புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திவ்யா... - Page 2 I_vote_lcapதிவ்யா... - Page 2 I_voting_barதிவ்யா... - Page 2 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
திவ்யா... - Page 2 I_vote_lcapதிவ்யா... - Page 2 I_voting_barதிவ்யா... - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
திவ்யா... - Page 2 I_vote_lcapதிவ்யா... - Page 2 I_voting_barதிவ்யா... - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
திவ்யா... - Page 2 I_vote_lcapதிவ்யா... - Page 2 I_voting_barதிவ்யா... - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
திவ்யா... - Page 2 I_vote_lcapதிவ்யா... - Page 2 I_voting_barதிவ்யா... - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திவ்யா...


   
   

Page 2 of 2 Previous  1, 2

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Oct 31, 2011 6:40 pm

First topic message reminder :


அன்பு உறவுகளே...

ஓராண்டுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு... உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்...
காலை மணி 11.30... சென்னையில் இருந்து கோவை வழி செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ் இரயிலில் ஆட்டு மந்தை போல் அடைந்துக் கொண்டு இருந்த கூட்டத்தில் எப்படியோ இடம் கிடைத்த சந்தோசத்தில் நான் வியர்க்க விறுவிறுக்க அமர்ந்திருந்தேன்...
எதிரில் ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண். எதிரில் இருந்த பெண் மணி உட்பட என்னை சுற்றி இருந்த கூட்டத்தில் முக்கால்வாசி ஆசிரியர்கள்தான். எதோ ஆசிரியர்கள் மாநாட்டிற்காக வந்ததாக பேசி கொண்டார்கள். இரயில் பெட்டி முழுவதும் கச கச என்று ஒரே கூச்சல், சண்டை, சச்சரவு.
இரயில் கிளம்பும் நேரத்தில்தான் அவள் வந்தால், அவளது பெயர் திவ்யா, முழுப்பெயர் திவ்ய தர்ஷினி... நல்ல அழகு, குட்டி உடை... அவளும் குட்டிப் பெண்தான்... ஆமாம் அவளுக்கு ஒரு வயதுதான் இருக்கும். அவளது தாத்தா அவளை தூக்கி கொண்டு கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்.
அந்த ஆசிரியர் பெண்மணி அவருக்கு கொஞ்சம் இடம் கொடுத்து அமரச் சொன்னார். கூட்டத்தை கண்டதும் அந்த குழந்தை திவ்யாவிற்கு அழுகை என்றால் அப்படி ஒரு அழுகை... நிறுத்தாமல் வெகு நேரம் அழுதால்...
நான் அவரிடம் குழந்தையை கேட்டு பெற்றேன்...
அவளை சமாதானம் செய்து வேடிக்கை காட்டி கொஞ்சம் கொஞ்சமாக அழுகையை நிறுத்தினேன்...
கொஞ்ச நேரத்தில் என்னுடன் நன்றாக பழகிவிட்டால்... பொம்மை போல் இருந்தால், எடையே இல்லை, பஞ்சு போல் இருந்தது அவளது பிஞ்சு உடல். அவள் செய்த குறும்பு இருக்கிறதே ஒரு வருடம் ஆகியும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது... அவளது தாத்தா சொல்வதை எல்லாம் செய்து காட்டினால்.
சிறிது தூரம் கடந்ததும் குழந்தை பசியால் அழத் துவங்கினாள்.
நான் பையில் வைத்திருந்த ரொட்டியை எடுத்து ஊட்டினேன். பிறகு அவள் தாத்தாவிடம் இருந்து பால் புட்டி வாங்கி ஊட்டிவிட்டேன்.
மீண்டும் குறும்பு விளையாட்டினை துவங்கினாள் அந்த குறும்பி...
என்னை சுற்றி நிறைய இளைஞர்கள்... அவளை என் குழந்தை என்றே பலர் நினைத்து கொண்டனர்.
கால் வைக்க கூட இடமில்லா அந்த கூட்டத்தில் அத்தனை பேரையும் சிரிக்க வைத்த சின்ன தேவதை அந்த திவ்யா குட்டிதான். ஒவ்வொருவரும் குழந்தையை தூக்கி கொஞ்ச துவங்கினர்.
கையில் வைத்திருந்த மிட்டாய், சாப்பிடும் பொருள் ஒவ்வொன்றையும் அவளுக்கு ஊட்டி விட்டனர்.
வழக்கம் போல் உளவியல் ரீதியாய் என் மனம் செல்லலாயிற்று...
கூட்ட நெரிசலில் மனித தன்மை மறந்து மிருகம் போல் செயல்பட்ட, பேசிய ஒவ்வொரு நபரையும் இந்த சுட்டி குழந்தை மீண்டும் குழந்தை பருவத்திற்கே அழைத்து சென்றுவிட்டாளே !!!
நிற்க வழியில்லாத அந்த நெரிசலில் ஒவ்வொருவர் முகத்திலும் சிரிப்பை வரவழைக்க ஒரு குழந்தை போதுமாய் உள்ளதே...!!! என்ற வியப்பும் அதற்கான காரணத்தை நோக்கியும் என் மனம் அலைய துவங்கியது...

நேரம் கடந்தது, குழந்தை பல இளைஞர்களிடம் சென்று கடைசியாய் என்னிடமே வந்தது... குழந்தையை விட்டு விட்டு அந்த இளைஞர்கள் செல்லும் முன் என்னிடம் ஒரு மிட்டாயை ஒரு இளைஞர் கொடுத்தார். அப்போது அவர் சொன்னார் "குழந்தைக்கு மிட்டாயை உடைத்து ஊட்டுங்கள் அப்படியே ஊட்டிவிடாதீர்கள்" என்று... அருகில் இருந்த அவரது நண்பர் "டேய் குழந்தையோட அப்பாவுக்கு தெரியாதாடா ? நீ அவருக்கு சொல்லிதர்ரியா?, லூசு, வா போகலாம்"
எனக்கு சிரிப்புதான் வந்தது... இது பல முறை என் வாழ்வில் நடந்த ஒன்றுதான்...

என் மடியில் அமர்ந்தபடி பயணித்த அவள் சிறிது நேரத்தில் என் மடியிலேயே தூங்கினால்... எனக்கு ஒரு மென்மையான உணர்வு, அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை, நீங்கள் உண்டு என்று சொல்லும் கடவுளை நான் மடியில் ஏந்துவது போன்ற உணர்வு, மனதின் வேதனைகள் யாவையும் மடியில் புதைந்து போனதாய் உணர்த்தியது அந்த உணர்வு, ஒரு வித பெருமிததோடு வந்த கர்வ உணர்வு அது...

இதுதான் தாய்மையோ...?

ஆம் தாய்மைதான், கர்பம் இன்றி தாய்மை அடைந்த கர்வ உணர்வுதான் அது...ஒரு ஆணை தாயாய் மாற்றும் கலை ஒவ்வொரு குழந்தைக்கும் உண்டு, ஒவ்வொரு குழந்தை உள்ளம் கொண்டோருக்கும் உண்டு..அதில் முதன்மை பங்கு தங்கைக்குதான்...நமது சிறுவயதிலேயே நம்மை தாய் ஆக்குவது நமது தங்கைதான்..

உறக்கம் கலைந்த திவ்யா மீண்டும் விளையாட்டில் இறங்கினால், எல்லோரிடமும் சென்றாள் என்னிடம் இம்முறை வரவே இல்லை... நான் அதை நினைந்து வருந்தவும் இல்லை, என்னை விட்டு விலகி விலகி சென்றாள், ஏன் என்று தெரியவில்லை. கோவையை நெருங்கும் நேரம், அவளது தாத்தா அவளை அதட்டி விட்டார். அழ ஆரம்பித்தவள் நிறுத்தவே இல்லை, எல்லோரும் சமாதானம் செய்தார்கள் ஆனால் ஒருவரிடமும் செல்லவில்லை அவள்.

அவள் தாத்தாவே சமாதானம் செய்து தூக்கி பார்த்தார். அவரிடமும் செல்லாமல் பிடிவாதமாய் விலகி அழுதுகொண்டே அங்கும் இங்கும் அலைந்தால். என்னதான் ஒரு ஆண் ஒரு குழந்தை மீது அன்பு காட்டினாலும் அந்த குழந்தை அழும்போது தேடுவது தன் தாயைதான்..

அவளும் தாயைதான் தேடுகிறாள் என்பது எனக்கு புரிந்தது. நான் அவளை அழைக்கவே இல்லை நடப்பவற்றை பார்த்துக் கொண்டு மட்டும் அமர்ந்து இருந்தேன்.
அங்கும் இங்கும் அலைந்த அவள் என்னை பார்த்ததும் திடீர் என்று ஓடி வந்து என் கழுத்தை கட்டிக்கொண்டு இறுக என்னை அணைத்து கொண்டால்... நானும்தான்...

அங்கு இருந்தோர் அனைவரும் என்னை ஆச்சர்யமாய் பார்த்தனர். அவள் தாத்தாவும் தான். அவர் சொன்னார் அவள் அழும் பொது அவள் அம்மாவை தவிர வேறு யாரிடமும் செல்லமாட்டாள், யாராலும் அவள் அழுகையை நிறுத்தவும் முடியாது, உங்களிடம் இப்படி ஒட்டிக்கொள்வாள் என்று நான் நினைக்கவே இல்லை... என்று கூறினார்.
எனக்கு ஒரே பெருமிதம்தான். முகம் முழுவதும் எனது பெருமிதம் பெருக்கெடுத்து பிரகாசித்தது...

இது ஒன்றும் பெரிய சாதனை அல்ல, ஆனால் இந்த பெருமிதம் எனக்குள் இருந்த என் தாய்மை உணர்வை தூண்டிய அந்த குட்டி குழந்தை மீதானது...

அவள் கண்ணீரை துடைத்துவிட்டு "அழாதடா தங்கம்" என்று சொல்லிக்கொண்டு அவளை தூக்கி சென்றேன், கதவின் அருகே அவளை தூக்கி பிடித்து வேகமான தென்றலோடு என் அன்பினை கலந்து அவளுக்கு ஊட்ட எனக்கு தனிமையோடு சில நிமிடங்கள் கிடைத்தன.

நான் இறங்கும் இடம் நெருங்க நெருங்க என் தாய்மை உணர்வை இழக்க சில நிமிடங்கள் மட்டுமே இருப்பதை எண்ணி ஒரு வருத்தம் தொற்றியது, அவளை தோளில் வைத்து ஆட்டிக்கொண்டே இருந்தேன். என் தோளிலேயே தூங்கிவிட்டால் அந்த தேவதை...

நாங்கள் இறங்கும் இடம் வந்தது, நானும் அவளது தாத்தாவும் சேர்ந்தே இறங்கினோம், குழந்தை இப்போதும் என் தோளில்தான் தூங்கிக்கொண்டிருந்தால். குழந்தையின் அப்பா அவளுக்காக ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தார்.
கையில் ஒரு கூடை, அதில் குழந்தைக்கு தேவையான பொருட்கள் இருந்தன. சிறிதுநேரம் அவரிடம் பேசிவிட்டு, பிரிய மனமின்றி குழந்தையை என் தோளில் இருந்து விடுவித்து அவரிடம் கொடுத்தேன், பிரியும் வேளையில் ஒரு அன்பு முத்தத்தை அவள் கன்னத்தில் பதித்து விட்டு அவள் தந்தையிடம் "திவ்யா சாப்பிட்டு ரொம்ப நேரம் ஆச்சு, முழிச்சவுடன் அழுவாள், பால் புட்டி அவுங்க தாத்தாட்ட இருக்கு மறக்காமல் பால் குடுத்துருங்க, பசியோட அப்டியே தூங்கிற போறா, பாத்துக்குங்க" என்று சொல்லிவிட்டு நான் செல்கையில் திவ்யாவின் தந்தை ஒரு புன்சிரிப்போடு என்னை வழி அனுப்பினார்.

சிறிது நேரம் கழித்து அவர் சிரித்ததை பற்றி யோசித்து பார்த்ததும் என் மனசாட்சி கூறியது "டேய் குழந்தையோட அப்பாவுக்கு தெரியாதாடா ? நீ அவருக்கு சொல்லிதர்ரியா?, லூசு, வா போகலாம்" என்று...

இந்த பதிவு பலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம், ஏனென்றால் இதில் நான் எந்த ஒரு கருத்தையும், அழுத்தத்தையும் பதியவில்லை, என்னை போன்று அந்த இரயிலில் பயணம் செய்த பல இளைஞர்களின் தாய்மை குணத்தை எங்களுக்கு அன்று உணர்த்திய அந்த குட்டி செல்லத்திற்கு இந்த பதிவினை சமர்பிக்கிறேன், அவ்வளவுதான்...

இதோ அந்த தேவதையின் சில புகை படங்கள்...

திவ்யா... - Page 2 Photo00362

திவ்யா... - Page 2 Photo00522

திவ்யா... - Page 2 Photo00392l

திவ்யா... - Page 2 Photo0040hk

திவ்யா... - Page 2 Photo00412c

திவ்யா... - Page 2 Photo00422

திவ்யா... - Page 2 Photo00432

திவ்யா... - Page 2 Photo00442

திவ்யா... - Page 2 Photo00482

திவ்யா... - Page 2 Photo00492

திவ்யா... - Page 2 Photo00532

திவ்யா... - Page 2 Photo00512




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திவ்யா... - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



திவ்யா... - Page 2 Hதிவ்யா... - Page 2 Aதிவ்யா... - Page 2 Sதிவ்யா... - Page 2 Aதிவ்யா... - Page 2 N

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 3:06 pm

ranhasan wrote:
ரேவதி wrote:
ranhasan wrote:எனக்கு குழந்தை மனசா அதிர்ச்சி
கொலைகாரணவிட கொடிய மனசு எனக்கு... திவ்யா... - Page 2 128872
அது என்னமோ உண்மைதான் சிரி

திவ்யா... - Page 2 440806 திவ்யா... - Page 2 440806 திவ்யா... - Page 2 440806 அதிர்ச்சி திவ்யா... - Page 2 440806 திவ்யா... - Page 2 440806 திவ்யா... - Page 2 440806
அண்ணா இப்படி நீங்கள் போட்ட ஸ்மைலியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சி திவ்யா... - Page 2 Ouarfதிவ்யா... - Page 2 3dmdr



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 02, 2011 3:09 pm

ரேவதி wrote:
ranhasan wrote:
ரேவதி wrote:
ranhasan wrote:எனக்கு குழந்தை மனசா அதிர்ச்சி
கொலைகாரணவிட கொடிய மனசு எனக்கு... திவ்யா... - Page 2 128872
அது என்னமோ உண்மைதான் சிரி

திவ்யா... - Page 2 440806 திவ்யா... - Page 2 440806 திவ்யா... - Page 2 440806 அதிர்ச்சி திவ்யா... - Page 2 440806 திவ்யா... - Page 2 440806 திவ்யா... - Page 2 440806
அண்ணா இப்படி நீங்கள் போட்ட ஸ்மைலியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சி திவ்யா... - Page 2 Ouarfதிவ்யா... - Page 2 3dmdr

ரொம்ப நாள் ஆச்சிதான் இப்போ சாக கிடக்குறாங்க பாவம்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திவ்யா... - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



திவ்யா... - Page 2 Hதிவ்யா... - Page 2 Aதிவ்யா... - Page 2 Sதிவ்யா... - Page 2 Aதிவ்யா... - Page 2 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 3:10 pm

ranhasan wrote:
ரேவதி wrote:
ranhasan wrote:
ரேவதி wrote:
ranhasan wrote:எனக்கு குழந்தை மனசா அதிர்ச்சி
கொலைகாரணவிட கொடிய மனசு எனக்கு... திவ்யா... - Page 2 128872
அது என்னமோ உண்மைதான் சிரி

திவ்யா... - Page 2 440806 திவ்யா... - Page 2 440806 திவ்யா... - Page 2 440806 அதிர்ச்சி திவ்யா... - Page 2 440806 திவ்யா... - Page 2 440806 திவ்யா... - Page 2 440806
அண்ணா இப்படி நீங்கள் போட்ட ஸ்மைலியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சி திவ்யா... - Page 2 Ouarfதிவ்யா... - Page 2 3dmdr

ரொம்ப நாள் ஆச்சிதான் இப்போ சாக கிடக்குறாங்க பாவம்...
திவ்யா... - Page 2 230655



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Nov 02, 2011 3:21 pm

இதுதான் ரன்காசன் பதிவு ! பதிவு என்றால் அட்வைஸ் பண்ணனும் ! ஏதாவது பயனுடையாதாக இருக்கணும் ! இப்படி எல்லாம் .....ஒரு .வரையறையில்லாமல் . சூப்பருங்க ...!

இதை படிக்கும் போது...இதையத்தின் தொடாத சில இடங்களை தொட்டு சென்ற உணர்வுகள்.... வார்த்தை இல்லை ... சொல்ல ....என்றாலும்
ரன்காசன்..! உங்கள் உணர்வை ..வார்த்தைகளில் ..நான்கு பதிவு செய்துவிட்டீர்கள்.....

அருமையிருக்கு ....



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 02, 2011 5:12 pm

கே. பாலா wrote:இதுதான் ரன்காசன் பதிவு ! பதிவு என்றால் அட்வைஸ் பண்ணனும் ! ஏதாவது பயனுடையாதாக இருக்கணும் ! இப்படி எல்லாம் .....ஒரு .வரையறையில்லாமல் . சூப்பருங்க ...!

இதை படிக்கும் போது...இதையத்தின் தொடாத சில இடங்களை தொட்டு சென்ற உணர்வுகள்.... வார்த்தை இல்லை ... சொல்ல ....என்றாலும்
ரன்காசன்..! உங்கள் உணர்வை ..வார்த்தைகளில் ..நான்கு பதிவு செய்துவிட்டீர்கள்.....

அருமையிருக்கு ....

காதலைவிட கடினமாய் உள்ளது இந்த உணர்வை வெளிப்படுத்துவதற்கு... புரிந்துகொண்ட பாலாவிற்கு எனது நன்றிகள்... :வணக்கம்:



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திவ்யா... - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



திவ்யா... - Page 2 Hதிவ்யா... - Page 2 Aதிவ்யா... - Page 2 Sதிவ்யா... - Page 2 Aதிவ்யா... - Page 2 N
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக