Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
+15
அசுரன்
செல்ல கணேஷ்
மாணிக்கம் நடேசன்
நேரு
பேகன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
Aathira
sshanthi
kitcha
மகா பிரபு
பிஜிராமன்
கேசவன்
சதாசிவம்
19 posters
Page 7 of 12
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
First topic message reminder :
தமிழர் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களாகக் கருதுவது ஒழுக்கம், வீரம், காதல் ஆகிய மூன்றும் தான். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த மூன்று விஷயங்களைப் பற்றித் தான் அதிகப் பாடல்கள் உள்ளன. 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களில் தான் பக்தியை மையமாக வைத்து எழுந்த பாடல்கள் அதிகம் காணப்படுகிறது.
சங்கத்தமிழ் நூல்களின் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் & மேல் கணக்கு நூல்கள் ஆக 18 + 18 =36 நூல்கள் ஆகும். இதில் கீழ் கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைப் பற்றி அதிகம் கூறுகிறது. அவற்றுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போல் விளங்கும் சிறந்த நூல் ஆசாரக் கோவை ஆகும். இவை வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளை அடிப்படையாக வைத்து எழுதிய நூல் என்று மூத்தோர் கூறுகின்றனர்.
வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.
இன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எந்த திசையில் படுக்க வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எப்போது குளிக்க வேண்டும், நீராடும் முறை என்ன , யாரை வணங்க வேண்டும், பெரியவர்களுடன் பழகும் போது , உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள் (மேனர்ஸ்) என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடை உள்ளது. இது மட்டுமல்லாது மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.
தமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும்.
ஔவையின் மூதுரை, நல்வழியைப் போல் ஆசாரக்கோவை அனைவரிடமும் பிரபலமாகவில்லை. நம் பள்ளிக்கூட புத்தங்களிலும் இவை அரிதாகவே இடம் பெறுகிறது, பலருக்கு தமிழில் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்று தெரியவில்லை.
இணையதளத்தில் பல இடங்களிலும் இதில் உள்ள பாடல்களின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. மூதுரை, நல்வழியைத் தொடர்ந்து ஈகரை உறவுகளுக்கு இந்த அற்புத நூலை அனைவரும் அறிந்து கொள்ள, அனைவரும் சுலபமாக படிக்க, பொருளுடன் பதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளேன்.
உங்களின் ஆதரவும் ,தவறு ஏற்படின் எடுத்துக் கூறும் நட்பையும் நாடி தொடர்கிறேன்.
அன்புடன்......
தமிழர் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களாகக் கருதுவது ஒழுக்கம், வீரம், காதல் ஆகிய மூன்றும் தான். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த மூன்று விஷயங்களைப் பற்றித் தான் அதிகப் பாடல்கள் உள்ளன. 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களில் தான் பக்தியை மையமாக வைத்து எழுந்த பாடல்கள் அதிகம் காணப்படுகிறது.
சங்கத்தமிழ் நூல்களின் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் & மேல் கணக்கு நூல்கள் ஆக 18 + 18 =36 நூல்கள் ஆகும். இதில் கீழ் கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைப் பற்றி அதிகம் கூறுகிறது. அவற்றுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போல் விளங்கும் சிறந்த நூல் ஆசாரக் கோவை ஆகும். இவை வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளை அடிப்படையாக வைத்து எழுதிய நூல் என்று மூத்தோர் கூறுகின்றனர்.
வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.
இன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எந்த திசையில் படுக்க வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எப்போது குளிக்க வேண்டும், நீராடும் முறை என்ன , யாரை வணங்க வேண்டும், பெரியவர்களுடன் பழகும் போது , உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள் (மேனர்ஸ்) என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடை உள்ளது. இது மட்டுமல்லாது மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.
தமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும்.
ஔவையின் மூதுரை, நல்வழியைப் போல் ஆசாரக்கோவை அனைவரிடமும் பிரபலமாகவில்லை. நம் பள்ளிக்கூட புத்தங்களிலும் இவை அரிதாகவே இடம் பெறுகிறது, பலருக்கு தமிழில் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்று தெரியவில்லை.
இணையதளத்தில் பல இடங்களிலும் இதில் உள்ள பாடல்களின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. மூதுரை, நல்வழியைத் தொடர்ந்து ஈகரை உறவுகளுக்கு இந்த அற்புத நூலை அனைவரும் அறிந்து கொள்ள, அனைவரும் சுலபமாக படிக்க, பொருளுடன் பதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளேன்.
உங்களின் ஆதரவும் ,தவறு ஏற்படின் எடுத்துக் கூறும் நட்பையும் நாடி தொடர்கிறேன்.
அன்புடன்......
Last edited by சதாசிவம் on Sat Jan 28, 2012 10:49 am; edited 4 times in total
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
அருமையான செய்திகள்
அனைவரும் அறிந்து
கடைபிடித்து
வாழ்வில் வளம்பெற வேண்டும் !......"உலகுக்கு நல்லது சொல்லும்" சதாசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
அனைவரும் அறிந்து
கடைபிடித்து
வாழ்வில் வளம்பெற வேண்டும் !......"உலகுக்கு நல்லது சொல்லும்" சதாசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
சதாசிவம் wrote:பாடல் 47 நூல் ஓதுதற்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)
அட்டமியும், ஏனை உவாவும், பதினான்கும்,
அப் பூமி காப்பார்க்கு உறுகண்ணும், மிக்க
நிலத் துளக்கு, விண் அதிர்ப்பு, வாலாமை, - பார்ப்பார்
இலங்கு நூல் ஓதாத நாள்
பொருள் விளக்கம்
அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி ,பதினான்காம் நாளாகிய சதுர்த்தசி ஆகிய நாட்களும், நாட்டை ஆளும் மன்னனுக்கு உடல் நலம் இல்லாத நாளும், பூமி அதிர்ச்சி, இடியுடன் மின்னல் மின்னும் நாளும் தூய்மை இல்லாத நாட்கள் ஆகும். இந்த நாட்கள் அந்தணர்கள் வேதம் ஓத ஆகாத நாட்கள் ஆகும்.
பாடல் 48 அறம் செய்வதற்கும் விருந்து அளிப்பதற்கும் உரிய நாட்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கலியாணம், தேவர், பிதிர், விழா, வேள்வி, என்று
ஐவகை நாளும், இகழாது, அறம் செய்க!
பெய்க, விருந்திற்கும் கூழ்!
பொருள் விளக்கம்
ஒருவருக்கு திருமணம் நடக்கும் நாளும், குடும்பத்தில் விசேச தெய்வ வழிபாடு செய்யும் நாளும், நம் முன்னோர் இறந்த தினத்தில் செய்யும் பிதிர் வருடத் சிராத்த திதி அன்றும், திருவிழா அன்றும், யாகம், வேள்வி நடக்கும் நாட்களிலும் தவறாமல் தருமம், அன்னதானம் செய்ய வேண்டும். கூழ் குடித்தாலும் தனியே உண்ணாமல் விருந்தினருக்கு கொடுத்து உண்ண வேண்டும். இதுவே மேலோர் சொன்ன முறையாகும்.
பாடல் 49 நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடை, நடை, சொற் செலவு, வைதல், இந் நான்கும் -
நிலைமைக்கும், ஆண்மைக்கும், கல்விக்கும் தத்தம்
குடிமைக்கும், தக்க செயல்!
பொருள் விளக்கம்
நாம் உடுத்தும் உடை, நடக்கும் விதம், நாலு பேர் உள்ள சபையில் பேசும் பேச்சு, தவறு செய்தவரை கண்டிக்கும் சொல் ஆகிய நான்கும் நம் நிலைமை அறிந்து, நம் தகுதி அறிந்து, நம் கல்வி அறிந்து, நாம் பிறந்த குடியின் உயர்வு அறிந்து செயல் பட வேண்டும்.
பாடல் 50 கேள்வியுடையவர் செயல்
(இன்னிசை வெண்பா)
பழியார்; இழியார்; பலருள் உறங்கார்;
இசையாத நேர்ந்து கரவார்; இசைவு இன்றி,
இல்லாரை எள்ளி, இகந்து உரையார்; - தள்ளியும்,
தாங்க அருங் கேள்வியவர்.
பொருள் விளக்கம்
நல்ல பல நூல்கள் கற்று, பல விஷயங்களை கேள்வி உற்று, நன்கு விஷயம் அறிந்த அறிவு உடையவர்கள் ஒருவரை பலர் முன் பழிக்க மாட்டார்கள், இகழ மாட்டார்கள். பலர் உள்ள அறையில் உறங்க மாட்டார்கள். தன்னால் இயலாத காரியத்தை செய்து முடித்து தருவதாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தன்னை விட வசதி குறைந்தவர்களை, தன் கீழ் பணி புரிபவர்களை எள்ளி நகையாடல், இகழ்ச்சி செய்தல் ஆகிய காரியங்களை செய்ய மாட்டார்கள்.
தொடரும்
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
கே. பாலா wrote:அருமையான செய்திகள்
அனைவரும் அறிந்து
கடைபிடித்து
வாழ்வில் வளம்பெற வேண்டும் !......"உலகுக்கு நல்லது சொல்லும்" சதாசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
பாலா சாருக்கு நன்றி.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
பாடல் 51 தம் உடல் ஒளி விரும்புபவர் செய்யத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மின் ஒளியும், வீழ்மீனும், வேசையர்கள் கோலமும்,
தம் ஒளி வேண்டுவார் நோக்கார்; பகற் கிழவோன்
முன் ஒளியும் பின் ஒளியும் அற்று.
பொருள் விளக்கம்
தன் கண் பார்வை நிலை பெற, உடல் ஒளியை வேண்டுவோர் மின்னல் மின்னும் போதும், எரி நட்சத்திரம் விழும் போதும்,உச்சிப் பொழுதும் அதற்கு முன் /பின் உள்ள சூரியனையும் பார்க்க மாட்டார்கள், தன் குண நலன் என்று கூறும் ஒளி குன்றாமல் இருக்க வேசிகளின் அழகினை ரசிக்க மாட்டார்கள்.
பாடல் 52 தளராத உள்ளத்தவர் செயல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
படிறும், பயனிலவும், பட்டி உரையும்,
வசையும், புறனும், உரையாரே - என்றும்
அசையாத உள்ளத்தவர்
பொருள் விளக்கம்
நல் ஒழுக்கத்தில் இருந்து விலகாத உள்ளத்தவர் ஒரு பொழுதும் அடுத்தவரை கெடுக்கும் வஞ்சனை உரையும், ஒருவருக்கு பயனில்லாத சொல்லையும், வாய்க்கு வந்த உரையும், அடுத்தவரை திட்டும் வார்தையையும், ஒருவரை பற்றி மற்றொருவரிடம் குறை சொல்லும் சொல்லையும் சொல்ல மாட்டார்கள்.
பாடல் 53 ஒழுக்கமுடையவர் செய்யாதவை
(இன்னிசை வெண்பா)
தெறியொடு, கல்லேறு, வீளை, விளியே,
விகிர்தம், கதம், கரத்தல், கை புடை, தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு, இன்னவை எல்லாம்
பயிற்றார் - நெறிப்பட்டவர்.
பொருள் விளக்கம்
நல்ல நெறியில் உள்ளவர்கள் அடுத்தவரை கிண்டல் செய்யும் வகையில் துப்புதல், கல் எறிதல் , குதிரை மாதிரி கனைத்தல், மரியாதை இல்லாமல் கூப்பிடுதல், ஒருவன் செய்வது போல் அவன் கோபப்படும் வகையில் அதே மாதிரி செய்தல், கத்துதல், கை தட்டல், உடல் உறுப்புகளை தேய்ப்பது போல் அடுத்தவரை வெருப்படையச் செய்தல் ஆகியவை செய்ய மாட்டார்கள்.
தொடரும் .
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மின் ஒளியும், வீழ்மீனும், வேசையர்கள் கோலமும்,
தம் ஒளி வேண்டுவார் நோக்கார்; பகற் கிழவோன்
முன் ஒளியும் பின் ஒளியும் அற்று.
பொருள் விளக்கம்
தன் கண் பார்வை நிலை பெற, உடல் ஒளியை வேண்டுவோர் மின்னல் மின்னும் போதும், எரி நட்சத்திரம் விழும் போதும்,உச்சிப் பொழுதும் அதற்கு முன் /பின் உள்ள சூரியனையும் பார்க்க மாட்டார்கள், தன் குண நலன் என்று கூறும் ஒளி குன்றாமல் இருக்க வேசிகளின் அழகினை ரசிக்க மாட்டார்கள்.
பாடல் 52 தளராத உள்ளத்தவர் செயல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
படிறும், பயனிலவும், பட்டி உரையும்,
வசையும், புறனும், உரையாரே - என்றும்
அசையாத உள்ளத்தவர்
பொருள் விளக்கம்
நல் ஒழுக்கத்தில் இருந்து விலகாத உள்ளத்தவர் ஒரு பொழுதும் அடுத்தவரை கெடுக்கும் வஞ்சனை உரையும், ஒருவருக்கு பயனில்லாத சொல்லையும், வாய்க்கு வந்த உரையும், அடுத்தவரை திட்டும் வார்தையையும், ஒருவரை பற்றி மற்றொருவரிடம் குறை சொல்லும் சொல்லையும் சொல்ல மாட்டார்கள்.
பாடல் 53 ஒழுக்கமுடையவர் செய்யாதவை
(இன்னிசை வெண்பா)
தெறியொடு, கல்லேறு, வீளை, விளியே,
விகிர்தம், கதம், கரத்தல், கை புடை, தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு, இன்னவை எல்லாம்
பயிற்றார் - நெறிப்பட்டவர்.
பொருள் விளக்கம்
நல்ல நெறியில் உள்ளவர்கள் அடுத்தவரை கிண்டல் செய்யும் வகையில் துப்புதல், கல் எறிதல் , குதிரை மாதிரி கனைத்தல், மரியாதை இல்லாமல் கூப்பிடுதல், ஒருவன் செய்வது போல் அவன் கோபப்படும் வகையில் அதே மாதிரி செய்தல், கத்துதல், கை தட்டல், உடல் உறுப்புகளை தேய்ப்பது போல் அடுத்தவரை வெருப்படையச் செய்தல் ஆகியவை செய்ய மாட்டார்கள்.
தொடரும் .
Last edited by சதாசிவம் on Sat Dec 31, 2011 7:50 am; edited 1 time in total
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
மகா பிரபு wrote:
நன்றி பிரபு
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
சதா சிவம் ஐயா, உங்கள் இப்பணி தொடரட்டும்.
வாழ்த்துகிறேன்.
வாழ்த்துகிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
மாணிக்கம் நடேசன் wrote:சதா சிவம் ஐயா, உங்கள் இப்பணி தொடரட்டும்.
வாழ்த்துகிறேன்.
நன்றி நடேசன்
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
மிகவும் நல்லது...சதாசிவம்...உங்களின் பணி தொடரட்டும். வாழ்க
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
பாடல் 54 விருந்தினருக்குச் செய்யும் சிறப்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முறுவல் இனிதுரை, கால், நீர், மணை, பாய்,
கிடக்கையோடு, இவ் ஐந்தும் என்ப - தலைச் சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு.
பொருள் விளக்கம்
நல்ல குணம் உடைய மனிதர்கள் தங்கள் வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு இன்முகத்துடன் கூடிய இனிமையான வரவேற்பு, அவர் மனம் கோனாதபடி இனிமையான சொற்கள், கால் கழுவ நீர், அதன் பிறகு தாகம் தீர்க்க குளிர்ந்த நீர், அவர் அமர இருக்கை, உண்ண உணவும் அளித்து, இளைப்பாற பாய், படுக்கை அளிப்பார்கள். இதுவே விருந்தினருக்கு நாம் செய்யும் சிறப்பான செயல் ஆகும்.
பாடல் 55 அறிஞர் விரும்பாத இடங்கள்
(பஃறொடை வெண்பா)
கறுத்த பகை முனையும், கள்ளாட்டுக்கண்ணும்
நிறுத்த மனம் இல்லார் சேரியகத்தும்,
குணம் நோக்கிக் கொண்டவர் கோள் விட்டுழியும், -
நிகர் இல் அறிவினார் வேண்டார் - பலர் தொகு
நீர்க்கரையும், நீடு நிலை
பொருள் விளக்கம்
நிகர் இல்லாத ஒப்பற்ற அறிவுடையவர் கோபம் கொண்டு பகை கொண்டவர் முன்னும், கள் குடித்து ஆடும் நபர் முன்னும், மனதில் ஆசையில்லாமல் போலியாக ஆசை வார்த்தை பேசும் வேசியின் இல்லத்தின் முன்னும், நன்றாக நட்பு கொண்டு கொள்கை மாறுபாடு காரணமாக பிரிந்து சொல்லும் நண்பர் முன்னும், பலர் குளித்து புழங்கி சுத்தம் இல்லாத நீர் நிலையின் முன்னும் நிற்க மாட்டார்.
பாடல் 56 தவிர்வன சில
(பஃறொடை வெண்பா)
முளி புல்லும், கானமும், சேரார்; தீக்கு ஊட்டார்;
துளி விழ, கால் பரப்பி ஓடார்; தெளிவு இலாக்
கானம், தமியர், இயங்கார்; துளி அஃகி,
நல்குரவு ஆற்றப் பெருகினும், செய்யாரே,
தொல் வரவின் தீர்ந்த தொழில்
பொருள் விளக்கம்
அறிவு நிறைந்தவர்கள் முற்றிய புல் நிறைந்த இடத்திலும் , காட்டிலும் சேர மாட்டார்கள் (பாம்பு, தேள் போன்ற கொடிய விஷம் உள்ள விலங்குகள் இருக்கும் புதர்கள்). இவற்றை தீக்கு இரையாக்க மாட்டார்கள். மழை பெய்யும் போது கால் அகல வைத்து ஓட மாட்டார்கள். தனக்கு பரிச்சயம் இல்லாத, பாதை தெரியாத காட்டில் தனியான செல்ல மாட்டார்கள். தம்மிடம் உள்ள பணம் இழந்து வறுமை வந்த நிலையிலும் தகாத தொழில் செய்ய மாட்டார்கள்.
தொடரும்.
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முறுவல் இனிதுரை, கால், நீர், மணை, பாய்,
கிடக்கையோடு, இவ் ஐந்தும் என்ப - தலைச் சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு.
பொருள் விளக்கம்
நல்ல குணம் உடைய மனிதர்கள் தங்கள் வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு இன்முகத்துடன் கூடிய இனிமையான வரவேற்பு, அவர் மனம் கோனாதபடி இனிமையான சொற்கள், கால் கழுவ நீர், அதன் பிறகு தாகம் தீர்க்க குளிர்ந்த நீர், அவர் அமர இருக்கை, உண்ண உணவும் அளித்து, இளைப்பாற பாய், படுக்கை அளிப்பார்கள். இதுவே விருந்தினருக்கு நாம் செய்யும் சிறப்பான செயல் ஆகும்.
பாடல் 55 அறிஞர் விரும்பாத இடங்கள்
(பஃறொடை வெண்பா)
கறுத்த பகை முனையும், கள்ளாட்டுக்கண்ணும்
நிறுத்த மனம் இல்லார் சேரியகத்தும்,
குணம் நோக்கிக் கொண்டவர் கோள் விட்டுழியும், -
நிகர் இல் அறிவினார் வேண்டார் - பலர் தொகு
நீர்க்கரையும், நீடு நிலை
பொருள் விளக்கம்
நிகர் இல்லாத ஒப்பற்ற அறிவுடையவர் கோபம் கொண்டு பகை கொண்டவர் முன்னும், கள் குடித்து ஆடும் நபர் முன்னும், மனதில் ஆசையில்லாமல் போலியாக ஆசை வார்த்தை பேசும் வேசியின் இல்லத்தின் முன்னும், நன்றாக நட்பு கொண்டு கொள்கை மாறுபாடு காரணமாக பிரிந்து சொல்லும் நண்பர் முன்னும், பலர் குளித்து புழங்கி சுத்தம் இல்லாத நீர் நிலையின் முன்னும் நிற்க மாட்டார்.
பாடல் 56 தவிர்வன சில
(பஃறொடை வெண்பா)
முளி புல்லும், கானமும், சேரார்; தீக்கு ஊட்டார்;
துளி விழ, கால் பரப்பி ஓடார்; தெளிவு இலாக்
கானம், தமியர், இயங்கார்; துளி அஃகி,
நல்குரவு ஆற்றப் பெருகினும், செய்யாரே,
தொல் வரவின் தீர்ந்த தொழில்
பொருள் விளக்கம்
அறிவு நிறைந்தவர்கள் முற்றிய புல் நிறைந்த இடத்திலும் , காட்டிலும் சேர மாட்டார்கள் (பாம்பு, தேள் போன்ற கொடிய விஷம் உள்ள விலங்குகள் இருக்கும் புதர்கள்). இவற்றை தீக்கு இரையாக்க மாட்டார்கள். மழை பெய்யும் போது கால் அகல வைத்து ஓட மாட்டார்கள். தனக்கு பரிச்சயம் இல்லாத, பாதை தெரியாத காட்டில் தனியான செல்ல மாட்டார்கள். தம்மிடம் உள்ள பணம் இழந்து வறுமை வந்த நிலையிலும் தகாத தொழில் செய்ய மாட்டார்கள்.
தொடரும்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
Similar topics
» தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு
» நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
» புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு
» நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
Page 7 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|