புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
30 Posts - 50%
heezulia
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
72 Posts - 57%
heezulia
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியச் சேனன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 03, 2011 7:55 pm

விண்ணுலகத்திலே இந்திர சபையிலே ஆடல், பாடல் கூத்து, நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெறுவதுண்டு. கந்தருவரும், இயக்கரும் அங்கே கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்திரனிடத்தில் புதியவராக விருந்தினர் வந்தால் அவர்களுக்காகக் கலை நிகழ்ச்சிகøள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அகத்திய முனிவர் ஒருநாள் இந்திர சபைக்குச் சென்றபோது இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான். அவர் பொருட்டுச் சிறப்பாக ஆடல் பாடல்களை நடத்தினான். ஊர்வசி நாட்டியம் ஆடினாள்.

ஓவியச்சேனன் நாரத வீணை என்னும் யாழை வாசித்தான். குழலும், யாழும், மத்தளமும், தாளமும் முழங்கின. நாட்டியம் தொடங்கிற்று.

இசையுங்கூத்தும் இயைந்து நடந்தன. அகத்திய முனிவரும், இந்திரனும், சபையோரும் நடனத்தையும் பாட்டையும் கண்டும், கேட்டும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

மேடைமேல் நாட்டியமாடிக் கொண்டிருந்த ஊர்வசி ஓவியச்சேனனின் அழகிலே மயங்கினாள். அவனும் அவளுடைய அழகிலே மனத்தைச் செலுத்தினான். அவர்கள் வீணை வாசிப்பதையும் நடனம் ஆடுவதையும் மறந்தனர். ஆகவே, வீணை தவறி இசைத்தது. அவளும் நாட்டியத்தைத் தவறாக ஆடினாள். இவ்வாறு பாடல்கள் ஒன்றாகவும், வீணை இசை வேறாகவும், நடனம் இன்னொன்றாகவும் இயைபில்லாமல் இருப்பதை அகத்தியர் உணர்ந்தார். இவ்வாறு திடீரென்று மாறுபடுவதற்குக் காரணம் என்ன என்பதைக் கவனித்து சினங்கொண்ட அகத்தியர் அவர்களுக்குச் சாபங் கொடுத்தார்.

""ஊர்வசி! நீ செய்த குற்றத்துக்காக விண்ணுலகத்தை விட்டு மண்ணுலகத்தில் போய்ப் பிறப்பாயாக''

""ஓவியச்சேனா! உன் குற்றத்துக்காக நீயும் மண்ணுலகத்தில் சென்று மூங்கிலாகப் பிறப்பாய்!'' என்றார்.

ஓவியச்சேனன் தன் குற்றத்தை உணர்ந்து, அகத்தியரை வணங்கி வேண்டினான்.

""முனிவரே! எனக்குச் சாபவிடை தரவேண்டும்,'' என்று இரந்து கேட்டான்.

அகத்தியர் மனமிரங்கினார்.

""மண்ணுலகத்திலே மலையின் மேலே நீ மூங்கிலாகப் பிறந்து வளரும்போது அந்த மூங்கிலிலிருந்து தலைக்கோல் அமைப்பர். அப்போது உன் சாபம் நீங்கி உன் உருவம் ஏற்று விண்ணுலகத்துக்கு வருவாய்,'' என்று முனிவர் சாபவிடை கொடுத்தார்.

ஓவிய சேனன் மண்ணுலகத்திலே தமிழ்நாட்டு மலையிலே மூங்கிலாப் பிறந்து வளர்ந்தான்.

முனிவருடைய சாபத்தைப் பெற்ற ஊர்வசி, விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகிலே தமிழகத்துச் சோழ நாட்டிலே காவிரிப்பூம்பட்டினத்தில், "மாதவி' என்னும் பெயருடன் பிறந்து நாடக மங்கையாக விளங்கினாள். ஆடல், பாடல் கலைகளில் தேர்ந்து உலகப் பகழ்பெற்று விளங்கினாள்.

சோழ மன்னன் அவளுக்குத் தலைக்கோல் பட்டங்கள் கொடுக்க எண்ணினான். மலைமேல் வளர்ந்துள்ள மூங்கிலைக் கொண்டுவந்து தலைக்கோல் அமைக்கும்படி கட்டளையிட்டான். மலைக்கு வந்து தலைக்கோலைத் தேடினவர்கள் ஓரிடத்தில் கெட்டியான அழகுள்ள மூங்கில் வளர்ந்திருப்பதைக் கண்டனர். சாபத்தினால் ஓவியச்சேனன் மூங்கிலாகப் பிறந்து வளர்ந்த மூங்கில் அதுவே.

தலைக்கோல் அமைப்பதற்குத் தகுதியான மூங்கில் இதுவே என்று கருதி அவர்கள் அந்த மூங்கிலை வெட்டிக்கொண்டுபோய் தலைக்கோல் செய்தனர். கெட்டியானதும் சாணக்குச்சாண் கணவுள்ளதுமான அந்த மூங்கிலை எட்டு சாண் நீளமூள்ளதாக அறுத்து அதன் இரு தலையிலும் கண்களிலும் தங்கப் பூண் கட்டி நவரத்தினங்கள் இழைத்து அழகான தலைக்கோலாகச் செய்தனர்.

மூங்கிலைத் தலைக்கோலாகச் செய்தவுடன் ஓவியசேனன் சாபம் நீங்கப் பெற்றுத் தேவ உருவம் பெற்று இந்திரலோகத்தில் சென்று முன்போல யாழாசிரியனாக இருந்தான்.

மாதவி சோழ அரசனுடைய சபையிலே தான் கற்ற ஆடல் பாடல்களை அரங்கேற்றினார். இசை நாட்டியக்கலை இலக்கணப்படி முறையாக அவள் நிகழ்த்திய ஆடல் பாடல்களைக் கலைஞர்களும், அரசனும் மெச்சிப் புகழ்ந்தனர்.

சோழ அரசன் அவளுக்குத் தலைக்கோலி என்னும் பட்டத்தை அளித்து அதற்கு அடையாளமாகத் தலைக்கோலை கொடுத்துப் பாராட்டினான். அதுமுதல் தலைக்கோல் ஏற்ற கலைவாணரான ஆடவர், "தலைக்கோல் ஆசான்' என்றும் மகளிர்' தலைக்கோல் அல்லது "தலைக்கோல் அரிவை' என்றும் பெயர் பெற்றனர்.

சோழ மன்னனிடத்தில் தலைக்கோலையும், "தலைக்கோலி' என்னும் பட்டத்தையும் பெற்ற மாதவி, சோழ நாட்டிலே ஆடல் பாடல்களை நடத்திக்கொண்டு பேரும் புகழும் பெற்றாள். கடைசியில் அவள் மண்ணுலகத்தைவிட்டு இந்திரலோகம் சென்று முன்போலவே ஊர்வசியாகி இந்திர சபையில் நாட்டிய நடனங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தாள்.

அந்த மாதவியின் பரம்பரையில் வந்த கணிகைப் பெண்கள், அவளைப் போலவே ஆடல் பாடல் கலைகளில் தேர்ந்து காவிரிப்பூம்பட்டினத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தனர். அந்த பரம்பரையில் கடைசியாக வந்தவள் சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற இசை நாட்டியக் கலைகளில் பேர் போன மாதவி. இவள், கரிகாற் சோழனுடைய அவையில் அரங்கேறி, "தலைக்கோலி' பட்டம் பெற்று, பூம்புகாரில் வாழ்ந்தாள். ஆடற்பாடற் கலைகளில் பேரும் புகழும் பெற்று கோவலனுடைய அன்பையும் பெற்றிருந்தாள்.

சிறுவர் மலர்



ஓவியச் சேனன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக