புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_m10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_m10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_m10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_m10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_m10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_m10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10 
19 Posts - 3%
prajai
மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_m10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_m10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_m10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_m10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_m10மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 06, 2011 12:45 pm

மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது. இது பெறுபவர்களை மகிழ்வித்து, தருபவர்களை கவுரவப்படுத்துகிறது. நாம் மனப்பூர்வமாக வழங்கும் பரிசுகள் நம் ஆழ்மன அன்பை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். பரிசு தருவது என்பது நமது பாரம்பரிய வழக்கம். அது அன்பின் சின்னம் மட்டுமல்ல, நல்ல பண்பின் அடையாளமுமாகும்.

காதல் பரிசு

காதலிக்கும் ஜோடிகள் தங்களுக்குள் வழங்கிக் கொள்ளும் இந்த பரிசு, மிகுந்த உணர்ச்சிமய மானதாகவும்- போற்றிப் பாதுகாக்கப்படும் பொக்கிஷமாகவும் இருக்கிறது. இதில் விலை உயர்ந்ததா, தாழ்ந்ததா என்ற பாகுபாடு இல்லை. அன்பால்தான் இது அளவீடு செய்யப்படுகிறது. ஒருவர் காதல் பரிசை கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்துவது என்பது கிட்டத்தட்ட ஒரு பொதுதேர்வில் பரீட்சை எழுதுவது போன்றது தான். ரிசல்ட் அப்படியும் இருக்கலாம். இப்படியும் இருக்கலாம். எப்படியும் முடியலாம்.

ஒருவர் மனதை தெரிந்து கொள்ளவும் பரிசளிக்கப்படுகிறது. ஏற்றுக்கொண்ட அன்பை கவுரவிக்கவும் பரிசளிக்கப்படுகிறது. எப்படியானா லும் காதல் பரிசு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.

கல்யாண பரிசு


திருமண நிகழ்வுகளில் முக்கிய இடத்தினைப் பெறுவது, பரிசு தரும்- பெறும் நிகழ்ச்சிதான். வாழ்த்த வரும் விருந்தினர்களை இன்முகத்து டன் வரவேற்று மணமக்கள் பரிசுகளை பெற்றுக் கொள்வது ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சியாகும். இது சாஸ்திர சம்பிரதாயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு அன்பு பரிமாற்றம். திருமண பரிசு பெரும்பாலும் வீட்டு உபயோகப் பொருட் களாகவோ, பணமாகவோ இருக்கலாம். அதுவே மணமக்களுக்கு வாழ்த்தாகவும் அமைந்து விடுகிறது. அந்தக் காலத்தில் புகுந்த வீட்டில் இருந்து கணவரோடு வாழப்போகும் பெண்களுக்கு- பெற்றோர், உறவினர்கள் பரிசுப் பொருட்களை கொடுத்து வழியனுப்பி வைப்பார்கள். அது பிறந்த வீட்டினரின் அன்பை எடுத்துக் கூறும் விதமாக அமையும். `நீ இன்னொரு வீட்டுக்குப் போனாலும் நாங்கள் உன்னை மறக்கமாட்டோம்' என்று கூறும் விதமாக பரிசளித்து மகிழ்விப்பார்கள். அதுவே நாளடைவில் வரதட்சணையாக மாறி பெண்களை பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக் கியது. பரிசு என்பது மனப்பூர்வமாக விரும்பித் தருவது. அதில் எந்தவித கட்டாயமும் இருக்கக்கூடாது. உண்மையான கல்யாணப் பரிசு. அன்பின் அதீத வெளிப்பாடு.

அன்புப் பரிசு

அது என்ன அன்புப் பரிசு? பரிசு என்பதே அன்பின் அடிப்படையில் தரப்படுவதுதானே? என்றெல்லாம் கேட்கத் தோன்றும். அன்பு என்ற ஒன்றிற்காக ஏங்கும் உள்ளங்களுக்கு இன்னமும் நாங்கள் உங்களை நினைவில் வைத்திருக்கிறோம் என்று சொல்லும் விதத்தில் வழங்கப்படும் பரிசுதான் அன்புப் பரிசு. வயதான உறவினர் களை பார்க்கப்போகும்போது அவர்களுக்கு பிரியமான ஒன்றை பரிசாக கொடுப்போமானால் அதைவிட சிறந்த மகிழ்ச்சி அவர்களுக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. இது நாம் அவர்களுக்குத் தரும் மரியாதையாகவும் இருக்கும்.

சமாதானப் பரிசு

சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்பட்டாலும், `நான் உன்னை இப்போதும் நேசிக்கிறேன்' என்றுநேசிக்கப்படுகிறவர்களை சமாதானப்படுத்தவும் பரிசுகள் வழங்கப்படுவதுண்டு. நம் முடைய சமாதான மொழிகளை நம் சார்பாக பரிசுகள் சொல்லும். இது வீட்டிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் பொருந்தும். வெற்றியானாலும், சமாதானமானாலும் அதை பரிசுகள் மூலம் தெரிவித்துக் கொள்வது பண்டைய மன்னர்களின் மரபு. சமாதானம் என்பது மனித நேயத்தின் அடிப்படைப் பண்பு. அதை அறிவிக்கும் விதமாக இந்த பரிசு அமைகிறது.

மன்னிப்பு பரிசு


நாம் செய்யும் தவறுகளுக்கு நம் சார்பில் மன்னிப்பு கோரும் பணியையும் பரிசுகள் செய்கின்றன. மன்னிப்பு மனிதர்களின் நற்பண்புகளில் ஒன்று. நம்முடைய செயல்களால் சிலர் நம்மீது வெறுப்பு கொள்ளலாம். எத்தனை வெறுப்பு நம்மீது மற்றவர்களுக்கு இருந்தாலும் ஒரே ஒரு பரிசு அவர்களுடைய மனோ நிலையை மாற்றி நம் பக்கம் திரும்பச் செய்யும். மன்னிக்கும் பண்பை மற்றவர்கள் உள்ளத்தில் தூண்டச் செய்வது இந்தப் பரிசுகள்.

நினைவுப் பரிசு

நம் வாழ்க்கையில் நல்ல நிகழ்வுகள் நடக்கும். அதை நமக்கு பிடித்தமானவர்கள் எல்லாம் நினைவில் கொள்ளவேண்டும் என்பதற்காக அந்த நிகழ்வுகளில் நாம் கொடுக்கும் பரிசு நினைவுப் பரிசாகும். காலங்கள் கடந்த பிறகும் பரிசை பார்த்தவுடன் அந்த நிகழ்வை நினைவில் கொண்டு வந்து நிறுத்துவது நினைவுப் பரிசுகளின் தனித்தன்மை. தருபவரும், பெறுபவரும் என்றும் ஒருவரை ஒருவர் மறந்து போகாமல் இருக்கச் செய்வது இந்த பரிசுகள். நாம் வயதில் முதிர்ந்து போனாலும் இந்த நினைவுப் பரிசுகள் என்றும் இளமையாக இருந்து, நினைவுகளை பராமரிக்கும்.

ஆசீர்வாதப் பரிசு

ஆசீர்வாதம் என்பது நம் வாழ்க்கையை உயரவைக்கும் ஒன்று. இது நம் நாட்டின் கலாசாரம், மரபை ஒட்டி வருவது. பெரியவர்கள் சிறியவர்களுக்கு தருவது வாழ்த்துப் பரிசு. சிறியவர்கள் பெரியவர்களுக்குத் தருவது ஆசீர்வாதப் பரிசு. ஆசீர்வாதம் என்பது மகிழ்ச்சியான நிலையில் இதயத்திலிருந்து வெளிப்படும் நல்ல வார்த்தைகள். அந்த மகிழ்ச்சியான நிலையில் அவர்களை ஆசீர்வதிக்கும் செயலை பரிசுப் பொருட்கள் செய்கிறது. இந்த பரிசுகள் தங்களை உயர்த்திக் கொண்டு மற்றவர்களையும் பெருமைப்படுத்துகிறது. அந்த பரிசுகள் பெரியவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பையும், மரியாதையையும் காட்டும்.

பரிவுப் பரிசு

அது மிகவும் முக்கியமான பரிசு. நம்மை விட்டுப் பிரிந்து செல்பவர்களுக்கு நாம் தரும் பரிசு. அந்தப் பரிசு, நம் சார்பாக அவர்களுடன் செல்லும். என் றென்றும் நம் நினைவுகளை அவர்களுக்கு எடுத்துச்சொல்லும். பிரிவு என்பது உடலுக்கு வரலாம். மனதுக்கு வரக்கூடாது. பிரிந்த வர்கள் எப்போதும் நம்மை நினை வில் வைத்துக்கொள்ள, நாம் தரும் இத்தகைய பரிசுகள் வழி வகுக்கும். நண்பர்களின் பிரிவா னாலும் சரி, அலுவலக ஊழியர்களின் பிரிவானாலும் சரி `நீ எப்போதும் எங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்' என்பதற்காக இந்த பரிசு தரப்படுகிறது.

பிறந்த நாள் பரிசு

வயது வித்தியாசம் பாராமல் அனைவருக்கும் தரப்படும் பரிசு பிறந்த நாள் பரிசு. ஆண்டுக்கு ஒருமுறை தரப்படும் இந்தப்பரிசு, மற்றவர்கள் வாழ்வதில் நாம் கொள்ளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடியது. உலகமெங்கிலும் இந்த ஒரு பரிசில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. வேறு எந்த பரிசையும் தராதவன், பெறாதவன்கூட இந்தப் பரிசுக்கு விதிவிலக்கு.

தினதந்தி



மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 06, 2011 2:37 pm

அன்பு பரிசாக இந்த அன்பு மலர்களை சிவாவிற்கு தருகிறேன் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனிதர்கள் அன்பை வெளிப்படுத்த அருமையான வழி பரிசளிப்பது, இதோ பரிசுகளின் வகைகள். Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக