புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_m10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10 
70 Posts - 53%
heezulia
பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_m10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_m10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_m10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_m10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_m10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_m10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_m10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_m10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_m10பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 08, 2011 8:09 pm

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டே
இருக்கிறது. அப்படியென்றால் உலக மார்க் கெட்டில் கச்சா எண்ணெய்யின் விலை
எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால்,
அதுவும் இல்லை.

2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண் ணெய்யின்
விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 54
ஆகத்தான் இருந்தது. தற்போது (5.11.11) ஒரு பீப்பாயின் விலை 108 டாலர்.
அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும்.
இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் ரூ.33.28
தான். ஆனால் நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 72.68 பைசா.
ஏன் இந்த மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்?

எப்படி விலை நிர்ணயிக்கப்படுகிறது?

பெட்ரோலை
உற்பத்தி செய்ய 90 சத விகிதம் கச்சா எண்ணெய்யும், 10 சதவிகிதம்
உள்நாட்டில் தயாராகும் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு லிட்டர்
பெட்ரோல் உற்பத்திக்கு, கச்சா எண்ணெய்க்கும் சேர்த்து ஆகும் செலவு 2008- 09
ம் ஆண்டு புள்ளி விபரப்படி ரூ 26.11 ஆகும். 2009- 10ம் ஆண்டு ரூ. 21.75
என்று அரசின் புள்ளி விபரங்களே உறுதிப்படுத்துகிறது. ஆனால் மத்தியஅரசு
எப்படியெல்லாம் வரியை கூட்ட முடியுமோ அப்படி கூட்டி, பெட்ரோலின் விலையை
உயர்த்துகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் அடங்கியுள்ள வரியினங்கள்
வருமாறு (24.8.2011)

ஆதார விலை - ரூ. 24.23

சுங்கத்தீர்வை - ரூ. 14.35

கல்விவரி - ரூ. 0.43

விற்பனையாளர் கமிஷன் - ரூ. 1.05

சுத்திகரிப்பு செலவு - ரூ 0.52

சுத்திகரிப்பு விலையின்

மூலதனச்செலவு - ரூ. 6.00

மதிப்புக்கூட்டு வரி - ரூ. 5. 50

கச்சா எண்ணெய் சுங்கவரி- ரூ. 1.10

பெட்ரோல் சுங்கவரி - ரூ. 1. 54

சரக்கு போக்குவரத்து செலவு- ரூ. 6.00

மொத்தம் - ரூ. 60.72

இப்படித்தான்
தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல் பெட்ரோல் விலையில் பாதிக் கும் மேல்
வரி இனங்களாக வசூலிக்கப்படுகின்றன. இது தவிர எண்ணெய் நிறுவனங் களின் கொள்ளை
லாப கணக்கே... தனி.

அரசுக்கு நஷ்டமா?

பெட்ரோலியத்துறை
அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு கொடுத்துள்ள அறிக்கையின்படி 2004 -
05ம் ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் மத்திய அரசுக்கு
கிடைத்த வரி வருமானம் 77 ஆயிரத்து 692 கோடி ரூபாய், சுங்கவரி மூலம் ரூ. 15
ஆயிரம் 483 கோடி ஆகும். மாநில அரசு களுக்கு கிடைத்த வரி வருமானம் 43,254
கோடி ரூபாய்.

இதே போல் 2006- 07 முதல் 2009 -10ம் நிதியாண்டு வரை
பெட்ரோலியப் பொருட்களின் வரி முலம் மத்திய அரசுக்கு கிடைத் திருக்கும்
வருவாய் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ஆகும். மாநில அரசுகளுக்கு
கிடைத்திருக்கும் வருவாய் ரூ.2லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடி. ஆனால் இதே
காலத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ. 23
ஆயிரத்து 325 கோடி மட்டுமே. ஆக பெட்ரோலிய பொருட்களின் மூலம் மத்திய-மாநில
அரசுகளுக்கு கிடைக்கும் லாபத்தில் இருந்து வெறும் 3.45 சதவிகிதம்தான்
மானியமாக வழங்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அரசுக்கு வருவாயே தவிர
எவ்வித நஷ்டமும் இல்லை என்பதுதான் உண்மை.

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமடைகின்றனவா?

பிரதமர்
மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் பெரும்
நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என வாய் வலிக்காமல் கூறிவருகின்றனர். அப்படி
என்னதான் நஷ்டம் அடைகின்றன. அதன் விபரத்தை கீழ்க்காணும் பட்டியலில்
பார்த்தாலே மன்மோகன், மாண்டேக்சிங் அலுவாலியா வகையறாவின் வருத்தம்
புரியும்.

2008ம் ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின்
நிகரலாபம் ரூ.6962.58 கோடி, 2009 ல் ரூ. 2,949.55 கோடி, 2010 ல் ரூ.
10,220.55 கோடி. இதில் இன்னும் கவனமாக பார்த்தால் பெட்ரோலிய பொருட் களின்
விலை நிர்ணயிக்கும் உரிமை அரசின் கையில் இருந்த வரை அடைந்திருக்கும்
லாபத்தை விட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்யத் துவங்கிய பின்பு
அடைந்திருக்கும் லாபம் அதிகம். 2010- 11 ன் இரண்டாம் காலாண்டில் மட்டும் (
2010 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ) எண்ணெய்
நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தை பார்ப்போம்.

நிகரலாபம் அரசுக்கு செலுத்திய வரி மொத்த லாபம்
(கோடியில்) (கோடியில்) (கோடியில்)

ஐஒசி 5294 .00 832.27 6126.27
எச்பிசிஎல் 2142.22 90.90 2233.12
பிபிசிஎல் 2142.22 198.00 2340.22

உண்மை
நிலை இவ்வாறிருக்க, எந்த அடிப்படையில் காங்கிரஸ், திமுக தலைமையிலான
ஆட்சியாளர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் என கூறுகின்றனர் எனத்
தெரியவில்லை. அதாவது லாபத்தின் இலக்கில் சிறிய குறைவு ஏற்பட்டாலும் அதனை
மத்திய அரசு அவர்களுக்கான நஷ்டமாக பார்க்கிறது என்பது மட்டும் தெளிவாக
புரிகிறது.

ஏற்றுமதிக்கு ஏன் வரி விலக்கு ?

2010-
11 ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரத்து 781 கோடி
ரூபாய்க்கு பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்று
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின்
பெட்ரோலிய பொருட்கள் தேவையில் 79 சதவிகிதம் இறக்குமதியை சார்ந்தே
இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரி
பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்?. இந்தியாவின் கச்சா எண்ணெய்
சுத்திகரிக்கும் பணியை அரசு நிறுவனங்களே 74 சத விகிதம் செய்கிறது. மீதமுள்ள
26 சதவிகித சுத்திகரிப்பு பணியை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து வருகிறது.
அப்படி சுத்திகரிப்பு செய்யும் பெட்ரோலியப் பொருட்களை ரிலையன்ஸ் நிறுவனம்
59 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிலேயே பெட்ரோலிய பொருட்களுக்கு
நல்ல லாபம் கிடைக்கும் போது ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும்? அதற்கும் காரணம்
இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு பல்வேறு
சுங்க வரி சலுகைகளை அளித்திருக்கிறது. அத னையும் ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ்
நிறுவனமே அமுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் “நல்லெண்ணமே” இதற்கு காரணம்.

இதனை
கண்டறிந்த நாடாளுமன்ற நிலைக்குழு, “சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப்
பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே
போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச்சலுகைகளை அளிக்க
வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வருமானத்தை,
உள்நாட்டு மக்கள் பலன் அடையும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக்
குறைக்கப் பயன்படுத்தலாம்” எனப் பரிந்துரை செய்தது. ஆனால் மன்மோகன் அரசு,
அதெல்லாம் முடியவே முடியாது என்று கூறிவிட்டது.

அதே நேரம் இதே
மன்மோகன்சிங்,ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கும்,
சமையல்எரிவாயுவிற்கும் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என
தொடர்ந்து கூறி வருகிறார். இதுதான் மன் மோகன் வகையறாவின் வர்க்கப்பாசம்
என்பது.

இது யாருக்கான அரசு?

எப்போது
பார்த்தாலும் விவசாயத்திற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும்.
ரேசன் பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய
பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சாரதிற்கு
அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என சாதராண மக்களுக்கு கிடைக்கும்
ஒரு சில சலுகைகளையும் வெட்டுவதிலேயே மத்திய காங்கிரஸ் அரசு குறியாக
இருந்து வருகிறது.

ஆனால் மறுபுறம், நாட்டின் பெரும்
முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கி
வருகிறது. 2008 முதல் 2010 ம் ஆண்டு வரை பெரும் நிறுவனங்களிடம் இருந்து
அரசு வசூலிக்க வேண்டிய ரூ. 9 லட்சத்து 16 ஆயிரம் கோடியை அப்படியே
விட்டுவிட்டனர். உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களை
ஊக்குவிக்கிறோம் என்று கூறி, 2008-09ஆம் ஆண்டில் 66 ஆயிரத்து 901 கோடி
ரூபாயும், 2009-10ஆம் ஆண்டில் 79 ஆயிரத்து 554 கோடி ரூபாயும் நேரடி
வரிகளில் சலுகைகள் அளிக்கப்பட்டது. இதே போன்று மிக உயர்ந்த அளவில்
வருமானவரி செலுத்துவோருக்கு, 37 ஆயிரத்து 570 கோடி ரூபாயும், 40 ஆயிரத்து
929 கோடி ரூபாயும் முறையே வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டி ருக்கிறது. இவ்வாறு
இரண்டு ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி
ரூபாய் அளவிற்கு சலுகைகள் அளித்திருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில்
தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற பெயரில் ஏழைகளை மேலும்
ஏழைகளாக்குவது, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குவது என்று இந்திய
சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வை மத்திய அரசே உருவாக்கி வருகிறது. ஆக,
மத்திய ஆட்சியாளர்கள் பின்பற்றும் உலகமயக் கொள்கையையும் எதிர்த்து
முறியடித்தால் மட்டுமே சாதாரண,நடுத்தர, உழைப்பாளி மக்கள் வாழ்ந்திட
முடியும்.





இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் 1357389பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் 59010615பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Images3ijfபெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக