ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னல் கதைகள்

2 posters

Go down

மின்னல் கதைகள் Empty மின்னல் கதைகள்

Post by சிவா Mon Nov 14, 2011 2:00 am

செக்கப்!

மாஸ்டர் ஹெல்த் செக்கப் பரிசோதனை முடிந்து வெளியே வந்து டாக்டரின் அழைப்பிற்காகப் பதட்டத்துடன் காத்திருந்தாள் மங்கை.

"உட்காருங்கள் என்ற டாக்டர், ரிப்போர்ட்டை நன்றாகப் பார்த்தபிறகு "மேடம் உங்களுக்கு எந்தவிதமான பிரச்னைம் இல்லை யு.ஆர். ஆல்ரைட் ஃபர்பெக்டரி என்றார்.

மங்கையின் முகத்தில் மகழ்ச்சி "டாக்டர் மிக்க நன்றி இன்று டிவியில் ஒரு புது மெகாத்தொடர் ஆரம்பாமாகப் போகிறது.

புது மெகாத்தொடரை பார்க்க உயிரோடு இருப்பேனா என்ற பயத்துடன் இருந்தேன். நல்லவேளை என் வயிற்றில் பாலை வளர்த்தீரர் இனி நிம்மதியாக டி.வி. சீரியல் பார்ப்பேன்!. டாக்டர் திடுக்கிட்டார். கடவுளே இதற்காகவா இந்த மாஸ்டர் ஹெல்த் செக்.

- கஞ்சநாயக்கன்பட்டி மணியன்


Last edited by சிவா on Mon Nov 14, 2011 2:09 am; edited 1 time in total


மின்னல் கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மின்னல் கதைகள் Empty Re: மின்னல் கதைகள்

Post by இளமாறன் Mon Nov 14, 2011 2:04 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மின்னல் கதைகள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மின்னல் கதைகள் Empty Re: மின்னல் கதைகள்

Post by சிவா Mon Nov 14, 2011 2:09 am

தற்பெருமை!

ஆஃபீசிலிருந்து வீடு திரும்பிய ராஜேந்திரன் உள்ளே நுழைந்தது தான் தாமதம். ஒருவித சந்தோஷப் பரபரப்புடன் புருஷன் எதிரில் வந்து நின்றாள் ஜானகி.

"என்னங்க! நம்ம கவுதம் காலாண்டுத் தேர்வில் என்னம்மா மார்க் வாங்கியிருக்கான் பாருங்க!' என்றபடி தன் கையில் வைத்திருந்த பிராக்ரஸ் ரிப்போர்ட்டை அவனிடம் நீட்டினாள்.

"கணக்கில் - 100, இங்கிலீஷ், தமிழ் இரண்டிலும் - 99, இந்தியில் 96...' முடிக்கும் முன்னால், அவள் கையைப் பற்றித் தரதரவென்று இழுத்துக் கொண்டு பின்கட்டுக்குச் சென்றான்.

வெடுக்கெனத் தன் கையை உதறிக் கொண்டவள், "என்னாச்சு உங்களுக்கு? நம்ம பையன் வாங்கியிருக்கும் மார்க்கைப் பார்த்து சந்தோஷப்படாம, எதுக்காக என்னை இழுத்துக்கிட்டு வந்தீங்க?' கோபத்தில் இரைந்தாள்.

"முதல்ல உன் கோபத்தை அடக்கு' என அதட்டியவன், குரலைத் தாழ்த்தித் தொடர்ந்தான். "கவுதம் கூட பக்கத்து வீட்டு பாலுவும் இருக்கான். பார்த்தேயில்ல?'

"ஆமா... அதுக்கென்ன?'

"பாலு எக்ஸாமில் சரியா மார்க் எடுக்கல்லேன்னு அவனோட அப்பா ரொம்பவும் வருத்தப்பட்டாரு. அவன் எதிரிலேயே, நம்ம பையன் எடுத்திருக்கிற மார்க்கைப் பத்திப் பெருமையா பேசினா, அவன் மனசு நொந்து போகாதா?'

ஜானகிக்கு கோபமும் தனிந்து போக, "ஸாரிங்க!' என்றாள்.

- வி.கே. லக்ஷ்மி நாராயணன்


மின்னல் கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மின்னல் கதைகள் Empty Re: மின்னல் கதைகள்

Post by சிவா Mon Nov 14, 2011 2:10 am

யூனிஃபார்ம்!

"மம்மி! எனக்கு அடுத்த வாரம் பிறந்த நாள். எனக்கு புது ஜீன்ஸ் பேன்ட்டும், சர்ட்டும் வேணும். மறந்திடாதே,' என்றான் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் ரகு.

"டேய்! தீபாவளிக்கு எடுத்ததையே போடாம அப்படியே வச்சிருக்கே. அதுவே போதும்டா,' என்றாள் ராதிகா.

"நான் அதையெல்லாம் போட மாட்டேன். புதுசுதான் வேணும்!'

"சரிடா! நீ டியூஷனுக்குக் கிளம்பு...'

சரிம்மா என்றவாறு ரகு வீட்டுக்குள் சென்றான். அப்போது வீட்டு வேலைக்காரி ராஜாத்தி, தன் பேரனுடன் வாசலில் நுழைந்ததும், "என்ன ராஜாத்தி, உன் பேரனையும் அழைத்து வந்திருக்கே? என்ன விஷயம்?' என ராதிகா கேட்டதும்,

"அம்மா! இவன் என் பேரன். மூன்றாம் வகுப்பு படிக்கிறான். இவன் கிழிந்து போன யூனிஃபார்மோடு பள்ளிக்குப் போயிருக்கான். அவன் வகுப்பு ஆசிரியர் இப்படிக் கிழிந்த யூனிஃபார்மோடு பள்ளிக்கு வராதே. புதுசா தைத்துப் போட்டுட்டு வான்னு சொல்லி, அவனை விரட்டிட்டாரு. புது யூனிஃபார்ம் எடுத்துத் தைக்க அறுநூறு ரூபாய் ஆகும். வீட்டிலே அவனை விட்டுட்டு வரலே. கையோடு கூட்டிட்டு வந்துட்டேன்.'

ராஜாத்தி சொன்னதையெல்லாம் ரகு கேட்டதும் வெளியே வந்து, "அம்மா, நீங்க எனக்கு எடுக்கப்போகும் பேன்ட் - சர்ட்டுக்கு ஆகும் பணத்தை இவங்க பேரனுக்கு புது யூனிஃபார்ம் வாங்க கொடுத்திடு' என்றான்.

ராதிகா அவனை பெருமையுடன் பார்த்துப் பூரித்துப் போனாள்.

- ஜி. சண்முகக் குமார், திருச்சி.


மின்னல் கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மின்னல் கதைகள் Empty Re: மின்னல் கதைகள்

Post by சிவா Mon Nov 14, 2011 2:11 am

சிறுவன்!

ஐஸ் வாங்க இரண்டு ரூபாய் கேட்டு அழுது கொண்டிருந்தான் சிறுவன் ரவி.

"ஜுரம் விட்டு இரண்டு நாள்தான் ஆகுது ஐஸ் சாப்பிடப் போறாராம். என்ன பண்ணாலும் தரமாட்டேன்,' என்று மயிலம்மா கண்டிப்புடன் கூறினாள். ஆனாலும் சிறுவன் அழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

வயல் வேலை முடித்தவிட்டு வீட்டுக்கு வந்த ரவியின் தந்தை ஆதிமூலம், "ஏண்டா, அழறே' என கேட்க, "அம்மா ஐஸ் வாங்க காசு கொடுக்கலை' என்று அழுகையோடு கூறினான்.

ரவி இரண்டு ரூபாய் எடுத்து நீட்ட, சந்தோஷமாக வாங்கிக் கொண்டு பறந்தான்.

"ஜுரம் அடிச்ச புள்ளைக்கு ஐஸ் வாங்க காசு கொடுக்கறீங்களே... எதேதுக்கு செல்லம் கொடுக்கறதுன்னு தெரிய வேணாமா?'

"புள்ள ஆசைப்படுது காசு கொடுக்காம அழறதை வேடிக்கை பார்க்கச் சொல்றியா - போடி போ... கஞ்சி ஊத்து,' என்று சொன்னபோது, சிறுவன் வெறும் கையுடன் வந்தான்.

"ஐஸ் வாங்கலையா?'

"அப்பா, ஐஸ் வாங்கத்தான் போனேன். ஒரு பாட்டி பசின்னு கடைக்காரரிடம் பன்னு கேட்டாங்க - கடைக்காரர் தரலை. நான் அந்தப் பாட்டிக்கு பன்னு வாங்கிக் கொடுத்துட்டு வந்துட்டேன்பா!'

"நம்ம வூட்டுக்குக் கூப்பிட்டுவர வேண்டியது தானே?'

"உங்களுக்கு மட்டும்தான் கஞ்சி இருந்துச்சு - குடிச்சுட்டு இருப்பீங்கன்னுதா...' என்று கூறிய மகனிடம் மூதாட்டியை அழைத்து வர சொன்னான்.

-எஸ். சீதாராமன், திண்டிவனம்.


மின்னல் கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மின்னல் கதைகள் Empty Re: மின்னல் கதைகள்

Post by சிவா Mon Nov 14, 2011 2:12 am

நாடு அதை நாடு

ராதா அப்பாவை எங்கே காணோம்?

அவர் காலையிலேயே வோட்டு போட கிளம்பிவிட்டார்.

ராகவன் கோபமானான். உடம்புல சுகர், பிரஷர் வச்சுக்கிட்டு இப்போ வோட்டு போடலைன்னா என்ன குடியா முழுகிடும்?

சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் அப்பா பலராமன் உள்ளே நுழைந்தார்.

ஏம்பா காந்திஜியோட ஜெயில்ல ஒண்ணாயிருந்தேன். பாத யாத்திரை போனேன்னு சொல்வீங்களே அனா உங்க தியாகி பென்ஷன் வாங்க உங்களை நாயா இந்த அரசாங்கம் அலைய வைக்கிறதே இதுக்கு வோட்டு போடலைன்னா என்ன?

டேய் நீங்களெல்லாம் எங்களுக்கு என்ன செய்வீங்கன்னு எதிர்பார்த்தா நாங்க அன்னைக்கு சுதந்திர போராட்டத்தில ஈடுபட்டோம். அன்னியரை விரட்டணும்னு தான் அதே மாதிரி, நாடு உனக்கு என்ன செய்ததுன்னு கேட்காதே நீ நாட்டுக்கு இது வரை என்ன செய்தேன்னு யோசிக்க ஆரம்பி... என்று சொன்ன அப்பாவை, ராகவன் வியப்போடு பார்த்தான்.

-எஸ்.ஜெயலெட்சுமி, ஸ்ரீரங்கம்.


மின்னல் கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மின்னல் கதைகள் Empty Re: மின்னல் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum