை சொன்னால் மட்டும்
தண்ணீரில் போட்ட கல்லாகிவிடுவான் கல்லூளி மங்கன். நான் இங்கு வந்து
குடியேறிய மூன்று வருடங்களின் ஒரு பொங்கலுக்குக் கூட வெள்ளையடிக்கவில்லை.
இத்தனைக்கும் அது ஒரு முன்னறை மற்றும் ஒரு சமையலறை கொண்ட
மிகச்சிறியவீடுதான். அதை வீடு என்று சொல்வதே ”வீடு” என்ற சொல்லுக்கு
அவமானம்.

என்னைப் போன்ற பயந்தாங்கொள்ளி அவனுக்கு
குடித்தனக்காரானாகக் கிடைத்தற்கு, முன் ஜனனத்தில் அவன் புண்ணியம் ஏதாவது
செய்திருக்க வேண்டும். அதானாலேயே அவன் என் தலையில் மிளகாய் அரைத்துக்
கொண்டிருக்கின்றான். நான் பெரும்பாலும் அவனிடம் வீட்டைப்பற்றிய குறைகளைச்
சொன்னதேயில்லை. சொன்னாலும் அதே தண்ணீரில் போடப்பட்ட‌ கல் கதைதான். அதனால்
அவனை மேற்சொன்ன வார்த்தைகளிலும், கொஞ்சம் கோபம் அதிகமானால் எனக்கு தெரிந்த
மிகச் சிற்சில கெட்ட வார்த்தைகளிலும் அவனைத்திட்டி வஞ்சம் தீர்த்துக்
கொள்வேன். சில சமயம் அவனுடை செருப்பை என் வெற்றுக்காலால் மிதித்தும்
எத்திவிட்டும் பழி தீர்ப்பேன். சிலசமயம தலையணையை அவனாக பாவித்து, ஓங்கி ஒரு
குத்து விட்டு கோபத்தை தீர்த்துக் கொள்வேன்.இப்படி ஒருவனிடம் எப்படி என்
கரப்பான் பூச்சித் தொல்லைப் பிரச்சனையைச் சொல்ல முடியும். ..?

ஏன் சொல்ல வேண்டும்..? நீயே
பூச்சிக்கொல்லி மருந்து வாங்க வேண்டியதுதானே ..! என்ற கேள்வி உங்களுக்கு
எழலாம். ஆனால் பரண் மேலிருக்கும் பொருட்களில்ஒரு குண்டுமணி கூட எனக்குச்
சொந்தமானது கிடையாது. பிறகெப்படி அந்த கரப்பான்பூச்சி மட்டும் என்னுடைய
சொத்தாகும்..?”பேகான் ஸ்பிரே” வாங்கலாம்தான். ஆனால், வேலை இல்லாத நான் அந்த
அறுபது ரூபாயில் ஒரு நாள் முழுவதும் சாப்பிட்டு விடுவேன் என்பதால் அந்த
திட்டம் இல்லை. அதனாலேயே ஒரு கட்டையோ அல்லது கையில் சிக்கும் ஏதோ ஒன்றை
வைத்து அதனை வதம் செய்து விட திட்டம் வகுத்தேன். ஆனால், அந்த கரப்பானைப்
பார்த்தவுடன் வரும் அருவருப்பு கலந்த பயத்தினால் அதை செயல்படுத்த முடியாமல்
தவித்தேன்.

அந்த கரப்பான்பூச்சிதான் பாவம். ஒரு ஹோட்டலிலோ அல்லது
ஏதோ ஒரு பணக்கார வீட்டின் சமையலறையிலோ, ஒரு ஸ்டோர் ரூமிலோ தங்கியிருந்தால்
அதற்கு சாப்பாடாவது கிடைத்திருக்கும். ஆனால் என் வீட்டில் எனக்கே
வழியில்லை. அதற்கு எங்கிருந்து சாப்பாடு கிடைக்கின்றது...? ஒரு வேளை என்
வீட்டை தங்குமிடமகவும் இனப்பெருக்கம் செய்யுமிடமாகவும் மட்டும்
உபயோகிக்கித்துக் கொண்டிருக்கக் கூடும். மனிதனாக இருந்தாலாவது, வாடகையில்
பங்கு பணம் கேட்கலாம். அந்த பாழாய்ப்போன கரப்பானிடம் எதைக் கேட்பது..?
கேட்டாலும் கொடுத்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கும். இதை நினைக்கும் போது
மிக ஆவேசமாக தரையிலோ சுவற்றிலோ ஓங்கி குத்திகொள்வேன்.

சென்றவாரம் கூட, சமையலறையின் கதவிடுக்கில் அந்த
துரோகியைப் பார்த்தேன். உடனே ஓடிச்சென்று கதவைச் சாத்தினால் அது இறந்து
விடுமென்றெண்ணி, மிக தைரியமாக ஓடிச் சென்று சாத்தினேன். சனியன்
தப்பிவிட்டது. மாறாக, என் கையில் பலத்த அடி பட்டு, சதை கிழிந்து ரத்தம்
வடியத்ட் தொடங்கி விட்டது. பின் என் வீட்டு எதிரேயுள்ள டீக் கடையில்
காபிப்பொடி வாங்கி போட்டுக் கொண்ட பின்தான் இரத்தம் நின்றது. டீக் கடைக்
காரர் என்னை நாயைப் பார்ப்பது போல் பார்த்தது வேறு விடயம். அனைத்திற்கும்
காரணம் அந்த கருமம் பிடித்த கரப்பான் பூச்சிதான். அந்த சனியனை எப்படியாவது
கொல்ல வேண்டும்.

எப்போதாவது என் வீட்டருகே உள்ள ஃபர்னிசசர் கடையின்
ஷோகேஸ் டிவி பார்ப்பதுண்டு. பெரும்பாலும் அங்கு கிரிக்கெட்தான் ஓடும்.
எனக்கோ அந்த பந்து விளையாட்டு பிடிப்பதில்லை. கிரிக்கெட் இல்லாத நாட்களில்
சில சமயம் அனிமல் பிளனட், டிஸ்கவரி போன்ற சேனலகளைப் போடுவார் அந்த கடையின்
முதலாளி. அந்த பாழாய்ப்போன சேனலில் கூட சிங்கத்தை எப்பிடி பிடிப்பது,
பாம்புகளை எப்படி பிடிப்பது என்றே போடுகின்றனர். இந்த கரப்பான் பூச்சியை
எப்படி கொல்வது..? என்று என்றாவது ஒரு நிகழ்ச்சி போடுவார்களா என்று எதிர்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவர்களும் கைவிட்டு என் காலை வாரி விட்டு விட்டார்கள் பாவிகள்.

நான்
பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியில் செல்வதில்லை. ஏனெனில் வேலை தேட
எந்தவொரு அலுவலகமும் திறந்திருக்காது. அன்று மட்டும் எனக்கு காலை 11
மணிக்குதான் விடியும். அன்று ஒரு நாளாவது காலைச் சாப்பாட்டுக்கான பணத்தை
மிச்சம் செய்ய வேண்டியே அவ்வழக்கம். நான் உறங்கும் போது அந்த கரப்பான் என் மீது ஏறி விளையாடுமோ
என்ற அச்சம் வருகின்றது. நான் எழுந்த பிறகு அதை பார்ப்பதற்கு பகீரத தவம்
செய்ய வேண்டியிருக்கின்றது. ஆனால், மற்ற நாட்களில் அது சகஜமாக ஏதோ என் அறை
உறவு போல சகஜமாக முன்னறையில் உலா வருகின்றது. உற்சாகமான சில சம்யங்களில்
பறந்து கொண்டு அட்டூழியம் செய்கின்றது.
அநேகமாக,நான் பயந்தாங்கொள்ளி என்று அதனிடம் யாராவது சொல்லியிருக்கக்கூடும்.

அது
இனப்பெருக்கம் செய்வது போலவும் தோணவில்லை.துணை வேண்டுமே.. ! நான்
பார்த்தவரையில் அது ஒன்று மட்டுமே என் சமையலறையின் ராஜாவாக இருந்து
கொண்டிருக்கிறது. அதன் ராணிகளையோ வாரிசுகளையோ யாரையும் நான் இதுவரையில்
பர்த்ததே கிடையாது. அதற்கு தேவையான ஏதோ ஒன்று என் அறையில் இருக்க வேண்டும்.
அந்த பொருள் எதுவெனத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதைக் கொல்ல வேண்டும் என்ற
எண்ணத்தை விட‌
சற்றே மேலோங்கி நிற்பதை தற்போது அடிக்கடி உணர்கின்றேன். அதை ஏன் கொல்ல வேண்டும் என்ற எண்ணமும்.
ஆனால் ஏதேதோ காரணம் சொல்லி என்னை, நானே சமாதானம் செய்து கொள்கிறேன். கொலைவெறி..!

அந்த
கரப்பான் பூச்சியால் என் நிம்மதியே போய்விட்டது. காதலிப்பவன் தன் காதலியை
நினைத்துக் கொண்டிருப்ப்தைப் போல எப்போதும் அதன் நினைவாகவே இருக்கின்றது.
சென்றமுறை நேர்முகத் தேர்வு சென்ற போது கூட, ”எக்ஸ்கியூஸ் மீ” என்று
சொல்வதற்கு பதில் “கரப்பான் பூச்சி” என்று சொல்லிவிட்டேன். அந்த தேர்வு
அதிகாரியின் பெயர் ”கருப்பசாமி” என்று இருந்தது என் குற்றமா..? நீக்கி
விட்டார்கள். அந்த கோபத்துடனேயே இரவு வீட்டிற்கு வந்தவுடன் கதவைத்
தாழிட்டுவிட்டு ஒரு பெரிய உலக்கையை கையில் எடுத்துக் கொண்டு அதைக் கெட்ட
வார்த்தையில் திட்டிக் கொண்டே ”வெளியே வா”என்று ஆவேசமாக கத்தி அழைத்துப்
பார்த்தேன். மானங்கெட்ட அந்த கரப்பான்பூச்சி வெளியே வரவேயில்லை. நாளை
வெள்ளைக் கொடியுடன் சென்று சாமாதானமாவது பேசிப் பார்க்க வேண்டும். இன்று
இரவாவது நிம்மதியாக உறங்குவேன் என்றே நினைக்கிறேன்.
-♠ராஜூ♠









z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Nov 21, 2011 4:26 pm

நல்ல நகைச்சுவை கதை ஒருவனின் கதை ....! 224747944 ஒருவனின் கதை ....! 677196
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 21, 2011 4:27 pm

ஒரு கரப்பான்பூச்சிக்கு இவளோ அலபறையா..
நல்ல நகைச்சுவை கதை ஒருவனின் கதை ....! 224747944



கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Nov 21, 2011 6:36 pm

கதை அருமைங்க, ஒருவனின் கதை ....! 224747944 ஒருவனின் கதை ....! 224747944 ஒருவனின் கதை ....! 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒருவனின் கதை ....! 1357389ஒருவனின் கதை ....! 59010615ஒருவனின் கதை ....! Images3ijfஒருவனின் கதை ....! Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 11:47 am

ஒருவனின் கதை ....! 678642 ஒருவனின் கதை ....! 678642 ஒருவனின் கதை ....! 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக