புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
69 Posts - 36%
heezulia
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
3 Posts - 2%
manikavi
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
320 Posts - 48%
heezulia
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
23 Posts - 3%
prajai
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 12 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !


   
   

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 12, 2011 6:08 pm

First topic message reminder :

தமிழர் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களாகக் கருதுவது  ஒழுக்கம், வீரம், காதல்  ஆகிய மூன்றும்  தான். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த மூன்று விஷயங்களைப் பற்றித் தான் அதிகப் பாடல்கள் உள்ளன. 6 முதல் 9ஆம்  நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களில் தான் பக்தியை மையமாக வைத்து எழுந்த பாடல்கள் அதிகம் காணப்படுகிறது.

சங்கத்தமிழ் நூல்களின் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் & மேல் கணக்கு நூல்கள் ஆக  18 + 18 =36 நூல்கள் ஆகும். இதில் கீழ் கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைப் பற்றி அதிகம் கூறுகிறது. அவற்றுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போல் விளங்கும் சிறந்த நூல் ஆசாரக் கோவை ஆகும். இவை வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளை அடிப்படையாக வைத்து எழுதிய நூல் என்று மூத்தோர் கூறுகின்றனர்.

வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.

இன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எந்த திசையில் படுக்க வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும்,  எப்போது குளிக்க வேண்டும், நீராடும் முறை என்ன , யாரை வணங்க வேண்டும், பெரியவர்களுடன் பழகும் போது , உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள் (மேனர்ஸ்) என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடை உள்ளது. இது மட்டுமல்லாது மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.

தமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும்.  

ஔவையின் மூதுரை, நல்வழியைப் போல் ஆசாரக்கோவை அனைவரிடமும் பிரபலமாகவில்லை. நம் பள்ளிக்கூட புத்தங்களிலும் இவை அரிதாகவே இடம் பெறுகிறது, பலருக்கு தமிழில் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்று தெரியவில்லை.  

இணையதளத்தில் பல இடங்களிலும் இதில் உள்ள பாடல்களின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. மூதுரை, நல்வழியைத் தொடர்ந்து ஈகரை உறவுகளுக்கு இந்த அற்புத நூலை அனைவரும் அறிந்து கொள்ள, அனைவரும் சுலபமாக படிக்க, பொருளுடன் பதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளேன்.

உங்களின் ஆதரவும் ,தவறு ஏற்படின் எடுத்துக் கூறும் நட்பையும் நாடி தொடர்கிறேன்.

                 
அன்புடன்......



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 28, 2012 10:34 am

பாடல் 98 புகக் கூடாத இடங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


சூதர் கழகம், அரவர் அறாக் களம்,
பேதைகள் அல்லார் புகாஅர்; புகுபவேல்,
ஏதம் பலவும் தரும்

பொருள் விளக்கம்

சூதாடுவதற்கு கூடும் சங்கம், இறைத்தன்மை உள்ளோர் செல்லக்கூடாது என்று நினைக்கும் பாம்புகள் போல் நஞ்சுடன் நம்மை கட்டித் தழுவும் பெண்கள் உள்ள இடம், பேதைகள் அல்லாதவர்கள் அதாவது அறிவாளிகள் புகக்கூடாது என்று நினைக்கும் மூடர்கள் கூடும் இடம் ஆகிய இடங்களுக்கு செல்லக்கூடாது. செல்ல நினைத்தால் தீராத துன்பம் விளையும்

பாடல் 99 அறிவினர் செய்யாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


உரற் களத்தும், அட்டிலும், பெண்டிர்கள் மேலும், -
நடுக்கு அற்ற காட்சியார் - நோக்கார், எடுத்து இசையார்,
இல்லம் புகாஅர்; விடல்

பொருள் விளக்கம்

ஒருவர் பெண்ணுடன் மகிழுற்று, ஆனந்தமாக சத்தம் போடும் இருக்கும் இடத்தையும், உணவு தயாராகும் இடத்தையும், பெண்களின் அந்தரங்க அறைகளையும் பார்க்கக்கூடாது, பார்க்க நேர்ந்தால் பார்த்தவைகளை வெளியில் சொல்லக்கூடாது, அந்த இடங்களுக்கு உள்ளே செல்லக்கூடாது. இவையே குற்றம் இல்லாமல் கற்று உணர்ந்தவர் செய்யும் செயலாகும்.

பாடல் 100 ஒழுக்கத்தினின்று விலகியவர்
(பஃறொடை வெண்பா)


அறியாத தேயத்தான், ஆதுலன், மூத்தான்,
இளையான், உயிர் இழந்தான், அஞ்சினான், உண்பான்,
அரசர் தொழில் தலைவைத்தான், மணாளன், என்று
ஒன்பதின்மர் கண்டீர் - உரைக்குங்கால் மெய்யான்
ஆசாரம் வீடு பெற்றார்.

பொருள் விளக்கம்

ஒரு நாட்டின் சட்ட திட்டங்கள் தெரியாமல் அடுத்த நாட்டின் இருந்து வந்தவர்கள், மிகவும் வறுமை நிலை எய்தி உணவுக்கு கஷ்டபடுபவன், நன்கு வயது முதிர்ந்த தள்ளாத நிலையில் இருக்கும் பெரியவர், குழந்தைகள், உயிரை இழந்தவன், உயிர் அச்சத்தில் இருப்பவன், உணவு உண்பவன், அரசாங்க வேளையில் தலையில் சுமந்து இருப்பவர்கள் (தூதுவர்கள், ஒற்றர்கள் ), திருமண கோலத்தில் இருக்கும் மணமக்கள் ஆகிய ஒன்பது பேருக்கு மேற் கூறிய அனைத்து ஆசாரங்களும் பொருந்தாது. இவர்கள் ஆசாரங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்.

பி.கு
ஒரு நாட்டின் விவரம் தெரியாதவர் ஒரு சில தவறு செய்யினும் அவருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. மிகவும் வறுமை நிலையில் உள்ளவன் அனைத்து ஆசாரங்களையும் செய்ய இயலாது. ஆதலால் அவனுக்கு விலக்கு, அவனால் இயன்றவற்றை செய்ய வேண்டும். உயிரை இழந்து பிணமாக கிடப்பவன் ஒரு ஆசாரத்தையும் செய்ய முடியாது. ஒருவனால் அச்சப்படுத்தப்பட்டு உயிர் பயத்துடன் இருக்கும் ஒருவனால் ஆசாரம் செய்ய இயலாது. விவரம் அறியாத சிறுவர்கள், தள்ளாத வயதில் இருக்கும் முதியோர் ஆகியவர்களால் அனைத்து ஆசாரங்களையும் செய்ய இயலாது, உணவு உண்ணுபவன் அரசனே வந்தாலும் எழுந்து இருக்க வேண்டிய அவசியமில்லை, உணவே முதல் மரியாதைக்குரியது. தூது செல்பவர்கள், ரகசியங்களை உளவு பார்ப்பவர்கள் ஒவ்வொரு நாட்டின் தன்மைப் பொருத்தும், இடத்துக்கு தகுந்தது போல் நடக்க வேண்டும், சில நேரங்களில் போகாத இடங்களிலும் புக வேண்டும். மணமக்கள் கோலத்தில் இருப்பவர்கள் அரசனே வந்தாலும் அவர் முன் அமர்ந்து இருக்கலாம். இப்படி அவர் அவர் தன்னைக்கு தகுந்து ஆசாரங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

மற்றவர்கள் இயன்ற ஆசாரங்களை கடைபிடித்து வாழ வேண்டும்.


ஆசாரக் கோவை இனிதே நிறைவுற்றது.




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 28, 2012 10:37 am

நன்றி அசுரன்
நன்றி ராமன்
நன்றி



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 28, 2012 10:44 am

மிகவும் அற்புதமாக நிறைவு செய்துவிட்டீர்கள் ஐயா...

ஆசாரக்கோவையை எங்களுக்கு அறிமுகப் படுத்தி அதன் நூறு செய்யுள்களையும், சிறந்த முறையில் விளக்கம் அளித்து, எழுந்த சந்தேகங்களுக்கு, சிரத்தை எடுத்து, பதில் கூறி தெளிவு படுத்தி, தாங்கள் ஆற்றிய சேவை மிகவும் மகிழ்ச்சி அளிப்பதும், பாராட்டுதற்குரியதாகவும் உள்ளது ஐயா.

மிக்க நன்றிகள்......விரைவில்.........அடுத்த நல்ல தமிழ் நூலிற்கான விளக்கத்துடன் தங்களை எதிர்பார்க்கிறேன் ஐயா........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 28, 2012 10:48 am

மூதூரை, நல்வழியைத் தொடர்ந்து அழகு ஆசாரங்களை எடுத்து உரைக்கும் இந்த அறிய ஆசாரக் கோவையை உங்களுடன் பகிர்ந்ததில் இன்புறுகிறேன்.

பிழை பொறுத்து, ஊக்கம் அளித்த அனைத்து ஈகரை உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி ,

இந்த திரியில் சிறப்பு கவனம் செலுத்தி பின்னூட்டம் இட்டு எனக்கு உற்சாகம் அளித்த ராமன், தயாளன் ஐயா, ஆதிரா, பாலா சார், மாணிக்கம் நடேசன் கேசவன், பிரபு, கிட்சா , சாந்தி, ரமேஷ், செல்ல கணேஷ் நேரு ஆகியோருக்கும் என் நன்றி.

:நல்வரவு:



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
svisweswaran
svisweswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 04/08/2015

Postsvisweswaran Sun Dec 23, 2018 12:39 am

சதாசிவம் ஐயா, வணக்கம்!

ஆச்சாரக் கோவை -க்கு முழு விளக்கவுரை அறிய ஆவல். வலைத்தளங்களில் ஒவ்வொரு முழுப்பாடலுக்கும் உரை காண இயலாமல் உள்ளது....

மிக்க நன்றி,
விஸ்வேஸ்வரன் அ. ஸுப்ரமண்யம்


prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 609
இணைந்தது : 19/06/2016

Postprajai Sun Dec 23, 2018 12:44 pm

சதாசிவம் அவர்கள் இந்த தளத்திற்குக் கடந்த இரண்டரை வருடமாக வந்ததாகத் தெரியவில்லை.


ஆச்சாரக் கோவை -க்கு முழு விளக்கவுரை தமிழ் இணையக் கல்விக்கழகம் என்ற தளத்தில் உள்ளது. அது நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் உள்ளதா என்று தெரியவில்லை. மாதிரிக்கு, முதல் செய்யுளுக்கான விளக்கவுரை கீழே கொடுத்துள்ளேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் கூகுளில் ஆசாரக்கோவை "ஆசாரக்கோவை site:tamilvu.org" என்று தேடி, மற்றவைக்கான விளக்கவுரையைப் பார்த்துக்கொள்ளுங்கள்.



1 நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ
டின்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ
டொப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து

(இதன் பொருள்.) நன்றி அறிதல் - தனக்குப் பிறர் செய்த நன்றியை மறவாமையும், பொறையுடைமை - பொறுமையும், இன் சொல் ஓடு - இன்சொல்லும், எ உயிர்க்கும் - எல்லா உயிர்க்கும், இன்னாத - துன்பந்தருபவற்றை, செய்யாமை - செய்யாதிருத்தலும், கல்வி ஓடு - கல்வியும், ஒப்புரவு - ஒப்புரவை, ஆற்ற - மிக, அறிதல் - அறிதலும், அறிவுடைமை - அறிவு உடைமையும், நல் இனத்தார் ஓடு - நல்ல இயல்புள்ளவர்களுடன், நட்டல் - நட்புச் செய்தலும், இவை எட்டும் - என்ற இவ்வெட்டு வகையும், சொல்லிய - அறிஞர்களாற் சொல்லப்பட்ட, ஆசார வித்து - ஒழுக்கங்கட்குக் காரணம்.

(பழைய பொழிப்புரை.) தனக்குப் பிறர் செய்த நன்றியறிதலும், பொறையும், இன்சொல்லும், எல்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமையும், கல்வியும், ஒப்புரவை மிக வறிதலும், அறிவுடைமையும், நல்லினத்தாரோடு நட்டலும் என இவ்வெட்டு வகையும் நல்லோராற் சொல்லப்பட்ட ஆசாரங்கட்குக் காரணம்.

(கருத்துரை.) நன்றியறிதல் பொறையுடைமை முதலிய எட்டும் நல்லொழுக்கங்கட்குக் காரணம்.

நன்றி - நன்மை : பண்புப்பெயர். இன்சொல் - இனிமை + சொல். எ + உயிர் - 'எகரவினா முச்சுட்டின் முன்னர் உயிரும் யகரமும் எய்தின் வவ்வும்' என்ற (நன்னூல் - உயிர் : சூ. 163)

விதிப்படி எவ்வுயிர் என்றாயிற்று, ஒப்புரவு - பெரியோரால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஞானம்; ஒப்பு + உரவு : அஃதாவது உலக நடை. நட்டல் நள் என்னும் பகுதியடியாகப் பிறந்த தொழிற்பெயர்.

இச்செய்யுள் 'பாதம் பலவரிற் பஃறொடை வெண்பா' என்பதற்கிணங்க நான்கடியின் மிக்குவந்தது.

(1)



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 24, 2018 10:11 pm

இரண்டரை வருடங்களுக்குப் பிறகு இந்த திரி மேலே வந்ததில் சந்தோஷமே புன்னகை 



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Dec 26, 2018 8:50 pm

உன்னுடன்  கைகோத்துச்  செல்பவர்களையும்சரி,
பிறரையும் சரி,யாரையும் சிறிதுகூடபொருட்படுத்தாதே, இறைவனின் கையைத் தொட்டுக்கொண்டிருக்கிறாய்
என்பதை மட்டும்  உறுதியாக  நம்பு, அதுபோதும்-
>-சுவாமி விவேகானந்தர்.

Sponsored content

PostSponsored content



Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக