புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_m10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10 
44 Posts - 59%
heezulia
நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_m10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_m10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_m10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10 
3 Posts - 4%
viyasan
நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_m10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_m10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10 
236 Posts - 42%
heezulia
நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_m10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_m10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_m10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_m10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10 
13 Posts - 2%
prajai
நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_m10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_m10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_m10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_m10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_m10நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டியப் பதச் சக்கரவர்த்தி - சேக்ஷத்ரக்ஞர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 13, 2011 5:59 pm

தெலுங்கு கலை இலக்கிய வராலற்றில் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அன்னாமாச்சாரியர் அவர் "பத கவிதா பிதாமகர்'' என்று அழைக்கப்பட்டார். ஏறக்குறைய நூறாண்டுகள் (1408-1504) அவர் வாழ்ந்தார். திருப்பதி வேங்கடவன், மீது அவர் 32,000 பதங்கள் பாடியதாகச் சொல்லப்படுகிறது. அவருடைய பதங்களில் பெரும்பாலானவை திருப்பதி வேங்கடேசுவரனையே நாயகனாகக் கொண்டு அவனது சிருங்காரலீலைகளை அப்படியே தத்ரூபமாகக் சொல்லுவன.

சேக்ஷத்ரக்ஞரது பதங்களைச் "சிருங்கார பதமுலு' என்றும், ""அத்யாத்பதமுலு'' என்றும் இரண்டு பகுதிகளாகப்பிரித்துள்ளனர். அவற்றுள் சிருங்காரப் பாடல்களே அதிகம். அத்யாத்ம அல்லது ஆத்மீகப் பாடல்கள் குறைவே. அன்னமாச்சாரியார் பதம், சங்கீதர்த்தனம் இரண்டும் ஒன்றே; அவை சொல்லவருவது ஒன்றே என்று கருதினார். ÷க்ஷக்ரக்ஞர் வந்த பிறகு, இக் கருத்திலே ஒரு மாற்றம் ஏற்பட்டது. அன்றிலிருந்து பதம் என்றால் தன்னிலை சிருங்காரப் பாடல் மட்டுமே.

சங்கீர்த்தனம் என்றால் பக்திப் பாடல், நாயக நாயகி பாவத்தின் பல்வேறு அம்சங்களின் மூலமாக, சங்கீதமும், சாகித்யமும் பூரணமாக இணைந்த ஒரு கலவை பதமாகும். சேக்ஷத்ரக்ஞருக்கு முன்னால் தெலுங்கு மொழியில் பதங்களை இயற்றியவர்களில் குறிப்பிடத் தக்கவர் இருவர். ஒருவர் அன்னாமாச்சாரியர். மற்றவர் அவருக்கும் முன்னால் வாழ்ந்த கிருஷ்ணமாச்சாரியார். அவர் சிம்மாசலத்தில் குடிகொண்டுள்ளவராக நரசிம்மசுவாமியின் மீது சிம்ஹ கிரி நரஹரி வசனமுலு என்ற பெயரில் பாடல்களைப் பாடினார்.

சேக்ஷத்ரக்ஞரும் நாலாயிரத்துக்கு மேற்பட்ட பதங்களைப் பாடினார். அவருடைய சிறப்பு என்னவென்றால், அவர் கிருஷ்ணமாச்சாரியார். அன்னாமாச்சாரியார், மற்றும் பலருடைய பதங்களை ஆராய்ந்து. அவர்களது யாப்பு, சந்த முறைகளை நன்கு புரிந்து கொண்டு ஒப்பற்ற எளிய மொழி நடையும், அற்புதமான படைப்புகளாகச் செய்தார். அவருக்குப் பிறகு இன்று வரை பதம் என்று இன்று வரை பதம் என்று சொன்னால் இசைப் பண்டிதர் முதலபாமரர்வரை அவர்களுக்கு முதலில் நினைவில் வரும் பெயர் சேக்ஷத்ரக்ஞர்தான் எனவே அவரைப் பதகவிதைச் சக்கரவர்த்தி' என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும்.

சேக்ஷத்ரக்ஞருடைய இளமைப் பருவத்தைப் பற்றி, அதிகமாக எதுவும் தெரியவரவில்லை. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஜில்லாவில் மூவா என்ற கிராமத்தில் கி.பி. 1600-ஆம் ஆண்டு அவர் ஓர் எளிய அந்தண குடும்பத்தில் பிறந்தார். பல காலம் குழந்தை இல்லாதிருந்து கடுமையான விரதங்கள் அனுபவித்து காஞ்சி வரதராஜப் பெருமாளது கருணையால் பிறந்த குழந்தை, எனவே, வரதய்யா என்று பெயரிடப்பட்டார்.

பாரம்பரியப் பள்ளிப் படிப்பில் அவருக்கு நாட்டமில்லை. ஆனாலும் படித்தார். படித்ததை ஆழமாகக் கற்றறிந்தார்.

வேறொரு கல்வியிலேயும் அவரது நாட்டம் சென்றது. அவர் லலித கலைகளான நடனமும் இசையும் முறையாகக் கற்றார். பத்து வயதில் உபநயனம்.

அடுத்த ஒரிரு ஆண்டுகளில் ஒரு முதியவர் சிறுவனாக இருந்த அவரைத் தேடி வந்து, கோபால மந்திரத்தை உபதேசித்தார். அதுவரை முரடனாகவும் சற்று அனாசாரமான வழிகளில் நடந்து வந்த ÷க்ஷத்ரய்யா அல்லது சேக்ஷத்ரக்ஞர் தீவிரமான தியான வழிகளால் மனத் தெளிவு பெற்றார். பதினைந்தாம் வயதில் ருக்மிணி என்ற தன்மாமன் மகளை மணந்தார். ஆனால் அழகையே ஆராத்தி பழகிவிட்ட ÷க்ஷத்ரய்யாவுக்கு, நடன வகுப்பில் தன்னுடன் படித்த மோகனாங்கி என்ற இளம் தேவதாசியிடம் மனம் சென்றது. அவளை தீவிரமாகக் காதலித்தார்.
ஆனால் அவளோ மறுத்துவிட்டு அவரைத் திருத்தினார். ""மூவாவின் கோவில் தெய்வமான கோபாலனிடம் மனதைச் செலுத்து'" என்று கூறினாள்.

அவரும் அப்படியே மனம் திருந்தினார். ஆனால் தன் வாழ்நாளில் கட்டிய மனைவி ருக்குமணியையும், தேவதாசி மோகனாங்கியையும் அவர் மறக்கவே இல்லை. அவர்களைப் பற்றி தன் பதங்களில் உணர்ச்சிப் பொங்க, சிருங்காரச் சுவைப் பாடல்களை எழுதினார். உண்மையில் அவருடைய பதங்களில் சிருங்காரச் சுவை மட்டுமே காண முடியும்.
கோபால மந்திரத்தின் மகிமையால் ஒரு நாள் ஒரே ஒரு நண்பனோடு தீர்த்த யாத்திரையை மேற்கொண்டார். ÷க்ஷத்ரய்யா, இப்போது யாரும் அவரை வரதய்யா என்று அழைப்பதில்லை. அவர் சேக்ஷத்ரய்யா,
1920ஆம் ஆண்டு தனது இருபதாவது வயதில் தொடங்கிய யாத்திரை இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்தது. பிறகு பல காலம் காஞ்சியில் வாழ்ந்தார். வீட்டை விட்டுப் புறப்பட்டவர் சக்கரபுரி (இன்றைய பெல்லம் கொண்டா), பத்ராசலம், யாதுகிரி, ஸ்ரீசைலம், ஹம்பி விஜயநகரம், பம்மிடி, பலகோண்டா, இனப்ரோலு, கடப்பை, பாலகிரி, சத்யபுரி, திருவல்லிக்கேணி, திருவள்ளளுவர், திருப்பதி, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை, கோல்கொண்டா என்ற பல தலங்களைத் தரிசித்தார்.

தமிழ்நாட்டு ஆழ்வார்கள், நாயன்மார்களைப் போல தரித்த தலங்களில் எல்லாம் அங்குள்ள தெய்வத்தைப் பற்றிப் பாடினார். ஆனால் அது எப்போதும் மூவகோபலான்தான். ஒவ்வொரு தலத்திலும் உள்ள தெய்வத்தை மூலகோபலானாகவே, நாயகியாகவோ நினைத்துப் பாடினார். எனவே எல்லா பதங்களிலும் ""மூவகோபால'' என்ற முத்திரையைக் காணலாம்.

வீட்டை விட்டு கிளம்பிய நாள் முதலாகச் சென்ற இடமெல்லாம் அவர் சிறப்பிக்கப்பட்டார். ""மேருவப் பதம்'' என்ற ஒரு பதம். எட்டயபுரம் சுப்பராமதீட்சிதர், நரதஜ்யோதி முத்து சுவாமி தீட்சிதர் பரம்பரையில் வந்தவர். பாரதியார் அவரைப்பற்றி இரங்கற் பாக்கள் எழுதியிருக்கிறார். அவர் ""சங்கீத சம்ப்ரதாய ப்ரதர்சினி'' என்ற கர்நாடக இசைப்பாடல்கள் தொகுப்பில் முதன் முதலாக.இப்பதத்தை வெளியிட்டார். அது 1904 ஆம் ஆண்டில், அப்பதத்தில் தான் பெற்ற சில சிறப்புகளைப் பற்றி ÷க்ஷத்ரக்ஞர் குறிப்பிடுகிறார்.

"விட புருஷர்களின் அரசன்!
இருபத்தொரு தலைமுறைகளாக இங்கே அவனே எங்கள் செல்வம்
மூவகோபாலன் எந்தன் மணாளன்
தன் பேரருளால் எனனை ஆட்கொண்டவன்!
மதுரையில் தன் சபையில்
என்னை அன்போடு இருத்தி
திருமலை நாயக்க மன்னன்
உயர்ந்த பதங்களை உடனே பாட
உத்தவிட்டான்!
இறைவனை நினைந்தேன்
மடை திறந்த வெள்ளம் போல
மன்னன் முன் கொட்டின பதங்கள்!
""எண்ணிக் கொள்ளலாம்,
இரண்டாயிரம்'' என்றேன்
மேடையில் மேலே
முறுவலித்தான் மூவகோபாலன்
ஆள்மேல் ஆளை அனுப்பி, என்னை
விஜயராகவ வேந்தன் அழைக்க.
தோட்ட வீட்டில் அமர்ந்தோம் நினைத்தேன்
முந்தைய பயங்கள் மற்றும் தொலைந்தன
ஆயிரம் பதங்கள் அங்கே பாடினேன்
துளிசிமூர்த்தி என்றொரு பண்டிதன்
கோல கொண்டாவின் அவைக்களப் புலவர்
பதங்கள் பாட, அவனுடன் போட்டி
மன்னன் அழைத்தால் மறுக்க முடியமா?
எங்களூர் தெய்வம் என்னரும் நண்பன்
உளத்தில் புகுந்து ஊக்கம் தந்தான்
ஐநூறு மேலும் ஆயிரம் பாடல்கள்
நாற்பது நாட்களில் நன்கு முடித்தேன்''

இந்தப் பாடலிலிருந்து, மதுரையில் இரண்டாயிரம், தஞ்சையில் ஆயிரம் கோல்கொண்டாவில் ஆயிரத்து ஐநூறாக மொத்தம் 4500 பதங்களை இந்த மூன்று சபைகளில் மட்டுமே சேக்ஷத்ரக்ஞர் பாடினார் என்று தெரிகிறது. இவை தவிர, தரித்த தலங்களில் பாடியவை பல.

சிதம்பரத்தில் பண்டிதர்கள் வைணவர்களும் சைவர்களுமாக சிற்சபையில், அவரை ஒரு போட்டிக்கு அழைத்தனர். அதன்படி ÷ஒ பத்தில் நடராஜரையும், வரதராஜப்பெருமாளையும் ஒரு தேவதாசி அழைக்கும் விண்ணப்பமாக ஒரு பதம் பாடவேண்டும் அப்பாடலில் மிகப் பிராயாசையின்றி வேதப் பொருள் தெளிவாகத் தெரிய வேண்டும்.
இந்த நிபந்தனைகளை ஏற்று ""சக்கனி தயகலடா'' என்ற ஒரு பதத்தை பாடினார் சேக்ஷத்ரக்ஞர்.

காஞ்சியில் அவர் இருபதாண்டுகள் வாழ்ந்துபோது, ஸ்ரீ பகவந்த நாமபோதேத்திர் காமகோடி பீடாதிபதியாக இருந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் ÷க்ஷக்ரக்ஞரை விடார புருஷன் என்றே அக்கால வைதிக சமூகம் கருதியது, காரணம் அவர் கலைகளில் கொண்ட ஆர்வத்தினால் பாடல் நடன வகுப்புகளிலும் வெளிலும் தேவதாசிகளோடு நட்புக் கொண்டிருந்தார். துரதிஷ்டவசமாக, சமூகத்தில் எப்போதுமே தேவதாசிகளைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் இருந்ததில்லை. அதனாலும் அவர் நேர்மையின்றித் தூற்றப்பட்டார். இதை அவரே சில பதங்களில் சொல்லியிருக்கிறார்.

"காணாத காட்சிகள் நடக்காத நிகழ்ச்சிகள்
கற்பனைக் கதைகளால் என்னைத் தூற்றுகின்றனர்
ஹரியோடு என்னை இணைத்துத்
தூற்றதவர் யாருமே இல்லையா?
நேருக்கு நேர் அவனை நிமர்ந்து பார்த்தேனா?
ஆசைதீர கட்டி அனைத்தேனா?
அமுதம் போன்ற அவனிதழ்களைச்
சுவைத்தேனா?
நான் என்னதான் செய்தேன்
அவன் அழகன் என்று சொன்னேன்
மஞ்சத்தில் ஒரு நாள் மயங்கி இருந்தேன்
வெளியிலிருந்து வீசி எறிந்தான் பூச்செண்டை
யாரவன் என்று நீ அறிவாயோடீ
பின்னொரு நாளில் பகல் நேரத்தில்,
துணிச்சலோடு தோளைப் பற்றினான்
கணநேரத்தில் கட்டி யணைத்தான்!
முத்தமிட்டான் மீண்டும் மறைந்தான்
யாவன் என்று நீ அறிவாயோடீ!

முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, 20 ஆம் நூற்றாண்டியன் ஆரம்பத்தில் சேக்ஷக்ரக்ஞர் பதங்களை மீண்டும் ரசிகள் உலகம் அறிந்து கொண்டது. தேவதாசிகளுடைய குடும்பங்களிலும், பரம்பரை சங்கீத வித்வான்கள் நட்டுவனர்க் குடும்பங்களிலும், குச்சிப்புடி, மெலட்டூர் கிராமங்களிலும் அஞ்ஞாதவாசம் செய்து கொண்டிருந்த சேக்ஷத்ரக்ஞரின் பதங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

சுப்பராமதீட்சிதர், பகுஜனபள்ளி சீதாராமச்சாரியா வேட்டூரி பிரபாகர சாஸ்திரி, காசிநாதுனி நாகேஸ்வர ராவ் ஆகியோர் சேக்ஷத்ரக்ஞர் பதங்களை வெளியிட்டார். சி.ஆர். ஸ்ரீநிவாச அய்யங்கார் இந்திய நடங்களைப் பற்றிய தொடர் கட்டுரைகளில் சேக்ஷக்ரக்ஞர் பதங்களைப் பற்றியும் கர்நாடக பெரும் தொண்டைப் பற்றியும் அவரது கிருஷ்ண பக்தி பற்றியும் விரிவாக எழுதினார்.

சேக்ஷக்ரக்ஞரின் வாழ்க்கை வரலாற்றை வாழ்வின் இன்பம் என்ற தலைப்பில் ஒரு நவீனமாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் எம்.பி. ராமசர்மாக எழுதியிருக்கிறார் சேக்ஷத்ரக்ஞரின் பதங்களின் தூய்மையைக் கட்டி காத்துப் அப்பதங்களை இசையாலும் நாட்டியத்தாலும் பரப்பியவர்களில் முக்கியமானவர் வைணிக விதூஷி வீனை தனம்மாள்.

சீங்கித காலநிதி டி.வி. சுப்பாராவின் சொற்களில் "சேக்ஷக்ரக்ஞரின் ஏராளமான பதங்களைப் பராம்பரிய நெறிமுறைகளோடு கையாள்வதில் வீணை தனம்மாளுக்கு இணையானவர் வேறு எவருமில்லை"" தனம்மாளுடைய பெண் ஐயம்மா, பெரும் புகழ் பெற்ற பேத்தி பத்மபூஷன் பாலசரஸ்வதி இவருடைய பங்கும் மிகப் பெரியது. தனம்மாளின் பேத்திகள் பிருந்தா, முக்தா, இசையுலகில் சேக்ஷக்ரக்ஞர் பதங்களை மேலும் பரப்பினர். ரங்க ராமானுஜ அய்யங்கார் வீணை தனம்மாளின் நேர் சிஷ்யர். உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர், க்ருதிமாலை, நான்கு பாகங்களை வெளியிட்டவர். அவரும் சேக்ஷக்ரக்ஞர் பதங்களை எல்லா இசைக் கச்சேரிகளிலும் பரப்பினார்.

"ராகபாவம், ரஸ பாவம், நிறைந்தவை சேக்ஷக்ரக்ஞர் பதங்கள், தியாகராஜ சுவாமிகளும் சியாமா சாஸ்திரகளும் அவரது பதங்களை வியந்து பாராட்டினார்'' என்று எழுதிகிறார். பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி.""பரமாத்மா என்ற இறைவனோடு கலக்கத் துடிக்கும் ஜீவாத்மாவின் நிலை கொள்ளாத பலவகைப்பட்ட தவிப்புதான் அவரது பதங்களின் செய்தி. "ஸரஜிஜாக்ஷி நீ ஜன்மமுஸஃபல மாயேன'' என்ற பாடலில் மூவகோபாலின் தீண்டலால் தனக்கு ஜன்மசாபல்யம் கிட்டியது என்று தன் தாபம் தீர்ந்ததையும் அவர் குறிப்பிடுகிறார். கவியசர் தாகூர் கூறுவதைப்போல, இசையால் இறைவனைத் தொட்டவர் சேக்ஷத்ரக்ஞர்.

- மு. ஸ்ரீநிவாசன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 18, 2011 11:53 am

செய்திக்கு நன்றி...சிவா அவர்களே மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக