ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் காமமும்..

+9
Aathira
கே. பாலா
nerunchi
இளமாறன்
dhilipdsp
ayyamperumal
சதாசிவம்
அகிலன்
பி.அமல்ராஜ்
13 posters

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

காதலும் காமமும்.. - Page 5 Empty காதலும் காமமும்..

Post by பி.அமல்ராஜ் Mon 31 Oct 2011 - 0:39

First topic message reminder :

காதல், காமம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கத்தைய உளவியலாளர் பிராயிட் இது தொடர்பாக எழுதிய வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.

"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".


பி.அமல்ராஜ் - இலங்கை.
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011

http://www.rajamal.blogspot.com

Back to top Go down


காதலும் காமமும்.. - Page 5 Empty Re: காதலும் காமமும்..

Post by கபாலி Thu 3 Nov 2011 - 22:20

ஈகரையில் இருக்கும் சில உருப்படியான தலைப்புகளில் இதுவும் ஒன்று. நல்ல விவாதம். தொடரட்டும். நன்றிகள்.


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 5 Empty Re: காதலும் காமமும்..

Post by கபாலி Thu 3 Nov 2011 - 23:54

சதா சிவம் கூறியதில் தவறேதும் இல்லை.

ஈகரை உறவுகள் என்பதற்காக வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு அளிக்கவும் தேவை இல்லை.

நாலுவரி ஜோக்குக்கும் அரட்டைக்கும் மட்டுமே இங்கே கூட்டம் கூடுகிறது என்னும் உண்மையை ஏற்க வலிமை வேண்டும்.

இது போன்ற அறிவுபூர்வமான விவாதத்தில் அனைவரும் கலந்து கொள்ள மறுப்பது விருப்பமா இல்லையா என்பதை விட அவரவர் உளப்பாங்கு இதன் மூலம் வெளிப்படுகிறது என்பதை ஏன் ஏற்க மறுக்கவேண்டும் என்று புரியவில்லை.

கூட்டம் இருந்தால் அவை கூடி அடிக்கும் அரட்டை இருந்தால் போதும் என்ற மனப்பான்மையே அடிப்படையில் தவறு என்பதை எப்படி புரியவைப்பது..? சோகம்

இந்த அழகுக்கு வேண்டாத வரிந்துகட்டிக்கொண்டு வந்த ஆதரவு வேறு சோகம்

ஹூம்.. நல்ல பதிவுகளுக்காக மட்டுமே வரும் சிலரை மட்டும் அவமதிக்கலாமா என்னும் கேள்வி கூட என் இந்தப் பதிவுக்குப் பின் எழத்தான் போகிறது.

- தீர்க்க தரிசி


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 5 Empty Re: காதலும் காமமும்..

Post by Aathira Fri 4 Nov 2011 - 0:18

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பெரிய அள்வில் இந்தக் கருத்துக்களம் போய்க்கொண்டிருகிறது.
திரு சதாசிவம் அவர்களே
பின்னுட்டங்களைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப் படுகிறீர்கள். ஊதுகிற சங்கு யார் எழுகிறார்கள் என்று கவலை கொள்வதில்லையே. ஏற்புடையதாக இருப்பின் ஏற்றுக்கொள்வர்.

எனக்கும் நிறைய கருத்துகள் உள்ளன. உங்களுடன் விவாதிக்க... நாளை வருகிறேன்.

குறிப்பு:
பின்னூட்டம் இடுவதும் கருத்து கூறுவதும் அவரவர் விருப்பம். ஒருவேளை இக்கருத்து அவர்கள் விரும்பாததாக இருக்கலாம். விவாதம் ஏன் என நினைத்து இத்திரியையே தவிர்த்திருக்கலாம்.
(உறவுகள் மனம் புண்படும் சொல்லாடல்களைத் தவிர்த்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் )


காதலும் காமமும்.. - Page 5 Aகாதலும் காமமும்.. - Page 5 Aகாதலும் காமமும்.. - Page 5 Tகாதலும் காமமும்.. - Page 5 Hகாதலும் காமமும்.. - Page 5 Iகாதலும் காமமும்.. - Page 5 Rகாதலும் காமமும்.. - Page 5 Aகாதலும் காமமும்.. - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 5 Empty Re: காதலும் காமமும்..

Post by prlakshmi Fri 4 Nov 2011 - 8:12

காதல்-அன்பு என்ற பொருளில் வருகிறது.இது இன்று பலரும் நினைக்கின்ற பொருள் கிடையாது. அன்பு-விலங்கினங்களில் தொடங்கி மனித இனம்வரை
தொடரக்கூடிய(தாய்-மகன்,மகள்-பிற உறவுநிலைகள்) அழகான சொலலாகும்.
காமம்-மலரினும் மெல்லியது-என குறிப்பிடப்படுகிறது.இது கணவன்-மனைவி என்ற நிலையில்-நோக்கப்படுவது.இதை வேறு நிலையில்பார்ப்பது தமிழ்ப்பணபாட்டு நிலைக்கு ஒவ்வாதது.கணவன்-மனைவி என்று குறிப்பிட்டாலும் ஒரு வயதிற்கு மட்டுமே நோக்கப்படவேண்டும் என்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது.காந்தியும் கணவன்,மனைவி உறவுநிலைகுறித்துத் தெளிவாக எழுியுள்ளாரே?
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 5 Empty காதல்-காமம் வித்யாசம் தெரியாத கவிதை வெளிச்சங்கள்

Post by prlakshmi Fri 4 Nov 2011 - 11:11

காதல்-காமம் வித்யாசம் தெரியாத கவிதை வெளிச்சங்கள்
முன்பொரு கவிதைகளில்
இல்லாத ஓர் உயிர்
மரிக்க தொடங்கியிருந்தது
இக்குறிப்புக்குள்...

மௌனங்கள்
வாய் விட்டு அழுகிறதென்ற
ஒரு வரம்பு மீறிய பொய்
என் விதிகளுக்கு உட்பட்டது தான்!

நெடு நேர பேச்சுக்கள்
மௌனங்களாகவே முடிந்த
இரவை என்னவென்று குறிப்பிட்டு வைக்க?

அவள் முதல் முத்தமும்
அது சார்ந்த ஈரமும்
முழு காமத்தை வித்திட்டதென
வெட்கம் விட்டு சொல்ல
முடியவில்லை எனக்கு!



அவள் காதலென நெருங்கி வந்தாள்..
நான் காமமென தள்ளி சென்றேன்...
இந்த இடைவெளியை நிரப்பிடவே
பல இரவுகளோடு சண்டையிட்டு
மண்டியிட்டிருக்கிறேன்...

பிறிதொரு நாள்
தன்னை
பெண் பார்க்க வந்ததாய் கதறியவளை
என்ன சொல்லி ஆசுவாசப்படுத்த?

ஒரு பெருத்த
ஏமாற்றம் எனக்கு!
எதற்கென தீர்மானப்பட
அவசியமும் வரவில்லை...

என் ரெண்டுங்கெட்டா மனதை
காதல் ஆட்கொண்டுவிட்ட
ஒரு மாலை கடற்கரை சந்திப்பில்...

அவள் அழைப்பிதழ் நீட்டியதும்
அலை என்னில்
நுரை துப்பிப்போனது மட்டும்
நினைவிருக்கிறது!

-ரசிகன்

நன்றி
யூத்ஃபுல் விகடன்!
http://new.vikatan.com/article.php?aid=5290&sid=151&mid=10
மனித வர்க்கத்தின்
மாமிச மனதை
கலவரப்படுத்திக் கொண்டிருக்கக்கூடும்
மூலையில் ஒரு காதலும்
முடுக்கில் ஒரு காமமும்!

எவனும் தப்பிப்பதாயில்லை...
அவளிடத்தில்
குற்றவாளியாய் சரணடைவதை விட
வேறு பேறும் பெரிதில்லை...

எவளும் சிக்குவதாயில்லை...
அவனிடத்தில்
காதலியாய் முன்மொழிவதை விட
வேறு காரணி தேவையில்லை..

காமமும் காதலும்
ஒன்று கூடும்
ஒரு வேதியியல் திருவிழா!

நிலவின் மகரந்த வீச்சில்
பூக்களின் விரிப்பில்
அவள் மார்போடு
அவன் ஊர்ந்து சாய்ந்தாட

ஒரு மனிதன்
காதல் என்கிறான்..
ஒரு மனிதன்
நண்டூருது நரியூருது என்கிறான்!


-ரசிகன்


நன்றி
வார்ப்பு
http://vaarppu.com/view/2477/
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 5 Empty Re: காதலும் காமமும்..

Post by சதாசிவம் Fri 4 Nov 2011 - 11:34

Aathira wrote:ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பெரிய அள்வில் இந்தக் கருத்துக்களம் போய்க்கொண்டிருகிறது.
திரு சதாசிவம் அவர்களே
பின்னுட்டங்களைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப் படுகிறீர்கள். ஊதுகிற சங்கு யார் எழுகிறார்கள் என்று கவலை கொள்வதில்லையே. ஏற்புடையதாக இருப்பின் ஏற்றுக்கொள்வர்.

எனக்கும் நிறைய கருத்துகள் உள்ளன. உங்களுடன் விவாதிக்க... நாளை வருகிறேன்.

குறிப்பு:
பின்னூட்டம் இடுவதும் கருத்து கூறுவதும் அவரவர் விருப்பம். ஒருவேளை இக்கருத்து அவர்கள் விரும்பாததாக இருக்கலாம். விவாதம் ஏன் என நினைத்து இத்திரியையே தவிர்த்திருக்கலாம்.
(உறவுகள் மனம் புண்படும் சொல்லாடல்களைத் தவிர்த்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் )

உங்கள் கருத்தை ஏற்கிறேன், நீங்கள் அடுத்த வரியையும் கவனிக்க வேண்டும். இது போன்ற மனநிலை தான் இந்தியாவில் பாலியல் கல்வியை தடுக்கிறது. நான் முன்பே கூறியது போல் ஈகரை உறவுகளை குறிப்பிடபடுவது என் நோக்கமல்ல? இந்தியாவில் பெரும்பாலும் இப்படிதானே உள்ளனர் என்பதை குறிக்க நான் பயன்படுத்திய சொல்லாடல் இது.

ஞான பூமி, ஞானிகள் நிறைந்த பூமி என்று கூறி எத்தனை காலம் நம்மை நாமே ஏமாற்றி கொள்வது. 100 கோடி மக்களில் 10000 ஞானிகள் கூட இந்தியாவில் இல்லை இதை வைத்து இந்தியா அறிவில் சிறந்தது என்று கூறுவதால் என்ன பயன் ? 2000 வருடம் பாரம்பரியம் மிக்க நாம் ஏன் இன்னும் வளரும் நாடுகள் பட்டியலில் இருக்கிறோம்?

பெண்கள் மதிக்கும் நாடு, பெண்கள் தெய்வங்கள் என்று கூறி எத்தனை காலம் பெண்களை கொடுமை படுத்துவது ? எத்தனை காலம் நம்மை நாமே ஏமாற்றி கொள்வது. இப்படி எதையுமே பேசாத மேலை நாடுகளில் பெண்களுக்கு இருக்கும் சுதந்திரம், உரிமை, சட்டப் பாதுகாப்பு, சமூக பாகுகாப்பு இங்கு ஏன் இல்லை?

இந்த கேள்விகளுக்கு பெருமை மட்டுமே பேசும் இந்தியனின் பதில் என்ன ?

இதற்கு ஏன் பதில் வரவில்லை?


சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 5 Empty Re: காதலும் காமமும்..

Post by கே. பாலா Fri 4 Nov 2011 - 12:17

இறைவனின் படைப்பில் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள். இந்த வித்தியாசம் தான் ஒருவர்பால் மற்றொருவரை ஈர்க்கும் கவர்ச்சியாக இருக்கிறது. இக்கவர்ச்சி ஆண்-பெண் பாலுணர்விற்கு அடித்தளமாக உள்ளது.

மனிதனுடைய பசி உணர்வு, தூக்க உணர்வு போன்ற பாலியல் உணர்வு என்பதும் குற்றமற்ற ஒன்றே. பாலுணர்வு வெறும் உணர்ச்சியாக, உடலின் இச்சையாக மட்டுமே கருதுவது கூடாது.

பாலுணர்வின் அழகை, அருமையை நன்கு உணர்ந்தவர்கள் மிகவும் குறைவு. அது அழுக்கானது. இழுக்கானது என்று எண்ணி ஒதுங்கியும், ஒதுக்கியும் வாழ்வோர் ஏராளம். இளைஞர்களுக்கு பாலுணர்வு பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்களுக்கு முறையாக அதைப்பற்றி தெரியாது என்று உறுதியாகக் கூறமுடியும்.

இளைஞர்களிடையே பாலியல் தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லை. பாலியல் குறித்து இளைஞர்கள் உரிய முறையில் அதைப்பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். வளரும் பிள்ளைகளுக்கு பாலியல் அறிவை சொல்லிக் கொடுப்பது பெற்றோரின் கடமையாகும். பிள்ளைகளின் உடலில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை பிள்ளைகளுக்கு புரியும்படி தெளிவுபடுத்துவது அவசியம்.

பாலினம் என்பது உடற்கூறு அமைப்பின் வேறுபாடுகளைக் கொண்டு மனிதர்களை ஆண்பால், பெண்பால் என வகைப்படுத்து வதாகும். பாலின வேறுபாடு பிறப்பிலேயே வருவது. இந்தப் பாலின வேறுபாடு விலங்கு, பறவை, தாவரம், மனிதன் என அனைத்து உயிரினங்களிடத்திலும் காணப்படுகின்ற ஒன்று. ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய சந்ததியை உருவாக்குவதற்காக அமைந்த இயற்கையான வேறுபாடு இது.

பாலியல் என்பது பாலினம் பற்றி கல்வி. பாலியல் கல்வி என்பது பாலினம் பற்றி தகவல் களை, செய்திகளை முறைப்படுத்தி வழங்குவதும் கற்பிப்பதும் ஆகும்.

பொதுவாக தாய், தந்தை உறவினர், ஆசிரியர், கதை, திரைப்படம், சமுதாயம் வாயிலாகப் பாலியல் கருத்துக்கள் அறிவுறுத்தப் படுகின்றன. பாலியல் கருத்துக்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும், தேவைக்கும் ஏற்ப மாற்றங் களுக்கு உட்படுகின்றன. எனவே, கல்வி நிறுவனங்கள் பாடங்களைக் கற்றுத் தருவதுடன் பாலியல் கல்வியையும் முறையாக வழங்குவது அவசியமாகிறது. அப்போதுதான் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றை நிலைநிறுத்த முடியும்.

ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் உண்டு. அதன் அடிப்படையில் பாலின கருத்துக்கள் உருவாக்கப் படுகின்றன. ஆண், பெண் இருவருக்குமான குடும்ப மற்றும் சமுதாய பொறுப்புகளும், செயல் களும் இதனடிப்படையில்தான் நிர்ணயிக்கப் படுகின்றன.

பாலியல் கல்வி என்ற உடனேயே முகத்தை சுளிக்கும் பெற்றோர்கள் உண்டு. எந்த அளவுக்கு பாலியல் குறித்த சமூகக் கட்டுப்பாடுகள், அடக்குமுறைகள் வீட்டிலும் நாட்டிலும் இருக்கின்றதோ அந்த அளவுக்கு ஆபத்துகள் பெருகும் என்பது உளவியலார்களின் எச்சரிக்கை.

பாலுணர்வு மனிதத் தன்மைக்கு தனிச் சிறப்பையும், உயர்வையும் அளிப்பதாகும். இதனை தொலைக்க முடியாத தொல்லை என நினைக்கலாம். ஆனால் ஆழ்ந்து நோக்கினால் அதுவே மனித உறவுகளுக்கெல்லாம் ஊற்று. உந்து சக்தி என்பது புரியும். பாலுணர்வு என்பது மனித உறவின் அன்புத் தேடல். மனித ஆன்மாவின் உறவு வேட்கை. அது இல்லை என்றால் பிறப்பும் இல்லை, உறவும் இல்லை.

இது மனிதனை மனிதனாக வாழ வைக்கிறது. வளர வைக்கிறது. சிக்மன்ட் பிராய்ட் டின் கருத்துப்படி பாலுணர்வு என்பது மனித இயல்புக்கே அடிப்படையான சக்தி. அதனைக் கட்டுப்படுத்தி, முறையாக நெறிப்படுத்தி, ஆக்கபூர்வமான செயல்களில் செலுத்தினால் எண்ணற்ற சாதனைகளைப் படைக்கலாம்.

பாலுணர்வை வெறுத்து, மறுத்து, அடிமனதுக்குள் புதைத்து வாழ்வது வளர்ச்சிக்கு வழிஅன்று. அது தனது ஆளுமையின் அடிப்படையான ஒரு பகுதியையே தனக்கு அன்னியமாக்கிக் கொள்வதாகும். இளைஞர்கள் பாலியலைப் பற்றி தவறான இடத்தில் தவறான நபர்கள் மூலம் தெரிந்து கொள்ளும்போது எதிர்மறையான, தவறான விளைவுகளே ஏற்படும்.

பாலுணர்வை முறையாகக் கையாண்டு நெறிப்படுத்த தெரியாதவர்களால் சமூகம் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறது. இதன் காரணமாக பாலியல் வன்முறை, விபசாரம், தகாத உறவு, தவறான பழக்க வழக்கங்கள் ஏற்படுகின்றன.

பாலியல் கல்வி குறித்த தவறான எண்ணங்களைப் போக்க வேண்டும். அது வெறும் உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட கல்வி மட்டுமல்ல. உடல் நலம் மற்றும் மனநலம் தொடர்பானதும் கூட என்பதை விளக்க வேண்டும். இளைய தலைமுறையினர் தங்கள் எதிர்காலத்தை ஆரோக்கியமானதாகவும், ஒளிமயமானதாகவும் ஆக்கிக் கொள்ள பாலியல் கல்வி உதவும்.

வெளிநாடுகளில் மாணவர்கள் மத்தியில் வன்முறைமனப்பான்மையும், பாலியல் தொடர் பான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அதே நிலை இன்று நம் நாட்டையும் மெள்ள மெள்ள தொற்றிக் கொண்டு வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

எய்ட்ஸ் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் பெருகி வரும் இச்சமயத்தில் பாலியல் கல்வியின் அவசியம் எல்லோராலும் உணரப்பட வேண்டும். இதனால் பாலியல் குற்றங்கள் இல்லாத எய்ட்ஸ் இல்லாத ஓர் ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்க முடியும்.

அதற்கான மனப்பக்குவம் அடையாத சிறுவர்களை கூட்டி வைத்து பாலியல் கல்வியை வழங்குவதாகக் கூறி அவர்களை மேலும் குழப்பக் கூடாது. பாலுணர்வு தண்டனைக்குரியது அல்ல. குற்றம் அல்ல என்றெல்லாம் ஒட்டுமொத்தமாகக் கூறுவது இளைஞர்கள் மத்தியில் தேவை யில்லாமல் உள்ள அச்சத்தைப் போக்கி அவர் களை நெறிப்படுத்துவதற்காகத்தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

பாலியல் கல்வி என்ற போர்வையில் மேற்கத்திய பாலியல் கல்வியை அறிமுகப்படுத்தி இந்தியாவின் பண்பாடு, குடும்ப முன் உதாரணங்கள் போன்றவை அழிக்கப்பட்டு விடாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் இளைய சமுதாயம் நல்ல ஒழுக்க நெறிமுறை களுடன் வாழ வழிவகுக்கும் கல்வியாக பாலியல் கல்வி மலரும்.

நன்றி : தன்னம்பிக்கை


Last edited by கே. பாலா on Fri 4 Nov 2011 - 12:55; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 5 Empty Re: காதலும் காமமும்..

Post by சதாசிவம் Fri 4 Nov 2011 - 12:40

prlakshmi wrote:காதல்-அன்பு என்ற பொருளில் வருகிறது.இது இன்று பலரும் நினைக்கின்ற பொருள் கிடையாது. அன்பு-விலங்கினங்களில் தொடங்கி மனித இனம்வரை
தொடரக்கூடிய(தாய்-மகன்,மகள்-பிற உறவுநிலைகள்) அழகான சொலலாகும்.
காமம்-மலரினும் மெல்லியது-என குறிப்பிடப்படுகிறது.இது கணவன்-மனைவி என்ற நிலையில்-நோக்கப்படுவது.இதை வேறு நிலையில்பார்ப்பது தமிழ்ப்பணபாட்டு நிலைக்கு ஒவ்வாதது.கணவன்-மனைவி என்று குறிப்பிட்டாலும் ஒரு வயதிற்கு மட்டுமே நோக்கப்படவேண்டும் என்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது.காந்தியும் கணவன்,மனைவி உறவுநிலைகுறித்துத் தெளிவாக எழுியுள்ளாரே?

கருத்து பதிந்தமைக்கு நன்றி

காதல் என்ற வார்த்தைக்கு அன்பு என்ற பொருளும் உண்டு. அன்பு மட்டுமே என்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. குறுந்தொகைப் பாடல்களில் பல இடங்களில் காமம் என்ற சொல் கையாளப்படுகிறது. இதற்கு காதல் என்று தானே பொருள் படுகிறது.

ஒரு வயதிற்கு மேல் காமம் தேவையில்லை என்று ஆன்மிக ஆய்வாளர்கள், பண்பாட்டு ஆய்வார்கள் கூறுகிறார்கள், ஆனால் பாலியல் மருத்துவர்கள் இதை ஒத்துக்கொள்வதில்லை.

ஆன்மீகவாதிகள், ஞானிகள் உறவுகளுக்கு இருப்பது சிற்றின்பம் (தாய், மகள், அம்மா, அம்மா , கணவன், மனைவி) என்றும், இது வீடு பேருக்கு வழிவகுக்காது என்றும் கூறுகிறார்கள். ஆதலால் உறவை நம்மால் துறக்க முடியுமா? . பாசம் என்ற வார்த்தைக்கு கட்டுவது என்று தானே பொருள். பாசக்கயிறு என்றால் உயிரை கட்டி செல்லும் கயிறு என்று தானே ஆன்மிகம் பொருள் கூறுகிறது. பாசத்தை அறுத்தால் தான் இறைவனை அடைய முடியும் என்று தானே கூறுகிறார்கள்.

காந்தியும் தன் சத்திய சோதனையில் காமத்தில் சிக்கி தவித்திருந்ததை கூறி இருக்கிறாரே? இந்த உண்மையை நாம் ஏன் உணரவில்லை?
மகாத்துமாவுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனித ஆத்மா என்ன செய்யும்.

சில கருத்துக்களை நாம் பன்பாட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது? இதை நான் முழு மனதுடன் ஒத்துக்கொள்கிறேன். நாம் ஏற்றுக் கொள்ளாதலால் இப்படி ஒன்று இல்லை என்பதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.


சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 5 Empty Re: காதலும் காமமும்..

Post by சதாசிவம் Fri 4 Nov 2011 - 12:53

கபாலி wrote:சதா சிவம் கூறியதில் தவறேதும் இல்லை.

ஈகரை உறவுகள் என்பதற்காக வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு அளிக்கவும் தேவை இல்லை.

நாலுவரி ஜோக்குக்கும் அரட்டைக்கும் மட்டுமே இங்கே கூட்டம் கூடுகிறது என்னும் உண்மையை ஏற்க வலிமை வேண்டும்.

இது போன்ற அறிவுபூர்வமான விவாதத்தில் அனைவரும் கலந்து கொள்ள மறுப்பது விருப்பமா இல்லையா என்பதை விட அவரவர் உளப்பாங்கு இதன் மூலம் வெளிப்படுகிறது என்பதை ஏன் ஏற்க மறுக்கவேண்டும் என்று புரியவில்லை.

கூட்டம் இருந்தால் அவை கூடி அடிக்கும் அரட்டை இருந்தால் போதும் என்ற மனப்பான்மையே அடிப்படையில் தவறு என்பதை எப்படி புரியவைப்பது..? சோகம்

இந்த அழகுக்கு வேண்டாத வரிந்துகட்டிக்கொண்டு வந்த ஆதரவு வேறு சோகம்

ஹூம்.. நல்ல பதிவுகளுக்காக மட்டுமே வரும் சிலரை மட்டும் அவமதிக்கலாமா என்னும் கேள்வி கூட என் இந்தப் பதிவுக்குப் பின் எழத்தான் போகிறது.

- தீர்க்க தரிசி

நன்றி கபாலி
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 5 Empty Re: காதலும் காமமும்..

Post by ayyamperumal Fri 4 Nov 2011 - 13:25

"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".

மேற்கத்திய உளவியல் அறிஞர் சிக்மெண்ட் பிரய்டின் இந்த கூற்று, ஏற்றுக்கொள்ள முடியாதது. ( எங்களால் , அதாவது உலகயுத , நுகர்வு கலாச்சாரத்தை வெறுப்பவர்களால் ) இந்த விவாதம் ஆன்மீகம் வரை சென்றுவிட்டது.
கொஞ்சம் சிரித்துக்கொள்கிறேன் . ஏனென்றால் சில வேளைகளில் சிரிப்பதும் , சில வேளைகளில் இருமுவதும் , என் சொந்த வீட்டிற்குள் செல்லும் போதுகூட செருமிக்கொண்டே உள் நுழைவதும் எங்கள் மரபியல் கூறு சார்ந்தது.
இது மனதிற்கு சட்டை போட்டுபார்க்கும் குணம் என்று கூறப்படுகிறது. இருக்கட்டும். அது உண்மைதான். நாங்கள் எங்கள் மனதிற்கு சட்டை மட்டும் தான் போட்டு பார்க்கிறோம். அது நெறி சார்ந்தது.

மேற்க்கத்திய உளவியல் அறிஞர்களோ , மக்களோ, அல்லது அவர்களின் கருத்தை உயர்வு என்று ஏற்றுக்கொள்கிற லட்சியத்தின் பிரதிநிதிகளோ அல்லது நம் பண்பாடு தாழ்ந்துவிட்டது அதை உயர்த்தவேண்டும் அதற்காக நாம் பிறரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று கூறுகிற சதாசிவம் அய்யா போன்றவர்களோ இன்னொன்றை புரிந்துகொள்ள வேண்டும்.

மேற்க்கத்திய மனங்கள் அவர்களுக்கு மனம் என்பதெல்லாம் முக்கியம் இல்லை அவர்களது அறிவோ சட்டை போடுகிறது.சட்டைமட்டுமல்ல கோட்டும் போட்டிருக்கிறது. கூடவே டை யும் கட்டியிருக்கிறது.

அவர்களின் உளவியல் கருத்து மாறுபடக்கூடிய , பொய் என்று நிரூபிக்க கூடிய அறிவியலை மையமாக வைத்து வருவது. அதற்கு மனங்களின் பகுப்பியல் என்று சட்டை போட்டு நிறுத்துகிறார்கள். அது இந்தியா போன்ற கீழை நாடுகளில் இருந்து திருடப்பட்டது. மேலும் இந்தியர்களின் , கீழை நாட்டவரின் கருத்துகளுக்கு எதிராக இருப்பதுதான் உயர்வு என்கிற அவர்களின் மனோபாவத்தை மறைப்பதற்காக கோட்டும் போட்டு நிறுத்த படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அதுதான் உயர்ந்தது , இதையே ஏற்றோக் கொள்வோம் என்று எல்லோரையும் மயக்குவாத்ற்காக டை யும் கட்டி நிறுத்த படுகிறது.

மனங்களுக்கு நெறிசார்ந்த சட்டை போட்டு செல்பவன் உயர்ந்த பண்பாட்டிற்கு சொந்த காரணா ? அல்லது உடலியல் இன்பம் தான் முக்கியம் என்று கூறிவருகிற மரபு சார்ந்தவன் , தான் எண்ணங்களுக்கு சட்டை , கோட்டு . டை , போதாக்குறைக்கு ஹார்மோன் அரிதாரம் இவையெல்லாம் பூசி வருகிறவன் உயர்ந்த பண்பாட்டிற்கு சொந்தக்காரணா ?




காதலும் காமமும்.. - Page 5 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 5 Empty Re: காதலும் காமமும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum