Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை
4 posters
Page 1 of 1
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை
புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாலும், ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதாலும், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.82 வரை உயர்த்த வேண்டும் என, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளன. இதையடுத்து, இன்னும் இரண்டு வாரத்திற்குள் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட உள்ளது.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம், எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்தது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டில் விலையை உயர்த்தி வருகின்றன. விலையை உயர்த்திக் கொள்ளும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்த பிறகு, 10 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு விட்டது. கடந்த ஜனவரி மாதம் 3.50 ரூபாயும், மே மாதம் 5 ரூபாயும், கடந்த மாதம் 3.14 ரூபாய் என, பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டது. இதன் மூலம், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 70 ரூபாயை தாண்டிவிட்டது.ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 5,300 ரூபாயாக உள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 49 ரூபாயாக உள்ளது. இதனால், இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, தற்போதைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 1.50 ரூபாய் அளவுக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. உள்ளூர் வரி உள்ளிட்டவற்றை ஈடுசெய்ய ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 1.82 ரூபாய் அதிகரிக்க வேண்டும் என, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள், மத்திய அரசை வற்புறுத்தியுள்ளன. விலை உயர்வு பற்றிய அறிவிப்பை அமல்படுத்துவதற்கு முன்பாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், அரசுக்கு பரிந்துரை செய்வதை சம்பிரதாயமாகக் கொண்டுள்ளன.
இது குறித்து இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன நிதி இயக்குனர் பி.முகர்ஜி குறிப்பிடுகையில், "விலையை உயர்த்தும் படி அரசிடம் கோரியுள்ளோம். இது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. எனவே, எப்போது விலை உயர்த்தப்படும் என்பதை கூறமுடியாது' என்றார்.
டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய் குறையும் போது எண்ணெய் நிறுவனங்களுக்கு, 9 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, இந்த இழப்பை சரிக்கட்ட இரண்டு வார காலத்தில், அதாவது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவே பெட்ரோல் விலையை உயர்த்தி அறிவிக்கும்படி எண்ணெய் நிறுவனங்கள், அரசை நிர்பந்தப்படுத்தியுள்ளன. பார்லிமென்ட் கூட்டம் துவங்கிவிட்டால், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு முன்பாக அரசு இசைவு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இழப்பு விவரம்: பெட்ரோலுக்கு மட்டுமே விலை நிர்ணயம் செய்யும் உரிமை, அரசு கட்டுப்பாட்டிலிருந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்றுள்ளது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நிர்ணயம் அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுவதால், ஒரு லிட்டர் டீசலுக்கு 9.27 ரூபாயும், மண்ணெண்ணெய்க்கு 26.94 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 260.50 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாக இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் விலையை உயர்த்துவது பற்றி, நிதிஅமைச்சர் பிரணாப் தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூடிதான் முடிவு செய்யும்.
விரைவில், உ.பி., உட்பட சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அதை காரணம் காட்டி இவற்றின் விலை உயர்வை தள்ளிப்போட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்பதால், இன்னும் இரண்டு வாரத்திற்குள் அறிவிப்பு வெளியாகும்.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம், எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்தது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டில் விலையை உயர்த்தி வருகின்றன. விலையை உயர்த்திக் கொள்ளும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்த பிறகு, 10 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு விட்டது. கடந்த ஜனவரி மாதம் 3.50 ரூபாயும், மே மாதம் 5 ரூபாயும், கடந்த மாதம் 3.14 ரூபாய் என, பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டது. இதன் மூலம், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 70 ரூபாயை தாண்டிவிட்டது.ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 5,300 ரூபாயாக உள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 49 ரூபாயாக உள்ளது. இதனால், இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, தற்போதைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 1.50 ரூபாய் அளவுக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. உள்ளூர் வரி உள்ளிட்டவற்றை ஈடுசெய்ய ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 1.82 ரூபாய் அதிகரிக்க வேண்டும் என, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள், மத்திய அரசை வற்புறுத்தியுள்ளன. விலை உயர்வு பற்றிய அறிவிப்பை அமல்படுத்துவதற்கு முன்பாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், அரசுக்கு பரிந்துரை செய்வதை சம்பிரதாயமாகக் கொண்டுள்ளன.
இது குறித்து இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன நிதி இயக்குனர் பி.முகர்ஜி குறிப்பிடுகையில், "விலையை உயர்த்தும் படி அரசிடம் கோரியுள்ளோம். இது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. எனவே, எப்போது விலை உயர்த்தப்படும் என்பதை கூறமுடியாது' என்றார்.
டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய் குறையும் போது எண்ணெய் நிறுவனங்களுக்கு, 9 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, இந்த இழப்பை சரிக்கட்ட இரண்டு வார காலத்தில், அதாவது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவே பெட்ரோல் விலையை உயர்த்தி அறிவிக்கும்படி எண்ணெய் நிறுவனங்கள், அரசை நிர்பந்தப்படுத்தியுள்ளன. பார்லிமென்ட் கூட்டம் துவங்கிவிட்டால், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு முன்பாக அரசு இசைவு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இழப்பு விவரம்: பெட்ரோலுக்கு மட்டுமே விலை நிர்ணயம் செய்யும் உரிமை, அரசு கட்டுப்பாட்டிலிருந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்றுள்ளது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நிர்ணயம் அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுவதால், ஒரு லிட்டர் டீசலுக்கு 9.27 ரூபாயும், மண்ணெண்ணெய்க்கு 26.94 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 260.50 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாக இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் விலையை உயர்த்துவது பற்றி, நிதிஅமைச்சர் பிரணாப் தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூடிதான் முடிவு செய்யும்.
விரைவில், உ.பி., உட்பட சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அதை காரணம் காட்டி இவற்றின் விலை உயர்வை தள்ளிப்போட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்பதால், இன்னும் இரண்டு வாரத்திற்குள் அறிவிப்பு வெளியாகும்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை
ஏற்கனவே விக்கிற விலை வாசில மக்கள் விழி பிதுங்கி போய் எந்த செலவை குறைப்பது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.இதில் பெட்ரோல் விலை ஏற்றமும் சேர்ந்துடுச்சா. போச்சு இனிமே பஸ் டிக்கெட்ல ஆரம்பிச்சு காய் கரி வரைக்கும் எல்லாம் விலை ஏறிடுமே
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை
சீனாக்காரா.. சீக்கிரம் வந்து எங்கள புடிச்சுக்கோ..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» ஏர் இந்தியாவுக்கு பெட்ரோல் தர எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு!!
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4 குறையும்!
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 குறைப்பு:
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» ஏர் இந்தியாவுக்கு பெட்ரோல் தர எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு!!
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4 குறையும்!
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 குறைப்பு:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|