ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பு காப்பீட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்; ஜெயலலிதா அறிவிப்பு

Go down

சிறப்பு காப்பீட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்; ஜெயலலிதா அறிவிப்பு Empty சிறப்பு காப்பீட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்; ஜெயலலிதா அறிவிப்பு

Post by இளமாறன் Sun Nov 13, 2011 11:34 pm

சென்னை, நவ. 13-

கலெக்டர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

நமது நோக்கம் நிறைவேற ஊழல் பிரச்சினை பெரும் தடையாக உள்ளது. எனவே ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் அவசியம். ஆட்சி தலைவர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் மக்கள் நேர்மையான பணியை எதிர்பார்க்கிறார்கள். அதை கண்காணிக்கும் கடமை மாவட்ட கலெக்டர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உண்டு.

அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதும், அவர்கள் கையில்தான் உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர்களும், அரசு அதிகாரிகளும் மக்கள் நலத் திட்டங்களை அவர்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் பணி புரிபவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நாம் ஏராளமான திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. குறிப்பாக உள்ளாட்சி, சுகாதாரம், கல்வி, நலத்திட்டங்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியின மக்களின் வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இந்த அரசு வறுமை ஒழிப்பு, கட்டமைப்பு, வருமானம், வேலை வாய்ப்பு, திறமை போன்றவற்றில் நகர்புற, கிராமப்புற வேறுபாடுகளை களைவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியும், விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படவில்லை.

வளர்ச்சி திறன் அதிகரிக்கப்படவில்லை. எனவே எனது அரசு வேளாண்மை துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும். இந்த துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படும். 2-வது பசுமை புரட்சி ஏற்படும் என்று நம்புகிறேன். இதில் மாவட்ட கலெக்டர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

தமிழக அரசு புதிதாக செயல்படுத்த உள்ள திட்டத்தின் மூலம் நமது விவசாயியின் வருமானம் 3 மடங்காக உயரும் என்று நம்புகிறேன். ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள இலவச மாடு, ஆடு வழங்கும் திட்டம் விவசாயிகள் முன்னேற்றத்துக்கு கை கொடுக்கும்.

கடலோர மாவட்ட கலெக்டர்கள் மீன்பிடி திட்டங்களுக்கு மீன்பிடி கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை செய்வார்கள் என்று நம்புகிறேன். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பொது விநியோகம் மூலம் இலவச அரிசியை வழங்கி வருகிறது. பருப்பு, உளுந்து, சமையல் எண்ணை போன்றவை நியாய விலை கடைகளில் மானிய விலைக்கு வழங்கி வருகிறது. இதற்காக அரசு பெருந்தொகையை மானியமாக கொடுக்கிறது.

அரசின் நோக்கத்தை செயல்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர்கள் மக்களுக்கு உண்மையான பலன் கிடைக்கும் வகையில் திறமையாக கண்காணிக்க வேண்டும். உணவு பொருட்கள் வீணாகாமல் மக்களிடம் போய் சேர வேண்டும். போலி ரேஷன் கார்டுகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். உணவு பொருள் கடத்தலை தடுக்க வேண்டும். கல்வி, குடும்ப நலம் ஆகியவற்றுக்கு அடிப்படை முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

மக்களுக்கு உடல் நலம் முக்கியம். அவர்களுக்கு சுகாதார பயன் கிடைக்கிறதா? என்பதை மாவட்ட கலெக்டர்கள் கண் காணிக்க வேண்டும். சமீபத்தில் வெளியான புள்ளி விவரப்படி புற்று நோய், நீரழிவு, மாரடைப்பு ஆகியவை அதிகரித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. விரைவில் தமிழ்நாட்டில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. அனைத்து மருத்துவமனைகளும் சுத்தமாக பேணப்பட வேண்டும்.

மருத்துவர்கள் தன்னலமின்றி பணிபுரிய வேண்டும். இதில் கலெக்டர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். அனைத்து குழந்தைகளும் மேல்நிலைப்பள்ளி வரை கல்வி பெற வேண்டும். அவர்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் எனது அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, இலவச லேப்-டாப் ஆகியவற்றை எனது அரசு வழங்கி வருகிறது. இது மாணவர்களின் கல்வி கற்கும் முயற்சியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

சுத்தமான குடிநீர், அடிப்படை சுகாதார வசதி, மருத்துவமனை, சிறந்த பள்ளிகள் அமையும் வகையில் கலெக்டர்கள் திடீர் சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் புதிதாக கட்ட அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான இடங்களை விரைவில் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். கட்டிட பணிகள் தரமாக இருக்கிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பலமாக இருப்பார்கள் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். உள்ளாட்சி நிர்வாகிகளுடன், கலெக்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திட்டப்பயன் மக்களுக்கு விரைவாகவும், முறையாகவும் கிடைக்க கலெக்டர்கள் வழிகாட்டியாக விளங்க வேண்டும்.

சுத்தமான குடிநீர், தரமான சாலைகள், கிராம சுகாதாரப்பணிகள் போன்றவற்றில் அந்த நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். கிராமப்புறங்கள் கழிவு பொருட்களை கொட்டும் இட மாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மழைக்காலம். தேவையான நிவாரண உதவிகள் வழங்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

சமீபத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. ஏழை-எளிய மக்களுக்கு பயன் அளிக்கும் திருமண உதவி திட்டம், முதியோர் பென்சன் திட்டம் போன்ற சமூக நல திட்டங்களுக்கு உண்மையான பயணாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அது வழங்கப்பட வேண்டும். அப்போது தான் அந்த திட்டத்தின் முழு பலன் கிடைக்கும். பல திட்டப்பணிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை இங்கு தெரிவித்துள்ளேன். அவற்றை சிறப்பாக நிறைவேற்ற ஒருங்கிணைத்து செயல்பட்டு எனது எதிர் பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் திட்டங்களை நிறைவேற்றுவதில் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக திகழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிறப்பு காப்பீட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்; ஜெயலலிதா அறிவிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» எம்.ஜி.ஆர்., மருத்துவ காப்பீட்டு திட்டமாக பெயர் மாறுது கலைஞர் காப்பீட்டு திட்டம்
» விரைவில் சூரியனை தொடும் திட்டம் நாசா நாளை முக்கிய அறிவிப்பு
» சத்துணவில் தக்காளி சாதம், பெப்பர் முட்டை தர திட்டம்: விரைவில் அறிவிப்பு
» ரூ. 6,654 கோடியில் பிரமாண்ட நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
»  அன்னதானம் திட்டம் மேலும் 106 கோயில்களுக்கு விரிவாக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum