Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எலுமிச்சை வாங்கலாமா?
+8
மாணிக்கம் நடேசன்
ரேவதி
உதயசுதா
பிரசன்னா
பாலாஜி
உமா
பூஜிதா
dsudhanandan
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
எலுமிச்சை வாங்கலாமா?
சமீபத்தில் "Benefits of lemon" என்று ஒரு ஆங்கிலக் கட்டுரையை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வாசிக்க நேர்ந்தது. ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ போன்ற ஒரு தேசீய நாளேட்டில், எலுமிச்சையின் பயன்பாடுகள் குறித்த பல முக்கிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதைப் பார்த்ததும், உள்கட்சி ஜனநாயகம் இல்லையென்று உறுப்பினர் பதவியை உதறிய எதிர்க்கட்சிப் பிரமுகரைப் போல எனது உள்ளம் கொதித்தது. உடனே எலுமிச்சம்பழத்தைக் குறித்த ஒரு விழிப்புணர்வுப் பதிவை எழுதியபிறகே ஆபீஸ் வேலையை கவனிப்பது என்று சபதம் மேற்கொண்டு எழுதிய பதிவு இது.
எலுமிச்சையின் பெருமைகளைப் பாரீர்!
முக்கிய பிரமுகர்களைப் பார்க்கப் போகும்போது பலர் கையில் எலுமிச்சம்பழத்துடன் போவதுண்டு. அதற்கு முக்கிய காரணம், எலுமிச்சையில் விட்டமின்-"C" இருக்கிறது. ( C for Cash, C for Corruption, C for Concession வகையறா). இந்த எலுமிச்சம்பழம் இந்தியாவில் தான் முதலில் விளைவிக்கப்பட்டது என்பதிலிருந்தே புரிந்திருக்குமே?
1875-ல் ஃப்ளினின் என்ற மருத்துவர் உடம்பிலிருக்கும் அசுத்தமான ரத்தத்தை சுத்தப்படுத்த எலுமிச்சை சாறு போல எதுவுமில்லை என்று கண்டுபிடித்ததை இன்றளவும் டாஸ்மாக் பக்தகோடிகள் அவ்வப்போது பின்பற்றுகிறார்கள் அல்லவா? இதிலிருந்தே எலுமிச்சையின் மப்பு நீக்கும் மருத்துவ குணத்தை அறியலாம். ஆனால், அதே எலுமிச்சைச் சாறை வொயிட் ரம்மிலும், வோட்காவிலும் கலந்து குடிப்பது என்ன கொடுமை! அதனினும் கொடிது, மப்பு குப்பென்று ஏற எலுமிச்சங்காய் ஊறுகாயை சைட்-டிஷ்ஷாய் உபயோகிப்பது!
வெளிநாடுகளில் எலுமிச்சம்பழத்தின் சாறு, விதை, தோல் எல்லாவற்றையும் மருந்துகள் மற்றும் வாசனைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்களாம். ஆனால், எதிலும் வித்தியாசமாக சிந்திக்கும் திறனுள்ள நாம் அதை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்று பார்த்தால் புல்லரிக்கும். ( எலுமிச்சைச் சாற்றைத் தடவினால் அரிப்பும் நிற்கும் என அறிக!)
(கீழே Spoiler பகுதியில் உள்ளதை விருப்பமுள்ளவர்கள் படிக்க)
இது தவிர, எலுமிச்சை பல உடல் உபாதைகளுக்கு அருமருந்தாகும். அவையாவன:
வயிற்றுப் பொருமல்
எலுமிச்சையின் சாறு வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு லாரி நிறைய எலுமிச்சம்பழம் வாங்கி, உள்ளாட்சித் தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர்களுக்கு, வெந்நீரில் எலுமிச்சம் சாறு கலந்து வழங்கியதாக, சத்தியமூர்த்தி பவன் வாசலில் குவிந்து கிடக்கும் காயாத தோல்களும் காய்ந்து கிடக்கும் தொண்டர்களும் தெரிவிக்கின்றனர்.
கொசுக்கடி
தமிழகமெங்கும் மழை கொட்டிக் கொண்டிருப்பதால், தமிழகத்தில் மட்டும் கொசுத்தொகை 700 கோடியை எட்டுமென்றும், 700 கோடியாவது கொசு எழும்பூர் ரயில் நிலைய வாசலில் பிறக்கும் என்றும் உலக கொசு வளர்ச்சிக் கழகம் அறிவித்திருக்கிறது. ஆகவே, கொசுக் கடித்த இடத்தில் (எழும்பூர் ரயில் நிலையத்தில் அல்ல; உங்கள் உடம்பில்) எலுமிச்சை சாற்றைப் பூசினால் கொசுவின் உற்றார் உறவினர் உங்கள் பக்கத்தில் வராமல் பம்மி விடுவார்கள்.
உறக்கமின்மை
கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விற்கிற விலையைக் கேட்டு, நாளைக்கு சாம்பாரா, ரசமா என்று யோசித்து உறக்கம் வராதவர்கள், எலுமிச்சம் பழரசம் அருந்தினால், பிரணாப் முகர்ஜீ பணவீக்கம் குறித்து மீண்டுமொரு முறை கவலை தெரிவிக்கிற வரைக்கும் சுமாராக உறங்க வாய்ப்புகள் சுமாராக இருக்கின்றன.
விஷக்கடி
எலுமிச்சம் பழத்துக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றலும் உண்டு என்பதால் வாகனம் வைத்திருப்பவர்கள் கைவசம் எப்போதும் ஒரு எலுமிச்சம்பழம் வைத்திருப்பது நன்மை பயக்கும். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏறும்போதும், கொஞ்சமாய் சாறு சாப்பிட்டால் கடுப்பு சற்றே குறையும்.
காய்ச்சல்
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் 782 பேர்கள் ஏறத்தாழ 4000 கோடி கறுப்புப்பணத்தைப் பதுக்கியிருக்கிறார்கள் என்பது போன்ற செய்தியை வாசித்தால், உடனே எலுமிச்சம் பழச்சாற்றை உண்டால், காய்ச்சல் கிறுகிறுப்பு போன்றவை அறவே ஏற்படாது.
வாந்தி
எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்த்தால் வாந்தி வராது. ஆகவே, கையில் ஒரு எலுமிச்சம் பழமிருந்தால் துணிந்து மழைக் காலத்திலும் மாம்பலம், அசோக் நகர், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் அருவருப்பின்றி நடமாடலாம்.
அஜீரணம்
கொஞ்சம் தேன்கலந்து எலுமிச்சைச் சாறு உண்டால் கல்லீரல் பலப்படும். எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உத்தரவு போட்டு விட்டு, நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு போட்டதும், இதைச் சாப்பிட்டால் அஜீரணம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
தலைவலி
சூடான பானங்களில் அரைமூடி எலுமிச்சையைப் பிழிந்து அருந்தினால் தலைவலி குணமாகும். குறிப்பாக பொருளாதாரம், பணவீக்கம், விலைவாசி ஏற்றம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உணவை முற்றிலுமாக நிறுத்திவிட்டு தினமும் மூன்று வேளை இந்தப் பானத்தையே அருந்தினால், அடுத்த தேர்தலில் இலவசமாக திருவோடு கேட்கிற அவசியம் ஏற்படாது.
பித்தம்
இது அண்மைக்காலமாக இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருகிற கோளாறு. இதனால், இம் என்றால் உண்ணாவிரதம், ஏன் என்றால் மவுன விரதம் இருப்பதோடு, அவை முடிந்ததும் இடைவிடாமல் புலம்பித் தீர்ப்பதைப் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எலுமிச்சைச் சாற்றில் சீரகமும், மிளகும் கலந்து கொடுத்தால் பித்தம் தலைக்கேறாமல் இருக்கும்.
இன்னும் எலுமிச்சம்பழத்தின் பல அற்புத குணங்கள் உள்ளன என்றாலும், நீளம் கருதி இத்தோடு நிறைவு செய்கிறேன். இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம்பழத்தை அனைவரும் எப்போதும் கைவசம் வைத்திருந்தால், பிரதம மந்திரியும், மத்திய நிதியமைச்சரும் விலைவாசியேற்றம் குறித்து அறிக்கை அளிக்கும்போது, தலையில் அழுந்தத் தேய்த்து (அவர்கள் தலையில் இல்லை; நம் தலையில்) பைத்தியம் பிடித்து துணியைக் கிழித்துக்கொண்டு ரோட்டில் ஓடாமல் இருக்க முடியும்.
எலுமிச்சையின் பெருமைகளைப் பாரீர்!
முக்கிய பிரமுகர்களைப் பார்க்கப் போகும்போது பலர் கையில் எலுமிச்சம்பழத்துடன் போவதுண்டு. அதற்கு முக்கிய காரணம், எலுமிச்சையில் விட்டமின்-"C" இருக்கிறது. ( C for Cash, C for Corruption, C for Concession வகையறா). இந்த எலுமிச்சம்பழம் இந்தியாவில் தான் முதலில் விளைவிக்கப்பட்டது என்பதிலிருந்தே புரிந்திருக்குமே?
1875-ல் ஃப்ளினின் என்ற மருத்துவர் உடம்பிலிருக்கும் அசுத்தமான ரத்தத்தை சுத்தப்படுத்த எலுமிச்சை சாறு போல எதுவுமில்லை என்று கண்டுபிடித்ததை இன்றளவும் டாஸ்மாக் பக்தகோடிகள் அவ்வப்போது பின்பற்றுகிறார்கள் அல்லவா? இதிலிருந்தே எலுமிச்சையின் மப்பு நீக்கும் மருத்துவ குணத்தை அறியலாம். ஆனால், அதே எலுமிச்சைச் சாறை வொயிட் ரம்மிலும், வோட்காவிலும் கலந்து குடிப்பது என்ன கொடுமை! அதனினும் கொடிது, மப்பு குப்பென்று ஏற எலுமிச்சங்காய் ஊறுகாயை சைட்-டிஷ்ஷாய் உபயோகிப்பது!
வெளிநாடுகளில் எலுமிச்சம்பழத்தின் சாறு, விதை, தோல் எல்லாவற்றையும் மருந்துகள் மற்றும் வாசனைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்களாம். ஆனால், எதிலும் வித்தியாசமாக சிந்திக்கும் திறனுள்ள நாம் அதை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்று பார்த்தால் புல்லரிக்கும். ( எலுமிச்சைச் சாற்றைத் தடவினால் அரிப்பும் நிற்கும் என அறிக!)
(கீழே Spoiler பகுதியில் உள்ளதை விருப்பமுள்ளவர்கள் படிக்க)
- Spoiler:
- எலுமிச்சம் பழத்தில் ஒரு துளைபோட்டு, ஒரு கறுப்புக்கயிற்றில் கட்டி அதன் முனையில் ஒரு மிளகாயைச் சேர்த்துக்கட்டி உங்கள் வாகனத்தில் தொங்க விட்டால், விபத்து ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாது. (எலுமிச்சம் பழத்துக்கு).
ஆயுத பூஜையன்று உங்கள் வாகனச் சக்கரங்களில் தலா ஒரு எலுமிச்சம்பழம் வீதம் வைத்து நசுக்கினால், நீங்கள் போகிற வழியில் யாரும் செல்போன் பேசியபடி குறுக்கே வர மாட்டார்கள் என்பதுடன், சுத்துப்பட்ட பதினெட்டுப் பட்டியில் வாகனம் ஓட்டுகிறவர்களும் கவனமாக ஓட்டுவார்கள் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
உங்களுக்கு வேண்டாதவர்களைப் பயமுறுத்த, அவர்கள் வீட்டு வாசலில் ஒரு எலுமிச்சம் பழமும் கொஞ்சம் குங்குமமும் போட்டு விட்டால் போதும். அவர்கள் ஏதோ பில்லி சூனியம் என்று எண்ணி ஏரியாவை மாற்றிக்கொண்டு போய்விடுவார்கள்.
இது தவிர, எலுமிச்சை பல உடல் உபாதைகளுக்கு அருமருந்தாகும். அவையாவன:
வயிற்றுப் பொருமல்
எலுமிச்சையின் சாறு வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு லாரி நிறைய எலுமிச்சம்பழம் வாங்கி, உள்ளாட்சித் தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர்களுக்கு, வெந்நீரில் எலுமிச்சம் சாறு கலந்து வழங்கியதாக, சத்தியமூர்த்தி பவன் வாசலில் குவிந்து கிடக்கும் காயாத தோல்களும் காய்ந்து கிடக்கும் தொண்டர்களும் தெரிவிக்கின்றனர்.
கொசுக்கடி
தமிழகமெங்கும் மழை கொட்டிக் கொண்டிருப்பதால், தமிழகத்தில் மட்டும் கொசுத்தொகை 700 கோடியை எட்டுமென்றும், 700 கோடியாவது கொசு எழும்பூர் ரயில் நிலைய வாசலில் பிறக்கும் என்றும் உலக கொசு வளர்ச்சிக் கழகம் அறிவித்திருக்கிறது. ஆகவே, கொசுக் கடித்த இடத்தில் (எழும்பூர் ரயில் நிலையத்தில் அல்ல; உங்கள் உடம்பில்) எலுமிச்சை சாற்றைப் பூசினால் கொசுவின் உற்றார் உறவினர் உங்கள் பக்கத்தில் வராமல் பம்மி விடுவார்கள்.
உறக்கமின்மை
கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விற்கிற விலையைக் கேட்டு, நாளைக்கு சாம்பாரா, ரசமா என்று யோசித்து உறக்கம் வராதவர்கள், எலுமிச்சம் பழரசம் அருந்தினால், பிரணாப் முகர்ஜீ பணவீக்கம் குறித்து மீண்டுமொரு முறை கவலை தெரிவிக்கிற வரைக்கும் சுமாராக உறங்க வாய்ப்புகள் சுமாராக இருக்கின்றன.
விஷக்கடி
எலுமிச்சம் பழத்துக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றலும் உண்டு என்பதால் வாகனம் வைத்திருப்பவர்கள் கைவசம் எப்போதும் ஒரு எலுமிச்சம்பழம் வைத்திருப்பது நன்மை பயக்கும். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏறும்போதும், கொஞ்சமாய் சாறு சாப்பிட்டால் கடுப்பு சற்றே குறையும்.
காய்ச்சல்
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் 782 பேர்கள் ஏறத்தாழ 4000 கோடி கறுப்புப்பணத்தைப் பதுக்கியிருக்கிறார்கள் என்பது போன்ற செய்தியை வாசித்தால், உடனே எலுமிச்சம் பழச்சாற்றை உண்டால், காய்ச்சல் கிறுகிறுப்பு போன்றவை அறவே ஏற்படாது.
வாந்தி
எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்த்தால் வாந்தி வராது. ஆகவே, கையில் ஒரு எலுமிச்சம் பழமிருந்தால் துணிந்து மழைக் காலத்திலும் மாம்பலம், அசோக் நகர், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் அருவருப்பின்றி நடமாடலாம்.
அஜீரணம்
கொஞ்சம் தேன்கலந்து எலுமிச்சைச் சாறு உண்டால் கல்லீரல் பலப்படும். எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உத்தரவு போட்டு விட்டு, நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு போட்டதும், இதைச் சாப்பிட்டால் அஜீரணம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
தலைவலி
சூடான பானங்களில் அரைமூடி எலுமிச்சையைப் பிழிந்து அருந்தினால் தலைவலி குணமாகும். குறிப்பாக பொருளாதாரம், பணவீக்கம், விலைவாசி ஏற்றம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உணவை முற்றிலுமாக நிறுத்திவிட்டு தினமும் மூன்று வேளை இந்தப் பானத்தையே அருந்தினால், அடுத்த தேர்தலில் இலவசமாக திருவோடு கேட்கிற அவசியம் ஏற்படாது.
பித்தம்
இது அண்மைக்காலமாக இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருகிற கோளாறு. இதனால், இம் என்றால் உண்ணாவிரதம், ஏன் என்றால் மவுன விரதம் இருப்பதோடு, அவை முடிந்ததும் இடைவிடாமல் புலம்பித் தீர்ப்பதைப் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எலுமிச்சைச் சாற்றில் சீரகமும், மிளகும் கலந்து கொடுத்தால் பித்தம் தலைக்கேறாமல் இருக்கும்.
இன்னும் எலுமிச்சம்பழத்தின் பல அற்புத குணங்கள் உள்ளன என்றாலும், நீளம் கருதி இத்தோடு நிறைவு செய்கிறேன். இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம்பழத்தை அனைவரும் எப்போதும் கைவசம் வைத்திருந்தால், பிரதம மந்திரியும், மத்திய நிதியமைச்சரும் விலைவாசியேற்றம் குறித்து அறிக்கை அளிக்கும்போது, தலையில் அழுந்தத் தேய்த்து (அவர்கள் தலையில் இல்லை; நம் தலையில்) பைத்தியம் பிடித்து துணியைக் கிழித்துக்கொண்டு ரோட்டில் ஓடாமல் இருக்க முடியும்.
Last edited by dsudhanandan on Wed Nov 23, 2011 10:55 am; edited 5 times in total
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: எலுமிச்சை வாங்கலாமா?
எலுமிச்சை பழத்தின் நன்மையை நகைச்சுவையோடு சொல்லி இருக்கீங்க
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: எலுமிச்சை வாங்கலாமா?
எலுமிச்சம் பழத்தில் ஒரு துளைபோட்டு, ஒரு
கறுப்புக்கயிற்றில் கட்டி அதன் முனையில் ஒரு மிளகாயைச் சேர்த்துக்கட்டி
உங்கள் வாகனத்தில் தொங்க விட்டால், விபத்து ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாது. (எலுமிச்சம் பழத்துக்கு).
யோசிக்க வேண்டிய விஷயம்.எனக்கு உதவும்
சுதன் செம சிரிப்பு போங்க. பாதி படித்ததும் இங்கே தானே சிரித்து கொண்டே இருந்தேன். மீதம் படிக்கையில் ஐயோ என்னால முடியல பா.
இதில் நகைச்சுவையுடன் கூடிய நிறைய உண்மைகளும் உள்ளது சுதன்...
செம கட்டுரை தான் போங்க.
நீங்க ச.செ என்பதை மறக்கவில்லை
கறுப்புக்கயிற்றில் கட்டி அதன் முனையில் ஒரு மிளகாயைச் சேர்த்துக்கட்டி
உங்கள் வாகனத்தில் தொங்க விட்டால், விபத்து ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாது. (எலுமிச்சம் பழத்துக்கு).
கண்டிப்பா உங்க வீட்டு வாசலில் போடுவேன்.உங்களுக்கு வேண்டாதவர்களைப் பயமுறுத்த, அவர்கள் வீட்டு
வாசலில் ஒரு எலுமிச்சம் பழமும் கொஞ்சம் குங்குமமும் போட்டு விட்டால்
போதும். அவர்கள் ஏதோ பில்லி சூனியம் என்று எண்ணி ஏரியாவை மாற்றிக்கொண்டு
போய்விடுவார்கள்.
எலுமிச்சம் பழத்துக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றலும் உண்டு என்பதால்
வாகனம் வைத்திருப்பவர்கள் கைவசம் எப்போதும் ஒரு எலுமிச்சம்பழம்
வைத்திருப்பது நன்மை பயக்கும். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை
ஏறும்போதும், கொஞ்சமாய் சாறு சாப்பிட்டால் கடுப்பு சற்றே குறையும்.
யோசிக்க வேண்டிய விஷயம்.எனக்கு உதவும்
சுதன் செம சிரிப்பு போங்க. பாதி படித்ததும் இங்கே தானே சிரித்து கொண்டே இருந்தேன். மீதம் படிக்கையில் ஐயோ என்னால முடியல பா.
இதில் நகைச்சுவையுடன் கூடிய நிறைய உண்மைகளும் உள்ளது சுதன்...
செம கட்டுரை தான் போங்க.
நீங்க ச.செ என்பதை மறக்கவில்லை
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: எலுமிச்சை வாங்கலாமா?
அவர் நிர்வாக குழுவில் இருந்தாலும் , பதிவுகளில் அவர் சதுர செயலாளர் ஆக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய , அனைவருடைய விருப்பமும் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எலுமிச்சை வாங்கலாமா?
எலுமிச்சம்பழத்தைக் குறித்த ஒரு விழிப்புணர்வுப் பதிவை எழுதியபிறகே ஆபீஸ் வேலையை கவனிப்பது என்று சபதம் மேற்கொண்டு எழுதிய பதிவு இது.
உங்களின் இந்த விழிப்புணர்வு பகிர்வு... ரொம்பவே சிரிக்க வைததது...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: எலுமிச்சை வாங்கலாமா?
அடடா சுதா ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து இத்தனை அருமையா ஒரு பதிவு எழுதி இருக்கரிங்க. எலுமிச்சை பழங்களின் பயன்களை விட நீங்க போட்டு இருக்கற நகைசுவை பதிவு எல்லார் மனதையும் கொள்ளை கொள்ளும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: எலுமிச்சை வாங்கலாமா?
dsudhanandan wrote:உள்கட்சி ஜனநாயகம் இல்லையென்று உறுப்பினர் பதவியை உதறிய எதிர்க்கட்சிப் பிரமுகரைப் போல எனது உள்ளம் கொதித்தது. உடனே எலுமிச்சம்பழத்தைக் குறித்த ஒரு விழிப்புணர்வுப் பதிவை எழுதியபிறகே ஆபீஸ் வேலையை கவனிப்பது என்று சபதம் மேற்கொண்டு எழுதிய பதிவு இது.
எலுமிச்சம் பழத்தில் ஒரு துளைபோட்டு, ஒரு கறுப்புக்கயிற்றில் கட்டி அதன் முனையில் ஒரு மிளகாயைச் சேர்த்துக்கட்டி உங்கள் வாகனத்தில் தொங்க விட்டால், விபத்து ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாது. (எலுமிச்சம் பழத்துக்கு).
ஆயுத பூஜையன்று உங்கள் வாகனச் சக்கரங்களில் தலா ஒரு எலுமிச்சம்பழம் வீதம் வைத்து நசுக்கினால், நீங்கள் போகிற வழியில் யாரும் செல்போன் பேசியபடி குறுக்கே வர மாட்டார்கள் என்பதுடன், சுத்துப்பட்ட பதினெட்டுப் பட்டியில் வாகனம் ஓட்டுகிறவர்களும் கவனமாக ஓட்டுவார்கள் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
உங்களுக்கு வேண்டாதவர்களைப் பயமுறுத்த, அவர்கள் வீட்டு வாசலில் ஒரு எலுமிச்சம் பழமும் கொஞ்சம் குங்குமமும் போட்டு விட்டால் போதும். அவர்கள் ஏதோ பில்லி சூனியம் என்று எண்ணி ஏரியாவை மாற்றிக்கொண்டு போய்விடுவார்கள்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: எலுமிச்சை வாங்கலாமா?
இப்படியெல்லாம் எங்களை குழுப்ப எங்கிருந்து படிச்சிகிடுட வர்ரீங்க. நல்ல படிச்சேன், சூப்பரா ரசிச்சேன்.
வாழ்க எலுமிச்சை
வாழ்க எலுமிச்சை
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: எலுமிச்சை வாங்கலாமா?
பூஜிதா wrote:எலுமிச்சை பழத்தின் நன்மையை நகைச்சுவையோடு சொல்லி இருக்கீங்க
மிக்க நன்றி பூஜிதா
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: எலுமிச்சை வாங்கலாமா?
உமா wrote:எலுமிச்சம் பழத்தில் ஒரு துளைபோட்டு, ஒரு
கறுப்புக்கயிற்றில் கட்டி அதன் முனையில் ஒரு மிளகாயைச் சேர்த்துக்கட்டி
உங்கள் வாகனத்தில் தொங்க விட்டால், விபத்து ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாது. (எலுமிச்சம் பழத்துக்கு).
-- விவேக் ஒரு திரைப்படத்தில் கூறிய கருத்துதான்... ரசித்தமைக்கு நன்றிகண்டிப்பா உங்க வீட்டு வாசலில் போடுவேன்.உங்களுக்கு வேண்டாதவர்களைப் பயமுறுத்த, அவர்கள் வீட்டு
வாசலில் ஒரு எலுமிச்சம் பழமும் கொஞ்சம் குங்குமமும் போட்டு விட்டால்
போதும். அவர்கள் ஏதோ பில்லி சூனியம் என்று எண்ணி ஏரியாவை மாற்றிக்கொண்டு
போய்விடுவார்கள்.
-- நான் ஏற்கனவே மாற்று பரிகாரம் செய்து வீட்டு வாசலில் வைத்துள்ளேன்... அதனால் கவலைப்படமாட்டேன்எலுமிச்சம் பழத்துக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றலும் உண்டு என்பதால்
வாகனம் வைத்திருப்பவர்கள் கைவசம் எப்போதும் ஒரு எலுமிச்சம்பழம்
வைத்திருப்பது நன்மை பயக்கும். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை
ஏறும்போதும், கொஞ்சமாய் சாறு சாப்பிட்டால் கடுப்பு சற்றே குறையும்.
யோசிக்க வேண்டிய விஷயம்.எனக்கு உதவும்
-- நிறைய பேருக்கு உதவும்
சுதன் செம சிரிப்பு போங்க. பாதி படித்ததும் இங்கே தானே சிரித்து கொண்டே இருந்தேன். மீதம் படிக்கையில் ஐயோ என்னால முடியல பா.
இதில் நகைச்சுவையுடன் கூடிய நிறைய உண்மைகளும் உள்ளது சுதன்...
செம கட்டுரை தான் போங்க.
நீங்க ச.செ என்பதை மறக்கவில்லை
-- பாராட்டுக்கு நன்றி... கடந்து வந்த பாதையை எப்போதும் மறக்க மாட்டேன்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» புதுக்கம்ப்யூட்டர் வாங்கலாமா!
» முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா.?
» புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா?
» எலுமிச்சை
» எலுமிச்சை
» முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா.?
» புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா?
» எலுமிச்சை
» எலுமிச்சை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|