Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரெங்கும் பரவி வரும் தமிழ் கல்வி: வெளிநாட்டினர்கள் ஆர்வம்
+4
kitcha
பேகன்
ரேவதி
jesudoss
8 posters
Page 1 of 1
பாரெங்கும் பரவி வரும் தமிழ் கல்வி: வெளிநாட்டினர்கள் ஆர்வம்
தமிழ் மொழியைக் கற்பதில், உலகளவில் ஆர்வம் பெருகி வருகிறது. குறிப்பாக ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இம்மொழியைக் கற்பதில், தனி ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனம், தமிழ் பண்பாடு, இலக்கியம், வரலாறு மற்றும் ஆசிய மொழிகளை ஒப்பிட்டு, உயர்நிலையில் ஆய்வு மேற்கொள்ளும், பன்னாட்டு நிறுவனமாகும். தமிழர்களின் கடல் கடந்த தொடர்பு குறித்த ஆய்வுக்கும் முன்னுரிமை தரப்படுகிறது. இந்நிறுவனத்தில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்பெயின், சீனா, சிங்கப்பூர், மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலர், தமிழ் மொழியைக் கற்பதோடு, தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாசாரம் குறித்த ஆராய்ச்சிகளும் செய்து வருகின்றனர். மூன்று மாதம், ஆறு மாதம், ஓராண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் வரை, சென்னையில் தங்கி படிக்கின்றனர். இது தமிழ் மொழியின் மீதான ஆர்வம், உலகளவில் படிப்படியாக வளர்ந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.
தற்போது, ஆசியவியல் நிறுவனத்தில் தமிழ் கற்று வரும், ஜப்பான் நாட்டின் ஓசாகாவை அடுத்த ககாவா ஊரைச் சேர்ந்த கோகி கூறுகையில், "நான் சீன மொழி படித்துள்ளேன். மொராக்கோவில் அரபி மொழி கற்றேன். தற்போது, தமிழ் மீது ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாக, கடந்த ஆறு மாதமாக தமிழ் படித்து வருகிறேன். தமிழ் மிகவும் அழகான மொழி. அது வாழும் மொழி. இந்திய பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றில், தமிழக கலாசாரத்திற்கு தனித்தன்மை உள்ளது. தமிழ் நாளிதழ்களை எழுத்துக் கூட்டி படித்து வருகிறேன்' என்றார்.
ஜப்பான் நாட்டின் கியூட்டோ மாநிலத்தைச் சேர்ந்த தொமாகா கூறுகையில், "சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக மாணவ, மாணவியருக்கு ஜப்பான் மொழி கற்றுத் தருவதற்காக, என் நாட்டு அரசின் சார்பாக இந்தியாவிற்கு வந்துள்ளேன். நான் இங்கு வந்தவுடன், தமிழ் மொழி குறித்தும், தமிழக பாரம்பரிய கலாசாரம், பண்பாடு, இலக்கியம் குறித்தும் கேட்டறிந்தேன். இதனால், எனக்கு தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போது, தமிழ் படித்து வருகிறேன். அடுத்த இரண்டு ஆண்டுகள் சென்னையில் இருக்கப் போகிறேன். நான் எனது நாட்டிற்கு திரும்பும் போது, தூய தமிழில் எழுதி, படித்து, பேசும் அளவிற்கு தயாராகி விடுவேன்' என்றார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த வெய்பென் கூறுகையில், "எனது தாய்மொழி ஆங்கிலம். இது தவிர மாண்டரின், இந்தி, கொஞ்சம் தமிழ் தெரியும். ஆசிய பண்பாடு மற்றும் தெற்காசிய பண்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளேன். மேலும், சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்தும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளேன். அதற்காக, ஆசியவியல் நிறுவனம் மூலம் தமிழ் கற்று வருகிறேன். தமிழ் கற்பது மிகவும் கடினமாக உள்ளது. மாண்டரின் மொழிக்கும், தமிழுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சிங்கப்பூரில் இந்தி மற்றும் தமிழ் பேசக் கூடியவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களிடம் உள்ள வேறுபாடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரைச் சேர்ந்த மசகாசுகோனா என்பவர் கூறுகையில், "மொழியியல் துறையில் எம்.ஏ., பட்டம் பெற்றுள்ளேன். சீனா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வேலை பார்த்தேன். சிங்கப்பூரில் இருந்த போது, தமிழ் மொழியை கேட்டறிந்தேன். அங்குள்ள தமிழர்களுடன் பழகி, கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேச ஆரம்பித்தேன். ஆனால், அங்கு தமிழ் முறைப்படி படிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. இதையடுத்து, தமிழகத்திலுள்ள ஆசியவியல் நிறுவனம் குறித்து கேட்டறிந்தேன். அதன் பின், இங்கு வந்தேன். இங்கு, தமிழ்மொழி மூலம் ஜப்பானிய மொழி கற்றுத் தருகின்றனர். அதற்கான சிறப்பு கையேடுகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது ஆசியவியல் நிறுவனத்தின் வாயிலாக, சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ்-ஜப்பானிய மொழி உறவு குறித்து, முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளேன். தமிழ் மொழி பேச ஆசையாக இருந்தாலும், மிகவும் கடினமாக உள்ளது. எனது நோக்கம் ஜப்பானியர்களுக்கு தமிழ் மொழியும், தமிழர்களுக்கு ஜப்பான் நாட்டு மொழியும் கற்றுத் தரவேண்டும் என்பதும், இரு மொழிகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமை, வேற்றுமை குறித்து ஆராய்ச்சி செய்வதும் தான்.
வெளிநாட்டினர்களுக்கான தமிழ்ப் பயிற்சி போதித்து வரும், ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குனர் ஜான் சாமுவேல் கூறிய தாவது: கடந்த 1983ம் ஆண்டு முதல், இந்நிறுவனம் வெளிநாட்டினருக்கு தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு குறித்த வகுப்புகளை நடத்தி வருகிறது. இதுவரை, 750க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், இங்கு தமிழ் பயின்றுள்ளனர். தொடக்க நிலையில் தமிழ் கற்க, அமெரிக்காவில் இருந்து பெரும்பாலான மாணவர்கள் வந்து சென்றனர். தற்போது, ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியைக் கற்பதிலும், ஆராய்ச்சி மேற்கொள்வதிலும், ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள், அதிகம் தமிழாராய்ச்சி செய்ய விரும்புகின்றனர். ஜப்பானியர்கள், கொரிய நாட்டினர், சீன நாட்டினர் ஆகியோரும் தமிழாராய்ச்சியில் சிறப்பு ஆர்வம் காட்டுகின்றனர். ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்பெயின் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும், தற்போது, தமிழாராய்ச்சியில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். எனவே, கடல் கடந்த நாடுகளில், தமிழாராய்ச்சியின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு, ஆசியவியல் நிறுவன இயக்குனர் ஜான் சாமுவேல் கூறினார்.
dinamalar
சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனம், தமிழ் பண்பாடு, இலக்கியம், வரலாறு மற்றும் ஆசிய மொழிகளை ஒப்பிட்டு, உயர்நிலையில் ஆய்வு மேற்கொள்ளும், பன்னாட்டு நிறுவனமாகும். தமிழர்களின் கடல் கடந்த தொடர்பு குறித்த ஆய்வுக்கும் முன்னுரிமை தரப்படுகிறது. இந்நிறுவனத்தில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்பெயின், சீனா, சிங்கப்பூர், மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலர், தமிழ் மொழியைக் கற்பதோடு, தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாசாரம் குறித்த ஆராய்ச்சிகளும் செய்து வருகின்றனர். மூன்று மாதம், ஆறு மாதம், ஓராண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் வரை, சென்னையில் தங்கி படிக்கின்றனர். இது தமிழ் மொழியின் மீதான ஆர்வம், உலகளவில் படிப்படியாக வளர்ந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.
தற்போது, ஆசியவியல் நிறுவனத்தில் தமிழ் கற்று வரும், ஜப்பான் நாட்டின் ஓசாகாவை அடுத்த ககாவா ஊரைச் சேர்ந்த கோகி கூறுகையில், "நான் சீன மொழி படித்துள்ளேன். மொராக்கோவில் அரபி மொழி கற்றேன். தற்போது, தமிழ் மீது ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாக, கடந்த ஆறு மாதமாக தமிழ் படித்து வருகிறேன். தமிழ் மிகவும் அழகான மொழி. அது வாழும் மொழி. இந்திய பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றில், தமிழக கலாசாரத்திற்கு தனித்தன்மை உள்ளது. தமிழ் நாளிதழ்களை எழுத்துக் கூட்டி படித்து வருகிறேன்' என்றார்.
ஜப்பான் நாட்டின் கியூட்டோ மாநிலத்தைச் சேர்ந்த தொமாகா கூறுகையில், "சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக மாணவ, மாணவியருக்கு ஜப்பான் மொழி கற்றுத் தருவதற்காக, என் நாட்டு அரசின் சார்பாக இந்தியாவிற்கு வந்துள்ளேன். நான் இங்கு வந்தவுடன், தமிழ் மொழி குறித்தும், தமிழக பாரம்பரிய கலாசாரம், பண்பாடு, இலக்கியம் குறித்தும் கேட்டறிந்தேன். இதனால், எனக்கு தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போது, தமிழ் படித்து வருகிறேன். அடுத்த இரண்டு ஆண்டுகள் சென்னையில் இருக்கப் போகிறேன். நான் எனது நாட்டிற்கு திரும்பும் போது, தூய தமிழில் எழுதி, படித்து, பேசும் அளவிற்கு தயாராகி விடுவேன்' என்றார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த வெய்பென் கூறுகையில், "எனது தாய்மொழி ஆங்கிலம். இது தவிர மாண்டரின், இந்தி, கொஞ்சம் தமிழ் தெரியும். ஆசிய பண்பாடு மற்றும் தெற்காசிய பண்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளேன். மேலும், சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்தும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளேன். அதற்காக, ஆசியவியல் நிறுவனம் மூலம் தமிழ் கற்று வருகிறேன். தமிழ் கற்பது மிகவும் கடினமாக உள்ளது. மாண்டரின் மொழிக்கும், தமிழுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சிங்கப்பூரில் இந்தி மற்றும் தமிழ் பேசக் கூடியவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களிடம் உள்ள வேறுபாடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரைச் சேர்ந்த மசகாசுகோனா என்பவர் கூறுகையில், "மொழியியல் துறையில் எம்.ஏ., பட்டம் பெற்றுள்ளேன். சீனா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வேலை பார்த்தேன். சிங்கப்பூரில் இருந்த போது, தமிழ் மொழியை கேட்டறிந்தேன். அங்குள்ள தமிழர்களுடன் பழகி, கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேச ஆரம்பித்தேன். ஆனால், அங்கு தமிழ் முறைப்படி படிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. இதையடுத்து, தமிழகத்திலுள்ள ஆசியவியல் நிறுவனம் குறித்து கேட்டறிந்தேன். அதன் பின், இங்கு வந்தேன். இங்கு, தமிழ்மொழி மூலம் ஜப்பானிய மொழி கற்றுத் தருகின்றனர். அதற்கான சிறப்பு கையேடுகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது ஆசியவியல் நிறுவனத்தின் வாயிலாக, சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ்-ஜப்பானிய மொழி உறவு குறித்து, முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளேன். தமிழ் மொழி பேச ஆசையாக இருந்தாலும், மிகவும் கடினமாக உள்ளது. எனது நோக்கம் ஜப்பானியர்களுக்கு தமிழ் மொழியும், தமிழர்களுக்கு ஜப்பான் நாட்டு மொழியும் கற்றுத் தரவேண்டும் என்பதும், இரு மொழிகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமை, வேற்றுமை குறித்து ஆராய்ச்சி செய்வதும் தான்.
வெளிநாட்டினர்களுக்கான தமிழ்ப் பயிற்சி போதித்து வரும், ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குனர் ஜான் சாமுவேல் கூறிய தாவது: கடந்த 1983ம் ஆண்டு முதல், இந்நிறுவனம் வெளிநாட்டினருக்கு தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு குறித்த வகுப்புகளை நடத்தி வருகிறது. இதுவரை, 750க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், இங்கு தமிழ் பயின்றுள்ளனர். தொடக்க நிலையில் தமிழ் கற்க, அமெரிக்காவில் இருந்து பெரும்பாலான மாணவர்கள் வந்து சென்றனர். தற்போது, ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியைக் கற்பதிலும், ஆராய்ச்சி மேற்கொள்வதிலும், ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள், அதிகம் தமிழாராய்ச்சி செய்ய விரும்புகின்றனர். ஜப்பானியர்கள், கொரிய நாட்டினர், சீன நாட்டினர் ஆகியோரும் தமிழாராய்ச்சியில் சிறப்பு ஆர்வம் காட்டுகின்றனர். ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்பெயின் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும், தற்போது, தமிழாராய்ச்சியில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். எனவே, கடல் கடந்த நாடுகளில், தமிழாராய்ச்சியின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு, ஆசியவியல் நிறுவன இயக்குனர் ஜான் சாமுவேல் கூறினார்.
dinamalar
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: பாரெங்கும் பரவி வரும் தமிழ் கல்வி: வெளிநாட்டினர்கள் ஆர்வம்
தமிழ் மொழியின் பெருமை இங்கே வாழும் சில மக்களுக்கு தெரிவதில்லையே
Last edited by ரேவதி on Thu Nov 10, 2011 10:27 am; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பாரெங்கும் பரவி வரும் தமிழ் கல்வி: வெளிநாட்டினர்கள் ஆர்வம்
தமிழ் இயற்கையின் சொந்த மொழி ...
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: பாரெங்கும் பரவி வரும் தமிழ் கல்வி: வெளிநாட்டினர்கள் ஆர்வம்
கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி,
வந்தாரை வாழ வைக்கும் மொழி எங்கள் தமிழ் மொழி
வந்தாரை வாழ வைக்கும் மொழி எங்கள் தமிழ் மொழி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: பாரெங்கும் பரவி வரும் தமிழ் கல்வி: வெளிநாட்டினர்கள் ஆர்வம்
தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பாரெங்கும் பரவி வரும் தமிழ் கல்வி: வெளிநாட்டினர்கள் ஆர்வம்
நல்ல செய்தி, படிப்பதற்கு இனிமையாக உள்ளது. நாம் தான் தமிழின் முழுமையை இன்னும் உணராமல் இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு வந்த ஜி. யு. போப் இங்குள்ள திருக்குறள், திருவாசகத்தை படித்து அதை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தார். அவர் இறக்கும் போது, தன் கல்லறையில் இங்கே ஒரு தமிழ் படித்த மாணவன் உறங்குகிறான் என்று எழுதுங்கள் என்று கூறி இறந்தார்.
தமிழ் அத்தகைய பெருமை வாய்ந்த மொழியாகும்.
தமிழ் அத்தகைய பெருமை வாய்ந்த மொழியாகும்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: பாரெங்கும் பரவி வரும் தமிழ் கல்வி: வெளிநாட்டினர்கள் ஆர்வம்
நல்ல செய்தி ,
தமிழ் கற்பதற்கு தமிழ்நாட்டினர் ஆர்வம் என்ற செய்தி விரைவில் வந்துவிடும் போல இருக்கே. இதுக்கென்ன பண்ண போகிறார்கள் தமிழக கல்வி தந்தைகள்
தமிழ் கற்பதற்கு தமிழ்நாட்டினர் ஆர்வம் என்ற செய்தி விரைவில் வந்துவிடும் போல இருக்கே. இதுக்கென்ன பண்ண போகிறார்கள் தமிழக கல்வி தந்தைகள்
Re: பாரெங்கும் பரவி வரும் தமிழ் கல்வி: வெளிநாட்டினர்கள் ஆர்வம்
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறந்து
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Similar topics
» அமெரிக்காவில் பரவி வரும் செக்ஸ் வீடியோ கலாசாரம்
» ஹரியானாவில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்:
» பிரான்ஸ் நாட்டில் "தமிழ்' பேசுவதில் ஆர்வம்; 2.50 லட்சம் பேருக்கு எழுத, படிக்க தெரியும்
» போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
» மிகவும் எச்சரிக்கைOrkut யில் வேகமாக பரவி வரும் வைரஸ்(" Bom sabado " அல்லது "Bomb Amungu" )எச்சரிக்கை
» ஹரியானாவில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்:
» பிரான்ஸ் நாட்டில் "தமிழ்' பேசுவதில் ஆர்வம்; 2.50 லட்சம் பேருக்கு எழுத, படிக்க தெரியும்
» போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
» மிகவும் எச்சரிக்கைOrkut யில் வேகமாக பரவி வரும் வைரஸ்(" Bom sabado " அல்லது "Bomb Amungu" )எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|