Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இறந்த தினம் (1936)
5 posters
Page 1 of 1
இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இறந்த தினம் (1936)
வ.உ.சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின்
பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும்.
அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்''. இது 1908-ம் ஆண்டு
வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்து வெள்ளைய நீதிபதி ஃபின்ஹே
தீர்ப்பில் எழுதியுள்ள வரிகள்... இதுபோன்று எந்தவொரு இந்தியரும்கூட
வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும், வேகத்துக்கும் சிறந்த அங்கீகாரத்தையும்
தந்துவிட முடியாது.
வ.உ.சி. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் 1872-ம் ஆண்டு
செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார். தொடக்கக்கல்வியை ஒட்டப்பிடாரத்திலும்,
உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக்கல்வியைத் திருச்சியிலும்
பயின்று 1895-ம் ஆண்டு வழக்குரைஞரானார்.
வணிக நோக்கில் வந்த வெள்ளையர்கள் இங்கு நிலவிய சிறு, சிறு பாளையங்களாக
ஆட்சிபுரிந்து வந்த மன்னர்களின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, தங்களது
ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இதனை எண்ணிய வ.உ.சி. வணிகம் மூலமாக நாட்டுக்குள்
நுழைந்த வெள்ளையர்களை வணிக ரீதியாகவே விரட்ட வேண்டும் என, 1906-ம் ஆண்டு
"சுதேசி நாவாய்ச் சங்கம்' என்ற சங்கத்தை நிறுவி அதன் செயலர் ஆனார்.
வாணிபம் என்பது தமிழர்களுக்குப் புதிது இல்லை. சங்க இலங்கியங்களில்கூட,
தமிழர்கள் திரைகடல்ஓடி திரவியம் தேடியுள்ளனர். சேர, சோழ, பாண்டியர்
காலத்தில் பல நாடுகளில் கடல் வாணிபம் செய்த பெருமை தமிழர்களுக்கு உண்டு.
எனவே, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு எடுத்துக்காட்டாக வெள்ளையர்களின்
கிழக்கிந்தியக் கம்பெனியுடன் வாணிபப் போட்டியில் ஈடுபட்டார்.
காலியா, லாவோ என இரு கப்பல்களை வங்கக்கடலில் விட்டு, கொழும்பு நகரத்துடன்
வாணிபத்தைத் தொடங்கினார். அவரின் செயலைக் கண்டு மும்பை கடற்கரைக்
கூட்டத்தில் லோகமான்ய பாலகங்காதர திலகர் பேசும்போது, ""திருநெல்வேலியில்
உத்தம தேசாபிமானி ஆகிய வ.உ.சி. தூத்துக்குடி - சிலோனுக்கு சுதேசிக் கப்பல்
போக்குவரத்து ஸ்தாபித்திருப்பது சுதேசியத்துக்கு அவர் செய்திருக்கும்
பெரும் பணிவிடையாகும்'' என்று பேசியுள்ளார்.
வ.உ.சி. பல இடங்களுக்குச் சென்று விடுதலை குறித்து மக்களிடையே
பிரசங்கத்திலும் ஈடுபட்டார். இதனால் கோபம் கொண்ட வெள்ளையர்கள் வ.உ.சி.யின்
மீது வழக்குத் தொடுத்து 40 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தனர்.
கோவைச் சிறையில் ஆங்கிலயர்கள் வ.உ.சி.யைக் கல்லுடைக்க வைத்துள்ளனர். அதில்
அவரின் கையில் கொப்புளங்கள் ஏற்பட்ட நிலையிலும், துன்புறுத்துவதற்காக
செக்கிழுக்க வைத்துள்ளனர்.
கொடுமைப்படுத்தப்பட்ட வ.உ.சி.யின் நிலையைக் கண்டு, அவரின் துணைவியார்
மீனாட்சி அம்மையார் ஆங்கிலேய அரசருக்கு எழுதிய மடலில், ""சிறையதிகாரிகள்
என் கணவரைச் செக்கிழுக்கவும், கல்லுடைக்கவும் வைத்துத்
துன்புறுத்துகின்றனர். இதைத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், இக்கணமே
அவரைக் கண்மறைவாக அந்தமான் தீவுக்கு அனுப்பி விடுதல் நலம்'' எனக்
குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்துக்காக மட்டும் அல்லாமல், தீண்டாமைக்கு எதிராகவும் போராடிய
வ.உ.சி., சகஜாநந்தா என்ற பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை தம் வீட்டில் தங்க
வைத்து போதித்து, தமிழறிவு ஊட்டி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்துக்குத்
திலகமாகியுள்ளார்.
அதுபோல், விருதுநகர் இராமையா தேசிகர் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த
பிறவிக் குருடரையும் தம் இல்லத்தில் தங்க வைத்து ஆதரித்துள்ளார். விதவை
மறுமணம், கலப்புத் திருமணம் போன்ற முற்போக்குச் சீர்திருத்தங்களை
ஆதரித்துள்ளார்.
கையூட்டில் ஈடுபட்ட ஏகாம்பரம் என்ற துணை நீதிபதியையும், பஞ்சாபிகேசவராவ்,
வாசுதேவராவ் என்ற அதிகாரிகளையும் கோர்ட்டில் நிறுத்தி, அதில் வெற்றியும்
பெற்றுள்ளார்.
தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த வ.உ.சி. 1936-ம் ஆண்டு
நவம்பர் 18-ம் தேதி இறந்தார். வ.உ.சி. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களின்
விடுதலைக்கும் உழைத்த வரலாறு இன்றும் போற்றப்படத்தக்கதாக இருக்கிறது. இவர்
போன்ற மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நம்மவர்கள் ஜாதிப்
பிரிவுக்குள் அடக்கி, விடுதலைப் போராட்டத் தலைவர்கள் அனைவரையும் ஜாதிச்
சங்கத் தலைவர்களாக்க முயற்சிக்கிறார்கள். இதனால், அவர்களின் வரலாற்றை
வருங்காலச் சந்ததியினர் அறிய முடியாமல் போகும்.
அப்படி அறிய முடியவில்லையென்றால், சுதந்திரத்துக்காக உழைத்த மாபெரும்
தலைவர்களின் வரலாறுகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அனைத்துத் தரப்பு
மக்களும், வளரும் தலைமுறையினருக்கு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட
ஒவ்வொரு தலைவரின் வரலாறுகளை எடுத்துக்கூறி, அவர்களைப் பின்பற்றச் செய்ய
வேண்டும்.
-மா.வீரபாண்டியன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இறந்த தினம் (1936)
அறிய தகவல் தந்த ரேவதிக்கு நன்றி.
Re: இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இறந்த தினம் (1936)
நன்றி ரேவதி...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இறந்த தினம் (1936)
சுதந்திரதிர்க்காக உழைத்த தலைவர்
நன்றி பகிர்வுக்கு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இறந்த தினம் (1936)
பகிர்வுக்கு நன்றி ரேவதி ![இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இறந்த தினம் (1936) 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இறந்த தினம் (1936) 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இத்தாலியத் தமிழறிஞர் வீரமா முனிவர் இறந்த தினம் இன்று!
» கப்பலோட்டிய தமிழன்
» தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா - கப்பலோட்டிய தமிழன்
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» கொலம்பஸ் இறந்த தினம்: மே 20- 1506
» கப்பலோட்டிய தமிழன்
» தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா - கப்பலோட்டிய தமிழன்
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» கொலம்பஸ் இறந்த தினம்: மே 20- 1506
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|