புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_lcapஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_voting_barஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !


   
   

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 12, 2011 6:08 pm

First topic message reminder :

தமிழர் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களாகக் கருதுவது  ஒழுக்கம், வீரம், காதல்  ஆகிய மூன்றும்  தான். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த மூன்று விஷயங்களைப் பற்றித் தான் அதிகப் பாடல்கள் உள்ளன. 6 முதல் 9ஆம்  நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களில் தான் பக்தியை மையமாக வைத்து எழுந்த பாடல்கள் அதிகம் காணப்படுகிறது.

சங்கத்தமிழ் நூல்களின் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் & மேல் கணக்கு நூல்கள் ஆக  18 + 18 =36 நூல்கள் ஆகும். இதில் கீழ் கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைப் பற்றி அதிகம் கூறுகிறது. அவற்றுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போல் விளங்கும் சிறந்த நூல் ஆசாரக் கோவை ஆகும். இவை வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளை அடிப்படையாக வைத்து எழுதிய நூல் என்று மூத்தோர் கூறுகின்றனர்.

வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.

இன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எந்த திசையில் படுக்க வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும்,  எப்போது குளிக்க வேண்டும், நீராடும் முறை என்ன , யாரை வணங்க வேண்டும், பெரியவர்களுடன் பழகும் போது , உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள் (மேனர்ஸ்) என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடை உள்ளது. இது மட்டுமல்லாது மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.

தமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும்.  

ஔவையின் மூதுரை, நல்வழியைப் போல் ஆசாரக்கோவை அனைவரிடமும் பிரபலமாகவில்லை. நம் பள்ளிக்கூட புத்தங்களிலும் இவை அரிதாகவே இடம் பெறுகிறது, பலருக்கு தமிழில் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்று தெரியவில்லை.  

இணையதளத்தில் பல இடங்களிலும் இதில் உள்ள பாடல்களின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. மூதுரை, நல்வழியைத் தொடர்ந்து ஈகரை உறவுகளுக்கு இந்த அற்புத நூலை அனைவரும் அறிந்து கொள்ள, அனைவரும் சுலபமாக படிக்க, பொருளுடன் பதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளேன்.

உங்களின் ஆதரவும் ,தவறு ஏற்படின் எடுத்துக் கூறும் நட்பையும் நாடி தொடர்கிறேன்.

                 
அன்புடன்......



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 11, 2011 6:19 pm

அருமையான விளக்கங்கள் ஐயா..........

நீர் நிலை அறிந்து வாயி கொப்பளித்தல் வேண்டும் அப்டினு டிஸ்கவரி சேனல் ல மென் வெர்ஸெஸ் ஒய்ல்ட் ல சொல்லுவாங்க, ஆனா நம்ம புலவர்கள் அப்பவே சொல்லிட்டாங்க........அருமை

ஆனால்
அடுதவர் மீது துணி படும் படி, இன்று உள்ள ஜன நெரிசலில் நடப்பது என்பது சற்று சிரமம் தான் ஐயா

மிக்க நன்றிகள் ஐயா மகிழ்ச்சி நன்றி புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 11, 2011 7:11 pm

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தராமல் மொத்தமாக தந்துவிட்டால் எல்லாருக்கும் வசதியாக இருக்கும்.
இது எனது மிகவும் தாழ்மையான வேண்டுகோள்.
சில சமயங்களில் எங்கே இடையில் காணாமல் போய்விடுமோ என்னும் பயம்தான்.
நன்றி ஐயா.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Dec 11, 2011 7:30 pm

நன்றி ராமன்.
இன்றைய ஜன நெரிசலில் இது கொஞ்சம் கஷ்டம் தான், நம்மால் முடிந்தவரை கடைப்பிடிப்போம்.

நன்றி நடேசன்.

உங்கள் கருத்துக்கு நன்றி நடேசன். இப்படி செய்வதற்கு மூன்று காரணங்கள். ஒன்று அனைத்து ஒரே நேரத்தில் அடிக்க எனக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆதலால் கொஞ்சம் கொஞ்சமாக பதிவு செய்கிறேன். இரண்டு மொத்தமாக பதிவு செய்தால் ஒரு சில நாட்களில் இந்த பதிவு பின் சென்று விடும். இதை புதியவர் கவனிக்க இயலாது, மூன்று மொத்தமாக பதியப்படும் பதிவு மோலோட்டமாகப் பார்க்கப்பட்டு, அது நீளமாக இருப்பதால் முழுவதும் படிக்காமல் விட்டு விடும் வாய்ப்பும் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக தொடர் பதிவாக செய்யும் போது அது படிப்பவருக்கு முழுவதும் சென்று சேரும். ஒரு சில நேரங்களில் கவனிக்க தவறியவருக்கும்.

நன்றி





சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 11, 2011 7:54 pm

ஈகரையில் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Dec 16, 2011 6:58 pm

பாடல் 39 தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க!
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


தமக்கு என்று உலை ஏற்றார்; தம்பொருட்டு ஊன் கொள்ளார்;
அடுக்களை எச்சில் படாஅர்; மனைப் பலி
ஊட்டினமை கண்டு உண்க, ஊண்

பொருள் விளக்கம்

நல்ல குணம் உடைய பெரியவர்கள் தங்களுக்கு என்று தனியாக சமையல் செய்ய மாட்டார்கள். விருந்தினர், உறவினர் என்று அனைவருக்கும் சேர்த்துத் தான் சமையல் செய்வார்கள். தனக்கு என்று தனியாக செய்து உண்ண மாட்டார்கள். சமையல் அறையில் உணவு தயாராகும் போதும், அதை இறைவனுக்கு படைக்காமல் இருக்கும் போதும் எச்சில் செய்ய மாட்டார்கள். இறைவனுக்கு படைத்து விட்டு பின்பு உண்பார்.

பாடல் 40 சான்றோர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


உயர்ந்ததின் மேல் இரார்; - உள் அழிவு செய்யார்,
இறந்து இன்னா செய்தக்கடைத்தும்; - குரவர்,
இளங் கிளைகள் உண்ணும் இடத்து

பொருள் விளக்கம்

புதிய உறவினர்கள் மத்தியில் உணவு அருந்தும் போது வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்களுக்கு என்று உயர்ந்த ஆசனம் போட்டு அமர மாட்டார்கள். இளைஞர்கள் விளையாட்டாக தவறு செய்தாலும் அதை பெரிது படுத்த மாட்டார்கள். மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள்.

பாடல் 41 சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


கண் எச்சில் கண் ஊட்டார்; காலொடு கால் தேயார்;
புண்ணிய ஆய தலையோடு உறுப்பு உறுத்த! -
நுண்ணிய நூல் உணர்வினார்

பொருள் விளக்கம்

ஒருவர் கண்களுக்கு மை தீட்டிய கோலைக் கொண்டு அடுத்தவருக்கு மை தீட்டக்கூடாது. ஒருவர் கால்கள் மற்றொருவர் கால் மேல் படும் வண்ணம் அமரக்கூடாது, படுக்கக்கூடாது. கோவில் பிரசாதம், கங்கா ஜலம் போன்ற புண்ணியமான பொருள்கள் கிடைத்தால் கண்களிலும் , தலையிலும் ஒற்றிக்கொண்டு அதன் பிறகு உபயோகிக்க வேண்டும். இதுவே பல நூல்கள் கற்று அறிந்தவர் செய்யும் செயலாகும்.

தொடரும்




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 7:04 pm

மிக்க நன்றிகள் ஐயா,

கோவிலில் வழங்கும் பிரசாதத்தை, நான் இதில் உரைத்துள்ள படி தான் உபயோக்கிபேன்......

நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Dec 24, 2011 5:15 pm

பாடல் 42 மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


'தீண்டா நாள் முந் நாளும் நோக்கார்; நீர் ஆடியபின்,
ஈர்-ஆறு நாளும் இகவற்க!' என்பதே -
பேர் அறிவாளர் துணிவு.

பொருள் விளக்கம்

மாதவிடாய் தொடங்கி அது முடிந்து நீராடும் வரை மனைவியை தீண்டக்கூடாது. நீராடி முடிந்தபின் அடுத்து வரும் 12 நாட்களும் மனைவியை நீங்காமல் இருக்க வேண்டும். இந்த நாட்கள் தான் கரு
உருவாவதற்கு உகந்த நாள், பெண்ணுக்கும் ஆணின் துணை வேண்டிய அவசியமான நாட்கள் ஆகும்.


பாடல் 43 உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)


உச்சிஅம் போழ்தோடு, இடை யாமம், ஈர்-அந்தி,
மிக்க இரு தேவர் நாளோடு, உவாத்திதி நாள்,
அட்டமியும், ஏனைப் பிறந்த நாள், இவ் அனைத்தும்
ஒட்டார்-உடன் உறைவின்கண்.

பொருள் விளக்கம்

உச்சி பகல் பொழுது, பொழுது விடியும் விடியற்காலை, பொழுது சாயும் மாலை வேளை , சிவனுக்கு உரிய திருவாதிரை ,திருமாலுக்கு உரிய திருவோண நட்சத்திரம், அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி அன்றும், ஒருவரின் பிறந்த நட்சத்திரம் அன்றும் உடலுறவு கூடாது.

பாடல் 44 நாழி முதலியவற்றை வைக்கும் முறை
(இன்னிசை வெண்பா)


நாழி மணைமேல் இரியார்; மணை கவிழார்;
கோடி கடையுள் விரியார்; கடைத்தலை,
ஓராது, கட்டில் படாஅர்; அறியாதார்-
தம் தலைக்கண் நில்லாவிடல்

பொருள் விளக்கம்


அரிசி, உணவு பொருள்கள் அளக்கும் நாழியை உட்காரும் மணையின் மேல் வைக்கக்கூடாது. அது போல் உட்காரும் மணையை கவிழ்த்து வைக்கக்கூடாது. புதிதாக வாங்கும் புடவையை, உடையை தலைக்கு கீழே வைக்கக்கூடாது. பலர் சென்று புழங்கும் வழியில், அறையில் கட்டில் போட்டு தூங்கக்கூடாது. தனக்கு பரிச்சயம் ஆகாத முன் அதிக நேரம் நிற்கக்கூடாது.

45 பாடல் பந்தலில் வைக்கத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


துடைப்பம், துகட் காடு, புல் இதழ், செத்தல்
கருங் கலம், கட்டில் கிழிந்ததனோடு, ஐந்தும்,
பரப்பற்க, பந்தரகத்து!

பொருள் விளக்கம்

துடைப்பம், உடைந்த மரத்துண்டுகள், உதிர்ந்த பூ இதழ்கள், கரி ஏறிய பாத்திரம், உடைந்த கட்டில், , குப்பை கிழிந்த துணிகள் ஆகிய ஐந்து பொருள்களை கீழே விரித்து அதன் மேல் மணப்பந்தல் அமைக்கக்கூடாது.

பாடல் 46 வீட்டைப் பேணும் முறைமை
(பஃறொடை வெண்பா)


காட்டுக் களைந்து கலம் கழீஇ, இல்லத்தை
ஆப்பி நீர் எங்கும் தெளித்து, சிறுகாலை,
நீர்ச் சால், கரகம், நிறைய மலர் அணிந்து,
இல்லம் பொலிய, அடுப்பினுள் தீப் பெய்க-
நல்லது உறல் வேண்டுவார்

பொருள் விளக்கம்


வீட்டில் நல்லது வேண்டும் என்று நினைப்பவர்கள், மகாலக்ஷ்மி அருள் வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகாலை எழுந்து, வீட்டில் உள்ள குப்பைகளை கலைந்து, நீர் தெளித்து, பசுஞ்சானம் மொழுகி, சமையல் செய்யும் பாத்திரத்திற்கு மலர் வைத்து அடுப்புக்கு தீ மூட்ட வேண்டும் .

தொடரும்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 24, 2011 5:37 pm

:வணக்கம்: தேன்தமிழ் பகிர்வுக்கு நன்றி அண்ணா.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Dec 25, 2011 8:12 pm

மகா பிரபு wrote: :வணக்கம்: தேன்தமிழ் பகிர்வுக்கு நன்றி அண்ணா.

நன்றி பிரபு
நன்றி நன்றி



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Dec 25, 2011 8:43 pm

பாடல் 47 நூல் ஓதுதற்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)


அட்டமியும், ஏனை உவாவும், பதினான்கும்,
அப் பூமி காப்பார்க்கு உறுகண்ணும், மிக்க
நிலத் துளக்கு, விண் அதிர்ப்பு, வாலாமை, - பார்ப்பார்
இலங்கு நூல் ஓதாத நாள்

பொருள் விளக்கம்

அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி ,பதினான்காம் நாளாகிய சதுர்த்தசி ஆகிய நாட்களும், நாட்டை ஆளும் மன்னனுக்கு உடல் நலம் இல்லாத நாளும், பூமி அதிர்ச்சி, இடியுடன் மின்னல் மின்னும் நாளும் தூய்மை இல்லாத நாட்கள் ஆகும். இந்த நாட்கள் அந்தணர்கள் வேதம் ஓத ஆகாத நாட்கள் ஆகும்.

பாடல் 48 அறம் செய்வதற்கும் விருந்து அளிப்பதற்கும் உரிய நாட்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


கலியாணம், தேவர், பிதிர், விழா, வேள்வி, என்று
ஐவகை நாளும், இகழாது, அறம் செய்க!
பெய்க, விருந்திற்கும் கூழ்!

பொருள் விளக்கம்

ஒருவருக்கு திருமணம் நடக்கும் நாளும், குடும்பத்தில் விசேச தெய்வ வழிபாடு செய்யும் நாளும், நம் முன்னோர் இறந்த தினத்தில் செய்யும் பிதிர் வருடத் சிராத்த திதி அன்றும், திருவிழா அன்றும், யாகம், வேள்வி நடக்கும் நாட்களிலும் தவறாமல் தருமம், அன்னதானம் செய்ய வேண்டும். கூழ் குடித்தாலும் தனியே உண்ணாமல் விருந்தினருக்கு கொடுத்து உண்ண வேண்டும். இதுவே மேலோர் சொன்ன முறையாகும்.

பாடல் 49 நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


உடை, நடை, சொற் செலவு, வைதல், இந் நான்கும் -
நிலைமைக்கும், ஆண்மைக்கும், கல்விக்கும் தத்தம்
குடிமைக்கும், தக்க செயல்!

பொருள் விளக்கம்

நாம் உடுத்தும் உடை, நடக்கும் விதம், நாலு பேர் உள்ள சபையில் பேசும் பேச்சு, தவறு செய்தவரை கண்டிக்கும் சொல் ஆகிய நான்கும் நம் நிலைமை அறிந்து, நம் தகுதி அறிந்து, நம் கல்வி அறிந்து, நாம் பிறந்த குடியின் உயர்வு அறிந்து செயல் பட வேண்டும்.

பாடல் 50 கேள்வியுடையவர் செயல்
(இன்னிசை வெண்பா)


பழியார்; இழியார்; பலருள் உறங்கார்;
இசையாத நேர்ந்து கரவார்; இசைவு இன்றி,
இல்லாரை எள்ளி, இகந்து உரையார்; - தள்ளியும்,
தாங்க அருங் கேள்வியவர்.

பொருள் விளக்கம்

நல்ல பல நூல்கள் கற்று, பல விஷயங்களை கேள்வி உற்று, நன்கு விஷயம் அறிந்த அறிவு உடையவர்கள் ஒருவரை பலர் முன் பழிக்க மாட்டார்கள், இகழ மாட்டார்கள். பலர் உள்ள அறையில் உறங்க மாட்டார்கள். தன்னால் இயலாத காரியத்தை செய்து முடித்து தருவதாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தன்னை விட வசதி குறைந்தவர்களை, தன் கீழ் பணி புரிபவர்களை எள்ளி நகையாடல், இகழ்ச்சி செய்தல் ஆகிய காரியங்களை செய்ய மாட்டார்கள்.

தொடரும்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக