புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_m10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10 
1 Post - 50%
heezulia
இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_m10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_m10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_m10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_m10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_m10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_m10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10 
20 Posts - 3%
prajai
இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_m10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_m10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_m10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_m10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_m10இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயம் - கண்டிப்பாக படிக்கவும்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 15, 2011 1:11 am

மனித வாழ்க்கையில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் சொல் எது தெரியுமா? - இதயம். நமது உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு. மனிதன் தாய் வயிற்றில் கருக்கொள்ளும் சில வாரங்களிலே இதய துடிப்பு மூலம், `இதோ நான் உருவாகிவிட்டேன்' என்று உயிரின் தொடக்கத்தை உருவாக்கி, மரணம் வரை நமக்காக துடித்துக்கொண்டே இருக்கும் அந்த இனிய இதயத்தை நாம் நல்ல முறையில் பராமரிக்கிறோமா? பெரும்பாலானவர்கள் இல்லை என்றுதான் சொல்வார்கள்.

அதனால்தான், `நேற்று ராத்திரிதான் என்னோடு சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இன்றைக்கு காலையிலே அவர் செத்து போயிட்டார்ன்னு தகவல் வந்தது. என்னால நம்பவே முடியலேப்பா.. ஹார்ட் அட்டாக்ல இறந்திட்டாராம்..' என்ற உரையாடலை தெருவுக்கு தெரு அடிக்கடி கேட்க முடிகிறது.

ஹார்ட் அட்டாக் இருதலைக்கொள்ளி போன்றது. எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாமல், வந்த சுவடே தெரியாமல் சத்தமின்றி சாகடித்து விடவும் செய்யும். `நெஞ்சு வலிக்கிறது.. இதோ அளவில்லாமல் வியர்க்கிறது.. என்னென்னு சொல்லத் தெரியலை ஆனா என்னென்னவோ பண்ணுது..' என்று சொல்லும் அளவுக்கு அறிகுறிகளை தந்து உஷார் படுத்தி, சாகடித்து விடவும் முயற்சிக்கும்.

அதனால், `அப்படியும் நடக்கலாம். இப்படியும் நடக்கலாம்.. எப்படியும் நடக்கலாம்' என்று பயப்படுத்துகிறது, ஹார்ட் அட்டாக்! குடும்பத்தின் தலைவன் இந்த நோய்க்கு பலியாகிவிட்டால் அந்த குடும்பமே நிலைகுலைந்து போகிறது. பணக்கஷ்டத்தில், துக்கத்தில், சோகத்தில் தடுமாறி அப்படியே கவிழ்ந்துபோன குடும்பங்களும் உண்டு.

ஆனால் பயப்பட வேண்டியதில்லை. இதயத்தை பரிசோதித்து (மருத்துவமுறையில்) நலம் விசாரித்து, ஹார்ட் அட்டாக் வரும் முன்பே அதை கண்டறிந்து, பராமரித்தாலே போதும், இதயம் நன்றாக இயங்கும். சரி, அறிகுறி தெரிந்த உடனே அடுத்து என்ன செய்யவேண்டும்? மேற்கண்ட அறிகுறிகளில் எது இருந்தாலும், அலட்சியம் செய்யக்கூடாது.

உடனே டாக்டரை அணுகவேண்டும். முதலில் ஈ.சி.ஜி. எடுத்து பார்ப்பார்கள். அதில் சீரற்ற நிலை இருந்தால், அடுத்தகட்ட பரிசோதனைகளை தொடர வேண்டும். சிலருக்கு நுரையீரல் தொடர்புடைய வலி இருந்தாலும், இதயப் பகுதியில் வலிக்கும். சிலருக்கு ஈ.சி.ஜி.யில் மாற்றம் இருக்கும். ஆனால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்காது.

அதனால் அவசரப்பட்டு மருந்து சாப்பிட்டுவிடக் கூடாது. ஈ.சி.ஜி. தொடக்க பரிசோதனை முறைகளில் ஒன்று. ஆனால் அது மட்டுமே 100 சதவீத திருப்தியான பரிசோதனை முறையில்லை. அடுத்தகட்டமாக Trop-T என்ற பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். இது ஒரு சிறிய பேண்ட்டேஜ் துண்டுபோன்றிருக்கும்.

அதில் ஒரு சொட்டுக்கும் குறைவான அளவில் ரத்தத்தை எடுத்து வைத்து பரிசோதிக்க வேண்டும். ஒரு கோடு விழுந்தால் அவருக்கு இதய பாதிப்பு இல்லை என்றும், இரு கோடுகள் விழுந்தால் பாதிப்பு ஏற்பட்டிருப் பதாகவும் உணரலாம். ஒருவரின் இதயத்தில் பாதிப்பு இருப்பதாக கண்டறிந்துவிட்ட பின்பு, அந்த பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை உடனே கண்டறிந்தால்தான் அதற்கு தக்கபடி முழுமையான சிகிச்சையை திட்டமிட்டு அளிக்க இயலும்.

பாதிப்பின் அளவை கண்டறிவதற்கு ஆஞ்சியோ முறை உதவும். தொடையில் இருக்கும் முக்கிய ரத்தக் குழாய் வழியாக குழாயை விட்டு, இதயப்பகுதிக்கு ரத்தம் கொடுக்கும் குழாய் அருகில் கொண்டு சென்று `ஹூக்' செய்து, அழுத்தம் கொடுத்து அடைப்பு இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.

இது ஒருசில பாதிப்புகள் கொண்ட பழைய பரிசோதனை முறையாகும். அதற்கு மாற்றாக இருக்கும் நவீன பரிசோதனை முறை `64 சிலைஸ் சி.டி. கொரோனரி ஆஞ்சியோகிராம்' எனப்படுகிறது. ஐந்து வினாடிக்கும் குறைவான நேரத்தில் இந்த பிரமாண்ட ஆஞ்சியோ ஸ்கேன் கருவி, ஒருவரின் இதயப் பகுதியை 64 விதமாக துல்லியமாக படம் எடுத்துவிடுகிறது.

நவீன கம்ப்யூட்டர்களில் அதைப் பார்த்து எந்த பகுதியில், எந்த அளவில் அடைப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்துவிடலாம். சாப்பிட்டு 2 முதல் 3 மணிநேர இடைவெளிக்கு பிறகு இந்த பரிசோதனைக்கு வரவேண்டும். முதலில் ஈ.சி.ஜி. எடுத்துப் பார்ப்பார்கள். அவரது இதயத் துடிப்பு 80-க்கு கீழ் இருக்கவேண்டும்.

இதயம் கண் இமைக்கும் நேரத்தில் விரிந்து, சுருங்கும் தன்மை கொண்டது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில், இதயத்தை இந்த கருவி படமெடுக்கும். அதனால் இதயம் அதிக வேகத்தில் துடித்துக்கொண்டிருந்தால், எடுக்கப்படும் படங்கள் அவ்வளவு துல்லியமாக இருக்காது. ஆகவே இதயம் வேகமாக துடித்தால், இந்த பரிசோதனையின்போது அருகில் இருக்கும் இதயநோய் நிபுணர் துடிப்பை கட்டுப்படுத்த மருந்து கொடுப்பார்.

இதய துடிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பின்பு, கருவியில் படுக்கவைக்கப்படுவார். அப்போது கையில் `காண்ட்ராஸ்ட் இன்செக்ஷன்' அதற்குரிய கருவி மூலம் செலுத்தப்படும். அந்த மருந்து இதயப் பகுதிக்கு செல்லும்போது 5 வினாடிகள் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் ஸ்கேன் கருவி, சர்ரென்று வேலை செய்து, படம் பிடித்து, கம்ப்யூட்டர் திரைகளில் துல்லியமாக எங்கெங்கு அடைப்பு இருக்கிறது என்பதைக் காட்டும்.

நமது இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் முக்கிய பணியை மூன்று ரத்தக் குழாய்கள் மேற்கொள்கின்றன.. மூன்று அடைத்திருந்தால் உடனடியாக `பைபாஸ்' ஆபரேஷன் செய்வார்கள். அதன் மூலம் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு தவிர்க்கப்படும்.

மாரடைப்புக்கு காரணமான இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை கண்டுடிக்க மட்டுமே இந்த ஆஞ்சியோகிராம் சி.டி.ஸ்கேன் கருவி பயன்படும் என்பதில்லை. ஏற்கனவே ஸ்டென்ட் இணைத்தவர்களுக்கு அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கும், பைபாஸ் ஆபரேஷன் செய்தவர்களுக்கு அந்த பகுதியின் செயல்பாடு திருப்தியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கும் இந்த ஸ்கேன் பரிசோதனை உதவும்.

இன்று மனிதர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், மனஅழுத்தம் போன்றவைகளால் 30 வயதுவாக்கிலே இளைஞர் களுக்கு இதயநோய் ஏற்படுகிறது. வந்த பின்பு அதை தடுப்பதற்கும், தவிர்ப்பதற்கும் போராடுவதைவிட வரும்முன்பே இந்த நவீன சி.டி.ஸ்கேன் மூலம் இதயத்தை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

நாம் தாய் வயிற்றில் கருவாகி, உருவாகும்போதே துடிக்க ஆரம்பித்து, நாம் பிறந்து, வளர்ந்து உயிர்வாழும் கடைசி வினாடி வரை இடைவிடாது துடித்து நம்மை இயக்கும் இதயத்தை துவண்டு விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. இதயத்தின் ஆரோக்கியமே இல்லத்தின் ஆரோக்கியம்.

கட்டுரை: டாக்டர் ஆர். இம்மானுவேல் M.D .(R.D)
சென்னை - 14.

சரி! எந்த அறிகுறியும் இன்றி எந்த சூழலில், யாரை, ஹார்ட் அட்டாக் தாக்கும்?

- ரத்த அழுத்தம் 130/80 என்ற சராசரி நிலைக்கு மேல் இருந்தால்

- சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருந்தால்

- கொழுப்பு 200 என்ற சராசரி கணக்கைவிட அதிகம் இருந்தால்

- குடும்பத்தில் உள்ளோருக்கு பாரம்பரியமாக இதய நோய் இருந்தால்

- புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால்.. (இதயநோய் வராவிட்டாலும் புற்றுநோய் வந்து விடும்)

- முழுநேரமும் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால்

- வாரத்திற்கு 3 தடவைகூட உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால்

- உடல் எடை மிக அதிகமாக இருந்தால்

- மன அழுத்தம் நிறைந்த வேலையில் வருடக் கணக்கில் தொடர்ந்தால்

- தாங்க முடியாத துக்கம், இழப்பை சந்தித்து அதிலிருந்து மீள முடியாமல் தவித்தால்

... இப்படிப்பட்ட காரணங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு அறிகுறியே இல்லாமல் மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலை அதிகம். ஆண்கள் 40 வயதை தாண்டும்போதும், பெண்கள் 45 வயதை தாண்டும்போதும் இதில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். அறிகுறிகளை வெளிப்படுத்தியும் மாரடைப்பு வரலாம்.

மாரடைப்புக்கு பொதுவாக ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன?

- அதிகபட்ச சோர்வு

- மாடிப்படிகள் ஏறும்போது சிரமப்படும் அளவுக்கு மூச்சு வாங்குதல்

- திடீரென்று மிக அதிகமாக வியர்த்து வழிதல்

- நெஞ்சு படபடப்புடன், பாரமாகுதல்

- இடதுபக்கமாக தோள்பட்டை, கைகளில் வலி பரவுதல்

- இதயப் பகுதி இனம்புரியாத அவஸ்தைக்கு உள்ளாகுதல்

... போன்று பல அறிகுறிகள் உள்ளன.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 15, 2011 7:42 am

இதயம் குறித்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி இளா!



இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Nov 15, 2011 8:07 am

எனக்கெல்லாம் இதயம்னு செல்லிக்கிட்டு ஒரு கொழுப்பு நிறைந்த ஓர் அங்கம் எப்பவும் துடிச்சிகிட்டு இருக்கு. அதைப் பத்தி தான் இங்கே எழுதியிங்காங்க போல இருக்கு. ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 15, 2011 8:36 am

பகிர்வுக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  1357389இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  59010615இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Images3ijfஇதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Images4px
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Nov 15, 2011 8:40 am

சூப்பருங்க பயனுள்ள பதிவு நன்றி அண்ணா... நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 15, 2011 10:50 am

மிகச்சிறந்த பகிர்வு , நன்றி மாறன் இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  678642

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 15, 2011 10:55 am

அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய கட்டுரை இளா இது.
பகிர்வுக்கு நன்றி



இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Uஇதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Dஇதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Aஇதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Yஇதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Aஇதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Sஇதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Uஇதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Dஇதயம் - கண்டிப்பாக படிக்கவும்  Hஇதயம் - கண்டிப்பாக படிக்கவும்  A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 15, 2011 10:56 am

அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு இதயம் - கண்டிப்பாக படிக்கவும்  677196



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 15, 2011 11:03 am

மிகச்சிறந்த பகிர்வு , நன்றி மாறன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக