ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறியியல் கல்லூரிகள் நன்கொடை கட்டணம் வசூலித்தால் ரூ.1 கோடி அபராதம்

Go down

பொறியியல் கல்லூரிகள் நன்கொடை கட்டணம் வசூலித்தால் ரூ.1 கோடி அபராதம் Empty பொறியியல் கல்லூரிகள் நன்கொடை கட்டணம் வசூலித்தால் ரூ.1 கோடி அபராதம்

Post by இளமாறன் Thu Nov 17, 2011 1:44 am

பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு கடிவாளம் போட மத்திய அரசு தயாராகி விட்டது. விதிமுறைகளை மீறும், பெரிய அளவில் சேர்க்கை கட்டணம் வசூலிக்கும், பேராசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி போட, புதிய சட்டம் ஒன்று பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. இதன்படி, நன்கொடை கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு, ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

நாடு முழுவதும் ஏராளமான பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. எங்கு பார்த்தாலும் புற்றீசல் போல கிளம்பிக் கொண்டே இருக்கும், இந்த பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் மீது, மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தி நிலவுகிறது. இந்த கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கையின் போது, நன்கொடை மற்றும் சேர்க்கை கட்டணம் என்ற பெயரில், கொள்ளை லாபம் பார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.ஒவ்வொரு சீட்டுகளுமே, பல லட்சங்களில் விற்கப்படுகின்றன என்பதில் ஆரம்பித்து, எண்ணற்ற குற்றச்சாட்டுகள் வாசிக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இந்த கல்லூரிகளில் வேலைபார்க்கும் பேராசிரியர்களுக்கு குறைந்த அளவிலேயே சம்பளம் வழங்கப்படுகிறது என்றும், அந்தச் சம்பளமும் காலதாமதமாக இழுத்தடிக்கப்பட்டு தரப்படுகிறது என்ற புகாரும் உள்ளது.

கல்லூரி துவங்குவதற்கான அனுமதியை பெறும்போது, விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பெரும்பாலும் மீறப்படுகின்றன என்றும், பல கல்லூரிகளில் மாணவர்கள் மீது அத்துமீறல்கள் நடைபெறுவதாகவும் அவ்வப்போது செய்திகள் வருகின்றன.இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற கோரிக்கை, பொதுமக்கள் மத்தியில் நீண்ட காலமாக உள்ளது. தவிர, உயர்கல்வித் துறையில் எண்ணற்ற அட்டூழியங்கள் நடைபெறுகின்றன, அவற்றை தடுத்து நிறுத்துங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளும் பல சமயங்களில் உத்தரவிட்டுள்ளன.

இந்த முறைகேடுகளை கட்டுப்படுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டுமென்றும் கேட்டிருந்தன.இதையடுத்து, இதற்கான மசோதா தயார் செய்யப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தயார் செய்யப்பட்ட இந்த மசோதா, 2010 மார்ச் மாதம் லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர், பார்லிமென்ட் நிலைக்குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழு, மசோதாவை முழுவதுமாக ஆராய்ந்து சில திருத்தங்களுடன் இறுதி வடிவம் கொடுத்து, மே மாதம் தன் பரிந்துரைகளை சமர்ப்பித்தது.அந்த மசோதா நேற்று டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வகை செய்யும், "தொழிற்கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மசோதா 2010' என்ற அந்த சட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட தன்னாட்சி சுதந்திரத்தை, உயர்கல்வி நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி வருவதை தடுக்க வகைசெய்யும் இந்த சட்டம், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ளது.கல்லூரிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்களின் நிலைமை, அவர்களின் சம் பளம், பணிச்சூழல், அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளனரா என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் இந்த சட்டம் கண்காணிக்கும். இந்த முறைகேடுகள், குளறுபடிகள் அனைத்தையுமே ஒரு வழிக்கு கொண்டு வருவதற்கென்றே ஒவ்வொரு கல்லூரியிலும் குறை தீர்ப்பு வழிமுறை செயல்திட்டம் ஏற்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்திற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தீர்வும் காணப்படும்.உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, மாநில அளவில் ஏற்கனவே சட்டங்கள் இருக்கின்றன.

அவை ஒருபுறம் இருந்த போதிலும், மத்திய அரசு கொண்டு வரும் இந்த சட்டம், முழுமையாக உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும். மேலும், தொழிற்கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து நன்கொடை கட்டணம் வசூலித்தால், அதற்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.விவசாய ஆராய்ச்சி கல்லூரிகளை தவிர, ஏனைய பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் என, உயர்கல்வி கல்லூரிகள் அனைத்துமே இந்த சட்டத்திற்குள் வரும்.

இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் திருத்தம்:*பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியான, ரூ.250 கோடியை, ரூ.381 கோடியாக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
*அதேபோல, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்த, ரூ. 4 லட்சத்து 735 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கும் ஒப்புதல் தரப்பட்டது. இந்தப் புதிய நிதிஒதுக்கீடுகளால், ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேர் வரை பயன்பெறுவர்.
*20 மாநிலங்களில் உள்ள 48க்கும் மேற்பட்ட ஜாதியினர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீட்டுப் பலனைப் பெறும் வகையில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கான மத்திய பட்டியலை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் தந்தது. பிற்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷன், 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 70க்கும் மேற்பட்ட ஜாதிகளை, இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, பரிந்துரை செய்திருந்தது. அதற்கேற்ற வகையில், மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மத்திய பட்டியலை திருத்துவது தொடர்பான அறிவிக்கையை விரைவில், மத்திய சமூக நீதி அமைச்சகம் வெளியிடும். இந்த முடிவால், தமிழகத்தைச் சேர்ந்த பல ஜாதியினரும் பயன் அடைவர்.
*ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) மசோதா 2011ல் திருத்தங்கள் செய்யவும் மத்திய அமைச்சரவை சம்மதம் தெரிவித்தது. இதன்மூலம் ஓய்வூதியத் துறையில், 26 சதவீத அன்னிய முதலீட்டிற்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
ண ஏற்றுமதி, இறக்குமதி வங்கி தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்மூலம், இந்த வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம், 2 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும்.

- நமது டில்லி நிருபர் தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொறியியல் கல்லூரிகள் நன்கொடை கட்டணம் வசூலித்தால் ரூ.1 கோடி அபராதம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum