Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேறுமா 'தோரியம்' உலைகள்? - Vikatan
3 posters
Page 1 of 1
தேறுமா 'தோரியம்' உலைகள்? - Vikatan
நாளுக்கு நாள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் வலுபெற்றுக் கொண்டே இருக்கிறது. அது தமிழகத்தில் மட்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை. மாறாக, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அணுசக்திக்கு எதிரான ஒத்த கருத்துடைய செயற்பாட்டாளர்கள் அனைவரும் தங்களின் ஆதரவை கூடங்குளம் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் 'கூடங்குள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க' வட இந்தியாவில் இருந்து அணுசக்திக்கு எதிரான போராளிகள் சுமார் 100 பேர் யாத்திரை மேற்கொண்டு, கடந்த 10-ம் தேதி மதுரை, திருநெல்வேலி வழியாக இடிந்தகரைக்கு வந்து தங்களின் ஆதரவைப் பதிவு செய்தனர்.
http://nuclear-news.net/2011/11/10/strength-and-determination-of-indias-anti-nuclear-movement/
மதுரையில் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணனும், சென்னையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமனும் யாத்திரையை நெறிப்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக 13-ம் தேதி லயோலா கல்லூரியில் அணுசக்தி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மக்களின் மனநிலையும் அப்துல் கலாம் கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதாக இருக்க, அவர்களின் சார்பில் சில கருத்துகளை முன்வைத்தார். சுவ்ரத் ராஜூ. இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்திய அமெரிக்க 123 ஒப்பந்தத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அம்சங்களைப் பரிசோதிக்க பல ஆய்வுகளை மேற்கொண்டவர். தற்போது, அப்துல் கலாம் குறிப்பிட்ட தோரியம் அணு உலைகள், செர்னோபிள் விபத்து எண்ணிக்கை போன்று பல்வேறு விஷயங்கள் குறித்து என்னிடம் பகிர்ந்துகொண்டார்...
"உலகெங்கும் உள்ள அணு உலைகளில் யுரேனியம் தான் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியம், வெவ்வேறு ஐசோடோப்புகளைக் கொண்டிருக்கிறது. ஐசோடோப்புகள் என்பது ஒரே மாதிரியான வேதியியல் பண்புகளையும், வெவ்வேறான இயற்பியல் பண்புகளையும் பெற்றிருக்கும் ஒரு பொருளாகும். அதில் யு-235 என்பது இயற்கையாகக் கிடைக்கக் கூடிய, அணுவைப் பிளக்கக் கூடிய ஐசோடோப்பாக இருப்பதால் அதுவே எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத்தைப் பயன்படுத்துகிறோம். மற்ற நாடுகளில் யுரேனியத்தை செறிவூட்டி அதன் எண்ணிக்கையை 235 ஆக உயர்த்தி எரிபொருளாக்கப்படுகிறது.
ஆனால் தோரியம் அப்படியல்ல. அதை முதலில் ஓர் உலையில் வைத்து அணுவைப் பிளக்கும் தன்மை உள்ள ஐசோடோப் யுரேனியமாக அதாவது யு-233 ஆக மாற்ற வேண்டும். இதற்கு மூன்று தன்மைகள் இருக்கின்றன.
முதலாவதாக, இந்த யு-233 அணு ஆயுதங்கள் செய்யப் பயன்படும். இதைச் சுத்தப்படுத்தி அதை மீண்டும் உபயோகிக்க அதிகம் செலவுபிடிக்கும். இரண்டாவதாக, யு-232 மூலமாக யு-233 பெற முடியும் என்பதால் யு-232 உடன் நாம் நிறுத்திக் கொள்ள முடியாது. ஏனெனில், யு-232 மூலமாக அதிகளவில் காமா கதிர்வீச்சு இருக்கும். மேலும், யு-233-ஐ நாம் அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் கதிர்வீச்சு அணுமின் நிலையப் பணியாளர்களை வெகுவாகப் பாதிக்கும்.
மூன்றாவதாக, புளூட்டோனியத்தால் இயங்கும் அதிவேக ஈணுலைகளின் மூலம் யு-233-ஐ பெறலாம் என்பது அணுசக்தித் துறையின் திட்டம். ஆனால் கனநீர் உலைகளைக் காட்டிலும் ஈணுலையில் பணிகள் நடக்க ஆரம்பித்தால் மிக விபரீதமான விளைவுகள் ஏற்படும்.
இந்த காரணங்களுக்காக பல நாடுகளும் தோரியம் அணு உலை ஏற்படுத்தும் எண்ணத்தைக் கைவிட்டிருக்கின்றன. ஆனால் தான் மட்டும் தனியாக ஓடி, ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றுவிட நினைக்கிறது இந்தியா.
இந்திய அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்தான நொடியில் இருந்து அணுசக்தி மூலம் உருவாகக் கூடிய ஓர் எதிர்காலத்தைக் கனவு காண்கின்ற நிலை சராசரி இந்தியர்களின் மனதில் எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் தந்திர வழிநடத்துதலின் படி செயல்பட்டு, ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி மையத்தில் (ஐ.ஏ.இ.ஏ) இரண்டு முறை வாக்களித்தது. அதனால் ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டுறவில் ஏற்பட இருந்த பெட்ரோலிய பைப்லைன் திட்டம் எனும் முக்கியமான எரிசக்தி ஆதாரம் நின்றுபோனது.
இந்த நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் மராத்திய நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்த முன்னாள் அணுசக்தித் துறை தலைவர் அனில் ககோட்கர், "வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களின் நலனையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஆகவே பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உலைகளை நாம் இங்கே இறக்குமதி செய்ய வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார். இப்போது சொல்லுங்கள்... 'வெளிநாட்டு கை' மக்களுக்குப் பின்னால் இருக்கிறதா அல்லது அரசுக்குப் பின்னால் இயங்குகிறதா?
செர்னோபிள் விபத்து போன்று இங்கும் நடந்துவிட்டால் என்ன செய்வது என்று அச்சம் கொள்வதற்கும், கவலை கொள்வதற்கும் மக்களுக்கு உரிமை இருக்கிறது. அணுசக்திக்கு ஆதரவாகப் பேசும் சிலர் செர்னோபிள் விபத்தின் போது வெறும் 57 பேர்தான் இறந்து போனார்கள் என்கிறார்கள். அது முற்றிலும் தவறு. உலக சுகாதார நிறுவனம் 9,000க்கும் அதிகமான மரணங்கள் இந்த விபத்தால் நிகழ்ந்திருக்கின்றன என்கிறது. நேரடியான மரணங்கள் தவிர புற்றுநோய் போன்ற பாதிப்புக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். அமெரிக்க புற்றுநோய் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் அந்த விபத்தின் போது ஐயோடின்-131 என்ற வேதிப் பொருளை உள்வாங்கிய குழந்தைகள் நாளடைவில் தைராய்டு புற்றுநோய்க்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்கிறது. இன்றும் செர்னோபிள் பகுதியில் 10,000 சதுர கிலோமீட்டர்கள் வரை 'ஸ்ட்ரிக்ட் கன்ட்ரோல்' எனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் சீஸியம்-137 எனும் மாசு படர்ந்திருக்கிறது. இது தன்னுடைய கதிரியக்கத்தை இழக்க சுமார் 30 வருடங்கள் ஆகும்.
இது ஒருபுறம் இருக்க, கூடங்குளத்தில் அமைய இருக்கும் வி.வி.இ.ஆர். உலைகள் நூறு சதவிகிதம் பாதுகாப்பானவை என்று கூறுவது அறிவியல் பூர்வமாக சாத்தியமே இல்லை. குறிப்பாக, பல நாடுகளில் இருக்கும் வி.வி.இ.ஆர். உலைகளில் 'கன்ட்ரோல் ராட்' எனப்படும் ஒருவகையான இயங்குமுறையில் பிரச்னைகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த 'கன்ட்ரோல் ராட்' என்பது எந்த ஓர் அணுப்பிளவும் நிகழாமல் நியூட்ரான்களை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் தன்மை வாய்ந்தவை. யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் ஆகியவற்றின் அணுப்பிளவை கட்டுப்படுத்த இவை அணு உலைகளில் நிர்மானிக்கப்பட்டு இருக்கின்றன. 2006, மார்ச் 1-ம் தேதி பல்கேரியா கொஸ்லூடி எனும் அணுமின் நிலையத்தில் 4-வது உலையில் மின்சாரம் தடைபட்டதால் முக்கியமான சர்க்குலேஷன் பம்ப்கள் வேலை செய்யவில்லை. இதனால் 'கன்ட்ரோல் ராட்' இயங்குமுறையில் பிரச்னை ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. இது ஓர் உதாரணம் தான்.
இவற்றுடன், இழப்பீடு முறையையும் நாம் கவனிக்க வேண்டும். கூடங்குளம் அணு உலைகளை விற்ற ஆட்டம்ஸ்ட்ராய்க்ஸ்போர்ட் எனும் நிறுவனம் சிறப்பு இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் ஒன்றின் மூலம், மக்கள் தன்னிடம் இழப்பீடு கோருவதைத் தடை செய்கிறது. இந்தியாவில் இருக்கும் அணு விபத்து இழப்பீடுச் சட்டம் காரணமாக வெஸ்டிங்ஹவுஸ் போன்ற அணு உலை விற்பனை நிறுவனங்கள் நம் நாட்டில் கால் வைக்க யோசிக்கின்றன.
ஆக, இந்த நிறுவனங்கள் எல்லாம் தங்களின் பொருளாதார பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்வதில் தவறு இல்லை என்கிற போது, தங்களின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ள போராடும் மக்களின் உணர்வுகள் மட்டும் எப்படி தவறாகும்?" என்று கேட்டார் சுவ்ரத் ராஜூ.
http://news.vikatan.com/?nid=5009
http://nuclear-news.net/2011/11/10/strength-and-determination-of-indias-anti-nuclear-movement/
SUVRAT RAJU
India.: Department of Physics, Harvard University
Cambridge, MA 02138, USA
Current address: Harish-Chandra Research Institute
Chatnag Road, Jhunsi, Allahabad 211019
suvrat@post.harvard.edu
அந்த வகையில் 'கூடங்குள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க' வட இந்தியாவில் இருந்து அணுசக்திக்கு எதிரான போராளிகள் சுமார் 100 பேர் யாத்திரை மேற்கொண்டு, கடந்த 10-ம் தேதி மதுரை, திருநெல்வேலி வழியாக இடிந்தகரைக்கு வந்து தங்களின் ஆதரவைப் பதிவு செய்தனர்.
http://nuclear-news.net/2011/11/10/strength-and-determination-of-indias-anti-nuclear-movement/
மதுரையில் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணனும், சென்னையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமனும் யாத்திரையை நெறிப்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக 13-ம் தேதி லயோலா கல்லூரியில் அணுசக்தி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மக்களின் மனநிலையும் அப்துல் கலாம் கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதாக இருக்க, அவர்களின் சார்பில் சில கருத்துகளை முன்வைத்தார். சுவ்ரத் ராஜூ. இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்திய அமெரிக்க 123 ஒப்பந்தத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அம்சங்களைப் பரிசோதிக்க பல ஆய்வுகளை மேற்கொண்டவர். தற்போது, அப்துல் கலாம் குறிப்பிட்ட தோரியம் அணு உலைகள், செர்னோபிள் விபத்து எண்ணிக்கை போன்று பல்வேறு விஷயங்கள் குறித்து என்னிடம் பகிர்ந்துகொண்டார்...
"உலகெங்கும் உள்ள அணு உலைகளில் யுரேனியம் தான் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியம், வெவ்வேறு ஐசோடோப்புகளைக் கொண்டிருக்கிறது. ஐசோடோப்புகள் என்பது ஒரே மாதிரியான வேதியியல் பண்புகளையும், வெவ்வேறான இயற்பியல் பண்புகளையும் பெற்றிருக்கும் ஒரு பொருளாகும். அதில் யு-235 என்பது இயற்கையாகக் கிடைக்கக் கூடிய, அணுவைப் பிளக்கக் கூடிய ஐசோடோப்பாக இருப்பதால் அதுவே எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத்தைப் பயன்படுத்துகிறோம். மற்ற நாடுகளில் யுரேனியத்தை செறிவூட்டி அதன் எண்ணிக்கையை 235 ஆக உயர்த்தி எரிபொருளாக்கப்படுகிறது.
ஆனால் தோரியம் அப்படியல்ல. அதை முதலில் ஓர் உலையில் வைத்து அணுவைப் பிளக்கும் தன்மை உள்ள ஐசோடோப் யுரேனியமாக அதாவது யு-233 ஆக மாற்ற வேண்டும். இதற்கு மூன்று தன்மைகள் இருக்கின்றன.
முதலாவதாக, இந்த யு-233 அணு ஆயுதங்கள் செய்யப் பயன்படும். இதைச் சுத்தப்படுத்தி அதை மீண்டும் உபயோகிக்க அதிகம் செலவுபிடிக்கும். இரண்டாவதாக, யு-232 மூலமாக யு-233 பெற முடியும் என்பதால் யு-232 உடன் நாம் நிறுத்திக் கொள்ள முடியாது. ஏனெனில், யு-232 மூலமாக அதிகளவில் காமா கதிர்வீச்சு இருக்கும். மேலும், யு-233-ஐ நாம் அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் கதிர்வீச்சு அணுமின் நிலையப் பணியாளர்களை வெகுவாகப் பாதிக்கும்.
மூன்றாவதாக, புளூட்டோனியத்தால் இயங்கும் அதிவேக ஈணுலைகளின் மூலம் யு-233-ஐ பெறலாம் என்பது அணுசக்தித் துறையின் திட்டம். ஆனால் கனநீர் உலைகளைக் காட்டிலும் ஈணுலையில் பணிகள் நடக்க ஆரம்பித்தால் மிக விபரீதமான விளைவுகள் ஏற்படும்.
இந்த காரணங்களுக்காக பல நாடுகளும் தோரியம் அணு உலை ஏற்படுத்தும் எண்ணத்தைக் கைவிட்டிருக்கின்றன. ஆனால் தான் மட்டும் தனியாக ஓடி, ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றுவிட நினைக்கிறது இந்தியா.
இந்திய அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்தான நொடியில் இருந்து அணுசக்தி மூலம் உருவாகக் கூடிய ஓர் எதிர்காலத்தைக் கனவு காண்கின்ற நிலை சராசரி இந்தியர்களின் மனதில் எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் தந்திர வழிநடத்துதலின் படி செயல்பட்டு, ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி மையத்தில் (ஐ.ஏ.இ.ஏ) இரண்டு முறை வாக்களித்தது. அதனால் ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டுறவில் ஏற்பட இருந்த பெட்ரோலிய பைப்லைன் திட்டம் எனும் முக்கியமான எரிசக்தி ஆதாரம் நின்றுபோனது.
இந்த நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் மராத்திய நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்த முன்னாள் அணுசக்தித் துறை தலைவர் அனில் ககோட்கர், "வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களின் நலனையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஆகவே பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உலைகளை நாம் இங்கே இறக்குமதி செய்ய வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார். இப்போது சொல்லுங்கள்... 'வெளிநாட்டு கை' மக்களுக்குப் பின்னால் இருக்கிறதா அல்லது அரசுக்குப் பின்னால் இயங்குகிறதா?
செர்னோபிள் விபத்து போன்று இங்கும் நடந்துவிட்டால் என்ன செய்வது என்று அச்சம் கொள்வதற்கும், கவலை கொள்வதற்கும் மக்களுக்கு உரிமை இருக்கிறது. அணுசக்திக்கு ஆதரவாகப் பேசும் சிலர் செர்னோபிள் விபத்தின் போது வெறும் 57 பேர்தான் இறந்து போனார்கள் என்கிறார்கள். அது முற்றிலும் தவறு. உலக சுகாதார நிறுவனம் 9,000க்கும் அதிகமான மரணங்கள் இந்த விபத்தால் நிகழ்ந்திருக்கின்றன என்கிறது. நேரடியான மரணங்கள் தவிர புற்றுநோய் போன்ற பாதிப்புக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். அமெரிக்க புற்றுநோய் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் அந்த விபத்தின் போது ஐயோடின்-131 என்ற வேதிப் பொருளை உள்வாங்கிய குழந்தைகள் நாளடைவில் தைராய்டு புற்றுநோய்க்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்கிறது. இன்றும் செர்னோபிள் பகுதியில் 10,000 சதுர கிலோமீட்டர்கள் வரை 'ஸ்ட்ரிக்ட் கன்ட்ரோல்' எனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் சீஸியம்-137 எனும் மாசு படர்ந்திருக்கிறது. இது தன்னுடைய கதிரியக்கத்தை இழக்க சுமார் 30 வருடங்கள் ஆகும்.
இது ஒருபுறம் இருக்க, கூடங்குளத்தில் அமைய இருக்கும் வி.வி.இ.ஆர். உலைகள் நூறு சதவிகிதம் பாதுகாப்பானவை என்று கூறுவது அறிவியல் பூர்வமாக சாத்தியமே இல்லை. குறிப்பாக, பல நாடுகளில் இருக்கும் வி.வி.இ.ஆர். உலைகளில் 'கன்ட்ரோல் ராட்' எனப்படும் ஒருவகையான இயங்குமுறையில் பிரச்னைகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த 'கன்ட்ரோல் ராட்' என்பது எந்த ஓர் அணுப்பிளவும் நிகழாமல் நியூட்ரான்களை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் தன்மை வாய்ந்தவை. யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் ஆகியவற்றின் அணுப்பிளவை கட்டுப்படுத்த இவை அணு உலைகளில் நிர்மானிக்கப்பட்டு இருக்கின்றன. 2006, மார்ச் 1-ம் தேதி பல்கேரியா கொஸ்லூடி எனும் அணுமின் நிலையத்தில் 4-வது உலையில் மின்சாரம் தடைபட்டதால் முக்கியமான சர்க்குலேஷன் பம்ப்கள் வேலை செய்யவில்லை. இதனால் 'கன்ட்ரோல் ராட்' இயங்குமுறையில் பிரச்னை ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. இது ஓர் உதாரணம் தான்.
இவற்றுடன், இழப்பீடு முறையையும் நாம் கவனிக்க வேண்டும். கூடங்குளம் அணு உலைகளை விற்ற ஆட்டம்ஸ்ட்ராய்க்ஸ்போர்ட் எனும் நிறுவனம் சிறப்பு இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் ஒன்றின் மூலம், மக்கள் தன்னிடம் இழப்பீடு கோருவதைத் தடை செய்கிறது. இந்தியாவில் இருக்கும் அணு விபத்து இழப்பீடுச் சட்டம் காரணமாக வெஸ்டிங்ஹவுஸ் போன்ற அணு உலை விற்பனை நிறுவனங்கள் நம் நாட்டில் கால் வைக்க யோசிக்கின்றன.
ஆக, இந்த நிறுவனங்கள் எல்லாம் தங்களின் பொருளாதார பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்வதில் தவறு இல்லை என்கிற போது, தங்களின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ள போராடும் மக்களின் உணர்வுகள் மட்டும் எப்படி தவறாகும்?" என்று கேட்டார் சுவ்ரத் ராஜூ.
http://news.vikatan.com/?nid=5009
http://nuclear-news.net/2011/11/10/strength-and-determination-of-indias-anti-nuclear-movement/
SUVRAT RAJU
India.: Department of Physics, Harvard University
Cambridge, MA 02138, USA
Current address: Harish-Chandra Research Institute
Chatnag Road, Jhunsi, Allahabad 211019
suvrat@post.harvard.edu
nhchola- பண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010
Re: தேறுமா 'தோரியம்' உலைகள்? - Vikatan
'அணு விஞ்ஞானி' அப்துல் கலாம் மற்றும் அமெரிக்க அடிமை மண்ணு மோகன் சிங் தான் பதில் சொல்லவேண்டும்.
anandalr- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 26/01/2010
Re: தேறுமா 'தோரியம்' உலைகள்? - Vikatan
இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் விற்கத் தயாராம்.. மன்மோகன் அப்துல் கலாம் வகையறாக்கள் மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள். உலகிலேயே அதிக யுரேனியம் 23 சதவிகிதம் வைத்திருக்கும் ஆஸ்திரேலியாவில் ஒரு அணுமின் உலை கூட கிடையாது ! நம்ம ஆளுங்களுக்கு அறிவே வராதா?
nhchola- பண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010
Re: தேறுமா 'தோரியம்' உலைகள்? - Vikatan
எதுவுமே பாதுகாப்பில்லை இந்த அறிவியல் உலகில் ...ஆனால் அறிவியல் வளர்ந்து கொண்டு இருக்கிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகள்
» 400 ஆண்டுகளுக்கு தடையில்லா மின்சாரம்: கைவசம் இருக்கு தோரியம்
» இந்தியாவின் இமாலய தோரியம் ஊழல்.. மதிப்பு ரூ. 60 லட்சம் கோடி..!!
» இந்திய கடல் பகுதிகளில் தோரியம் கடத்தப்பட்டதில், அரசுக்கு 60 லட்சம் கோடி இழப்பு
» நம் தலையில் கட்டப்படும் சோதிக்கப்படாத அணு உலைகள்
» 400 ஆண்டுகளுக்கு தடையில்லா மின்சாரம்: கைவசம் இருக்கு தோரியம்
» இந்தியாவின் இமாலய தோரியம் ஊழல்.. மதிப்பு ரூ. 60 லட்சம் கோடி..!!
» இந்திய கடல் பகுதிகளில் தோரியம் கடத்தப்பட்டதில், அரசுக்கு 60 லட்சம் கோடி இழப்பு
» நம் தலையில் கட்டப்படும் சோதிக்கப்படாத அணு உலைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|