Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒருவனின் கதை ....!
4 posters
Page 1 of 1
ஒருவனின் கதை ....!
![ஒருவனின் கதை ....! AWIN0120062-29](https://2img.net/h/www.critterzone.com/animal-pictures-nature/stock-photos/AWIN0120062-29.jpg)
ஒரு கரப்பான்பூச்சியைக் கொல்வதென்ன சாதாரண காரியமா..? அதுவும் என் போன்றொரு
பயந்தாங்கொள்ளிக்கு. என் வீட்டின் பரண்தான் அதன் வாழ்விடமாக இருந்திருக்க
வேண்டும். எங்கள் வீட்டு ஓனர் ஒரு மாங்கா மடையன். ஒன்றாம் தேதியானால்,
மிகச் சரியாக நான் பல்விளக்கி, வாய் கொப்பளிக்கும் நேரத்தில் வாடகை
ரசீதோடு வந்து நின்று சிரிப்பான். வீட்டில் ஏதாவது குறை சொன்னால் மட்டும்
தண்ணீரில் போட்ட கல்லாகிவிடுவான் கல்லூளி மங்கன். நான் இங்கு வந்து
குடியேறிய மூன்று வருடங்களின் ஒரு பொங்கலுக்குக் கூட வெள்ளையடிக்கவில்லை.
இத்தனைக்கும் அது ஒரு முன்னறை மற்றும் ஒரு சமையலறை கொண்ட
மிகச்சிறியவீடுதான். அதை வீடு என்று சொல்வதே ”வீடு” என்ற சொல்லுக்கு
அவமானம்.
என்னைப் போன்ற பயந்தாங்கொள்ளி அவனுக்கு
குடித்தனக்காரானாகக் கிடைத்தற்கு, முன் ஜனனத்தில் அவன் புண்ணியம் ஏதாவது
செய்திருக்க வேண்டும். அதானாலேயே அவன் என் தலையில் மிளகாய் அரைத்துக்
கொண்டிருக்கின்றான். நான் பெரும்பாலும் அவனிடம் வீட்டைப்பற்றிய குறைகளைச்
சொன்னதேயில்லை. சொன்னாலும் அதே தண்ணீரில் போடப்பட்ட கல் கதைதான். அதனால்
அவனை மேற்சொன்ன வார்த்தைகளிலும், கொஞ்சம் கோபம் அதிகமானால் எனக்கு தெரிந்த
மிகச் சிற்சில கெட்ட வார்த்தைகளிலும் அவனைத்திட்டி வஞ்சம் தீர்த்துக்
கொள்வேன். சில சமயம் அவனுடை செருப்பை என் வெற்றுக்காலால் மிதித்தும்
எத்திவிட்டும் பழி தீர்ப்பேன். சிலசமயம தலையணையை அவனாக பாவித்து, ஓங்கி ஒரு
குத்து விட்டு கோபத்தை தீர்த்துக் கொள்வேன்.இப்படி ஒருவனிடம் எப்படி என்
கரப்பான் பூச்சித் தொல்லைப் பிரச்சனையைச் சொல்ல முடியும். ..?
ஏன் சொல்ல வேண்டும்..? நீயே
பூச்சிக்கொல்லி மருந்து வாங்க வேண்டியதுதானே ..! என்ற கேள்வி உங்களுக்கு
எழலாம். ஆனால் பரண் மேலிருக்கும் பொருட்களில்ஒரு குண்டுமணி கூட எனக்குச்
சொந்தமானது கிடையாது. பிறகெப்படி அந்த கரப்பான்பூச்சி மட்டும் என்னுடைய
சொத்தாகும்..?”பேகான் ஸ்பிரே” வாங்கலாம்தான். ஆனால், வேலை இல்லாத நான் அந்த
அறுபது ரூபாயில் ஒரு நாள் முழுவதும் சாப்பிட்டு விடுவேன் என்பதால் அந்த
திட்டம் இல்லை. அதனாலேயே ஒரு கட்டையோ அல்லது கையில் சிக்கும் ஏதோ ஒன்றை
வைத்து அதனை வதம் செய்து விட திட்டம் வகுத்தேன். ஆனால், அந்த கரப்பானைப்
பார்த்தவுடன் வரும் அருவருப்பு கலந்த பயத்தினால் அதை செயல்படுத்த முடியாமல்
தவித்தேன்.
அந்த கரப்பான்பூச்சிதான் பாவம். ஒரு ஹோட்டலிலோ அல்லது
ஏதோ ஒரு பணக்கார வீட்டின் சமையலறையிலோ, ஒரு ஸ்டோர் ரூமிலோ தங்கியிருந்தால்
அதற்கு சாப்பாடாவது கிடைத்திருக்கும். ஆனால் என் வீட்டில் எனக்கே
வழியில்லை. அதற்கு எங்கிருந்து சாப்பாடு கிடைக்கின்றது...? ஒரு வேளை என்
வீட்டை தங்குமிடமகவும் இனப்பெருக்கம் செய்யுமிடமாகவும் மட்டும்
உபயோகிக்கித்துக் கொண்டிருக்கக் கூடும். மனிதனாக இருந்தாலாவது, வாடகையில்
பங்கு பணம் கேட்கலாம். அந்த பாழாய்ப்போன கரப்பானிடம் எதைக் கேட்பது..?
கேட்டாலும் கொடுத்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கும். இதை நினைக்கும் போது
மிக ஆவேசமாக தரையிலோ சுவற்றிலோ ஓங்கி குத்திகொள்வேன்.
சென்றவாரம் கூட, சமையலறையின் கதவிடுக்கில் அந்த
துரோகியைப் பார்த்தேன். உடனே ஓடிச்சென்று கதவைச் சாத்தினால் அது இறந்து
விடுமென்றெண்ணி, மிக தைரியமாக ஓடிச் சென்று சாத்தினேன். சனியன்
தப்பிவிட்டது. மாறாக, என் கையில் பலத்த அடி பட்டு, சதை கிழிந்து ரத்தம்
வடியத்ட் தொடங்கி விட்டது. பின் என் வீட்டு எதிரேயுள்ள டீக் கடையில்
காபிப்பொடி வாங்கி போட்டுக் கொண்ட பின்தான் இரத்தம் நின்றது. டீக் கடைக்
காரர் என்னை நாயைப் பார்ப்பது போல் பார்த்தது வேறு விடயம். அனைத்திற்கும்
காரணம் அந்த கருமம் பிடித்த கரப்பான் பூச்சிதான். அந்த சனியனை எப்படியாவது
கொல்ல வேண்டும்.
எப்போதாவது என் வீட்டருகே உள்ள ஃபர்னிசசர் கடையின்
ஷோகேஸ் டிவி பார்ப்பதுண்டு. பெரும்பாலும் அங்கு கிரிக்கெட்தான் ஓடும்.
எனக்கோ அந்த பந்து விளையாட்டு பிடிப்பதில்லை. கிரிக்கெட் இல்லாத நாட்களில்
சில சமயம் அனிமல் பிளனட், டிஸ்கவரி போன்ற சேனலகளைப் போடுவார் அந்த கடையின்
முதலாளி. அந்த பாழாய்ப்போன சேனலில் கூட சிங்கத்தை எப்பிடி பிடிப்பது,
பாம்புகளை எப்படி பிடிப்பது என்றே போடுகின்றனர். இந்த கரப்பான் பூச்சியை
எப்படி கொல்வது..? என்று என்றாவது ஒரு நிகழ்ச்சி போடுவார்களா என்று எதிர்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவர்களும் கைவிட்டு என் காலை வாரி விட்டு விட்டார்கள் பாவிகள்.
நான்
பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியில் செல்வதில்லை. ஏனெனில் வேலை தேட
எந்தவொரு அலுவலகமும் திறந்திருக்காது. அன்று மட்டும் எனக்கு காலை 11
மணிக்குதான் விடியும். அன்று ஒரு நாளாவது காலைச் சாப்பாட்டுக்கான பணத்தை
மிச்சம் செய்ய வேண்டியே அவ்வழக்கம். நான் உறங்கும் போது அந்த கரப்பான் என் மீது ஏறி விளையாடுமோ
என்ற அச்சம் வருகின்றது. நான் எழுந்த பிறகு அதை பார்ப்பதற்கு பகீரத தவம்
செய்ய வேண்டியிருக்கின்றது. ஆனால், மற்ற நாட்களில் அது சகஜமாக ஏதோ என் அறை
உறவு போல சகஜமாக முன்னறையில் உலா வருகின்றது. உற்சாகமான சில சம்யங்களில்
பறந்து கொண்டு அட்டூழியம் செய்கின்றது.
அநேகமாக,நான் பயந்தாங்கொள்ளி என்று அதனிடம் யாராவது சொல்லியிருக்கக்கூடும்.
அது
இனப்பெருக்கம் செய்வது போலவும் தோணவில்லை.துணை வேண்டுமே.. ! நான்
பார்த்தவரையில் அது ஒன்று மட்டுமே என் சமையலறையின் ராஜாவாக இருந்து
கொண்டிருக்கிறது. அதன் ராணிகளையோ வாரிசுகளையோ யாரையும் நான் இதுவரையில்
பர்த்ததே கிடையாது. அதற்கு தேவையான ஏதோ ஒன்று என் அறையில் இருக்க வேண்டும்.
அந்த பொருள் எதுவெனத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதைக் கொல்ல வேண்டும் என்ற
எண்ணத்தை விட
சற்றே மேலோங்கி நிற்பதை தற்போது அடிக்கடி உணர்கின்றேன். அதை ஏன் கொல்ல வேண்டும் என்ற எண்ணமும்.
ஆனால் ஏதேதோ காரணம் சொல்லி என்னை, நானே சமாதானம் செய்து கொள்கிறேன். கொலைவெறி..!
அந்த
கரப்பான் பூச்சியால் என் நிம்மதியே போய்விட்டது. காதலிப்பவன் தன் காதலியை
நினைத்துக் கொண்டிருப்ப்தைப் போல எப்போதும் அதன் நினைவாகவே இருக்கின்றது.
சென்றமுறை நேர்முகத் தேர்வு சென்ற போது கூட, ”எக்ஸ்கியூஸ் மீ” என்று
சொல்வதற்கு பதில் “கரப்பான் பூச்சி” என்று சொல்லிவிட்டேன். அந்த தேர்வு
அதிகாரியின் பெயர் ”கருப்பசாமி” என்று இருந்தது என் குற்றமா..? நீக்கி
விட்டார்கள். அந்த கோபத்துடனேயே இரவு வீட்டிற்கு வந்தவுடன் கதவைத்
தாழிட்டுவிட்டு ஒரு பெரிய உலக்கையை கையில் எடுத்துக் கொண்டு அதைக் கெட்ட
வார்த்தையில் திட்டிக் கொண்டே ”வெளியே வா”என்று ஆவேசமாக கத்தி அழைத்துப்
பார்த்தேன். மானங்கெட்ட அந்த கரப்பான்பூச்சி வெளியே வரவேயில்லை. நாளை
வெள்ளைக் கொடியுடன் சென்று சாமாதானமாவது பேசிப் பார்க்க வேண்டும். இன்று
இரவாவது நிம்மதியாக உறங்குவேன் என்றே நினைக்கிறேன்.
-♠ராஜூ♠
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஒருவனின் கதை ....!
கதை அருமைங்க,
![ஒருவனின் கதை ....! 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![ஒருவனின் கதை ....! 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![ஒருவனின் கதை ....! 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![ஒருவனின் கதை ....! 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![ஒருவனின் கதை ....! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![ஒருவனின் கதை ....! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![ஒருவனின் கதை ....! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![ஒருவனின் கதை ....! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|