Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...)
4 posters
Page 1 of 1
தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...)
பண்பாடுகள்
பல உண்டு பாரினில்
நமக்கும் உண்டு
நல்ல தமிழ்ப் பண்பாடு;
வழி நெடுக இலக்கியத்தில் - அது
வாழ்வதைக் காணலாம்!
இலக்கியங்கள்
வாழ்க்கையின் வசந்தத்தை
நமக்காக
வடிகட்டித் தருபவைகள்....
துய்த்து இன்புறவும்
பயின்று பயன்பெறவும்
ஏராளமுண்டு இலக்கியங்கள்
துய்த்துப் பாரேன்!
மழையில் நனைந்தால்
மரங்களுக்கு
சளிப்பிடிக்குமா என்ன?
நிறைவு என்பது
முற்றுப் புள்ளியின்
மற்றொரு வடிவம்
படிப்பதில் நிறைவு கொள்ளாதே.
இலக்கியம் படிப்பது
இன்றளவில்
பைத்தியம் என்றானது
பொறியியலும், மருத்துவமும்
அறிவியலின் மகத்துவமும்
அழகுத் தமிழில்
செய்திடல் வேண்டும்
பிச்சைக்காரன் கூட
சக்கரவர்த்திக் கனவு காண்கிறான்;
தமிழ் இன்னும்
மொழிகளின் சக்கரவர்த்தியடா!
ஓங்கி வளர்ந்து
சிறந்த மொழியை
ஒதுங்கி வாழ்ந்து
இறந்த மொழியாகிட
அனுமதிக்காதே!
காலம் வென்ற கல்லணை அமைத்து
கட்டடக் கலைக்கு - புதுக்
கட்டியம் கூறிய
தமிழ் தேசமிது!
வற்றிப் போகாத நீர் இறைத்து
முற்றி வளர்ந்த நெல் அறுத்து
முற்றிப் போகாத காய் பறித்து
மூன்று வேளையும் விருந்து வைத்த
மூத்தகுடி நமது!
அரசக் கட்டிலென்றாலும்
அயர்ந்து உறங்குவது
புலவன் என்றால்
அரசனும் கவரி வீசிய
அறிவு தேசமிது!
நீண்ட ஆயுளுக்கான
நெல்லிக்கனி என்றாலும்
தமிழ் வளர்த்த மூதாட்டிக்கு
தாரை வார்த்த
தாராள தேசமிது!
பால் கொடுத்த மார் காயு முன்னே
வாள் கொடுத்து மகனை
போருக்கு போவென அனுப்பிய
வீர தேசமிது!
கட்டடக் கலை வளர்த்து
கருங்கல் சிலை வடித்து
கலைகளுக்கென்று
தலை நிமிர்வு தந்த
தமிழினமிது!
மீண்டும் இது போல்
படைக்க இயலாத
மீனாட்சி கோவில்;
உள்ளூர் என்பதால் - இந்த
உலகப் பெருமிதத்தை
ஒருமுறைகூடப்
பார்க்காதாரும் உண்டு!
அந்த அதிசயம் பற்றி
எந்தன் அனுபவம்
உரைக்கிறேன் கேள்,
வானம் நோக்கிப் பறக்கும்
வல்லூறுகூட கொஞ்சம்
வாய் பிளந்து பார்க்கும்
வானுயர் கோபுரங்கள்.......
உயிரை
உள்ளே வைத்துத் தைத்து
உருவம் தந்த சிலைகள்.....
கண்டு திரும்பிய போது
எனக்கும் தெரியாமல்
உயிரின் ஒரு துண்டு
அங்கேயே தங்கிவிட்டது.
தெரிந்த பின்னும்
எடுத்துவர மனமில்லை!
நற்றமிழ் சொல்லும்
பொற்காலத்தின் சாட்சியாய்
இந்தப் புதையல்
ஒட்டு மொத்த தமிழினத்துக்கும்
ஒரு உயில் இது
கற்றைக் குழல் முகமும்
கரிய கஜமுகமும்
ஒற்றைக் கல்லிலே
உருவம் தந்து;
ஒற்றைக் காலிலே
தவம் செய்தவனை
ஒற்றைக் கல்லிலே
தவம் செய்ய வைத்த
சிற்பியின் வல்லமை!
நேர்த்தியாய் செய்தவனின்
கீர்த்தி பாட
வார்த்தைதான் போதவில்லை?
கண்டு மகிழக்
கண் கோடி வேண்டும் - அந்த
வண்டு மொய்க்காத் தாமரையை!
யானை தேடி
குதிரை தேடி
சேனை பெருக்கி
போர் வெறிகூடி
ஆணைகள் இட்டு - களத்தினில்
இழுமென முரசில்
எழுமொலி கேட்டு
விழும் தலை நூறு
வீசிடும் வாளால்,
வீழ்த்திய தலைகள்
வீரம் சொல்ல
இரத்தத் துளிகள்
வரலாறு எழுத!
பிணங்களின் எண்ணிக்கை
களத்தினில் கூடினால்
மனம் மகிழ்ந்த
மன்னர்கள் காலம் அது.
வாள் முனையின் ஓசையே
வாழ்க்கை நாதமாய்
வாழ்ந்திருந்தோர் மத்தியிலே
உளிமுனையின் ஓசையிலே
உயிரை உருகவிட்டவனின்
உன்னத அடையாளமாய்
சிறப்புப் புதையலாய்
ஒரு கோவில்!
பொலி மார்பில்
களியாட்டக் கன்னியர் சாய
எண்ணிக்கையில் மனைவியர்
எத்தனையென்றே தெரியாது
பிறன் மனை நோக்காத் தன்மை
அரண்மனைகளுக்குக் கிடையாது.
அரண்மனையின் இந்த
அசிங்கம் துடைத்து
பிரமிப்பூட்டும்
பெருங்கலை வளர்த்து
ஆண்டு மறைந்தாலும்
மாண்டு போகாத
வரலாறாய்
நீண்ட காலம் நிற்கிறார்
ஆ. திருநாவுக்கரசு,
தமிழ் கூடல்
பல உண்டு பாரினில்
நமக்கும் உண்டு
நல்ல தமிழ்ப் பண்பாடு;
வழி நெடுக இலக்கியத்தில் - அது
வாழ்வதைக் காணலாம்!
இலக்கியங்கள்
வாழ்க்கையின் வசந்தத்தை
நமக்காக
வடிகட்டித் தருபவைகள்....
துய்த்து இன்புறவும்
பயின்று பயன்பெறவும்
ஏராளமுண்டு இலக்கியங்கள்
துய்த்துப் பாரேன்!
மழையில் நனைந்தால்
மரங்களுக்கு
சளிப்பிடிக்குமா என்ன?
நிறைவு என்பது
முற்றுப் புள்ளியின்
மற்றொரு வடிவம்
படிப்பதில் நிறைவு கொள்ளாதே.
இலக்கியம் படிப்பது
இன்றளவில்
பைத்தியம் என்றானது
பொறியியலும், மருத்துவமும்
அறிவியலின் மகத்துவமும்
அழகுத் தமிழில்
செய்திடல் வேண்டும்
பிச்சைக்காரன் கூட
சக்கரவர்த்திக் கனவு காண்கிறான்;
தமிழ் இன்னும்
மொழிகளின் சக்கரவர்த்தியடா!
ஓங்கி வளர்ந்து
சிறந்த மொழியை
ஒதுங்கி வாழ்ந்து
இறந்த மொழியாகிட
அனுமதிக்காதே!
காலம் வென்ற கல்லணை அமைத்து
கட்டடக் கலைக்கு - புதுக்
கட்டியம் கூறிய
தமிழ் தேசமிது!
வற்றிப் போகாத நீர் இறைத்து
முற்றி வளர்ந்த நெல் அறுத்து
முற்றிப் போகாத காய் பறித்து
மூன்று வேளையும் விருந்து வைத்த
மூத்தகுடி நமது!
அரசக் கட்டிலென்றாலும்
அயர்ந்து உறங்குவது
புலவன் என்றால்
அரசனும் கவரி வீசிய
அறிவு தேசமிது!
நீண்ட ஆயுளுக்கான
நெல்லிக்கனி என்றாலும்
தமிழ் வளர்த்த மூதாட்டிக்கு
தாரை வார்த்த
தாராள தேசமிது!
பால் கொடுத்த மார் காயு முன்னே
வாள் கொடுத்து மகனை
போருக்கு போவென அனுப்பிய
வீர தேசமிது!
கட்டடக் கலை வளர்த்து
கருங்கல் சிலை வடித்து
கலைகளுக்கென்று
தலை நிமிர்வு தந்த
தமிழினமிது!
மீண்டும் இது போல்
படைக்க இயலாத
மீனாட்சி கோவில்;
உள்ளூர் என்பதால் - இந்த
உலகப் பெருமிதத்தை
ஒருமுறைகூடப்
பார்க்காதாரும் உண்டு!
அந்த அதிசயம் பற்றி
எந்தன் அனுபவம்
உரைக்கிறேன் கேள்,
வானம் நோக்கிப் பறக்கும்
வல்லூறுகூட கொஞ்சம்
வாய் பிளந்து பார்க்கும்
வானுயர் கோபுரங்கள்.......
உயிரை
உள்ளே வைத்துத் தைத்து
உருவம் தந்த சிலைகள்.....
கண்டு திரும்பிய போது
எனக்கும் தெரியாமல்
உயிரின் ஒரு துண்டு
அங்கேயே தங்கிவிட்டது.
தெரிந்த பின்னும்
எடுத்துவர மனமில்லை!
நற்றமிழ் சொல்லும்
பொற்காலத்தின் சாட்சியாய்
இந்தப் புதையல்
ஒட்டு மொத்த தமிழினத்துக்கும்
ஒரு உயில் இது
கற்றைக் குழல் முகமும்
கரிய கஜமுகமும்
ஒற்றைக் கல்லிலே
உருவம் தந்து;
ஒற்றைக் காலிலே
தவம் செய்தவனை
ஒற்றைக் கல்லிலே
தவம் செய்ய வைத்த
சிற்பியின் வல்லமை!
நேர்த்தியாய் செய்தவனின்
கீர்த்தி பாட
வார்த்தைதான் போதவில்லை?
கண்டு மகிழக்
கண் கோடி வேண்டும் - அந்த
வண்டு மொய்க்காத் தாமரையை!
யானை தேடி
குதிரை தேடி
சேனை பெருக்கி
போர் வெறிகூடி
ஆணைகள் இட்டு - களத்தினில்
இழுமென முரசில்
எழுமொலி கேட்டு
விழும் தலை நூறு
வீசிடும் வாளால்,
வீழ்த்திய தலைகள்
வீரம் சொல்ல
இரத்தத் துளிகள்
வரலாறு எழுத!
பிணங்களின் எண்ணிக்கை
களத்தினில் கூடினால்
மனம் மகிழ்ந்த
மன்னர்கள் காலம் அது.
வாள் முனையின் ஓசையே
வாழ்க்கை நாதமாய்
வாழ்ந்திருந்தோர் மத்தியிலே
உளிமுனையின் ஓசையிலே
உயிரை உருகவிட்டவனின்
உன்னத அடையாளமாய்
சிறப்புப் புதையலாய்
ஒரு கோவில்!
பொலி மார்பில்
களியாட்டக் கன்னியர் சாய
எண்ணிக்கையில் மனைவியர்
எத்தனையென்றே தெரியாது
பிறன் மனை நோக்காத் தன்மை
அரண்மனைகளுக்குக் கிடையாது.
அரண்மனையின் இந்த
அசிங்கம் துடைத்து
பிரமிப்பூட்டும்
பெருங்கலை வளர்த்து
ஆண்டு மறைந்தாலும்
மாண்டு போகாத
வரலாறாய்
நீண்ட காலம் நிற்கிறார்
ஆ. திருநாவுக்கரசு,
தமிழ் கூடல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...)
ஐயா, அருமையான, கவிதை பதிவிற்கு நன்றிகள்........
மிகவும் அருமையாக செதுக்கி உள்ளார் கவிஞர்.......நன்றிகள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மிகவும் அருமையாக செதுக்கி உள்ளார் கவிஞர்.......நன்றிகள்
![தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...) 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தமிழும் பண்பாடும் (தந்தை மகனுக்கு...)
மிகவும் நன்று
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
» சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
» படிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு
» மகனுக்கு கடும் போட்டியாக இருக்கும் தந்தை: வைரலாகும் டொவினோ தாமஸ் தந்தையின் புகைப்படம்
» உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
» சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
» படிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு
» மகனுக்கு கடும் போட்டியாக இருக்கும் தந்தை: வைரலாகும் டொவினோ தாமஸ் தந்தையின் புகைப்படம்
» உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|