ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரழகி கிளியோபாட்ரா !

+2
இளமாறன்
ரேவதி
6 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 Empty பேரழகி கிளியோபாட்ரா !

Post by ரேவதி Wed Nov 09, 2011 11:57 am

First topic message reminder :

இன்று நெல்லை விவேகநந்தா அவர்கள் எழுதிய "உலக பேரழகி கிளியோபாட்ராவின்" வாழ்க்கை வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..


பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 Cleopatradrawing

அழகு என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருபவள் எகிப்து பேரரசி
கிளியோபாட்ரா. உலகப் பேரழகி பட்டத்தை இன்றுவரையிலும் தக்க வைத்துக்
கொண்டிருப்பவள் கிளியோபாட்ராதான். அவளுடைய அழகால் கவிழ்ந்த அரசுகளும்
உண்டு. அந்த ஆழகை ஆராதித்த அரசுகளும் உண்டு. அந்த அழகின் வசீகரத்தால்
சிதறுண்டு போனது ராஜ்ஜியங்கள் மட்டுமல்ல.. அவளது வாழ்க்கையும்தான்..!

கி.மு.51-ம் ஆண்டில் ஒரு நாள்.

வடக்கு எகிப்தின் கடற்கரையில்
அமைந்திருந்த அலெக்சாண்டிரியா நகர மக்கள் அனைவரும் அடுத்து என்ன
நடக்கப்போகிறது என்பதை அறிய ஆவலோடு காத்திருந்தனர்.

நாட்டை ஆளும்
பேரரசரின் அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.
அமைச்சர்கள் மற்றும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே அங்கே
கூடி இருந்தனர்.

அவர்களின் பார்வை எல்லாம் நம் கதாநாயகியான 18 வயது
இளம்பெண்ணையும், 12 வயதான ஒரு பையனையும் மொய்த்துக் கொண்டிருந்தது. இவர்கள்
இருவரும் அக்காள், தம்பி. இவர்களது திருமணத்தைக் காணவே இந்த அரண்மனை
விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

என்னது...? அக்காள்- தம்பிக்குத் திருமணமா என்று அதிர்ச்சியடைகிறீர்களா?

கிறிஸ்து
பிறப்பதற்கு முன்பான காலகட்டத்தில் ஒவ்வொரு ராஜ்ஜியத்திலும் இப்படி
குடும்பத்துக்குள் மணம் செய்யும் சம்பிரதாயம் இருந்து வந்திருக்கிறது..

ஏன்?

அந்தக் காலத்தில் அரச பரம்பரையில், அரசாளும் உரிமை ஒரு குடும்பத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் காரணம்.

அரசர்
இறந்துவிட்டால், அவரது மனைவியைப் பேரரசி ஆக்கிவிடுவார்கள். அரசியும்
கொல்லப்பட்டுவிட்டால் (இது போராகவும் இருக்கலாம், அரசியலுக்காக நடக்கும்
கொலையாகவும் இருக்கலாம்) வாரிசை நியமிப்பார்கள். அந்த வாரிசு வயதுக்கு வந்த
ஆணாக இருந்தால் பிரச்சினை இல்லை. அவன், சிறுவனாக இருந்துவிட்டால்?

அவனுக்கு
மூத்த சகோதரி இருந்தால் அவளுக்கும், இவனுக்கும் திருமணம் செய்து வைத்து,
அவளை அரசியாக்கி விடுவார்கள். அப்படித்தான் பட்டத்துக்கு வந்தாள் நம்
கதாநாயகி கிளியோபாட்ரா!

திருமணம் நடைபெறும் இடத்தில் நம் கதாநாயகி
மிடுக்கோடு காட்சியளிக்க மணமகனான அவளது தம்பிதான், விரல் சூப்பாத குறையாக
நின்று கொண்டிருந்தான்.

பளபளக்கும் ஆடையில் வசீகரமாக அந்தக் கூட்டத்தில் மின்னிக் கொண்டிருந்த நம் கதாநாயகியைப் பற்றி கொஞ்சம் வர்ணித்துதான் ஆக வேண்டும்.

வயதுக்கு
வந்த 18 வயது பெண் என்பதால், ஒட்டுமொத்த அழகும் அவளது தேகத்தில் நைல்
நதியாக நீளமாக நெளிந்து வளர்ந்து படர்ந்திருந்தது.தலையை அலங்கரித்த,
பளிச்சிடும் வைரங்கள் பதிக்கப்பட்டிருந்த கிரீடம் அவளது அழகில்
தோற்றுப்போய் ஒதுங்கி இருந்தது. கறுத்துச் செழித்து வளர்ந்திருந்த அவளது
தலை முடி, மெல்லிய இடுப்பு வரையிலும் உரசிக் கொண்டிருந்தது.

உருண்டையாகவும்
இல்லாமல், சப்பையாகவும் இல்லாமல், இவை இரண்டும் இடையில் அமைந்த அவளது
பிரகாசமான முகம், அந்த அரண்மனைக்கு இன்னும் வெளிச்சமூட்டியது.
மெல்லிடையிலும், மாராப்பிலும் தொங்கிக் கொண்டிருந்த ஆபரணங்கள், அவளை
குட்டித் தேவதைபோல் அலங்கரித்திருந்தன. அவளது கண்களில் மிரட்சிக்கு பதில்
தைரியம்... தைரியம்... தைரியம் மாத்திரமே!

இந்த உலகமே ஒரு நாள் எனது
கடைக்கண் பார்வையில் சொக்கி என் காலடியில் விழத்தான் போகிறது..." என்று
சொல்வதுபோல் திமிராக காட்சி தந்து கொண்டிருந்தன அவளது கண்கள்.

ஆனாலும்,
அந்த கண்களுக்குள் காதலும் ஒரு ஓரமாக இழையோடிக் கொண்டிருந்தது. சிறிதுநேரத்தில் நடந்து முடிந்தது திருமணம்.

யார் இந்த கிளியோபாட்ரா?

இயேசு
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, அதாவது கி.மு.69-ம் ஆண்டு ஜனவரி மாதம்
எகிப்தை ஆண்டு வந்த டாலமி வம்ச மன்னரான 12-ம் டாலமிக்கு மகளாகப்
பிறந்தவள்தான் நம் கதாநாயகி கிளியோபாட்ரா. இவளுக்கு முன்பு, அவளது
அரசவம்சத்தில் ஏற்கெனவே கிளியோபாட்ரா என்ற பெயரில் 6 பேர் வாழ்ந்து
முடித்துவிட்டதால், நம் கதாநாயகி 7-ம் கிளியோபாட்ரா என்று
அழைக்கப்படுகிறாள்.

தந்தை ஓ.கே. தாய் யார்?

இந்த கேள்விக்குத்தான் இன்றுவரையிலும் உறுதியான விடை கிடைக்கவில்லை. ஆனாலும், அவளது தாய் பெயர் இஸிஸ் என்று கூறுவோரும் உண்டு.

கிளியோபாட்ரா
எப்படிப்பட்டவள், அவளிடம் என்னென்ன திறமைகள் இருந்தன என்பவை பற்றியெல்லாம்
புகழ்ந்திருந்த அவள் காலத்து எழுத்தாளர்களின் விரிவான ஆதாரங்கள்
காலப்போக்கில் மறைந்துவிட்டன.

அதேநேரம், அவள் வாழ்ந்த 200
ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது இயேசு கிறிஸ்து பிறந்த 150 ஆண்டுகளுக்குப்
பிறகு, அவளைப் பார்த்தவர்கள் மற்றும் அவளை சந்தித்தவர்கள் விட்டுச் சென்ற
குறிப்புகளைக் கொண்டு, புளுடார்ச் என்ற வரலாற்று ஆசிரியர் எழுதியவைதான்
இன்றும் நமக்கு அவளைப் பற்றிய ஆதாரங்களாக உள்ளன.

அவள் சிவந்த நிற
மேனி கொண்டவள் அல்ல; ஆனால், அழகாகவும், கவர்ச்சியாகவும், பார்த்த
மாத்திரத்தில் மற்றவர்களைக் கவரும் தோற்றப் பொலிவைக் கொண்டவளாகவும்,
இனிமையான குரலுக்கு சொந்தக்காரியாகவும் திகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்
இவர்.

கிளியோபாட்ரா பிறந்த டாலமி வம்சத்தினர், பரம்பரை பரம்பரையாக
அரசவம்ச வழியினர் கிடையாது. கி.மு. 345-களில் பரந்து விரிந்து காணப்பட்ட
பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாகவே, அதாவது ஒரு மாகாணமாகவே எகிப்து
இருந்தது.

உலகையே தனது ஆட்சியின் கீழ் கொண்டு வரப் புறப்பட்டு,
வெற்றிமேல் வெற்றிபெற்ற மாவீரன், மாசிடோனிய பேரரசன் அலெக்ஸாண்டர் எகிப்து
மாகாணத்தின் மீதும் படையெடுத்து வெற்றிகொண்டான்.

எகிப்து வெற்றியைத்
தொடர்ந்து, நைல் நதி வழியாக பெரும் படைகளுடன் இந்தியா நோக்கிப் புறப்பட்ட
அலெக்ஸாண்டர், தான் வென்ற பகுதிகளை ஆட்சி செய்ய சில கவர்னர்களை
நியமித்தார். அவர்கள் அந்த நாடுகளின் ஆட்சிப் பொறுப்பை கவனித்துக்
கொண்டனர்.

அவ்வாறு அலெக்ஸாண்டரால் நியமிக்கப்பட்ட கவர்னர்களில்
ஒருவர்தான் டாலமி. இவர், அலெக்ஸாண்டரின் மிகச் சிறந்த படைத்தளபதி
மட்டுமின்றி சிறந்த நண்பரும்கூட. மாசிடோனியாவின் ஆர்டியா மாவட்டத்தைச்
சேர்ந்த செல்வந்தரான லகஸ் என்பவரின் மகன்தான் இந்த டாலமி. தாய் பெயர்
அர்சினி.

ஆரம்பத்தில் எகிப்து, லிபியா, அரேபியப் பகுதிகளின்
கவர்னராக மட்டுமே இருந்து வந்த டாலமி, கி.மு. 305 முதல் அலெக்ஸாண்டருக்குப்
பிறகு மன்னராக நாட்டை ஆளத் தொடங்கினார். அதுவரை, எகிப்தை ஆண்டு வந்த பல
வம்சத்தினரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். டாலமி என்ற புதிய வம்சம்
ஆரம்பமானது.

சரி.. கிளியோபாட்ரா பேரழகி ஆனது எப்படி?

கி.மு. 51-ல் தனது 12 வயது தம்பி 13-ம் டாலமியை திருமணம் செய்து கொண்டதன்
மூலம் எகிப்து பேரரசின் அரசி ஆனாள் 18 வயது கிளியோபாட்ரா. அவளது தம்பி
13-ம் டாலமி நாட்டின் அரசன் ஆனான்.

அரியணையில் ஏறிய கிளியோபாட்ரா,
ஒரு நாட்டின் அரசியாக மட்டுமின்றி அழகுப் பதுமையாகவும் திகழ்ந்தாள்.
பருவத்தின் செழிப்பு அவளது மேனியில் கொட்டிக் கிடந்தது. அதுவரை நைல் நதியை
அழகுக்கு அழகாய்ப் போற்றி வந்த எகிப்து கவிஞர்கள், அதற்கும் ஒரு படி மேலாக
கிளியோபாட்ராவை புகழ்ந்து தள்ளினர்.

தனது அழகைக் கண்டு தானே வியந்து
போனாள் கிளியோபாட்ரா. அந்த பேரழகுக்கு இன்னும் மெருகூட்ட தன்னைப் பலவாறு
அலங்கரித்துக் கொண்டாள். ஆடை, ஆபரணங்கள் அணிவதில் தனிக்கவனம் செலுத்தினாள்.
அக்காலத்தில் கிடைத்த இயற்கை அழகுப் பொருட்கள் அவளை விதவிதமாக
அலங்கரித்தன.

அவளது மேனியில் நறுமணப் பொருட்களின் வாசனை எப்போதும்
இருக்கும். அவள் அணிந்த ஆடைகளை நவரத்தினங்கள் அலங்கரித்தன. சிறப்பான சிகை
அலங்காரம் அவளது அழகு முகத்திற்கு, மேலும் அழகு சேர்த்தது. கழுத்தில்
இருந்து மூக்குவரை மறைக்கும் முகவலைகள் அவளது அழகை மேலும் அதிகரித்தது.

உதட்டுச்சாயம் இல்லாமலே லேசாக எப்போதும்
சிவந்திருந்த உதடுகளும், வில் போன்ற புருவத்தில் இருந்து புறப்பட்ட பார்வை
அம்புகளும் அவளுக்கே உரிய அடையாளமாகத் திகழ்ந்தன.

அவள் எங்கு
புறப்பட்டுச் சென்றாலும், சேவை செய்யும் அழகான இளம்பெண்களும்
பின்தொடர்ந்தனர். அந்த சேவைப் பெண்களுக்கு மத்தியில் நடந்து வந்த
கிளியோபாட்ரா சாட்சாத் தேவதை போலவே தெரிந்தாள். இவ்வாறாக, எகிப்து மக்களின்
தெய்வமாகவும் தேவதையாகவுமே தன்னைக் காட்டிக்கொண்டாள் கிளியோபாட்ரா.

கிளியோபாட்ரா,
கிரேக்க காதல் கடவுளான க்யூபிட் போலவே இருந்தாள். சில நேரங்களில்
எகிப்தைக் காக்கும் பிரதான கடவுளான இசிஸ் மற்றும் டார்சஸ் நகரின் முக்கிய
காதல் பெண் தெய்வமான அப்ரோடைட் ஆகிய இரு தெய்வங்களின் கலவை போலவும்
தெரிந்தாள். நாட்கள் செல்லச் செல்ல அவளது அழகும் மேலும் மேலும்
அதிகரித்துக்கொண்டே போனது.

இப்படியெல்லாம் கிளியோபாட்ரா மேனி அழகில்
ஜொலிக்க அவள் தினமும் குளித்தவிதம்தான் காரணம் என்று இன்றுவரையில்
கூறுவோர் உண்டு. அவர்கள் சொல்லும் காரணம், கிளியோபாட்ரா தினமும் கழுதைப்
பாலில் குளித்தாள் என்பதுதான்-. ஆனால், இது எந்த வகையில் உண்மை என்பதற்கு
ஆதாரங்கள் இல்லை.

ஆனாலும், அது உண்மையாக இருக்கவும் வாய்ப்புகள்
உள்ளன. ஏனென்றால், அந்தக் காலத்தில் எகிப்தில் கழுதைகள் பிரபலமாக
திகழ்ந்தன. அவர்களது மறு ஜென்ம நம்பிக்கைக்கு கழுதைகளே முக்கிய காரணமாகத்
திகழ்ந்தன.

இறந்தவர் உடலைப் பாதுகாத்து வைத்திருந்தால், அந்த உடல்
மறு ஜென்மத்தின்போது உதவும் என்றும், ஆவிகள் இருப்பது உண்மை என்றும் அக்கால
எகிப்தியர் நம்பினர். அதன் காரணமாக, ஒருவர் இறந்துவிட்டால், அவரது
கல்லறைக் கிடங்கில் ஒரு கழுதையின் சிலையை செய்து வைக்கும் பழக்கம்
அவர்களிடத்தில் இருந்தது. மறு ஜென்மத்தில் இந்தக் கழுதை இப்போது
இறந்தவருக்கு உதவும் என்பது அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கையாக
இருந்தது.

இப்படி, எகிப்தியர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக
இருந்த கழுதை, கிளியோபாட்ராவின் அழகு ரகசியத்திலும் ஒளிந்திருப்பதில்
வியப்பில்லை என்று கருதவும் இடம் ஏற்படுகிறது. தனது அழகுக்காக
குங்குமப்பூவையும் அவள் பயன்படுத்தினாள் என்ற கருத்தும் உள்ளது.

அழகு
மட்டுமின்றி, பல்வேறு திறமைகளும் கிளியோபாட்ராவிடம் ஒளிர்ந்தன. அவளது
பேச்சில் இனிமை மட்டுமின்றி ஒருவித கவர்ச்சியும் சேர்ந்தே வந்தது. கற்பனை
வளமும் அவளிடம் நிறைந்திருந்தது. உணர்ச்சிகரமாக அவள் பேசும்போது,
துப்பாக்கியில் இருந்து பாயும் குண்டுகள் போல அவளது வார்த்தைகள் வேகமாகவும்
ஆக்ரோஷமாகவும் வந்து விழுந்தன.

தாய்மொழியுடன் மேலும் சில
மொழிகளையும் கற்று வைத்திருந்தாள். 9 மொழிகள் வரை கிளியோபாட்ராவுக்கு பேசத்
தெரியும் என்பது பலரது கருத்து. எகிப்தை ஆண்ட டாலமி வம்ச அரசர்களுக்கு
எகிப்திய மொழி தெரிந்திருக்கவில்லை. ஆனால், கிளியோபாட்ரா அதனைக் கற்று
வைத்திருந்தாள்.

உலோகங்களைப் பொன்னாக மாற்றும் ரசவாத வித்தையும் அவளுக்குத் தெரியும் என்று கூறுவோரும் உண்டு.

இப்படி பல்வகை திறமைகளுடனும், சாதுரியத்துடனும் செயல்பட்ட கிளியோபாட்ராவுக்கு, அவளது அமைச்சர்களாலேயே முதல் ஆபத்து வந்தது.


Last edited by ரேவதி on Wed Nov 09, 2011 12:00 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 Empty Re: பேரழகி கிளியோபாட்ரா !

Post by ரேவதி Thu Nov 10, 2011 4:06 pm

பீதியோடு விடிந்த அன்றைய தினத்தில் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்து பல
சோகங்கள் காத்திருந்தன. அன்று அவள் உண்மையிலேயே ஆக்டேவியனின் வீரர்களால்
சிறைபிடிக்கப்பட்டாள்.

அலெக்ஸாண்டிரியாவில் உள்ள அரண்மனையில்
கிளியோட்ரா கம்பீரமாக வீற்றிருக்க வேண்டிய சிம்மாசனத்தில் ஆக்டேவியன்
அமர்ந்து கொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

எகிப்து
கொலைக்களக்கூடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த கிளியோபாட்ராவை அரண்மனைக்குக்
கொண்டு வருமாறு உத்தரவிட்ட ஆக்டேவியன், அதே கொலைக்களக்கூடத்தில் பதுக்கி
வைக்கப்பட்டு இருந்த எகிப்து அரசுக்குச் சொந்தமான, விலை மதிக்க முடியாத
நகைகளை ரோமுக்கு கொண்டு செல்லவும் ஆணையிட்டான்.

அடுத்த ஓரிரு மணி
நேரத்தில் கிளியோபாட்ராவை மரியாதையோடு கைது செய்து அழைத்து வந்த ரோமானிய
வீரர்கள், அவளை ஆக்டேவியன் முன்பு நிறுத்தினர்.

கிளியோபாட்ரா இருக்க
வேண்டிய சிம்மாசனத்தில் ஆக்டேவியன் ரோமாபுரியின் பேரரசனாக வீற்றிருந்தான்.
கைதியாக தலைகுனிந்தபடி அவனுக்கு முன்பு முதன் முறையாக வந்து நின்றாள்
கிளியோபாட்ரா.

"வாருங்கள் எகிப்து அரசியாரே! நீங்கள் நலம்தானே? எமது வீரர்கள் உங்களைத் துன்புறுத்தவில்லையே...?"

மௌனமாக நின்றாள் கிளியோபாட்ரா.

"நீங்கள்
இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்க... நீங்களோ குற்றவாளியாக நிற்க...
இந்தக் காட்சியை என்னாலேயே பார்க்க சகிக்க முடியவில்லையே... நீங்கள்
மட்டும் அன்றே ஆண்டனியை விரட்டி விட்டிருந்தால்..."

அதற்குமேல் ஆக்டேவியனை பேச விடவில்லை கிளியோபாட்ரா.

"நிறுத்துங்கள்! என் ஆண்டனி பற்றி என்னிடமே தவறாக பேச வேண்டாம். அவர் மிகவும் நல்லவர். அவர் எனக்காகவே வாழ்ந்தார்".

"உங்களது பேரழகில் மயங்கித்தான் ஆண்டனி உங்களோடு சேர்ந்து வாழ்ந்தார் என்று..."

"உங்கள்
பேச்சை சற்று திருத்திக் கொள்ளுங்கள். ஆண்டனி என் பேரழகை மட்டும்
பார்க்கவில்லை. எனது தனிப்பட்ட குணநலன்களும் அவருக்குப் பிடித்துப்போய்
இருந்தன".

"நான் உங்களையும் ஆண்டனியையும் தவறாக சித்தரிக்கவில்லை. ரோமாபுரியில் மக்கள் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள்".

"அவர்கள் பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். நீங்களாவது உண்மையைக் கண்டறிந்து பேசுங்கள்".

"பரவாயில்லையே... இந்த இளைய சீஸருக்கே கட்டளையிட ஆரம்பித்து விட்டீர்களே..."

"இது கட்டளை அல்ல; நான் சொல்வதுதான் உண்மை நிலை!"

"நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். இப்போது நான் பேச வந்தது கூட உங்கள் நன்மையைக் கருத்தில் கொண்டுதான்".

"எனது ஆண்டனியே இப்போது எனக்கு இல்லாமல் போய்விட்டார். அப்படியிருக்க, நீங்கள் மட்டும் எனக்கு என்ன நன்மை செய்துவிடப் போகிறீர்கள்?"

"உங்கள்
ஆதங்கம் எனக்கு நன்றாகப் புரிகிறது. உங்கள் நிலையில் நான் இருந்தாலும் கூட
அப்படித்தான் பேசியிருப்பேன். அதெல்லாம் இருக்கட்டும்... உங்களுக்கு
ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் தைரியமாக கேளுங்கள். இப்போதும் நான்
உங்களை எகிப்தின் பேரரசியாகவே பார்க்கிறேன்".

"நன்றி. நேரம் வரும்போது நானே அந்த உதவியைக் கேட்கிறேன்".

"அப்படியே
ஆகட்டும். ஆமாம்... நான் வந்தது முதலே உங்களிடம் உங்களது தனிப்பட்ட விஷயம்
ஒன்றைப் பற்றி கேட்க வேண்டும் என்று இருந்தேன். அதை கேட்கலாமா? உங்களுக்கு
ஆட்சேபணை இல்லையே?"

"அது, நீங்கள் கேட்கப் போகும் கேள்வியைப் பொறுத்து இருக்கிறது".

"தவறாக
எண்ணிக் கொள்ள வேண்டாம். நீங்கள் மிகவும் பேரழகி என்று எல்லோரும் சொல்லக்
கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இப்போதோ நீங்கள் மிகவும் சோர்ந்து போய்
காணப்படுகிறீர்கள். உங்கள் முகத்தில் பிரகாசமே தெரியவில்லை. நன்றாக
சாப்பிட்டு பல நாட்கள் ஆனது போல் உடல் மெலிந்து காணப்படுகிறீர்கள்.
அதுபற்றித்தான் கேட்கலாம் என்று நினைத்தேன்".

"உங்கள் கேள்வியில்
தவறில்லை. தோல்வி மேல் தோல்வியை சந்தித்துவிட்ட என்னால் எப்படி
மகிழ்ச்சியாக இருக்க முடியும்? மகிழ்ச்சிதானே உண்மையான பேரழகு?"

"உங்கள்
மனவேதனை புரிகிறது. இது பற்றி மேலும் மேலும் கேட்டு உங்களை கஷ்டப்படுத்த
விரும்பவில்லை. இப்போது உங்களுக்கு நல்ல ஓய்வு தேவை என்று நினைக்கிறேன்.
முதலில் நன்றாக ஓய்வெடுங்கள். அதன்பிறகு உங்கள் உதவியைக் கேளுங்கள்.
என்னால் செய்ய முடியும் என்றால் நிச்சயமாகச் செய்கிறேன்..." என்ற
ஆக்டேவியன், கிளியோபாட்ராவை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தான்.

சிறிது
நேரத்தில் விதவிதமான பழங்கள், உணவு வகைகள் அவளுக்கு எடுத்துச்
செல்லப்பட்டன. துணைக்கு அவளது இரு தோழியரும் உடனிருக்க ஏற்பாடு செய்தான்
ஆக்டேவியன்.

சில நாட்களாக தூக்கத்தைத் தொலைத்திருந்த கிளியோபாட்ரா அன்று தன்னையும் மறந்து நிம்மதியாக தூங்கினாள்.

மறுநாள் விடிந்த சிறிது நேரத்திலேயே அந்த அதிர்ச்சியான செய்தி கிளியோபாட்ராவின் காதுகளை வந்தடைந்தது.

கிளியோபாட்ராவின்
வாரிசுகளுக்கு எகிப்து ஆட்சி உரிமை வழங்கப்பட மாட்டாது. இனி, எகிப்து
ரோமப் பேரரசுக்கு உட்பட்ட பகுதியாகவே திகழும். வேறு யாரும் ஆட்சியுரிமை கோர
முடியாது. அதே நேரம், சிறை வைக்கப்பட்டுள்ள கிளியோபாட்ரா தனது
குழந்தைகளுடன் இன்னும் 3 தினங்களில் ரோமாபுரிக்குக் கைதியாக அழைத்துச்
செல்லப்படுவார். இதுதான் அச்செய்தி!
.
ஆக்டேவியன் நல்லவனாக வேடம்
போட்டு, தன்னைப் பழி வாங்கப் பார்க்கிறான் என்பதைக் கணித்து விட்டாள்
கிளியோபாட்ரா. மீண்டும் ஆக்டேவியன் தன்னை நேரில் சந்திக்க வருவதை அறிந்த
அவள், அவனைத் தன்வயப்படுத்த மறுபடியும் பேரழகியாக அவதாரம் எடுத்தாள்.

அழகான
அந்தப் படுக்கையறையில் ஆக்டேவியனின் வருகைக்காகக் காத்திருந்தாள். அவன்
வந்ததும் தன்னுடன் இருந்த தோழியரை வெளியில் அனுப்பிவிட்டாள். அப்போது
ஆக்டேவியனும் அவளும் மாத்திரமே அந்த அறையில் இருந்தனர்.

ஆக்டேவியன்
தன்னருகில் வந்ததும் சட்டென்று எழுந்து வளைந்து நெளிந்து நின்றாள். அவளது
மேனியை மெல்லிய ஆடையொன்று மட்டுமே மறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.

ஆக்டேவியனின்
பார்வை தன் மேனியை மோகிக்கும் என்று எதிர்பார்த்த அவளுக்கு ஏமாற்றமே
மிஞ்சியது. போர்க்களத்தில் நிற்கும் மாவீரன் போல் விறைத்துக் கொண்டு
நின்றிருந்தான்.

அடுத்த நொடியே சட்டென்று அவனது காலில் விழுந்து
விட்டாள். அவள் விழுந்த வேகத்தில் அவளது மேலாடை சரிய… கிளியோபாட்ரா தன்
காலில் விழுவாள் என்று எதிர்பார்க்காத ஆக்டேவியன், சட்டென்று குனிந்து
அவளது அழகிய தோள்களைப் பிடித்துத் தூக்கினான். விலகிக் கிடந்த அவளது
மேலாடையை எவ்வித சலனமுமின்றி சரி செய்தான்.
"எகிப்து பேரரசியாரே...
எனது வளர்ப்புத் தந்தை ஜூலியஸ் சீஸரின் ஆசைக் காதலியாக இருந்தவர் நீங்கள்.
அவருக்குப் பிறகு ஆண்டனி உங்களுக்குப் பாதுகாப்பைத் தந்திருக்கலாம்.
இப்போது நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தவறானவை என்று கருதுகிறேன்".

"என்னிடம் அப்படியென்ன தவறைக் கண்டுபிடித்து விட்டீர்கள்?"

"தவறு செய்யத் துணிந்தவர்களுக்கு, அது என்ன தவறு என்று தெரியாமலா போய்விடும்?"

"நீங்கள் தவறு என்று சொல்வது உங்கள் பார்வையில்தான் இருக்கிறது. கண்களால் பார்க்கும் எதுவும் உண்மையாகி விடுவதில்லை".

"அது எனக்கும் தெரியும். ஆனால், இங்கு சற்று நேரத்திற்கு முன்பு நீங்கள் நடந்து கொண்டதைப் பார்த்தால்..."

"வேண்டாம்... இவளை கைது செய்துவிட்டபடியால் இவள் மீது என்ன வேண்டுமானாலும் குற்றம் சுமத்தலாம் என்று எண்ணாதீர்கள்".

"சரி...
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். என்னிடம் உதவி எதிர்பார்ப்பதாக நேற்றே
கூறியிருந்தீர்கள். இன்னும் சில தினங்களில் நான் ரோமாபுரிக்குத் திரும்ப
இருக்கிறேன். அதற்குள் உங்கள் வேண்டுகோளை என்னிடம் தெரிவித்தால், அதைச்
செய்ய தயாராக இருக்கிறேன்".

"எகிப்தின் ஆட்சியுரிமை எனக்கு
இல்லாவிட்டாலும்கூட, என் வாரிசுகளுக்காவது வழங்கப்பட வேண்டும். நானும்
எகிப்திலேயே வாழ ஆசைப்படுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் என்னை நீங்கள்
காட்சிப் பொருளாக பயன்படுத்தக்கூடாது".

"உங்கள் கோரிக்கைகள்
நியாயமானவைதான். அதுபற்றி நானே முடிவு எடுத்துவிட முடியாது. ரோம் செனட்
சபைதான் உறுதியான முடிவு எடுக்க வேண்டும்".

"அப்படியென்றால்,
என்னையும், கைதான எகிப்து வீரர்களையும் ரோமாபுரிக்குக் காட்சிப் பொருளாக
அழைத்துச் சென்று, உங்கள் வெற்றி விழாவைக் கொண்டாட இருப்பதாக நான் அறிந்த
தகவல் உண்மையா?"

"அது பற்றி நான் உங்களிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரம், நடக்க வேண்டியது தவறாமல் நடக்கும்".

"நீங்கள் உங்கள் முடிவில் உறுதியாக இருப்பது உங்களது உரிமை. அதே நேரம், எனது முடிவில் நானும் உறுதியாகத்தான் இருக்கிறேன்".

"அது உங்கள் இஷ்டம். அதில் எனக்கு கஷ்டம் இல்லை".

"நமது இந்தச் சந்திப்பு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்த்தேன். உங்களது பேச்சு எனக்கு ஏமாற்றத்தைத் தந்ததுதான் மிச்சம்".

"ஏமாற்றத்தைச் சந்திக்காதவர்கள் இந்த உலகில் இல்லையே..."

"உங்கள்
தத்துவம் போதும். இப்போது நீங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லலாம்..."
என்றாள் கிளியோபாட்ரா. அவளது பேச்சில் கோபம் தெறித்தது.

அடுத்த சில
நொடிகளில் அந்த இடத்தை வேகமாக காலி செய்திருந்தான் ஆக்டேவியன். தனது
லட்சியம் நிறைவேற அவன் தடையாக இருப்பான் என்று கணித்த கிளியோபாட்ரா, அந்த
அதிரடியான முடிவுக்கு வந்தாள்.

உலக வரலாறே எதிர்பார்க்காத தற்கொலைதான் அந்த முடிவு!
தற்கொலை செய்து கொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா,
ஆண்டனியை இறுதியாக ஒருமுறை பார்க்க விரும்பினாள். ஆம்! அவன் நிரந்தர
ஓய்வில் இருக்கும் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்த ஆசைப்பட்டாள்.

ஆக்டேவியனின் அனுமதியின் பேரில் ரோமானிய வீரர்களின் பாதுகாப்புடன் ஆண்டனியின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினாள்.

'ஆண்டனி...
உங்கள் பிரிவு என்னை நான் எதிர்பார்க்காத துயரத்தில் ஆழ்த்திவிட்டது.
எவையெல்லாம் நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ, அவை எல்லாம் இப்போது நடந்து
கொண்டிருக்கின்றன. நீங்கள் கூறியபடி அந்த ஆக்டேவியன் நல்லவனே இல்லை.
என்னைப் பழி வாங்கத் துடிக்கிறான். வெற்றி மமதையில் மிதக்கும் அவனிடம்
சிறைக் கைதியாக இருக்க எனக்கு மனமில்லை. அதனால் நானும் உங்களுடன் வரத்
துணிந்து விட்டேன். ஆம்...! நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்...'
என்று மனதிற்குள் வருந்தியபடி அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள்.

அன்று
அவள் தனது கடைசி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள். விருந்துக்குத்
தேவையான எல்லா உணவுகளும் தயாராகிவிட்ட நிலையில், அரண்மனைக்கு எகிப்தியன்
ஒருவன் வந்து சேர்ந்தான். அவனது தலையில் கூடை ஒன்றை சுமந்து
கொண்டிருந்தான்.

அவனைத் தடுத்து நிறுத்திய அரண்மனைக் காவலன் "யார்
நீ? உனக்கு இங்கே என்ன வேலை? நீ சுமந்து வரும் கூடையில் என்ன இருக்கிறது?"
என்று கேட்டான்.

"அய்யா... நான் எங்கள் அரசியைப் பார்க்க
வந்திருக்கிறேன். அவர் கேட்ட அத்திப்பழங்கள்தான் இந்தக் கூடையில் உள்ளன"
என்று பதில் சொன்னான் அந்த எகிப்தியன்.

அத்திப்பழம் வந்த விவரம்
கிளியோபாட்ராவுக்குத் தெரிவிக்கப்பட, அவள் அந்த பழங்கள் நிறைந்த கூடையைத்
தனது படுக்கையறையில் வைக்க உத்தரவிட்டாள். காவலனும் அவ்வாறே செய்துவிட்டு
அகன்றான்.

தற்கொலை செய்வது என்ற முடிவை உறுதியாக எடுத்துவிட்ட
கிளியோபாட்ரா, ஆக்டேவியனின் சிறைக்கைதியாக சாக விரும்பாமல், எகிப்து
பேரரசியாகவே இறக்க விரும்பினாள்.

தனது உயிர்த் தோழி இராஸை
அழைத்தாள். இராஸ்.. இங்கே வா. இந்த ஆக்டேவியனால் என் உயிருக்கு எப்போது
வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம். அதனால், எனக்கு கடைசி ஆசை ஒன்று
தோன்றுகிறது. இந்த நாட்டின் பேரரசிக்கான ஆடை அணிந்து, மணிமுடி தரித்து பல
நாட்கள் ஆகிவிட்டன. ஆக்டேவியனின் எகிப்து ஆக்கிரமிப்பும், ஆண்டனியின்
மறைவும் என்னை சோகமாக்கி உள்ளன. அதில் இருந்து விடுபட விரும்புகிறேன்.
அதனால் என்னைப் பேரரசியாக நீ அலங்காரம் செய்ய வேண்டும். இந்தக்
கிளியோபாட்ராவை வென்றவர்கள் யாரும் இல்லை என்று வரலாறு சொல்ல வேண்டும்
என்பதே எனது விருப்பம். இந்த அத்திப்பழங்களுக்குள் கொடிய விஷம் கொண்ட
நச்சுப் பாம்பு உள்ளது. எனது கடைசி ஆசையை அந்தப் பாம்புதான்
நிறைவேற்றப்போகிறது".


"அரசியாரே... கடைசி ஆசை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?"

"மரணம்!"

"என்ன சொல்கிறீர்கள் அரசியாரே...!! எகிப்தின் பேரரசியான நீங்கள் இப்படியொரு முடிவை ஏன் எடுக்க வேண்டும்-?"


"தயவு
செய்து உனது அறிவுரை இப்போது எனக்கு வேண்டாம் இராஸ். நீ எனக்கு ஏதேனும்
உதவுவதாக இருந்தால் என் உயிர் பிரியும் கடைசி நொடி வரை நான் இந்த நாட்டின்
பேரரசியாகவே இருக்க உதவி செய். அது போதும்.".

"உங்கள் உத்தரவுக்கு கட்டுப்படுகிறேன்".

".." என்ற

சற்றுநேரத்தில்
கிளியோபாட்ராவின் மற்றொரு தோழியான சார்மியான் அங்கே வந்தாள். "அரசியாரே...
தங்களின் விருப்பப்படி உயரிய விருந்து தயாராகிவிட்டது. மதிய வேளையாகி
விட்டதால் சாப்பிட வாருங்கள். பசிக்கு விடை கொடுப்போம்".

"நல்லது
சார்மியான். நீ எல்லா உணவுகளையும் தயாராக வைத்திரு. நான் மணிமுடி தரித்து
விருந்து உட்கொள்ள வருகிறேன்..." என்ற கிளியோபாட்ரா, அடுத்த நிமிடமே தனது
அறையைச் சென்றடைந்தாள்.

அவளுக்கு இராஸும், சார்மியானும் பட்டாடை
அணிவித்து மணிமுடியும் சூட்டினர். சில நாட்களாக கிளியோபாட்ராவிடம்
கோபித்துக் கொண்டு போய் இருந்த மகிழ்ச்சி மறுபடியும் அவளிடம் வந்து ஒட்டிக்
கொண்டது. சற்று நேரத்தில் தடபுடலாகத் தயாராகியிருந்த விருந்தில் கலந்து
கொண்டாள்.

கிளியோபாட்ரா தனக்குரிய இருக்கையில் அமர்ந்து கொள்ள...
அவளது தோழியர் இராஸ், சார்மியான் இருவரும் அவளுக்கு உணவு பரிமாறத்
தயாரானார்கள்.

சட்டென எழுந்தாள் கிளியோபாட்ரா. "என்னருமை தோழியரே
இராஸ், சார்மியான். இதுநாள் வரை நீங்கள்தான் எனக்கு உணவு பரிமாறி
இருக்கிறீர்கள். இன்று நான் உங்களுக்கு உணவு பரிமாறப் போகிறேன்".

"இல்லை அரசியாரே... வழக்கமாக நீங்கள் உணவு உட்கொண்ட பிறகுதானே நாங்கள் உண்போம்?" இருவரும் ஒரே குரலில் கேட்டார்கள்.

"அது
நேற்றுவரை. இன்று அந்த நிலைமை மாறுகிறது..." என்ற கிளியோபாட்ரா,
கட்டாயப்படுத்தி இராஸையும், சார்மியானையும் அமர வைத்து உணவு பரிமாறினாள்.

அங்கே காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஆக்டேவியனின் வீரர்கள் அதைக் கவனித்தனர். அந்தக் காட்சி அவர்களுக்கு வியப்பாகத் தெரிந்தது.

"அங்கே
நடப்பதைப் பார்த்தாயா...? இந்த நாட்டுக்கே அரசியாக இருந்தும், தனது
பணிப்பெண்களான தோழியருக்கு உதவி செய்யும் கிளியோபாட்ரா போன்ற பெண்ணை எந்த
உலகத்திலும் பார்க்க முடியாது" என்று கூறி வியந்தனர்.

இராஸும், சார்மியானும் சாப்பிட்டு முடித்த பிறகு கிளியோபாட்ரா சாப்பிட அமர்ந்தாள். வழக்கத்தைவிட அன்று கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாள்.

சிறிது
நேரத்தில் விருந்து முடிந்துவிட... நேராக தனது படுக்கையறைக்குள் சென்று
கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அவளை பீதியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்
இராஸ். அவளது கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் வடிந்தது.

சார்மியானுக்கு ஒன்றும் புரியவில்லை.

"இராஸ் உனக்கு என்ன ஆயிற்று? ஏன் திடீரென்று அழுகிறாய்? நம் அரசி உணவு பரிமாறிய ஆனந்தத்தில் பரவசப்படுகிறாயா?"

"இல்லை சார்மியான். இப்போது நம் முன்பு நடமாடிய நம் அரசியார் இனி நடமாட மாட்டார்".

"என்ன சொல்கிறாய் இராஸ்? ஏதோ விபரீதம் நடக்க இருப்பது போல் பேசுகிறாயே..."

கிளியோபாட்ராவின் மரணமுடிவைப் பற்றிக் கூறினாள் இராஸ். அதைக் கேட்ட மாத்திரத்தில் அதிர்ந்து போனாள் சார்மியான்.

கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுத்துவிட கடைசிக்கட்ட முயற்சியில் ஈடுபட்டாள்.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 Empty Re: பேரழகி கிளியோபாட்ரா !

Post by ரேவதி Thu Nov 10, 2011 4:09 pm

பலமாகப் பூட்டப்பட்டிருந்த கிளியோபாட்ராவின் அறையின்கதவை வேகமாகத் தட்டினாள் சார்மியான்.

"அரசியாரே...
நான்தான் சார்மியான். இப்போதுதான் நான் எல்லாவற்றையும் அறிந்தேன். தவறான
எந்த முடிவையும் எடுத்து விடாதீர்கள். தயவு செய்து கதவைத் திறந்து
விடுங்கள்..."

சார்மியான் போட்ட அலறலில் கிளியோபாட்ராவின் பாதுகாப்புக்கு நின்றிருந்த ஆக்டேவியனின் வீரர்கள் சிலர் அங்கே வந்துவிட்டனர்.

"இங்கே என்ன நடக்கிறது? ஏன் இப்படி கத்துகிறீர்கள்?"

"அய்யோ...
அது பற்றிப் பேச இப்போது நேரமில்லை. இந்தக் கதவை இப்போது உடையுங்கள். அதன்
பிறகு மற்றவற்றைக் கூறுகிறேன்" என்று சார்மியான் சொல்ல... ஏதோ விபரீதம்
நடப்பதை உணர்ந்த ஆக்டேவியனின் வீரர்கள் அசுர வேகத்தில் இயங்கி கதவை
உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கிளியோபாட்ராவின் படுக்கையறை என்பதால், அந்த அறையின் கதவு அழகாக மட்டுமின்றி மிகவும் பலமாகவும் இருந்தது.
கடுமையான முயற்சிகளுக்குப் பின், அந்தக் கதவை உடைத்துத் திறந்தனர்.

அப்போது
படுக்கையறைக்குள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. மின்னும்
தங்கம் பதிக்கப்பட்டிருந்த படுக்கையில் உயிருக்குப் போராடிக்
கொண்டிருந்தாள் கிளியோபாட்ரா. 'அஸ்ப்' என்ற கொடிய நச்சுப் பாம்பைத் தன்
மீது கடிக்க விட்டிருந்தாள்..

இதையறிந்த ஆக்டேவியனின் வீரர்கள்
ஆக்டேவியனிடம் நடந்த சம்பவத்தைக் கூற பதற்றத்தோடு ஓடினர். அவர்கள் வந்த
வேகத்தைப் பார்த்த ஆக்டேவியன், அலெக்ஸாண்டிரியா நகருக்குள் கடல்தான்
புகுந்து விட்டதோ என்று அஞ்சினான்.

"என்ன நடந்தது? ஏன் இவ்வளவு வேகமாக வருகிறீர்கள்?"

"அரசே! கிளியோபாட்ராவைப் பாம்பு கடித்துவிட்டது".

"என்ன
சொல்கிறீர்கள்? அவளது பாதுகாப்புக்குத்தானே நான் உங்களை அங்கு காவல்
பணியில் ஈடுபடச் சொன்னேன். பாம்பு அவளை கடிக்கும் வரை அங்கே வேடிக்கையா
பார்த்துக்கொண்டு இருந்தீர்கள்?" ஆக்டேவியனின் பேச்சில் கோபம்
கொந்தளித்திருந்தது.

"அப்படி இல்லை அரசே! அவளே தன் மீது பாம்பை விட்டு கடிக்கச் செய்துவிட்டாள்..."

"என்ன உளறுகிறீர்கள்?"

"உளறவில்லை அரசே! இதுதான் உண்மை. இதுதான் அங்கே நடந்தது".

"இதை
நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் இப்போதே அரண்மனை வைத்தியரை
அங்கே அழைத்துச் சென்று அவளது உயிரைக் காப்பாற்றி விடுங்கள். நான் சிறிது
நேரத்தில் அங்கே புறப்பட்டு வருகிறேன். கிளியோபாட்ரா உயிருக்கு ஏதேனும்
ஆபத்து ஏற்பட்டால் நான் உங்களை சும்மா விட மாட்டேன்.. ஜாக்கிரதை!"

ஆக்டேவியனின் அதிரடி உத்தரவை அடுத்து வேகமாக ஓடி அரண்மனை வைத்தியரின் வீட்டை சென்றடைந்தனர்.

நன்றாக
சாப்பிட்டு விட்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வைத்தியரை படாதபாடு பட்டு
எழுப்பி கிளியோபாட்ராவைக் காப்பாற்ற அழைத்துச் சென்றனர் வீரர்கள்.

அங்கே அவர்களுக்கு மேலும் அதிர்ச்ச காத்திருந்து.

கிளியோபாட்ரா
தங்கப் படுக்கையில் இறந்து கிடக்க... அவளது காலடியில் இராஸ் இறந்து
கிடந்தாள். இன்னொரு தோழியான சார்மியான், கிளியோபாட்ராவின் கடைசி ஆசையை
நிறைவேற்றும் வகையில் அவளது தலையில் மணிமுடி கிரீடத்தை தாங்கிப் பிடித்த
நிலையில் கிடந்தாள்.

அரண்மனை வைத்தியர் வேகமாக ஓடி வந்து
பரிசோதித்தபோது சார்மியானுக்கு மட்டும் உயிர் இருந்தது. ஆனால், அவளுக்கு
முதலுதவி செய்ய வைத்தியர் தயாராகும்போதே அவளும் இறந்து போனாள்.

அனைவரும் ஸ்தம்பித்து நிற்க, அடுத்த கட்ட ஆய்வில் கிளியோபாட்ரா ஆக்டேவியனுக்குத் தன் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது.

"இளைய சீஸருக்கு,
கிளியோபாட்ரா
எழுதும் கடைசிக் கடிதம். ஆண்டனியையும் இழந்து, சொந்த ராஜ்ஜியத்தையும்
இழந்து என்னால் வாழ முடியாது. அதனால், தற்கொலை செய்ய முடிவெடுத்து
இருக்கிறேன். என்னுடைய மறைவுக்குப் பிறகு எனது உடலை ஆண்டனியின் சமாதிக்கு
அருகில் அடக்கம் செய்யவும்.
இப்படிக்கு
கிளியோபாட்ரா"

கிளியோபாட்ராவும், அவளது தோழியர் இருவரும் தற்கொலை செய்து கொண்ட செய்தியை அறிந்த ஆக்டேவியன் பெரிதும் கவலை கொண்டான்.

'எகிப்தை
வெற்றி கொண்ட விழாவை ரோமாபுரியில் வெகு அமர்க்களமாக கொண்டாட வேண்டும்
என்று தீர்மானித்து இருந்தேனே... கடைசியில் இப்படி ஆகிவிட்டதே...' என்று
வருந்தினான்.

பின், அரண்மனை வைத்தியரிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டான்.

"அஸ்ப்
என்பது ஒருவகை நச்சுப் பாம்பு. அளவில் சிறிய இந்த பாம்பு கடித்து விட்டால்
போராட்டமில்லாமல் எளிதில் உயிர் பிரிந்து விடும். அதனால்தான் கிளியோபாட்ரா
இந்த பாம்பைத் தனது தற்கொலை முடிவுக்குப் பயன்படுத்தி இருக்கிறார். அவரது
வேண்டுகோளின் பேரிலேயே இந்தப் பாம்பு அரண்மனைக்கு அத்திப் பழங்கள் நிறைந்த
கூடையில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

...
முதலில் கிளியோபாட்ராவே, படுக்கையறைக் கதவைப் பூட்டிக் கொண்டு தன் மேனியில்
இந்த நச்சுப் பாம்பைக் கடிக்க விட்டிருக்கிறார். கதவை உடைத்துத் திறந்து
பார்த்த தங்களது வீரர்கள் பதற்றத்தில் நடந்த விவரத்தை தங்களிடம் தெரிவிக்க
வந்துவிட்டனர். அதேநேரம், தங்கள் அரசியின் தற்கொலை முடிவைத் தாங்க முடியாத
அவரது தோழியரான இராசும், சார்மியானும் அவருடனேயே அதே பாம்பை தங்கள் மீது
கடிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுதான் நடந்திருக்கிறது"
என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் அரண்மனை வைத்தியர்.

எகிப்து
பேரரசியாகவும், உலகப் பேரழகியாகவும் வலம் வந்த ஏழாம் கிளியோபாட்ராவின்
வாழ்க்கையோடு, எகிப்தின் டாலமி அரச வம்சத்தின் சகாப்தமும் நிறைவுக்கு
வந்தது. அப்போது அவளுக்கு வயது 39.

கிளியோபாட்ராவின் உயிர்
தியாகத்தைக் கண்டு பிரமித்த ஆக்டேவியன், அவள் விருப்பப்படியே ஆண்டனியின்
சமாதிக்கு அருகில் அவளது உடலை அடக்கம் செய்தான்.

கிளியோபாட்ராவுக்குப் பிறகு எகிப்தானது ரோமப் பேரரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

கிளியோபாட்ரா
மறைந்து 20 நூற்றாண்டுகள் கடந்து விட்டாலும், அவள் உலக மக்கள் மனங்களில்
இன்றும் உலகப் பேரழகியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இன்னமும் வாழ்வாள்...

பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 1772578765 முற்றும் பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 1772578765


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 Empty Re: பேரழகி கிளியோபாட்ரா !

Post by kitcha Thu Nov 10, 2011 4:15 pm

பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி ரேவதி, என்னிடம் கிளியோபாட்ரா கதை பாதி தான் இருந்தது, மீதி கதை இதிலிருந்து எடுத்து(திருடிக்) கொள்கிறேன்.

பெரிய கட்டுரை அதனால் மிகப் பெரிய நன்றி பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 Empty Re: பேரழகி கிளியோபாட்ரா !

Post by dhilipdsp Thu Nov 10, 2011 7:15 pm

போதும் தெரியாம வந்துட்டேன்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 Empty Re: பேரழகி கிளியோபாட்ரா !

Post by ரேவதி Fri Nov 11, 2011 12:18 pm

kitcha wrote:பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி ரேவதி, என்னிடம் கிளியோபாட்ரா கதை பாதி தான் இருந்தது, மீதி கதை இதிலிருந்து எடுத்து(திருடிக்) கொள்கிறேன்.

பெரிய கட்டுரை அதனால் மிகப் பெரிய நன்றி பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642
உங்களுக்கும் நன்றிகள் பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 154550 பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 154550


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 Empty Re: பேரழகி கிளியோபாட்ரா !

Post by ரேவதி Fri Nov 11, 2011 12:23 pm

இளமாறன் wrote:கிளி மூக்கு கிளியோபாத்ரா உண்மையில் அழகு இல்லாதவர் என்று கேள்விப்ட்டிருக்கிறேன் இலக்கியங்களில் மட்டுமே அவர் அழகானவர் என்றும் சொல்லி இருக்கிறார்கள்

பகிர்ந்தமைக்கு நன்றி ரேவதி பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642 பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 154550
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642 பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642 பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 154550


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 Empty Re: பேரழகி கிளியோபாட்ரா !

Post by ரேவதி Fri Nov 11, 2011 12:25 pm

dhilipdsp wrote:போதும் தெரியாம வந்துட்டேன்
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 678642 பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 154550


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பேரழகி கிளியோபாட்ரா ! - Page 4 Empty Re: பேரழகி கிளியோபாட்ரா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum