ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு

2 posters

Go down

பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Empty பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு

Post by சிவா Tue Nov 08, 2011 1:56 pm

பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Tamil_News_large_345125

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால், நேற்று பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 15 நாட்களாக பெய்து வரும் மழையில், நேற்று அதிகாலை 3 முதல், 6 மணி வரை மிக அதிகமாக மழை பதிவானது.நேற்று காலை 6.30 மணிக்கு, கரூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த, "எம்.பி.,' என்ற தனியார் பஸ், சாவடிப்பாளையம் அருகே வந்த போது, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. 60க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக இறங்கி, வெள்ளம் இல்லாத பகுதிக்கு வந்தனர். பின், பஸ் மெதுவாக நகர்த்தப்பட்டு, ஈரோடு சென்றது. காலை 8 மணி வரை கார், வேன், டூவீலர்கள் அவ்வழியே அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே நிரம்பியுள்ள கோபி, குண்டேரிப்பள்ளம் அணைக்கு, நேற்று காலை அதிகளவு நீர் வந்ததால், 3,000 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேறியது. பவானியில், 60 ஏக்கர் பரப்பளவுள்ள காடையம்பட்டி ஏரி, நேற்று நிரம்பி வழிந்தது.

சாத்தனூர் அணை நிரம்பியது: கர்நாடக மாநிலம் நந்திதுர்கா மலைப்பகுதியில் உருவாகும் தென்பெண்ணையின் குறுக்கே, தமிழக எல்லையான கிருஷ்ணகிரியில் கே.ஆர்.பி., அணை உள்ளது. இது கடந்த மாதம் நிரம்பியதால், அங்கிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் முழுவதும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள சாத்தனூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால், அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது.மொத்தம் 118 அடி உயரமுள்ள அணையின் தற்போதைய நீர்மட்டம் 104.5 அடியாக உயர்ந்துள்ளது.

வீடுகள் இடிந்தன: கோவை, மேட்டுப்பாளையத்தில் கடந்த 15 நாட்களாக பெய்த கன மழையால், 14 வீடுகள் இடிந்தன; இடி தாக்கி ஒரு வீடு சேதமடைந்தது.சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் 6 வீடுகளும், தேக்கம்பட்டியில் 5, காரமடை நகரில் 2, சிறுமுகையில் ஒரு வீடு என மொத்தம் 14 வீடுகள் சேதமடைந்தன. சூலூரில் 2 வீடுகள் இடிந்தன. அன்னூரில் 2 வீடுகள் இடிந்தன.

பள்ளி சிறுவன் சாவு:
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலை நொச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் அருண், 8; அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம், நொச்சிமேடு ஆற்றில் அருண் குளிக்கச் சென்றபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். இந்நிலையில் நேற்று காலை, நொச்சிமேடு அருகே சிறுவன் உடல் ஆற்றில் மிதந்தது. உடலை, போலீசார் மீட்டனர். திருவெண்ணெய்நல்லூரில் மூன்று வயது சிறுமி, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

கோவையிலும் வெள்ளம்: கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மழை பெய்யத் துவங்கியது. பலத்த இடி, மின்னல், காற்றுடன் பெய்த பெருமழை, அதிகாலை 3 மணி வரை, இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது. கோவை மாவட்ட மக்கள் பலர், இதற்கு முன் பார்த்திராத, கேட்டிராத வகையில் மழையின் வேகம் இருந்தது.சூலூர் அருகே பள்ளப்பாளையத்தில் கனமழை காரணமாக, 5 வீடுகள் இடிந்து விழுந்தன. சிங்காநல்லூர், சுங்கம், சோபா நகர், ராமநாதபுரம் நேதாஜி நகர், குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய், மேட்டுப்பாளையம் ரோடு சேர்மன் நகர், நஞ்சுண்டாபுரம் பார்சன் அபார்ட்மென்ட் உள்ளிட்ட குடியிருப்புகளில், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உணவு, தங்கும் வசதிகளை, வருவாய்த்துறையினர் செய்திருந்தனர். அமைச்சர் வேலுமணி, கலெக்டர், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் இணைந்து, நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

கோவை மாநகரில், அவினாசி ரோடு மேம்பாலம், உக்கடம் உள்ளிட்ட இடங்களில் தேங்கிய மழை நீர் காரணமாக, நேற்று பகல் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூரில் கன மழை: அருவிகளில் வெள்ளம் : குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டி தீர்க்கும் மழைக்கு, குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் உள்ள அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாளாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, விடிய, விடிய பெய்தது. குன்னூரில் 75.6 மி.மீ., பர்லியாரில் 67, கேத்தி 16, ஹில்குரோவ் பகுதியில் 95 மி.மீ., மழை பதிவானது. நகரின் மையத்தில் ஓடும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையின் இடையே உள்ள லாஸ் நீர்வீழ்ச்சி உட்பட ஆங்காங்கே தென்படும் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது.ஹில்குரோவ் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு, ரயில் தண்டவாளத்தின் மீது மண், சேறு, சகதி குவிந்தது. காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு குன்னூர் நோக்கி வந்த மலை ரயில் ஹில்குரோவ் பகுதியில் நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர தாமதத்திற்கு பின், ரயில் குன்னூர் நோக்கி வந்தது.பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள ஆற்றின் ஓரத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன; ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதற்கான வாய்ப்புள்ளது.

வினாடிக்கு 4,000 கன அடி நீர்வரத்து:வைகையில் 3ம் வெள்ள எச்சரிக்கை: பாதுகாப்பு கருதி அணையில் நீர் திறப்பு வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.தொடர் மழையால் தேனி மாவட்டம், வைகை அணைக்கு போடி கொட்டக்குடி, தேனி முல்லை, வருஷநாடு ஆறுகளில் இருந்து, தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் நேற்று, 69 அடியானது. (மொத்த உயரம் 71 அடி). நீர்வரத்து வினாடிக்கு, 4,000 கன அடியாக இருந்தது.இதையடுத்து, பொதுப்பணித் துறை சார்பில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டு, 3ம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு, 3,037 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு:

கலெக்டர் பழனிசாமி கூறியதாவது:
அணையில் இருந்து கூடுதலான நீர் திறக்கப்படலாம் என்பதால், கரைப் பகுதியில் உள்ள பொதுமக்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுப்பணி, உள்ளாட்சி, வருவாய், போலீஸ் துறை இணைந்து கரையோரப் பகுதி மக்களுக்கு, வெள்ள பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.

வைகை வெள்ளத்தில்தரைப்பாலங்கள் மூழ்கின : வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால், மதுரையில் தரைப்பாலங்கள் மூழ்கின.வைகை அணையில் இருந்து 3,037 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை மதுரையில் தரைப்பாலங்கள் மூழ்கியதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அதிகாரி செழியன் தலைமையில் வீரர்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டனர். கரைகளில் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆற்றில் சிக்கிய மூன்று குதிரைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீர்வரத்து 5,882 கன அடி. அணை நீர்மட்டம் 69 அடி (மொத்த கொள்ளளவு 71 அடி).பெரியாறு அணை நீர்மட்டம் 131.20 அடி, நீர்வரத்து 2,606 கன அடி, நீர் வெளியேற்றம் 790 கன அடி.

தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:""தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,'' என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை, கடந்த மாதம் 24ம் தேதி துவங்கி, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான மாவட்டங்களில் கொட்டியது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில நாட்கள் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், சாலைகள், தாழ்வான பகுதிகள் வெள்ளக் காடாகின. மழைவிட்டு இரண்டு நாட்களாகியும், சென்னை புறநகர் பகுதியில் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில், பருவமழை பெய்து வருகிறது. சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அதிகபட்சமாக, கொள்ளிடம், பொள்ளாச்சியில், 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல இடங்களில் கனமழையும், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்று, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி மேலும் கூறும்போது, "இந்த சீசனில் முதல் கட்டமாக, கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழையை விட, 29 சதவீதமும், சென்னை மண்டலத்தில் (நூறு கிலோ மீட்டர்)கிடைக்க வேண்டிய மழையை விட, 22 சதவீதமும் கூடுதலாக மழை பெய்துள்ளது' என்றார்.

தினமலர்


பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Empty Re: பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு

Post by சிவா Tue Nov 08, 2011 1:57 pm

மரண பயத்தில் தற்காலிக வீடுகளில் வசிக்கும் மக்கள்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்புகளின் போது, தற்காலிக வீடுகளில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு, இதுவரை நிரந்தர வீடுகள் கிடைக்கவில்லை; தற்போது அந்த குடியிருப்புகளும் பழுதடைந்து இடியும் அபாயத்தில் உள்ளதால் மக்களிடையே "மரணபயம்' ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 2009 ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை பெய்த கனமழையால், 51 பேர் பலியாயினர்; லவ்டேல் சந்திப்பு, தலையாட்டுமந்து பகுதிகளில் 60 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. தவிர, 1,900 வீடுகள் பாதிக்கப்பட்டன. இவர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் 50 தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டன. நீலகிரியில் வீடிழந்தவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்ட, 59 கோடி ரூபாய்க்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் மூலம் முன்மொழிவு அனுப்பப்பட்டது. மொத்தம் 1,968 வீடுகள், தலா 3 லட்சம் மதிப்பில் கட்டப்படும் எனவும் மாநில அரசு உறுதியளித்தது. பட்டியலும் தயார் செய்யப்பட்டது. இச்சம்பவம் நடைபெற்று நாளையுடன் (9ம் தேதி) 2 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ஆனால், 6 மாதங்கள் வசிக்கும் தரத்துடன் மட்டுமே கட்டப்பட்ட, வீடுகளில் 2 ஆண்டுகள் வசித்த மக்களுக்கு மீண்டும்"மரண பீதி' ஏற்பட்டுள்ளது. ஊட்டி, கேத்தி, மந்தாடா, தலையாட்டி மந்து உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக நள்ளிரவில் கன மழை பெய்து வருவதால், அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ள மக்கள் இரவில் உறங்காமல், பச்சிளம் குழந்தைகளுடன் அவதிப்பட்டு வருகின்றனர்.

10 அடிக்கு 10 அடி உள்ள ஒரே அறையில் 5க்கும் மேற்பட்டவர்கள் வசித்து, அனைத்து விதமான குடும்ப பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய அவலமும் தொடர்கிறது."நிரந்தர வீடு கட்டித்தருவதாக கூறி, தி.மு.க., அரசும், அரசு அதிகாரிகளும் தங்களை நிற்கதியாக விட்டு விட்டனர். அ.தி.மு.க., அரசாவது தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் குமுறலாக உள்ளது.அப்பகுதியில் வசிக்கும் ஜீனத், வேலன், ஜெயகுமார் ஆகியோர் கூறியதாவது: இரவில் பெய்யும் கனமழையின் போது, நாங்கள் வீட்டிற்குள் செல்வதில்லை. "ஹாலோ பிளாக்' கற்களில் கட்டப்பட்ட வீடு ஓழுகுவதால், மிகவும் பலவீனமாக உள்ளது. குழந்தைகளை வைத்து கொண்டு மிகவும் அவதிப்படுகிறோம். கழிப்பிடம், நடைபாதை போன்ற வசதிகளும் போதிய அளவில் இல்லை. எனவே, எங்கள் நிலையை மாநில அரசு உணர்ந்து வட கிழக்கு பருவமழை தீவிர மடையும் முன்பு எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.


பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Empty Re: பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு

Post by உமா Tue Nov 08, 2011 2:40 pm

வேதனையான செய்திகள்.இன்னும் மழை வந்தால் என்ன நிலையோ. பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு 440806 மக்கள் மிகவும் சிரமம் கொள்கின்றனர்.
பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு 440806



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு Empty Re: பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum