ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்

+10
kirikasan
aathma
ஜாஹீதாபானு
பிஜிராமன்
அருண்
ஹிஷாலீ
இளமாறன்
சிவா
உமா
அனந்தம் ஜீவ்னி
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Empty தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்

Post by அனந்தம் ஜீவ்னி Mon Nov 07, 2011 6:33 pm

First topic message reminder :

பிரியத்திற்குரிய இதயங்களே!

எனது இயற்பெயர் ஜீவானந்தம்.
புனைபெயர் அனந்தம் ஜீவ்னி.
இலக்கியத்தில் ஆர்வம் எப்போது வந்ததென சொல்லமுடியாது.என்னுடைய 17 வது வயதிலிருந்து பாக்யா போன்ற இதழ்களில் எனது சிலக் கவிதைகள் பிரசுரம் பெற்றன.21 வது வயதில் எனது முதல் கவிதை தொகுப்பு " கடைசி இரவின் நடு ஜாமத்தில்..."வெளிவந்தது..(அதுதான் கடைசி தொகுப்பும் கூட)
தீவிரமான இலக்கிய நாட்டம் வாழ்வின் சில ஆண்டுகளை கபளீகரம் செய்தன.கணையாழி, காலச்சுவடு என்றும்,தி.ஜானகிராமன்.சுந்தர ராமசாமி ,பிரமிள்,என்றும் ...இன்னும் எத்தனையோ பெயர்களோடும் புத்தகங்களோடும்...தாகம் தாகமென அலைந்த பொழுதுகள் அவை.

+2 படிக்கும் போது ஓஷோவின்" உண்மையை தேடவேண்டியதில்லை" என்னும் புத்தகம் படித்தேன்.ஜென் தத்துவங்களை விளக்கும் அந்த புத்தகம் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.அதற்கு பிறகுதான் வாழ்வை தேட ஆரம்பித்தேன்(என்ன கொடுமை சார் இது).
தன்னை அறிதல் ஞானமடைதல் போன்ற விஷயங்களில் மனம் பெரும் விருப்பத்துடன் செல்லத் தொடங்கியவுடன் தானாகவே இலக்கியத்தில் ஆர்வம் மங்கத் தொடங்கியது.இலக்கியச் செயல்பாடுகளும் கூட நுண்மையான அகங்காரத்தின் வெளிப்பாடுகளே என்பதால் அகங்காரமற்ற, விருப்பத்தேர்வுகள் அற்ற தியான நிலையின் மீது விருப்பமுற்று ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ரமணர்,வள்ளலார்,யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி,என பயணமும் தேடலும் நீண்டது... இன்னும் நீள்கிறது.....

எத்தனையோ அனுபவங்கள்,வேலைகளுக்கு பிறகு சில மாதங்களாய் ஆன்லைன் வர்த்தகம்(இது எத்தனை நாளைக்கென தெரியவில்லை).
இதனால் வலைப் பூக்கள் சார்ந்த அறிமுகம் ஏற்பட்டது.ஈகரையின் அறிமுகமும் .
நான் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த காலத்தில் கிறுக்கி வைத்திருந்த நோட்டு புத்தகங்களை மறுபடியும் தூசு தட்டினேன்.அக் கவிதைகளை 3 பிரிவுகளாக பிரித்தேன்
ஆரம்பகால கத்துக்குட்டி கவிதைகள்(கிறுக்கல்கள்)
நடுத்தர கவிதைகள்(கிறுக்கல்கள்)
சமீபத்திய கவிதைகள்(கிறுக்கல்கள்)

என்னுடைய சமீபத்திய கவிதைகள் ஒரு வகையில் மிக சிக்கலான கருப்பொளுடன்,ஆழ்ந்த மௌனம் மற்றும் தியான நிலைகள் சார்ந்து வெளிப்பாடு கொள்பவைகளாக இருக்கக் கூடும்.அவற்றை [You must be registered and logged in to see this link.]
என்னும் வலைப்பூவில் பதிவேற்றி வருகிறேன்.
நடுத்தரமானவற்றை சில சிறிய மாற்றங்களுடன் [You must be registered and logged in to see this link.]
என்னும் வலைப்பூவில் பதிவேற்றி வருகிறேன்.ஒருவேளை யாரேனும் படித்து ரசிக்க கூடும் என.
உதாரணமாக ஈகைரையில் வெளியான "என் தமிழனே" என்னும் கவிதை பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டதாகும். முள்ளிவாய்க்கால் தொடர்பான அதன் கடைசி சில பத்திகள் மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டது. தமிழனின் அவலம் உரைக்கும் அந்த வரிகள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பின்பு படித்தாலும் பொருந்தும் படி தோன்றுவது தமிழனின் மீதான் சாபமாகத்தான் இருக்க வேண்டும்.

அதே போல் இன்று பதிவிட்ட "பிரிவை நம்மிலிருந்து பிரிக்கவே முடியாதா?"என்னும் கவிதையும் கூட சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட என் ஆரம்பகால கிறுக்கலே ஆகும்.(சமர்ப்பணம் மட்டும்தான் இன்று எழுதினேன்)

வாய்ப்பும் அருளும் இருப்பின் ஈகரையில் எப்போதாவது எதையாவது நான் பகிரக் கூடும்
அவ்வளவுதான் நண்பர்களே ! இப்படியாக போகிறது வாழ்வு.
தென்பெண்ணை கரையோரம் ஒரு அழகிய கிராமத்தில் எளிய மனிதனாய் ...தென்னம் ஓலைகளின் அசைவோடும்,நதியலைகளின் மௌனத்தோடும்,
மிக நீண்ட இரவுகளின் தனிமையை நனைத்துப் பரவும் யாழிசையாய் நானும் என் கவிதைகளும்....
..
சொல்வதற்கு எவ்வளவோ இருந்தாலும் இந்த சின்ன அறிமுகக் குறிப்பு(!) போதுமென்றே நினைக்கிறேன்.இதற்கு மேலும் தொடர்ந்தால் அவ்வளவுதான்.இப்பவே உமாவுக்கு
தலை லேசாக கிறுகிறுத்து விட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.(ஒரு அறிமுக குறிப்பு கேட்டதற்கு இப்படியா அறுத்தெடுக்கிறது?)
நன்றி!
அன்புடன்....
அனந்தம் ஜீவ்னி.


Last edited by anandham jiivni on Fri Nov 18, 2011 10:24 pm; edited 3 times in total


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down


தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Empty Re: தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்

Post by அனந்தம் ஜீவ்னி Fri Nov 18, 2011 6:49 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னும் முப்பது வயதுகூட முடியவில்லை ...அதற்க்குள் ....."ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ரமணர்,வள்ளலார்,யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி"...ஹூம்...பிஞ்சிலே பழுத்து விட்டீரோ என்று எண்ணத் தோன்றுகிறது. சரி ...அது போகட்டும்...நீங்கள் ஈகரைக்கு வந்ததில் பெருமகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]


["பிஞ்சிலே பழுத்தது"-என்கிற உதாரணம் மோசமானவைகளுக்கு தானே உதாரணமாய் சொல்வார்கள்.அதாவது சின்ன பசங்கள் "தம்" அடிப்பது உள்ளிட்ட இத்யாதி விஷங்களில் ஈடுபடும் போது..
வாழ்வை பற்றிய அடிப்படையான கேள்விகளும்,புரிந்துக் கொள்ளுதலும்,விழிப்புணர்வும் இளம் வயதிலிருந்தே இருப்பதுதானே சரியானது.முற்றாத இளம் மூங்கில்கள் தானே புல்லாங்குழலாய் பரிணமிக்க முடியும்?அத்தகைய புல்லாங்குழல்கள் தானே இனிய கானங்களை பிரசவிக்க முடியும்?]

சரி விடுங்கள்..விஷயத்துக்கு வருவோம்....

நான் இன்னும் பழுக்கவேயில்லை ஐயா
பூரண கனிவே எனது பிரார்த்தனை
இவ்வளவு வாயதாகிவிட்டதே இன்னும் பூரணத்தின் ருசி அறிந்திட வாய்க்கவில்லயே என்பதுதான் இடையறாத எனது விசனப்பாடு.
கனிவை அடைய நினைப்பதுதான் ,கனிவுக்கான விருப்பமும்,ஏக்கமும்தான்,கனிவுக்கான முதல் தடையே என்கிறார்கள் தன்னை உணர்ந்த பெரியோர்கள்.
விரும்பினாலும் தவறு...விரும்பாவிட்டாலோ அதைவிட தவறு..பின்ன என்னதான் செய்வது?
"மத்திம் நிகாயா"என்கிறார் புத்தர்...எதையும் தேர்வு செய்யாமல் மத்தியில் நிக்க வேண்டுமாம்....கடவுளே!....

உபதேச உந்தியார் என்கிற நூலில் ரமணர் சொல்கிறார்...

"வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்ந்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற."

" The fruit of actions passes
But action leaves behind
seed of further action
Leading to an ocean of actions;
Not at all to Moksha."


-இப்படியாக ஐயா வினைக்கடலில் தத்தளிக்கும் மீச்சிறு ஜீவன் நான்.
பெரியோர்களின் நல்லாசிகளே பற்றுகோலாய் இருக்க முடியும்.

மற்றபடி....தங்களின் வரவேற்பை சிரம் தாழ்த்தியேற்கிறேன்-நன்றி பல கூறி ,நெகிழும் நெஞ்சத்தோடு. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Empty Re: தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்

Post by அனந்தம் ஜீவ்னி Fri Nov 18, 2011 6:51 pm

anandham jiivni wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னும் முப்பது வயதுகூட முடியவில்லை ...அதற்க்குள் ....."ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ரமணர்,வள்ளலார்,யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி"...ஹூம்...பிஞ்சிலே பழுத்து விட்டீரோ என்று எண்ணத் தோன்றுகிறது. சரி ...அது போகட்டும்...நீங்கள் ஈகரைக்கு வந்ததில் பெருமகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]


["பிஞ்சிலே பழுத்தது"-என்று மோசமானவைகளுக்கு தானே உதாரணமாய் சொல்வார்கள்.அதாவது சின்ன பசங்கள் "தம்" அடிப்பது உள்ளிட்ட இத்யாதி விஷயங்களில் ஈடுபடும் போது..
வாழ்வை பற்றிய அடிப்படையான கேள்விகளும்,புரிந்துக் கொள்ளுதலும்,விழிப்புணர்வும் இளம் வயதிலிருந்தே இருப்பதுதானே சரியானது.முற்றாத இளம் மூங்கில்கள் தானே புல்லாங்குழலாய் பரிணமிக்க முடியும்?அத்தகைய புல்லாங்குழல்கள் தானே இனிய கானங்களை பிரசவிக்க முடியும்?]

சரி விடுங்கள்..விஷயத்துக்கு வருவோம்....

நான் இன்னும் பழுக்கவேயில்லை ஐயா
பூரண கனிவே எனது பிரார்த்தனை
இவ்வளவு வாயதாகிவிட்டதே இன்னும் பூரணத்தின் ருசி அறிந்திட வாய்க்கவில்லயே என்பதுதான் இடையறாத எனது விசனப்பாடு.
கனிவை அடைய நினைப்பதுதான் ,கனிவுக்கான விருப்பமும்,ஏக்கமும்தான்,கனிவுக்கான முதல் தடையே என்கிறார்கள் தன்னை உணர்ந்த பெரியோர்கள்.
விரும்பினாலும் தவறு...விரும்பாவிட்டாலோ அதைவிட தவறு..பின்ன என்னதான் செய்வது?
"மத்திம் நிகாயா"என்கிறார் புத்தர்...எதையும் தேர்வு செய்யாமல் மத்தியில் நிக்க வேண்டுமாம்....கடவுளே!....

உபதேச உந்தியார் என்கிற நூலில் ரமணர் சொல்கிறார்...

"வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்ந்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற."

" The fruit of actions passes
But action leaves behind
seed of further action
Leading to an ocean of actions;
Not at all to Moksha."


-இப்படியாக ஐயா வினைக்கடலில் தத்தளிக்கும் மீச்சிறு ஜீவன் நான்.
பெரியோர்களின் நல்லாசிகளே பற்றுகோலாய் இருக்க முடியும்.

மற்றபடி....தங்களின் வரவேற்பை சிரம் தாழ்த்தியேற்கிறேன்-நன்றி பல கூறி ,நெகிழும் நெஞ்சத்தோடு. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்  - Page 3 Empty Re: தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum