புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிப்பெட்டகம் (கிரிகாசன்) தெ.வி.தே 10(புதிது)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
என் சொத்துக்களை இங்கே போட்டு மூடாமல் வைக்கிறேன்
௧. கொல்லாதே!!
கொல்லாதே கொல்லாதே கூவுகிறேன் - தமிழ்
சொல்லாற் குயில் போலும் பாடுகிறேன்
நில்லாதே என்றெண்ணம் மிஞ்சுவையோ - கொண்ட
நெஞ்சின் கனவுகள் பஞ்சனலோ
கல்லாலே கல்லாலே கோவில் செய்து - அங்கு
காணவென்றே தெய்வம் உன்னை வைத்து
எல்லாமே தந்துனைப் பூசைசெய்தும் - எம்மை
ஏனோவா ழென்றிங்கு விட்டதில்லை
வல்லூறு குஞ்சினைத் தூக்கிவிடு - என
வாழ்வின் விதியமைத் தாய்இறையே
நல்லோரின் நெஞ்சங்கள் நாதியற்று - விதி
நாளும் பலிகொள்ள வைத்ததென்ன
வில்லாலே அம்பையும் விட்டதுபோல் - உயிர்
வேகமெடுத் தந்த வானடையும்
சில்லால் உருண்டிடும் தேர்வழுகி - மலை
செல்லா துருண்டுகீழ் வீழ்வதென்ன
வெல்லாத தாயெமை வாழவைத்து - அதில்
வேண்டுமென்றே துன்பம் மேவவிட்டு
கல்லால் எறிந்துகாய் வீழ்த்தலென -அந்தக்
காலமும் வீழ்த்திக் களிப்பதென்ன
நில்லாய் இருவென்று நேசமுடன் - எமை
நீலக்குழி சுழல் பந்தில் வைத்து
பல்லாங்குழி யாட்டம் ஆடுவதேன் - வாழப்
பாதியில் வெட்டிப் பறிப்பது மேன்
சொல்லாலே செந்தமிழ்ப் பாடிஉனைப் - பெரும்
செந்தீயின் ஆதிமுதற் பொருளே
கொல்லாதே என்றே இறைஞ்சி நின்றேன் - உந்தன்
கோவம் தவிர் என்று கெஞ்சுகிறேன்
வல்லாதி சக்தியிவ் வையகத்தைப் - பெரும்
வானில் உருட்டிக் களிப்பவளே
சொல்லடிசக்தி உன் தூயமனங் - கொண்டு
சோதி என்தீபம் எரிய விடு
***********
௧. கொல்லாதே!!
கொல்லாதே கொல்லாதே கூவுகிறேன் - தமிழ்
சொல்லாற் குயில் போலும் பாடுகிறேன்
நில்லாதே என்றெண்ணம் மிஞ்சுவையோ - கொண்ட
நெஞ்சின் கனவுகள் பஞ்சனலோ
கல்லாலே கல்லாலே கோவில் செய்து - அங்கு
காணவென்றே தெய்வம் உன்னை வைத்து
எல்லாமே தந்துனைப் பூசைசெய்தும் - எம்மை
ஏனோவா ழென்றிங்கு விட்டதில்லை
வல்லூறு குஞ்சினைத் தூக்கிவிடு - என
வாழ்வின் விதியமைத் தாய்இறையே
நல்லோரின் நெஞ்சங்கள் நாதியற்று - விதி
நாளும் பலிகொள்ள வைத்ததென்ன
வில்லாலே அம்பையும் விட்டதுபோல் - உயிர்
வேகமெடுத் தந்த வானடையும்
சில்லால் உருண்டிடும் தேர்வழுகி - மலை
செல்லா துருண்டுகீழ் வீழ்வதென்ன
வெல்லாத தாயெமை வாழவைத்து - அதில்
வேண்டுமென்றே துன்பம் மேவவிட்டு
கல்லால் எறிந்துகாய் வீழ்த்தலென -அந்தக்
காலமும் வீழ்த்திக் களிப்பதென்ன
நில்லாய் இருவென்று நேசமுடன் - எமை
நீலக்குழி சுழல் பந்தில் வைத்து
பல்லாங்குழி யாட்டம் ஆடுவதேன் - வாழப்
பாதியில் வெட்டிப் பறிப்பது மேன்
சொல்லாலே செந்தமிழ்ப் பாடிஉனைப் - பெரும்
செந்தீயின் ஆதிமுதற் பொருளே
கொல்லாதே என்றே இறைஞ்சி நின்றேன் - உந்தன்
கோவம் தவிர் என்று கெஞ்சுகிறேன்
வல்லாதி சக்தியிவ் வையகத்தைப் - பெரும்
வானில் உருட்டிக் களிப்பவளே
சொல்லடிசக்தி உன் தூயமனங் - கொண்டு
சோதி என்தீபம் எரிய விடு
***********
இழி பிறப்பு
இழிபிறப்பு
கருவறைக்குள் மனிதமெழக் காணும்தேவியே - எம்மை
கழிவறைக்குள் உருளவைத்த கதையும் ஏனடி
பெரு வயிற்றுள் புரளவைத்த போதும்நீந்தியே - பின்பு
பெருமையற்ற விதமுலகில் பிறப்பதேனடி
அருவருப்பில் உருவமென்று அகந்தை நீங்கவோ - நீ
அகம்நினைத்து விதித்த விதம் அழகு பாரடி
தெருவிடத்தில் சிறுமைசெய்யும் தோற்றமாகவே - உயிர்
தரும் விதத்தை செய்ததுமேன் தருமமாமோடி
விறகு வைத்து தீயெரிய வெற்றுச் சாம்பலாய் -மாறி
வரும் உடம்பில் இனிமைசுகம் வைத்ததேனடி
உறவுவைத்து உயிர் களிக்கும் உணர்வும் ஏனடி - அதில்
உயிரெடுக்கும் வதைப்படுத்தும் உயிர்கள் பாரடி
கறந்தெடுத்த கழிவுகளின் மூட்டைதானடி - எதற்
காக இங்கு எமைப் படைத்தாய் கனவுதானடி
அறுசுவையும் மலர்மணமும் அழகுசந்தனம் - என
அதைமறைக்கும் அறிவுதந்து ஏய்த்ததேனடி
பிறவிதனில் ஆண்டியுடன் பெரிய மன்னரும் - யாரும்
பேதமில்லா போதுமதைப் பின்னர்கொள்வதேன்
வறியவரின் உயிர்வதைத்து வாழ்வி லுன்னதம் - என்று
வசதிகொண்ட வலிமையினர் வாழுங் காட்சிஏன்
குறையும்கொண்ட குருதிப் பையில் குணங்கள் பூசியே - பல
கொடுமைகளைத் துணையெடுக்கும் கோலமமைத்தாய்
பிற உடலை அணைப்பதிலும் சுகங்கள் அளித்தே - அதை
பிரித்தழிக்கும் உணர்விலின்பம் பிறர்க்குவகுத்தாய்
வருவதெலாம் நோயும்பிணி வருத்தம்காணடி - அது
வரும் வரையும் கனவுசுகம் போதைதானடி
பெரும் அளவு கற்பனையின் மாயைவாழ்வடி- இவர்
பிறந்தவழி தொகை பெருக்கும் பேய்களாமடி
கருகும்வரை கழிவுகளின் மோகந்தானடி - இவர்
கைபிடித்த சதைகள்ரத்தம் கனியின் சாறோடி
உருவம் மட்டும் உரிக்கமுன்பு இன்ப ஊற்றடி - அதன்
உள்ளிருப்ப கைபடவே உயிர்கொல் நோவடி
செருப்பதிலும் கேடுகெட்ட சிரசு தந்தடி அது
செருக்குடனே உலவிவரச் செய்ததேனடி
சருகைவிடச் சரசரக்கும் சிறுமைமேனியாம் அதைச்
சரசமிடச் செய்யுணர்வில் செழுமைப் பூச்சடி
வருகையிலே துயரடைவும் வாழ்வும், விட்டவர்- வானம்
விரைகையிலே இன்பமெனும் உணர்வு கொள்வதாம்
இருக்குமிந்த உண்மைதனும் இயல்புமாற்றியே எம்மை
இருட்டில்விட்டு அகவிளக்கை அணைத்த தேனடி
*******
இழிபிறப்பு
கருவறைக்குள் மனிதமெழக் காணும்தேவியே - எம்மை
கழிவறைக்குள் உருளவைத்த கதையும் ஏனடி
பெரு வயிற்றுள் புரளவைத்த போதும்நீந்தியே - பின்பு
பெருமையற்ற விதமுலகில் பிறப்பதேனடி
அருவருப்பில் உருவமென்று அகந்தை நீங்கவோ - நீ
அகம்நினைத்து விதித்த விதம் அழகு பாரடி
தெருவிடத்தில் சிறுமைசெய்யும் தோற்றமாகவே - உயிர்
தரும் விதத்தை செய்ததுமேன் தருமமாமோடி
விறகு வைத்து தீயெரிய வெற்றுச் சாம்பலாய் -மாறி
வரும் உடம்பில் இனிமைசுகம் வைத்ததேனடி
உறவுவைத்து உயிர் களிக்கும் உணர்வும் ஏனடி - அதில்
உயிரெடுக்கும் வதைப்படுத்தும் உயிர்கள் பாரடி
கறந்தெடுத்த கழிவுகளின் மூட்டைதானடி - எதற்
காக இங்கு எமைப் படைத்தாய் கனவுதானடி
அறுசுவையும் மலர்மணமும் அழகுசந்தனம் - என
அதைமறைக்கும் அறிவுதந்து ஏய்த்ததேனடி
பிறவிதனில் ஆண்டியுடன் பெரிய மன்னரும் - யாரும்
பேதமில்லா போதுமதைப் பின்னர்கொள்வதேன்
வறியவரின் உயிர்வதைத்து வாழ்வி லுன்னதம் - என்று
வசதிகொண்ட வலிமையினர் வாழுங் காட்சிஏன்
குறையும்கொண்ட குருதிப் பையில் குணங்கள் பூசியே - பல
கொடுமைகளைத் துணையெடுக்கும் கோலமமைத்தாய்
பிற உடலை அணைப்பதிலும் சுகங்கள் அளித்தே - அதை
பிரித்தழிக்கும் உணர்விலின்பம் பிறர்க்குவகுத்தாய்
வருவதெலாம் நோயும்பிணி வருத்தம்காணடி - அது
வரும் வரையும் கனவுசுகம் போதைதானடி
பெரும் அளவு கற்பனையின் மாயைவாழ்வடி- இவர்
பிறந்தவழி தொகை பெருக்கும் பேய்களாமடி
கருகும்வரை கழிவுகளின் மோகந்தானடி - இவர்
கைபிடித்த சதைகள்ரத்தம் கனியின் சாறோடி
உருவம் மட்டும் உரிக்கமுன்பு இன்ப ஊற்றடி - அதன்
உள்ளிருப்ப கைபடவே உயிர்கொல் நோவடி
செருப்பதிலும் கேடுகெட்ட சிரசு தந்தடி அது
செருக்குடனே உலவிவரச் செய்ததேனடி
சருகைவிடச் சரசரக்கும் சிறுமைமேனியாம் அதைச்
சரசமிடச் செய்யுணர்வில் செழுமைப் பூச்சடி
வருகையிலே துயரடைவும் வாழ்வும், விட்டவர்- வானம்
விரைகையிலே இன்பமெனும் உணர்வு கொள்வதாம்
இருக்குமிந்த உண்மைதனும் இயல்புமாற்றியே எம்மை
இருட்டில்விட்டு அகவிளக்கை அணைத்த தேனடி
*******
தெரியாத விடையைத் தேடி ௧
தெரியாத விடையைத் தேடி...! பகுதி 1
வல்ல யுகம் படைத்தாய் வானிற் சுழல்வகுத்தாய்
நில்லென் றொளி செய்தாய் நேர்நிகர்த்த லற்றதெனக்
கல்லும் மண் கொண்டுருளக் காணும் புவிசெய்து
நல்லமனம் கொண்டங்கு நாம் வாழ வழிசெய்தாய்
பூவாய் வாசங்காண் பொருள்படைத்துப் போகையிலே
தூவாய் மலரெனவே தூங்கும் பூஞ் சோலைதரு
காவாய் நீதென்றலெனக் கமகமக்கும் வாசமுடன்
போவார் வருவோர்க்கு புதுவாசம் தந்திடவும்
நாவால் இசைபடிக்க நாதம் இழைந் தினிமைகொள
நோவாய் மருந்தெனவும் நீசெய்தாய், சூட்சுமங்கள்
நீவான் பரப்பிட்டு நிகரற்ற சுழல் அண்டம்
ஆ வாய்பிளந் தலற ஆச்சரியங் கள் படைத்தாய்
தேவி படைத்தவளே திக்கெட்டும் காண்பவளே
ஏவி உலகத்தை இயக்குவளா முனைக் கண்டு
பாவி கரந் தூக்கிப் பணிதல் விட வேறெதுவும்
ஆவி இருக்கும்வரை அறியேன் அகபொருளே!
ஆயின் தமிழ்குழந்தை ஆனஇவன் வாயெடுத்துத்
தேயின் அறம் நேர்மை திசைமாறி நீதிசெலின்
வாயாற் குரல்கொண்டு வாழவெனும் உரிமைதனை
நீயிற் குவலயத்தில் நிமிர்ந்து கேள் என்றதனால்
தீயாய் கனல்தகித்தும் தெய்வம் சொல் குற்றமென
வாயால் கருகியவர் வழிவந்தோன் கேட்கின்றேன்
நீயாய் தெரிந்துமிந் நிலையற்ற பொய்வாழ்வைப்
பேயாய் திரிந்துகெடும் பிறவிதனைச் செய்தனையோ
அழகுத் திருமேனி அற்புதமாய் சிந்தனைகள்
குழலும் திருமுகத்தில் குங்குமத்தை நெற்றிகொள
மழைலைக் குரல் மடியில் மன்மதனின் அம்புபட்டு
விழுந்த கனிஎனவும் வீரமுறும் வாழ்வீந்தாய்
அவளும் நானெனவும் அகமெடுத்த பாசமதில்
துவளும் மலர்க் கொடியைத் தோளிட்டுத் தூணாக
தவழும் குழந்தைகளும் தாங்கி கடல்நடுவே
கவிழும் படகொன்றின் கரையறியாப் பயணமிது
வாழும் இவ்வளமேனி வந்ததுமுன் சக்தியெனும்
நாளும் கிழக்கேறும் நல்லுதயச் சூரியனின்
ஆழத் தெறித்தஅனல் அணையும் கரித்துண்டுகளாம்
மீளத் தீ பற்றுமொரு மீள்வுக்காய் காத்திருந்தோம்
ஓளியின் குழந்தைகள் நாம் ஒளியாக இருந்தெம்மை
வெளியில் வான்பரப்பில் விளையாடு எனவிட்டு
தெளியும் மனதுடனே திகழும் வாழ்வமையா
பழியும் பாவமிடும் பச்சையுடல் ஈந்தாய் ஏன்?
பொழியும் சிலைசெய்யும் பொற்கலைஞன் கரம்பற்றும்
உளியும் அவன்மனதின் உருவத்தை முன்னெடுக்கும்
நெளியும் திரைகடலின் நீலம் கொடுத்தவளே
அழியும் வாழ்வுக்கேன் அனைத்தும் இருட்டமைத்தாய்
மொழியும் பலபேசி முன்னறியா பெரும் காழ்ப்பு
தொழிலோ இறைமை யெனத் தீமை செயப் பேரும்வைத்து
அழிவை பொலிவாக்க அரசுடைமை நட்புறவு
கழிவைகுணம்கொண்டகாவலர் பெருகிவிட
உலகம் சுழல்வதென்ன உண்மைகளின் வெம்மைதனை
கலகம் கொலைதீமை கள்ளர்களின் கொள்ளைதனை
நிலம் மேற் கொடுமைகளை நித்தம் எண்ணிக் குற்றமுடன்
தலையும் சுற்றி தடு மாறி நிற்கா ஓடுகுதோ
தெரியாத விடையைத் தேடி...! பகுதி 1
வல்ல யுகம் படைத்தாய் வானிற் சுழல்வகுத்தாய்
நில்லென் றொளி செய்தாய் நேர்நிகர்த்த லற்றதெனக்
கல்லும் மண் கொண்டுருளக் காணும் புவிசெய்து
நல்லமனம் கொண்டங்கு நாம் வாழ வழிசெய்தாய்
பூவாய் வாசங்காண் பொருள்படைத்துப் போகையிலே
தூவாய் மலரெனவே தூங்கும் பூஞ் சோலைதரு
காவாய் நீதென்றலெனக் கமகமக்கும் வாசமுடன்
போவார் வருவோர்க்கு புதுவாசம் தந்திடவும்
நாவால் இசைபடிக்க நாதம் இழைந் தினிமைகொள
நோவாய் மருந்தெனவும் நீசெய்தாய், சூட்சுமங்கள்
நீவான் பரப்பிட்டு நிகரற்ற சுழல் அண்டம்
ஆ வாய்பிளந் தலற ஆச்சரியங் கள் படைத்தாய்
தேவி படைத்தவளே திக்கெட்டும் காண்பவளே
ஏவி உலகத்தை இயக்குவளா முனைக் கண்டு
பாவி கரந் தூக்கிப் பணிதல் விட வேறெதுவும்
ஆவி இருக்கும்வரை அறியேன் அகபொருளே!
ஆயின் தமிழ்குழந்தை ஆனஇவன் வாயெடுத்துத்
தேயின் அறம் நேர்மை திசைமாறி நீதிசெலின்
வாயாற் குரல்கொண்டு வாழவெனும் உரிமைதனை
நீயிற் குவலயத்தில் நிமிர்ந்து கேள் என்றதனால்
தீயாய் கனல்தகித்தும் தெய்வம் சொல் குற்றமென
வாயால் கருகியவர் வழிவந்தோன் கேட்கின்றேன்
நீயாய் தெரிந்துமிந் நிலையற்ற பொய்வாழ்வைப்
பேயாய் திரிந்துகெடும் பிறவிதனைச் செய்தனையோ
அழகுத் திருமேனி அற்புதமாய் சிந்தனைகள்
குழலும் திருமுகத்தில் குங்குமத்தை நெற்றிகொள
மழைலைக் குரல் மடியில் மன்மதனின் அம்புபட்டு
விழுந்த கனிஎனவும் வீரமுறும் வாழ்வீந்தாய்
அவளும் நானெனவும் அகமெடுத்த பாசமதில்
துவளும் மலர்க் கொடியைத் தோளிட்டுத் தூணாக
தவழும் குழந்தைகளும் தாங்கி கடல்நடுவே
கவிழும் படகொன்றின் கரையறியாப் பயணமிது
வாழும் இவ்வளமேனி வந்ததுமுன் சக்தியெனும்
நாளும் கிழக்கேறும் நல்லுதயச் சூரியனின்
ஆழத் தெறித்தஅனல் அணையும் கரித்துண்டுகளாம்
மீளத் தீ பற்றுமொரு மீள்வுக்காய் காத்திருந்தோம்
ஓளியின் குழந்தைகள் நாம் ஒளியாக இருந்தெம்மை
வெளியில் வான்பரப்பில் விளையாடு எனவிட்டு
தெளியும் மனதுடனே திகழும் வாழ்வமையா
பழியும் பாவமிடும் பச்சையுடல் ஈந்தாய் ஏன்?
பொழியும் சிலைசெய்யும் பொற்கலைஞன் கரம்பற்றும்
உளியும் அவன்மனதின் உருவத்தை முன்னெடுக்கும்
நெளியும் திரைகடலின் நீலம் கொடுத்தவளே
அழியும் வாழ்வுக்கேன் அனைத்தும் இருட்டமைத்தாய்
மொழியும் பலபேசி முன்னறியா பெரும் காழ்ப்பு
தொழிலோ இறைமை யெனத் தீமை செயப் பேரும்வைத்து
அழிவை பொலிவாக்க அரசுடைமை நட்புறவு
கழிவைகுணம்கொண்டகாவலர் பெருகிவிட
உலகம் சுழல்வதென்ன உண்மைகளின் வெம்மைதனை
கலகம் கொலைதீமை கள்ளர்களின் கொள்ளைதனை
நிலம் மேற் கொடுமைகளை நித்தம் எண்ணிக் குற்றமுடன்
தலையும் சுற்றி தடு மாறி நிற்கா ஓடுகுதோ
தெரியாத விடையைத் தேடி..! 2
பூச்சரங்களாடும் வண்ணம் பூத்த தீயின் தோரணம்
தீச்சுவாலை விட்டுச் சீறித் தோன்றுமந்தப் பிரபஞ்சம்
வீச்சுக் கண்டு வானவீதி யோடி வந்த தீயொன்று
நீச்சல் போட்டு வான்குளிர்ந்து நிற்கும் பூமியானது
ஆன திந்தப் பூமிதன்னில் ஆளின் முன்னைத் தோற்றங்கள்
வானத்தோடு மண்ணும் சேர் ரசாயனக் குழந்தைகள்
தானடைந்த சேர்வைகொஞ்சம் தாவிஏற்றம் கொண்டிட
மானிடத்தின் சக்திஊற்று மண்ணில் ஆரம்பித்தன
அத்தனைக்கும் ஆதிமூலம் ஒன்று வான சக்தியே
புத்தியோடு சேருமந்தப் பேரரும் ஓர் நூதனம்
சக்தியும் சிவனணைந்த தத்துவத்தைக் கண்டதும்,
இச்சா,ஞான, கிரியா சக்தி மானிடத்துள் ளாகின
எத்தகை இருந்தும் அந்தச் சக்திமூலம் ஒன்றதன்
தத்துவத்தில் ஆடுமென்னைச் சற்றுமே புரிந்திலன்
உத்தமம் மென்றெண்ணி எந்தன் உயிரளித்த தேவியை
புத்திரன் சினந்து மென்னைப் பெற்றதேன் என்றாகலாய்
யுத்தம் பூமி ரத்தவேட்கை கத்துமோலம் கதறிட
செத்தமேனி சிதறும் மூளை சென்று நாயிழுத்திட
ரத்தநாற்றம் கொண்டதேசம் கண்டுமே வினாக்களை
புத்தியற்ற மூடனிங்கு பேச்சிலே பிதற்றினன்
கத்தி கொண்ட வன் அடுத்துக் காணும்மேனி வெட்டிட
எத்துடிப்பு மின்றிக் கண்கள் ரண்டும் பொத்தி நிற்பதேன்
சத்தியத்தி னோடுநேர்மை சாத்வீகத்தை விட்டவர்
மொத்தம் பூமி தன்னதென்று மூர்க்கம் கொள்ள விட்டதேன்
உன்படைப்பில் நீதிகெட்டு ஒன்றையொன் றழிக்கையில்
என்னநீதி கண்டுநீயும் உள்ளம் கல்லென் றாவது
அன்னகோர மானிடத்துக் கான நீதி தண்டனை
இன்னும் நேர்மை காவல் சட்டம் உன்வழக்கி லில்லையோ
உன்கரத்தில் கொண்ட தீர்வு என்னவென்று கூறுவாய்
இன்னுமென்ன பூமிவாழும் எம்மவர்க் கிலக்கணம்
வன்மை செய்வர் தம்மைகேட்க வாழ்க்கைநீதி திட்டமும்
சொன்னதாயுமெந்த யாப்பும் உன்னிடத்தி லில்லையோ
பூச்சி தன்னைப் பல்லிஉண்ணும் போகும்குஞ்சை காகமும்
மூச்சிரைக்க ஓடும்மானை மூர்க்காய் சிறுத்தையும்
வீச்செடுத்து நீந்தும் மீனை வீறுடன் பெருஞ்சுறா
நாச் சிவந்து கொள்ளப் பற்றும் நாங்களும் துடிக்கிறோம்
வாழ்வுஎன்ன ’வல்லவற்கு வாழ்க்கை’ என்றுன் சட்டமோ
காழ்வுகொண்டு ஏழையென்ப காவுகொள்ள விட்டதோ?
தாழ்வு கொண்ட வர்தமக்கு தாங்கும் பூமி தன்னிலோர்
வாழ்வுஇல்லை யென்று வைத்ததாய் வகுத்த சட்டமேன்?
ஆகு முந்தன் நீதியென்ன அன்னையேஉரைத்திடு
போகுமிந்தப் பூமிதன்னில் பேச்சில் உள்ள நீதியும்
வேகுமிந்த சூழை வான்வெ றுத்துமோடிச் சுற்றிடும்
பூகோ ளத்து மாந்தர் வைத்த பொய்மை சட்டம் தீயிடு
வல்லவன்தன் வாழ்வுகொள் வனாகும் என்ப மட்டுமே
உள்ள நீதியென்று கூறு உண்மை யன்பு வெல்லுமாம்
பொய்புரட்டு பேசல்தீது. பெண்ணின்கற்பு என்பவை
மெய்யென்றில்லை மானிடாஏ மாந்தையோ சிரித்திடு
மாக்கள் போலும் கானகத்தில் மானிடத்துப் பண்புகள்
நீக்கி நீயும்வாழுஎன்று நேரெழுந்துச சொல்லிடு
பூக்கள்போலும் காணுமுள்ளம் பேய்களுக்குத் தீனியாம்
சாக்கடை நிகர்த்ததென்னில் சற்று மேன்மைஎன்றிடு
தீக்குள் போட்டதாம் குடும்பம் தாலிதர்மம் பிள்ளைகள்
காக்கவென்ற சட்டமில்லை காடையர்கள் கைக்கொள
ஆக்கு சட்டம் ஆடும்பூமி எங்கும் ஓடிபேச்சிடு
போக்கிலோடும் பூமிக்கொன்றும் யாப்புஇல்லைஎன்றிடு
வாக்கு சத்யம் வாய்மை யான, வாய்த்த தீயமக்களில்
போக்குக்கான தேசராஜ்யப் போர்வைஎன்று கூறிடு
பூக்குமிந்த சோலைகாணும் பூமிகொண்ட சாத்திரம்
ஆக்கும் சம்(பி)ர தாயங்கள் அனைத்தும் தேவை என்றிடில்
மல்லிகைமனங்கள் வாழ மண்ணில் ஏற்ற சட்டமும்
துல்லியத் தெளிந்தகொள்கை கொண்டு நீஇயற்றிடு
கல்லினுள்ளே இல்லைநீயும் கருணைகொண்டுவந்திடு
சொல்லை நீதிகாப்பவர் கரங்கள் ஓங்கச்செய்திடு
தொல்லையின்றி இன்பவாழ்வு தூய்மைபேணும் நல்மனம்
அல்லலின்றி ஆண்டுகள்நல் லானந்தித்த வாழ்வினை
மெல்ல வாழ்ந்து கண்டிடநற் காரியங்கள் செய்திடு
நில்லு சக்தி நீச உள்ளம் நெருப்பினோ டெரித்திடு
பூக்கள் பூத்துப் பொன்னிறத்து வானில் மஞ்சள் தீயெழ
தேக்கும் ரம்மிய மான இன்பம்சேர்த் தெல்லார்க்கும் பங்கிடு
ஆக்கிவைத்த நின்விதிக்கு ஆடவில்லை பூமிதன்
போக்கில் சுற்றுதென்னில் வான் கருங்குழிக்குள் தள்ளிடு!
பூச்சரங்களாடும் வண்ணம் பூத்த தீயின் தோரணம்
தீச்சுவாலை விட்டுச் சீறித் தோன்றுமந்தப் பிரபஞ்சம்
வீச்சுக் கண்டு வானவீதி யோடி வந்த தீயொன்று
நீச்சல் போட்டு வான்குளிர்ந்து நிற்கும் பூமியானது
ஆன திந்தப் பூமிதன்னில் ஆளின் முன்னைத் தோற்றங்கள்
வானத்தோடு மண்ணும் சேர் ரசாயனக் குழந்தைகள்
தானடைந்த சேர்வைகொஞ்சம் தாவிஏற்றம் கொண்டிட
மானிடத்தின் சக்திஊற்று மண்ணில் ஆரம்பித்தன
அத்தனைக்கும் ஆதிமூலம் ஒன்று வான சக்தியே
புத்தியோடு சேருமந்தப் பேரரும் ஓர் நூதனம்
சக்தியும் சிவனணைந்த தத்துவத்தைக் கண்டதும்,
இச்சா,ஞான, கிரியா சக்தி மானிடத்துள் ளாகின
எத்தகை இருந்தும் அந்தச் சக்திமூலம் ஒன்றதன்
தத்துவத்தில் ஆடுமென்னைச் சற்றுமே புரிந்திலன்
உத்தமம் மென்றெண்ணி எந்தன் உயிரளித்த தேவியை
புத்திரன் சினந்து மென்னைப் பெற்றதேன் என்றாகலாய்
யுத்தம் பூமி ரத்தவேட்கை கத்துமோலம் கதறிட
செத்தமேனி சிதறும் மூளை சென்று நாயிழுத்திட
ரத்தநாற்றம் கொண்டதேசம் கண்டுமே வினாக்களை
புத்தியற்ற மூடனிங்கு பேச்சிலே பிதற்றினன்
கத்தி கொண்ட வன் அடுத்துக் காணும்மேனி வெட்டிட
எத்துடிப்பு மின்றிக் கண்கள் ரண்டும் பொத்தி நிற்பதேன்
சத்தியத்தி னோடுநேர்மை சாத்வீகத்தை விட்டவர்
மொத்தம் பூமி தன்னதென்று மூர்க்கம் கொள்ள விட்டதேன்
உன்படைப்பில் நீதிகெட்டு ஒன்றையொன் றழிக்கையில்
என்னநீதி கண்டுநீயும் உள்ளம் கல்லென் றாவது
அன்னகோர மானிடத்துக் கான நீதி தண்டனை
இன்னும் நேர்மை காவல் சட்டம் உன்வழக்கி லில்லையோ
உன்கரத்தில் கொண்ட தீர்வு என்னவென்று கூறுவாய்
இன்னுமென்ன பூமிவாழும் எம்மவர்க் கிலக்கணம்
வன்மை செய்வர் தம்மைகேட்க வாழ்க்கைநீதி திட்டமும்
சொன்னதாயுமெந்த யாப்பும் உன்னிடத்தி லில்லையோ
பூச்சி தன்னைப் பல்லிஉண்ணும் போகும்குஞ்சை காகமும்
மூச்சிரைக்க ஓடும்மானை மூர்க்காய் சிறுத்தையும்
வீச்செடுத்து நீந்தும் மீனை வீறுடன் பெருஞ்சுறா
நாச் சிவந்து கொள்ளப் பற்றும் நாங்களும் துடிக்கிறோம்
வாழ்வுஎன்ன ’வல்லவற்கு வாழ்க்கை’ என்றுன் சட்டமோ
காழ்வுகொண்டு ஏழையென்ப காவுகொள்ள விட்டதோ?
தாழ்வு கொண்ட வர்தமக்கு தாங்கும் பூமி தன்னிலோர்
வாழ்வுஇல்லை யென்று வைத்ததாய் வகுத்த சட்டமேன்?
ஆகு முந்தன் நீதியென்ன அன்னையேஉரைத்திடு
போகுமிந்தப் பூமிதன்னில் பேச்சில் உள்ள நீதியும்
வேகுமிந்த சூழை வான்வெ றுத்துமோடிச் சுற்றிடும்
பூகோ ளத்து மாந்தர் வைத்த பொய்மை சட்டம் தீயிடு
வல்லவன்தன் வாழ்வுகொள் வனாகும் என்ப மட்டுமே
உள்ள நீதியென்று கூறு உண்மை யன்பு வெல்லுமாம்
பொய்புரட்டு பேசல்தீது. பெண்ணின்கற்பு என்பவை
மெய்யென்றில்லை மானிடாஏ மாந்தையோ சிரித்திடு
மாக்கள் போலும் கானகத்தில் மானிடத்துப் பண்புகள்
நீக்கி நீயும்வாழுஎன்று நேரெழுந்துச சொல்லிடு
பூக்கள்போலும் காணுமுள்ளம் பேய்களுக்குத் தீனியாம்
சாக்கடை நிகர்த்ததென்னில் சற்று மேன்மைஎன்றிடு
தீக்குள் போட்டதாம் குடும்பம் தாலிதர்மம் பிள்ளைகள்
காக்கவென்ற சட்டமில்லை காடையர்கள் கைக்கொள
ஆக்கு சட்டம் ஆடும்பூமி எங்கும் ஓடிபேச்சிடு
போக்கிலோடும் பூமிக்கொன்றும் யாப்புஇல்லைஎன்றிடு
வாக்கு சத்யம் வாய்மை யான, வாய்த்த தீயமக்களில்
போக்குக்கான தேசராஜ்யப் போர்வைஎன்று கூறிடு
பூக்குமிந்த சோலைகாணும் பூமிகொண்ட சாத்திரம்
ஆக்கும் சம்(பி)ர தாயங்கள் அனைத்தும் தேவை என்றிடில்
மல்லிகைமனங்கள் வாழ மண்ணில் ஏற்ற சட்டமும்
துல்லியத் தெளிந்தகொள்கை கொண்டு நீஇயற்றிடு
கல்லினுள்ளே இல்லைநீயும் கருணைகொண்டுவந்திடு
சொல்லை நீதிகாப்பவர் கரங்கள் ஓங்கச்செய்திடு
தொல்லையின்றி இன்பவாழ்வு தூய்மைபேணும் நல்மனம்
அல்லலின்றி ஆண்டுகள்நல் லானந்தித்த வாழ்வினை
மெல்ல வாழ்ந்து கண்டிடநற் காரியங்கள் செய்திடு
நில்லு சக்தி நீச உள்ளம் நெருப்பினோ டெரித்திடு
பூக்கள் பூத்துப் பொன்னிறத்து வானில் மஞ்சள் தீயெழ
தேக்கும் ரம்மிய மான இன்பம்சேர்த் தெல்லார்க்கும் பங்கிடு
ஆக்கிவைத்த நின்விதிக்கு ஆடவில்லை பூமிதன்
போக்கில் சுற்றுதென்னில் வான் கருங்குழிக்குள் தள்ளிடு!
புது யுகம் படைப்பாய் தேவி*
பொன்னால் எம் மேனிசெய்து பூந்தேனை ஓடவிட்டு
மின்னல் ஒளியழகும் மேவும் மணம் மலர்வாசம்
பன்னீராய் வேர்வை விழப் பட்டபனிப் புல்லழகாய்
தன்னோ டிழைந்து செலும் தகதகத்த மேனி தந்து
கண்ணால் வழிந்தழுதால் காண்பதுவோ இன்பமென
மண்ணில் விழுந்துடலும் மாளும் வகை இல்லையென
எண்ணில் குறித்திவர்க்கு இத்தனை நாள் வாழ்வென்றும்
விண்ணேகும் காலங்கள் வேறன்றி ஒன்றமைத்து
அன்பும் அறனுடனே ஆட்சியிலா வாழ்வுமுறை
மன்னன் மணிமுடிகள் மாவதைகள்தான் நிறுத்தி
இன்னு முண்ப தென ஏழைவயல் விளைஅன்னம்
புன்மை விலங்கினுடல் போலெதுவும் இல்லாமல்
பொன்னாய் இருந்துமுடல் போரெனவே பகைகாணின்
மின்னாய் கரைந்துருகி மெல்ல வெளிக்காற்றோடி
சின்னத் தூளாகிச் சென்றப்பால் சேர்ந்துருவம்
தன்னால் கொளும் மாயத் தன்மையுடன் படைத்தாலென்
பிள்ளைப் பேறில்லை பேருழைச்சல் நோவில்லை
முள்ளில் பட்டாலுங்கால் மோசவலி கொள்வதிலை
உள்ளமொன் றுள்ளேவைத் துணர்வோடு மதையாக்கி
தெள்ள தெளிந்த மதி தீங்கற்ற யோசனைகள்
பள்ளிப் படிப்புடனே பல்கலைகள் கற்றிடவும்
கொள்ளும் பசிக் குணவாய் கூட்டிவலு மின்கதிர்கள்
வெள்ளைக் கதிர் வலிமை வீரமதை வேண்டுமெனில்
அள்ளிப் பசுமை மஞ்சள் அத்தோடு நீலம் என
வண்ணக் கதிர்க்கலவை வாய்ருசிக்கத் தின்றுமனம்
எண்ணும் கனவுகளில் எழும்வண்ணக் காட்சிமயம்
கண்ணும் காணுமுடல் கை தொடவோ ஒன்றுமில்லை
வண்ணம் எமைப் படைத்து வாழவென விட்டாலென்
காந்த அலைக் கட்டும் கால்நடக்க மின்னதிர்வும்
மீந்தே அதிகரித்தால் மேனியிடை சூடெழவும்
கூந்தல் அலைக் கதிர்கள் கொண்ட மணம் எங்கிருந்து
தீய்ந்த குறுமணியா தின்ற கதிர்மின் தெறிப்பா
ஆய்ந்து விளையாடி அழகுக் கனவுலகில்
நீந்திக் கதைகள் சொலி நெஞ்சமதில் நன்றெண்ணி
சாந்தி கிடைத்ததெனச் சஞ்சலங்கள் விட்டொழிந்து
மாந்தர்தம் வாழ்வுதனை மாற்றிவைத்தல்ஆகாதோ
கண்ணிரண்டு மூடவுமுன் காணுமிருள் தேவையில்லை
நண்பர் உறவுகளும் நல்லதன்றி எண்ணமில்லை
பெண்கள் சிதைவதற்குப் பேதையுடல் திண்மமில்லை
எண்ணம் பிழைத்தவனோ எட்டித்தொட ஒன்றுமில்லை
வெள்ளை முகிற்தேரினில் விண்முழுதும் சுற்றிவந்து
அள்ளித் தெறித்த கடல் ஆர்க்கும் அலைமேல்நடந்து
கொள்ளிக் கெரியு முடல் கொண்டிருந்த வேளை விட்டு
எள்ளை நிகர்த்த சிறு இன்னலென்ப தேதறியா
வஞ்சமும் சூதுவினை வாழ்வழிக்கும் ஆட்சிமுறை
நஞ்சுச் சதி சூழ்ச்சி நல்லவரை கொல்வதெனும்
மிஞ்சும் துயரவழி மேதினியில் இல்லையென
விஞ்சும் பெருவாழ்வு வேண்டுமதை ஆக்கிவிடு
கேட்டேன்
( குருவியின் கீதம்)
மின்னும் வானப் பேரொலி கேட்டேன்
வீழும் எரிகல் சீறல் கேட்டேன்
அன்னை மண்ணில் அதிர்வும் கேட்டேன்
அண்டம் ஆளூம் ஓம் ஒலி கேட்டேன்
இன்பச்சோலை சலனம் கேட்டேன்
இனிதாம் இருளில் வண்டொலி கேட்டேன்
அன்னம் நீந்திட அலைகள் சத்தம்
அசையும் காற்றின் அரவம் கேட்டேன்
தென்னம் ஒலை பின்னால் சத்தம்
திசையில் பெரிதாய் வெடியும் கேட்டேன்
என்னை தாங்கும் தருவின் மண்ணில்
எங்குங் கதறல் அழுகை கேட்டேன்
தன்னை அழிக்கும் தருணம் முன்னால்
தமிழில் கோடி கூக்குரல் கேட்டேன்
தின்னும் தீயில்நாக்கின் வெம்மை
தேகம் கொல்ல தேய்குரல்கேட்டேன்
முன்னும் பின்னும் படபட சத்தம்
மூளும் மரணம் முனகொலி கேட்டேன்
பின்னிக் கால்கள் வீழொலி கேட்டேன்
பேதைகள் கூவிக் கதறக் கேட்டேன்
மின்னல் புகையாய் வானில் ஓடும்
மேகத் தூர்தி தூரக் கேட்டேன்
சின்னா பின்னம் சிதறும் மரங்கள்
செல்லும் வழியில் வீழக் கேட்டேன்
தன்னந்தனியே தவழும் குழநதை
தாயின் உடலைத்தட்டி யெழுப்பி
என்ன நிகழக் கொண்டது அறியா
எழுநீ யம்மா என்றிடக் கேட்டேன்
தென்னை முறியும் சத்தம் கேட்டேன்
தெருவில் பிணங்கள் அனுங்கல் கேட்டேன்
பின்னே ஓலைக் குடிசைகள் எரியும்
பெரிதாய் தீயின் பரவல் கேட்டேன்
கொஞ்சும் தமிழைப் பேசக் கேட்டேன்
குற்றம் கொல்லெனும் கூக்குரல் கேட்டேன்
கெஞ்சும் அலறும் தமிழைக் கேட்டேன்
கேவி அழுவது யாரோ கேட்டேன்
பிஞ்சும் பழுத்த கனிகளை வேழம்
பெருங்கால் நசுக்கும் பிளிறல் கேட்டேன்
நெஞ்சின் அதிரும் துடிப்பும் கேட்டேன்
நேர்வது நிசமா இறைவனைக் கேட்டேன்
அஞ்சும் கெட்டே அறிவும் சோர
அழுதேன் அழுதே அறிவும் கெட்டேன்
வெட்டிக் கொல்வோர் சட்டைகிழித்து
வீழத் துடிக்க ஆழ ரசித்து
கட்டி சுட்டவர் கண்களைக்குத்தி
கத்திப் போடும் கூச்சலும் கேட்டேன்
தட்டிக் கேட்போர் யாரும் இல்லை
தர்மம் எங்கே இறைவா கேட்டேன்
கேட்டேன் கேட்டேன் அழுதே கேட்டேன்
கிளையில் நின்றே கூவிக் கேட்டேன்
வாட்டம் கொண்டு மண்ணில் வீழ்ந்து
வாராய் தெய்வம்என்றும் கேட்டேன்
நாட்டில் எங்கும் இல்லாக் கோரம்
நடக்கும் வகையேன் நவிலாய் என்றேன்
கேட்கும்கேள்வி குருவிக் குரல்தான்
காற்றில் கரையக் கண்ணீர் விட்டேன்
( குருவியின் கீதம்)
மின்னும் வானப் பேரொலி கேட்டேன்
வீழும் எரிகல் சீறல் கேட்டேன்
அன்னை மண்ணில் அதிர்வும் கேட்டேன்
அண்டம் ஆளூம் ஓம் ஒலி கேட்டேன்
இன்பச்சோலை சலனம் கேட்டேன்
இனிதாம் இருளில் வண்டொலி கேட்டேன்
அன்னம் நீந்திட அலைகள் சத்தம்
அசையும் காற்றின் அரவம் கேட்டேன்
தென்னம் ஒலை பின்னால் சத்தம்
திசையில் பெரிதாய் வெடியும் கேட்டேன்
என்னை தாங்கும் தருவின் மண்ணில்
எங்குங் கதறல் அழுகை கேட்டேன்
தன்னை அழிக்கும் தருணம் முன்னால்
தமிழில் கோடி கூக்குரல் கேட்டேன்
தின்னும் தீயில்நாக்கின் வெம்மை
தேகம் கொல்ல தேய்குரல்கேட்டேன்
முன்னும் பின்னும் படபட சத்தம்
மூளும் மரணம் முனகொலி கேட்டேன்
பின்னிக் கால்கள் வீழொலி கேட்டேன்
பேதைகள் கூவிக் கதறக் கேட்டேன்
மின்னல் புகையாய் வானில் ஓடும்
மேகத் தூர்தி தூரக் கேட்டேன்
சின்னா பின்னம் சிதறும் மரங்கள்
செல்லும் வழியில் வீழக் கேட்டேன்
தன்னந்தனியே தவழும் குழநதை
தாயின் உடலைத்தட்டி யெழுப்பி
என்ன நிகழக் கொண்டது அறியா
எழுநீ யம்மா என்றிடக் கேட்டேன்
தென்னை முறியும் சத்தம் கேட்டேன்
தெருவில் பிணங்கள் அனுங்கல் கேட்டேன்
பின்னே ஓலைக் குடிசைகள் எரியும்
பெரிதாய் தீயின் பரவல் கேட்டேன்
கொஞ்சும் தமிழைப் பேசக் கேட்டேன்
குற்றம் கொல்லெனும் கூக்குரல் கேட்டேன்
கெஞ்சும் அலறும் தமிழைக் கேட்டேன்
கேவி அழுவது யாரோ கேட்டேன்
பிஞ்சும் பழுத்த கனிகளை வேழம்
பெருங்கால் நசுக்கும் பிளிறல் கேட்டேன்
நெஞ்சின் அதிரும் துடிப்பும் கேட்டேன்
நேர்வது நிசமா இறைவனைக் கேட்டேன்
அஞ்சும் கெட்டே அறிவும் சோர
அழுதேன் அழுதே அறிவும் கெட்டேன்
வெட்டிக் கொல்வோர் சட்டைகிழித்து
வீழத் துடிக்க ஆழ ரசித்து
கட்டி சுட்டவர் கண்களைக்குத்தி
கத்திப் போடும் கூச்சலும் கேட்டேன்
தட்டிக் கேட்போர் யாரும் இல்லை
தர்மம் எங்கே இறைவா கேட்டேன்
கேட்டேன் கேட்டேன் அழுதே கேட்டேன்
கிளையில் நின்றே கூவிக் கேட்டேன்
வாட்டம் கொண்டு மண்ணில் வீழ்ந்து
வாராய் தெய்வம்என்றும் கேட்டேன்
நாட்டில் எங்கும் இல்லாக் கோரம்
நடக்கும் வகையேன் நவிலாய் என்றேன்
கேட்கும்கேள்வி குருவிக் குரல்தான்
காற்றில் கரையக் கண்ணீர் விட்டேன்
யாருக்கு என்னவோ !!!
பூவுக்கு வாசமும் பொன்னுக்கு மின்னலும்
பொய்கையில் தண்ணலையும்
ஆவுக்கு சாந்தமும் அன்னைக்கு அன்பதும்
ஆதவன் வெம்மையதும்
நாவுக்கு இன்சுவை நாட்டுக்கு நல்லவன்
நாளுக்கு காலையென
பாவுக்கு சந்தமும் பாட்டுக்கு ராகமும்
பார்ப்பது இன்பமன்றோ
தேவிக்குப் பூசையும் தேன்மதி ஓடிடத்
தெள்ளெனும் வானமதும்
ஆவிக்குத் தீயதும் ஆடைக்கு நூலதும்
ஆற்றுக்கு கீழ்நிலமும்
கூவும் குயிலோசை கொண்டிடச் சோலையும்
கோவிலில் தெய்வமதும்
தூவி மழைபெய்யத் தூரத்து மேகமும்
தேவைகள் ஆகுமன்றோ!
மாவிற் கனியதும் மாலைக்குத் தென்றலும்
மாதர்க்கு புன்னகையும்
ஓவியம் வண்ணமும் ஒலைக்குச் செந்தமிழ்
உண்ண அறுசுவைகள்
வாவிக்கு நீரதும் வந்த அலைகளும்
வாழ்ந்திடும் மீனினமும்
பூவிற்கு தேனதும் புன்னகை கொள்முகம்
போன்ற இனிமை யன்றோ
பாவைக்குக் காமுகன் பண்புக்குப் பாதகன்
பார்க்க இழிசெயலும்
தேவைக்கு சூனியம் தீவில் புயலதும்
தேகத்தில் ரோகமதும்
சேவைக்கு ஆணவம் சிந்தைக்கு வஞ்சனை
செய்கைக்கு சோம்பல்குணம்
யாவையும் கொள்ளவோர் பேராசை யாம்குணம்
வாழ்வுக்கு தீமையன்றோ
**********************
பூவுக்கு வாசமும் பொன்னுக்கு மின்னலும்
பொய்கையில் தண்ணலையும்
ஆவுக்கு சாந்தமும் அன்னைக்கு அன்பதும்
ஆதவன் வெம்மையதும்
நாவுக்கு இன்சுவை நாட்டுக்கு நல்லவன்
நாளுக்கு காலையென
பாவுக்கு சந்தமும் பாட்டுக்கு ராகமும்
பார்ப்பது இன்பமன்றோ
தேவிக்குப் பூசையும் தேன்மதி ஓடிடத்
தெள்ளெனும் வானமதும்
ஆவிக்குத் தீயதும் ஆடைக்கு நூலதும்
ஆற்றுக்கு கீழ்நிலமும்
கூவும் குயிலோசை கொண்டிடச் சோலையும்
கோவிலில் தெய்வமதும்
தூவி மழைபெய்யத் தூரத்து மேகமும்
தேவைகள் ஆகுமன்றோ!
மாவிற் கனியதும் மாலைக்குத் தென்றலும்
மாதர்க்கு புன்னகையும்
ஓவியம் வண்ணமும் ஒலைக்குச் செந்தமிழ்
உண்ண அறுசுவைகள்
வாவிக்கு நீரதும் வந்த அலைகளும்
வாழ்ந்திடும் மீனினமும்
பூவிற்கு தேனதும் புன்னகை கொள்முகம்
போன்ற இனிமை யன்றோ
பாவைக்குக் காமுகன் பண்புக்குப் பாதகன்
பார்க்க இழிசெயலும்
தேவைக்கு சூனியம் தீவில் புயலதும்
தேகத்தில் ரோகமதும்
சேவைக்கு ஆணவம் சிந்தைக்கு வஞ்சனை
செய்கைக்கு சோம்பல்குணம்
யாவையும் கொள்ளவோர் பேராசை யாம்குணம்
வாழ்வுக்கு தீமையன்றோ
**********************
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யாருக்கு யார் என்று இறைவன் தான் முடிவு செய்யனும்.. பாவைக்கு காமூகனா?
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
துயரே வாழ்வானால்!!
சலசலக்கும் அருவிதரும் சங்கீத ஓசைதனில்
சஞ்சலமே கொள்ளுமனம் சாந்தமுறாதோ
கலகலக்கும் குருவிஇசை காற்றி லெழும்வேளையிலே
காதுவழி சென்றுதுயர் களைந்துவிடாதோ
பலபடித்தும் அறிவதல்ல பட்டவைகள் கற்பதெனும்
பாடமென எண்ணியதை பழகி விடாயோ
குலமழிக்கக் குடியழிக்க குமுறும் கடல்எழுமொருநாள்
கூடிநின்றே தினமழிப்பார் கொடுமைகள் விதியோ?
சிலர் அயலில் சோதியெழும் சில இருட்டுள் தள்ளிவிடும்
செலவிருக்கும் வாழ்விலென்ன சிறிதும்மிஞ்சாதோ
கலவரமும் வாழ்வில்வரும் கலவரமே வாழ்வுஎனில்
காணும்துயர்க் காட்சிதனை மாற்றுவர் யாரோ
பலர் மலைத்தும் பலமழிந்தும் பலரலைந்தும் பலரிழந்தும்
பட்டதுயர் மாறவில்லை பாவங்கள் ஏனோ
கலகமதில் கோபுரங்கள் காணும் மனை தீயழிக்கக்
காப்பவர் யார் நாடகமும் ஒப்பனைதானோ
தலை வரைக்கும் மேலெழுந்து தண்புனலும் மூடுவதாய்
தாவியிடர் ஏறியபின் தன்னிலை யாதோ
மலையளவு துன்பமிடத் மனமுடைய காண் அவலம்
மறுபடியும் மறுபடியும் உயிர்பெறலாமோ
வலைநுழையும் மீன்களென வாரி அவர் கொண்டதெல்லாம்
விதியழிக்கும் கொடுமையென விளைவதுமேனோ
அலைகரங்கள் ஆட்டுவதும் அதிபெரிய கப்பலெனில்
அகம்மலைய உலுப்புவதாம் அதனிலும்பெரிதோ
உலைகொதிக்கும் வாழ்வுதனில் உயிர்கொதியைப் போக்கவென
ஓடுமிடம் எரிமலையின் ஊற்றெனலாமோ
நிலைதளரும் வேளையிலும் நீயிறைவா அன்பு செய்ய
நிகழும் இதம் மகிழ்வுதரும் நிறுத்தியதேனோ
கலைத்தெமையே கூற்றுவனும் கயிறெடுத்தே துரத்துகிறான்
கைப்பிடியில் அகப்படுவர் யார்முதல் தானோ
விலையுங் கொள்ளா வாழ்வுதனில் விலைபெருத்த உயிர்பறிக்க
விடைகொடுப்பர் யாரறியோம் நீயல்ல நானோ
*********************
சலசலக்கும் அருவிதரும் சங்கீத ஓசைதனில்
சஞ்சலமே கொள்ளுமனம் சாந்தமுறாதோ
கலகலக்கும் குருவிஇசை காற்றி லெழும்வேளையிலே
காதுவழி சென்றுதுயர் களைந்துவிடாதோ
பலபடித்தும் அறிவதல்ல பட்டவைகள் கற்பதெனும்
பாடமென எண்ணியதை பழகி விடாயோ
குலமழிக்கக் குடியழிக்க குமுறும் கடல்எழுமொருநாள்
கூடிநின்றே தினமழிப்பார் கொடுமைகள் விதியோ?
சிலர் அயலில் சோதியெழும் சில இருட்டுள் தள்ளிவிடும்
செலவிருக்கும் வாழ்விலென்ன சிறிதும்மிஞ்சாதோ
கலவரமும் வாழ்வில்வரும் கலவரமே வாழ்வுஎனில்
காணும்துயர்க் காட்சிதனை மாற்றுவர் யாரோ
பலர் மலைத்தும் பலமழிந்தும் பலரலைந்தும் பலரிழந்தும்
பட்டதுயர் மாறவில்லை பாவங்கள் ஏனோ
கலகமதில் கோபுரங்கள் காணும் மனை தீயழிக்கக்
காப்பவர் யார் நாடகமும் ஒப்பனைதானோ
தலை வரைக்கும் மேலெழுந்து தண்புனலும் மூடுவதாய்
தாவியிடர் ஏறியபின் தன்னிலை யாதோ
மலையளவு துன்பமிடத் மனமுடைய காண் அவலம்
மறுபடியும் மறுபடியும் உயிர்பெறலாமோ
வலைநுழையும் மீன்களென வாரி அவர் கொண்டதெல்லாம்
விதியழிக்கும் கொடுமையென விளைவதுமேனோ
அலைகரங்கள் ஆட்டுவதும் அதிபெரிய கப்பலெனில்
அகம்மலைய உலுப்புவதாம் அதனிலும்பெரிதோ
உலைகொதிக்கும் வாழ்வுதனில் உயிர்கொதியைப் போக்கவென
ஓடுமிடம் எரிமலையின் ஊற்றெனலாமோ
நிலைதளரும் வேளையிலும் நீயிறைவா அன்பு செய்ய
நிகழும் இதம் மகிழ்வுதரும் நிறுத்தியதேனோ
கலைத்தெமையே கூற்றுவனும் கயிறெடுத்தே துரத்துகிறான்
கைப்பிடியில் அகப்படுவர் யார்முதல் தானோ
விலையுங் கொள்ளா வாழ்வுதனில் விலைபெருத்த உயிர்பறிக்க
விடைகொடுப்பர் யாரறியோம் நீயல்ல நானோ
*********************
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|