புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
91 Posts - 61%
heezulia
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
7 Posts - 5%
viyasan
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
1 Post - 1%
eraeravi
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
283 Posts - 45%
heezulia
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
19 Posts - 3%
prajai
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_m10நயன்தாரா கள்ள காதலியா ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாரா கள்ள காதலியா ?


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 5:31 pm

கள்ள காதல் என்ற சொல் எந்தெந்த மொழிகளின் அகராதியில் இருக்கிறது என்று என்னால் துல்லியமாக சொல்ல முடியாது. ஆனால் கள்ள காதல் என்ற சொல் கலாசாரம் என்ற மாய வன்முறையால் தனிமனித சுதந்திரத்தை கட்டிப்போட நினைக்கும் சமுதாயத்தினரால் உருவாக்கப்பட்ட அல்லது அவர்களால் உபயோகிக்கப்படும் , எல்லா மொழிகளிலும் இருக்கும் என்று தான் எனக்கு தோன்றுகிறது. தமிழ் மொழியில் அந்த சொல் வளக்கில் இருக்கிறது. தமிழில் கள்ள காதல் என்ற சொல்லுக்கு எப்படி அர்த்தம் கற்பிக்கபடுகிறதென்றால் – திருமணத்திற்கு பிறகு வரும் காதல் கள்ள காதல்.

அடடா என்ன ஒரு டெபனிஷன். இப்படி ஒரு தத்துவம் எத்தனை நகைப்புக்கு உரியது என்பதை நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள்.

முதலில் காதல் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம். உடலும் மனமும் ஒரு சேர ஒன்றின் மீது (அது பெண்ணாகவோ ஆணாகவோ இருக்கலாம். ) பிரியப்படுகிறபொழுது அதை காதல் என்று அழைக்கிறோம். அப்படி பிரியப்பட்டவர்கள் உடலாலும் மனத்தாலும் ஒருவர் ஒருவரோடு ஒன்றியிருப்பார்கள். உடல் தேவை தீர்ந்தவர்கள் அல்லது துறந்தவர்கள் கொள்வது காதலாகாது. அதற்கு இன்னோர் பெயர் இருக்கிறது அன்பு. நான் என் தந்தை மீதோ தாய் மீதோ பாட்டி மீதோ அன்பு கொள்ள முடியும். ஆனால் அவர்களை காதலிக்க முடியாது. ஒருவரை நான் காதலிக்கிறேன் என்றால் என் உடலும் மனமும் அவர் பால் ஈர்க்கப்பட்டுள்ளது என்று தான் பொருள்.

எனவே உடலும் மனமும் இயக்கத்தில் இருக்கும் வரை ஒருவருக்கு காதல் வர வாய்ப்பிருக்கிறது. அதாவது அவர் மரிக்கும் வரை அவர் எத்தருணத்திலும் காதல் வயப்படும் சாத்தியம் இருக்கிறது.

மாற்றாக நம் கலாசாரம் என்ன சொல்கிறதென்றால் ஒருவனோ ஒருத்தியோ திருமணத்திற்கு பின் காதலிக்க கூடாது. அப்படி காதல் என்று ஒன்று அவருக்கு இருந்தால் அது அவர் திருமணம் செய்துகொண்டவரோடு மட்டுமே இருக்க வேண்டும் என்பது. இப்போது கிரிக்கெட் விளையாடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். கிரிக்கெட் என்ற ஆட்டத்தின் விதிகளின் படி உடலும் மனமும் ஒரு சேர இயங்குகிற பொழுது நான் கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று சொல்லலாம்.

இப்போது நான் காதலிக்கிறேன் என்று சொன்னால் காதலிப்பது என்ற செயலுக்கு ஏதாவது இயக்க விதிமுறைகளோ ஒழுங்கோ இருக்கிறதா. காதல் என்பது உடலும் மனமும் ஒரு சேர கொள்ளும் பற்றின் பொருட்டு ஏற்பட்டு தொடருகிற ஒரு நிகழ்வு. அதை யாரும் கற்றுக்கொடுக்கவோ பழகிக்கொள்ளவோ வரைமுறை படுத்தவோ முடியாது. கணவன் மனைவியாக வாழ்கிறார்கள். அப்படி வாழும் எல்லோரும் காதலிக்கிறார்கள் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும். காதலே இல்லாமல் இங்கு பெரும்பான்மையான குடும்பங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம். எனவே காதல் என்பது இயல்பாக அதுவாகவே தோன்றும். தொடரும். ஒருவேளை மறைந்தும் போகும்.

நயன்தாரா கள்ள காதலியா ? Nayantara-pictures-3
தற்போது நயன்தாரா பிரபுதேவா மீது கொண்டுள்ள காதலை (உண்மையில் அவர்கள் காதலிக்கிறார்களா என்பதை நான் கண்டுணர்ந்தவனல்ல) பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அக்காதல் கள்ள காதல் என வகைப்படுத்துகின்றது. சமீபத்திய செய்தியின்படி மாதர் சங்கங்கள் நயன்தாராவுக்கும் அவரின் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அந்த மாதர் சங்கங்கள் நயன்தாரா பிரபுதேவாவை விட்டு விலகிவிடவேண்டும் என எச்சரிக்கிறது.


காரணம் நம் கலாசாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற அபத்தமான தத்துவத்தை பின்பற்றுகிறதாம். எனவே அந்த விதிமுறைகளின்படி திருமணமான பிரபுதேவாவை நயன்தாரா காதலிக்க கூடாதென்று மாதர் சங்கங்கள் கூச்சலிடுகின்றது. நாம் கலாசாரத்துக்கும் சட்டத்துக்கும் கட்டுப்பட்டு வாழவேண்டியவர்கள் தான். ஆனால் இவ்வகையான சட்டமும் கலாசாரமும் தனிமனித சுதந்திரத்தை ஒடுக்குகிறதாகவே அமைந்துவிடுவது தான் வருத்தம். பெங்களூருவில் பப்பில் பெண்கள் குடித்தால் அது கலாசார சீர்கேடு என்று கண்ட மேனிக்கு அடிக்கிறார்கள். ஓரின சேர்க்கை கலாசாரத்துக்கு எதிரானதென்று சட்டத்துக்கு புறம்பானதென்றும் இந்நாள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இப்போது சட்டம் தனிமனித சுதந்திரத்தை கருத்தில் கொண்டு அதற்கு வழிவிட்டிருக்கிறது. எனவே கலாசாரமும் சட்டமும் மாறுதலுக்கு உட்பட்டதென்பதை நாம் உணரவேண்டும்.



நம் சமுதாயத்தில் பெண் பார்க்க வருகிறார்கள். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துவிடுகிறது. உடனே திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அடுத்த கணம் அந்த இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கிவிட வேண்டும். எப்படி? நாம் சமுதாயத்தில் நிறைய ஆண்களை பார்க்கிறோம் பெண்களை பார்க்கிறோம். நிறைய பேரை நமக்கு பிடிக்கிறது. ஆனால் அவர்களை எல்லாம் நாம் காதலிக்கிறோமா? உண்மையில் நமக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் அல்லது ஆண் மீது உடனே இன்ஸ்டன்ட் காதல் வந்துவிடுகிறதா? அப்படி காதல்வயப்பட்டவரை தான் நாம் திருமணம் செய்துகொள்கிறோமா? அப்படியே காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டபின் எத்தனை தம்பதிகளுக்கு அந்த காதல் அதே வேகத்தோடு இறுதி வரை தொடர்ந்து வருகிறது? கலாசாரம் என்ற பெயரில் கடமைக்கு வாழ்ந்து மரித்துப்போக நாம் எல்லாம் அடிமைகள் போல் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.

ஒரு பெண்ணுடனோ ஆணுடனோ சினிமாவுக்கு பீச்சுக்கு போவதும் அவருடன் படுக்கையை பகிர்ந்துகொள்வதும் அவருக்கு வேண்டியவைகளை செய்வதும் பரிசு பொருள் வாங்கிக்கொடுப்பதும் காதலாகிவிடுமா?

மாதர் சங்கங்கள் இந்த பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டிருப்பது பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பின்னால் நின்று பார்க்கிற போது வரவேற்கத்தக்கது. ஆனால் அவர்கள் கலாசாரத்தை மேற்கோள் காட்டி நயன்தாராவை காதலிக்க கூடாது என்று சொல்வதும் அவரின் காதல் கலாசாரத்துக்கு எதிரானது என்று சொல்வதும் அவரின் காதலை கள்ள காதல் என்று வர்ணிப்பதும் தாலிபனிசம் என்று தான் எனக்கு தோன்றுகிறது. இவர்களின் இந்த காதலால் ஒரு குடும்பமும் அவர்களின் பிள்ளைகள் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பது உண்மை என்ற போதும் நயனை காதலிக்க கூடாது என்று கட்டளை போட இங்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதே என் கருத்து.

கலாசாரம் என்று கொக்கரிக்கும் அந்த மாதர் சங்கங்களுக்கு நான் இரண்டு கேள்விகளை முன் வைக்கிறேன்.

1. இப்போது உங்கள் “ஒருவனுக்கு ஒருத்தி “ கலாசாரத்தின் படி நயனின் காதல் கள்ள காதலாகிவிடுகிறது. அம்மா மாதர் சங்க பெரியோர்களே…. தாய்மார்களே அதே கலாசாரம் தான் பெண்கள் புடவை மட்டுமே உடுத்த வேண்டும்...தாலி கட்டிக்கொள்ளவேண்டும்...விதவைகள் வெள்ளை புடவை உடுத்தவேண்டும்.....பெண்கள் ஆபாச உடை உடுத்தக்கூடாது...புகை பிடிக்கக்கூடாது தண்ணி அடிக்க கூடாதென்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இன்று அந்த கலாசாரத்தின் பொய்யான மாய கட்டுப்படுகள் தளர்த்தப்பட்டிருக்கிறதே ஏன். எப்படி? எதற்காக? ஒருவேளை காலப்போக்கில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற உங்கள் கலாசார சித்தாந்தமும் அப்படி காணாமல் போக வாய்ப்பிருக்கிறதல்லவா? நீங்கள் மேற்கோள் காட்டிய அதே கலாசாரம் பெண்கள் ஆபாச உடை உடுத்துவதை வெறுத்திருக்கிறது. ஆனால் இங்கே நயன் சினிமாவில் பிகினி போட்டு நடிக்கலாம். ஆனால் அவரின் நிஜ வாழ்க்கையில் காதலிக்க கூடாது. அதுவும் யுவர் சோ காள்டு கள்ள காதல் கூடவே கூடாது. அப்படித்தானே?

2. உடலின் இயக்கங்களை அடக்குமுறைகளாலும் வன்முறையாலும் கட்டுப்படுத்தலாம். ஆனால் மனம் இயக்கத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியுமா? மனமும் உடலும் ஒரு சேர உருவாகும் காதலை நீங்கள் அடக்குமுறை கொண்டு ஒடுக்க நினைப்பது எத்தனை முட்டாள்தனம். இப்படி சமுதாயத்துக்காவும் மற்றவர்களுக்காகவும் நடித்து நடித்து தனி மனித சுதந்திரம் பறிக்கப்பட்டு உங்கள் கலாசார அடக்குமுறைகளுக்கு பயந்து ஒரு போலி வாழ்க்கை வாழத்தான் இந்த சமுதாயத்தில் நாங்களெல்லாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பது வேதனை அளிக்கிறது.

எனவே திருமணத்திற்கு பிறகு வேறு எவருடனும் காதல் வரக்கூடாதென்று யாரும் கட்டுப்படுத்த முடியாது. அது அவரவர் மன உடல் தேவைகளை பொறுத்தது. அதனால் தங்கள் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் ஏற்படும் சிக்கல்களை அவர்களாகவே உணர்ந்து அவர்களின் வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.. அது அவரவர் சுதந்திரத்துக்கும் மனசாட்சிக்கும் உட்பட்ட விஷயம். மாற்றாக நாம் அவ்வகை காதலை கள்ள காதல் என்று அழகுற வர்ணிப்பதோ அதற்கு எதிராக கலாசாரம் என்ற மாய ஆயுதம் ஏந்துவதோ கோமாளித்தனம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக