Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !
+10
உதயசுதா
ராஜா
பது
நட்புடன்
பிரசன்னா
பிளேடு பக்கிரி
இளமாறன்
Aathira
சிவா
கேசவன்
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !
First topic message reminder :
1950 ஆம் வருடம் திபெத் என்ற சின்னஞ்சிறு மலை நாட்டை சீனா என்ற மஞ்சள் நாகம் விழுங்கி ஏப்பம் இட்டது உலகில் ஜனநாயகத்தை பற்றி வாய்கிழிய பேசுகின்ற எந்த நாடும் இந்த சின்ன நாடு தனது சுதந்திரத்தை பலி கொடுத்ததை பற்றி வாய்திறக்க வில்லை பல கண்டுகொள்ளவே இல்லை
சீன நினைத்திருந்தால் பொதுவுடமை புரட்சி வெற்றி பெற்றவுடனேயே திபெத்தை ஆக்கிரமித்திருக்கலாம் ஆனால் அது நடக்கவில்லை இத்தனை ஆண்டுகள் கழித்து திபெத்தை கபளீகரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? சீனாவிற்கு பெரும் ஆபத்தை கொடுக்கும் அளவிற்கு திபெத் என்ன அத்தனை பலசாலியா இந்த ராணுவ நடவடிக்கைக்கு பின்னே எதோ ஒரு பெரிய திட்டம் இருக்க வேண்டும் அது என்ன என்று யோசித்த ஒரே மனிதன் அப்போது இந்தியாவின் துணை பிரதமந்திரியாகவும் உள்துறை மந்திரியாகவும் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் மட்டும் தான் ஆனால் அந்த தேச நலனை உயிர் மூச்சாக கொண்ட உன்னத மனிதரின் சந்தேகத்தை எந்த தலைவர்களும் காது கொடுத்து கேட்க வில்லை நாட்டு பிரதமமந்திரி நேரு சொன்னார் இந்தியாவும் சீனாவும் சகோதரர்கள் இருவரும் ஒருவர்க்கொருவரை எப்போதுமே தாக்க மாட்டார்கள் என்று நேரு பேச்சு ஊரெல்லாம் எதிரொலித்து உண்மை குரலை மங்க செய்துவிட்டது
இந்திய ராணுவ தளபதி கே.எஸ்.திம்மையா சீனாவின் முகம் புத்தனை போல் கருணையானது அல்ல அசுரனை போல் கொடுமையானது எனவே இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென எச்சரித்து பார்த்தார் அதிகார பீடத்தில் அமர்ந்தவர்கள் சீனாவாவது இந்தியாவை தாக்குவதாவது என்று கேலி பேசி சிரித்தார்கள் அபாயத்தை உணராமல் உல்லாசமாக நடந்தார்கள் 1959 ல் அப்போதைய ராணுவ தளபதி பி.பி.எஸ் தோரட் இன்னும் இரண்டு ஆண்டுகளில் சீனாவின் தாக்குதல் இந்தியாவின் மீது நிகழ வாய்ப்புள்ளது எனவே எல்லை புறங்களை சரியான முறையில் வலுவாக்க வேண்டுமென்று நேருவிடம் முறையிட்டார்
ராணுவ தளபதிகள் மட்டுமல்ல இந்திய உளவு துறையும் தலைமை அமைச்சரை எச்சரித்தது அசட்டையான போக்கு தேச பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல என்று இடித்துரைக்கவும் செய்தது ஆனால் நம் நாடு பெற்ற பெரிய சாபம் உண்மையை சொன்னால் நம்ப மாட்டோம் கற்பனையான உணர்வுகளை தூண்டிவிட்டால் அதை நம்பி ஆட்டம் போடுவோம் பகலில் கூட கனவும் காணுவோம்
அப்போதும் அது தான் நடந்தது உலகத்தையே திரும்பி பார்க்க செய்யும் பஞ்சசீல கொள்கையை உருவாக்கி இருக்கிறேன் உலக நாடுகள் அனைத்திலும் அமைதி புறாக்கள் மட்டுமே பறப்பதற்கு பாடுபட்டு கொண்டிருக்கிறேன் எனது எண்ணத்திற்கு இசைந்து சீனா கையெழுத்தும் போட்டு தந்திருக்கிறது அப்படி பட்ட சீனாவை சந்தேகிப்பது மாபெரும் துரோகம் அதை நான் செய்யவே மாட்டேன் என்று நேரு உணர்ச்சி பொங்க வீர வசனம் பேசினார் ரோஜாவின் ராஜாவான அவரின் இனிய குரல் கேட்டு நாட்டு மக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து வரேவேற்றனர்
ஆனால் நடந்தது என்ன 1962 ஆம் வருடம் சீனா இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தியது பல ஆயிர கணக்கான கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள நம் தாய் பூமி அந்நியர் வசமானது எதிர்த்து நிற்க கூட வலு இல்லாமல் நமது ராணுவம் தோல்வியை தழுவியது பஞ்சசீலம் பேசியவர்கள் நெஞ்சடைத்து நின்றார்கள் ஆனாலும் என்ன பயன் பட்ட தோல்வி பட்டது தான் விட்ட பூமி விட்டது தான்
இவ்வளவு பெரிய அவமானத்தை தோல்வியை இழப்பை சந்தித்த பிறகாவது சீனா என்ற மஞ்சள் நாகத்திடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா? சீனாவின் வாயிலிருந்து வருகின்ற வார்த்தை ஒன்றாக இருக்கும் அதன் செய்யல் வேறொன்றாக இருக்கும் என்பதை உணரவேண்டாமா? சீனா ஒரு அடி அடித்தால் மறு அடியை திருப்பி கொடுக்கும் அளவிற்கு நாம் வலுவாக எல்லை புறத்தை பாதுகாக்க வேண்டாமா?
அன்று நேருவிடம் சொல்லிய அனைத்து எச்சரிக்கை மொழிகளை அவர் எப்படி காதில் வாங்காமல் காலில் போட்டு மிதித்தாரோ அதே போலவே கடந்த எழு வருடமாக இந்திய அரசு சீனாவை பற்றிய எச்சரிக்கை மொழியை கேட்கும் போதெல்லாம் செவிடாக இருக்கிறது அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கண்ணில் பட்டாலும் பார்க்கவே மாட்டேன் என்று குருடாக இருக்கிறது சீனவை கண்டித்து ஒரு சொல் கூட சொல்லமாட்டேன் என்று ஊமையாக இருக்கிறது
இந்த விஷயம் சோனியாவின் அடுப்பங்கரை சம்பந்தப்பட்டது மன்மோகன்சிங்கின் குளியலறை சம்பந்தப்பட்டது என்றால் நாம் யாரும் அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை ஆனால் இது இந்த நாட்டின் பாதுகாப்பு பிரச்சனை இந்த நாட்டின் மண் களவு போகாமல் தடுக்கும் பிரச்சனை தாய் நாட்டின் சுதந்திரத்திற்கு உலை வைக்கும் பிரச்சனை அதனால் நாட்டை நேசிக்கும் எவரும் போனால் போகட்டும் என்று விட்டுவிட முடியாது
பேரறிஞன் சாணக்கியன் இரண்டு பெரிய நாடுகள் சேர்ந்து பங்காளிகளாக அண்டை வீட்டுக்காரர்களாக இருக்க முடியுமே தவிர ஒரு போதும் நண்பர்களாக இருக்க முடியாது என்று சொல்வான் இது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை மட்டும் அல்ல வரலாற்று பூர்வமான ஆதாரமும் ஆகும் ஆசிய பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் மிகப்பெரும் நாடுகள் சீனா ஓரளவு பொருளாதார வல்லரசாக வளர்ந்து வருகிறது தட்டு தடுமாறி இந்தியாவும் அந்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது
நான் வலுவானவனாக வளமானவனாக இருந்து விட்டால் என் தம்பியை என்னையும் விட பெரியவனாக ஆக்கி பார்க்க விரும்ப மாட்டேன் அவன் வளர்ந்து விட்டால் என்னை மதிக்க மாட்டான் மாறாக என் வளர்ச்சிக்கு இடைஞ்சலாக இருப்பான் என்று தான் என்னால் நினைக்க முடியும் இது தான் மனிதனின் அடிப்படை சுபாவம் இது மனிதக்கு மட்டுமல்ல மனிதனால் ஆளப்படுகின்ற நாடுகளுக்கும் பொருந்தும்
உலக சந்தையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது என்றால் அது நிச்சயம் சீனாவை பாதிக்கும் இந்தியர்கள் அவ்வளவு சீக்கிரம் பொருட்களை உற்பத்தி செய்ய மாட்டார்களே தவிர செய்ய ஆரம்பித்து விட்டால் ஓரளவு உருப்படியான பொருட்களை தயாரிப்பார்கள் இது சீனர்களால் ஆகாத விஷயம் நாலணாவிற்கு காற்றாடி செய்து பதினாறு அணாவிற்கு விற்க நினைப்பவன் சீனாகாரன் அவனால் தனக்கு வரும் நஷ்டத்தை தாங்கிகொள்ளவே முடியாது எனவே யாரால் துன்பம் வருமென்று அவன் நினைக்கிறானோ அவர்களுக்கு எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு தொல்லை கொடுப்பது தான் சீனாவில் இயல்பு
பாகிஸ்தான் நரிக்கு பல்தேய்த்து விட்டும் மியான்மர் ஆட்டுக்கு கொம்பு சீவி விட்டும் இலங்கை முயலுக்கு வாலில் கத்தியை கட்டிவிட்டும் சீனா இந்தியாவிற்கு மீண்டும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டது வெளியில் இருந்து சதி வேலை பார்ப்பதோடு மட்டும் அல்ல உள்நாட்டிலும் குழப்பங்களையும் கலவரங்களையும் தூண்டிவிட பொதுவுடைமை தீவிரவாதிகளை ஊக்குவித்ததும் வருகிறது
இந்தியாவின் ஒரு பகுதியான அருணாச்ச பிரதேசத்தின் முற்றிலுமாக ஊடுருவி அந்த பகுதியை சிறிது சிறிதாக ஆக்ரமிக்கும் வேலையையும் துவங்கி விட்டது ஒளிவு மறைவு இல்லாமல் அருணாச்சல பிரதேசம் சீனாவிற்கு சொந்தமானது என்று சொல்லியும் சாலைகளை போடுகின்ற பணியையும் துவங்கி விட்டது இதை விட அபாயகரமாக அந்த பகுதி மக்களை நீங்கள் சீனர்களை போல தோற்றமுடையவர்களாக இருப்பதனால் நீங்கள் இந்தியர் அல்ல சீனர்களே என்று மூளை சலவை செய்யும் கோயபல்ஸ் வேலையையும் ஆரம்பித்து விட்டது
இவைகள் எல்லாம் திரைமறைவில் நடக்க வில்லை பகிரங்கமாகவே நடக்கிறது ஆனாலும் நமது இந்திய அரசு கும்பகர்ண உறக்கத்திலேயே இருக்கிறது எது நடந்தால் என்ன யார்வீடு கொள்ளை போனால் என்ன என் கல்லாபெட்டி நிறைகிறதா அது போதும் என்ற எண்ணத்தில் இந்திய தலைவர்கள் நடந்து கொள்கிறார்களே தவிர தேசத்திற்கு ஏற்பட்டு கொண்டிருக்கும் அபாயத்தை பற்றி யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை எதோ ஒரு சிலர் கவலையோடு நிலைமையை எடுத்து சொன்னால் அதை காதில் வாங்கவும் யாரும் தயாராக இல்லை
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய போனவன் போல் சீனா பாம்பு இந்தியாவை முழுமையாக சுற்றி வளைத்து நெருக்கிய பிறகு கத்தி கூப்பாடு போடுவதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை கடிக்க வரும் பாம்பை அடிப்பதை விட்டு விட்டு அழகு பார்த்த கதையாக ஆகி விடும் இன்றைய இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக அடிப்படை வாதங்களுக்கு எதிராக தீவிரவாதத்திற்கு எதிராக தங்களது மனபோக்கை வளர்த்து வருவது நல்ல அறிகுறி இவைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து செல்பவர்கள் சீன அச்சுறுத்தலையும் கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும் எதிர்கால சமூகம் அவர்களை கையெடுத்து கும்பிடும்.
நன்றி : ujiladevi.blogspot.com
1950 ஆம் வருடம் திபெத் என்ற சின்னஞ்சிறு மலை நாட்டை சீனா என்ற மஞ்சள் நாகம் விழுங்கி ஏப்பம் இட்டது உலகில் ஜனநாயகத்தை பற்றி வாய்கிழிய பேசுகின்ற எந்த நாடும் இந்த சின்ன நாடு தனது சுதந்திரத்தை பலி கொடுத்ததை பற்றி வாய்திறக்க வில்லை பல கண்டுகொள்ளவே இல்லை
சீன நினைத்திருந்தால் பொதுவுடமை புரட்சி வெற்றி பெற்றவுடனேயே திபெத்தை ஆக்கிரமித்திருக்கலாம் ஆனால் அது நடக்கவில்லை இத்தனை ஆண்டுகள் கழித்து திபெத்தை கபளீகரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? சீனாவிற்கு பெரும் ஆபத்தை கொடுக்கும் அளவிற்கு திபெத் என்ன அத்தனை பலசாலியா இந்த ராணுவ நடவடிக்கைக்கு பின்னே எதோ ஒரு பெரிய திட்டம் இருக்க வேண்டும் அது என்ன என்று யோசித்த ஒரே மனிதன் அப்போது இந்தியாவின் துணை பிரதமந்திரியாகவும் உள்துறை மந்திரியாகவும் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் மட்டும் தான் ஆனால் அந்த தேச நலனை உயிர் மூச்சாக கொண்ட உன்னத மனிதரின் சந்தேகத்தை எந்த தலைவர்களும் காது கொடுத்து கேட்க வில்லை நாட்டு பிரதமமந்திரி நேரு சொன்னார் இந்தியாவும் சீனாவும் சகோதரர்கள் இருவரும் ஒருவர்க்கொருவரை எப்போதுமே தாக்க மாட்டார்கள் என்று நேரு பேச்சு ஊரெல்லாம் எதிரொலித்து உண்மை குரலை மங்க செய்துவிட்டது
இந்திய ராணுவ தளபதி கே.எஸ்.திம்மையா சீனாவின் முகம் புத்தனை போல் கருணையானது அல்ல அசுரனை போல் கொடுமையானது எனவே இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென எச்சரித்து பார்த்தார் அதிகார பீடத்தில் அமர்ந்தவர்கள் சீனாவாவது இந்தியாவை தாக்குவதாவது என்று கேலி பேசி சிரித்தார்கள் அபாயத்தை உணராமல் உல்லாசமாக நடந்தார்கள் 1959 ல் அப்போதைய ராணுவ தளபதி பி.பி.எஸ் தோரட் இன்னும் இரண்டு ஆண்டுகளில் சீனாவின் தாக்குதல் இந்தியாவின் மீது நிகழ வாய்ப்புள்ளது எனவே எல்லை புறங்களை சரியான முறையில் வலுவாக்க வேண்டுமென்று நேருவிடம் முறையிட்டார்
ராணுவ தளபதிகள் மட்டுமல்ல இந்திய உளவு துறையும் தலைமை அமைச்சரை எச்சரித்தது அசட்டையான போக்கு தேச பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல என்று இடித்துரைக்கவும் செய்தது ஆனால் நம் நாடு பெற்ற பெரிய சாபம் உண்மையை சொன்னால் நம்ப மாட்டோம் கற்பனையான உணர்வுகளை தூண்டிவிட்டால் அதை நம்பி ஆட்டம் போடுவோம் பகலில் கூட கனவும் காணுவோம்
அப்போதும் அது தான் நடந்தது உலகத்தையே திரும்பி பார்க்க செய்யும் பஞ்சசீல கொள்கையை உருவாக்கி இருக்கிறேன் உலக நாடுகள் அனைத்திலும் அமைதி புறாக்கள் மட்டுமே பறப்பதற்கு பாடுபட்டு கொண்டிருக்கிறேன் எனது எண்ணத்திற்கு இசைந்து சீனா கையெழுத்தும் போட்டு தந்திருக்கிறது அப்படி பட்ட சீனாவை சந்தேகிப்பது மாபெரும் துரோகம் அதை நான் செய்யவே மாட்டேன் என்று நேரு உணர்ச்சி பொங்க வீர வசனம் பேசினார் ரோஜாவின் ராஜாவான அவரின் இனிய குரல் கேட்டு நாட்டு மக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து வரேவேற்றனர்
ஆனால் நடந்தது என்ன 1962 ஆம் வருடம் சீனா இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தியது பல ஆயிர கணக்கான கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள நம் தாய் பூமி அந்நியர் வசமானது எதிர்த்து நிற்க கூட வலு இல்லாமல் நமது ராணுவம் தோல்வியை தழுவியது பஞ்சசீலம் பேசியவர்கள் நெஞ்சடைத்து நின்றார்கள் ஆனாலும் என்ன பயன் பட்ட தோல்வி பட்டது தான் விட்ட பூமி விட்டது தான்
இவ்வளவு பெரிய அவமானத்தை தோல்வியை இழப்பை சந்தித்த பிறகாவது சீனா என்ற மஞ்சள் நாகத்திடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா? சீனாவின் வாயிலிருந்து வருகின்ற வார்த்தை ஒன்றாக இருக்கும் அதன் செய்யல் வேறொன்றாக இருக்கும் என்பதை உணரவேண்டாமா? சீனா ஒரு அடி அடித்தால் மறு அடியை திருப்பி கொடுக்கும் அளவிற்கு நாம் வலுவாக எல்லை புறத்தை பாதுகாக்க வேண்டாமா?
அன்று நேருவிடம் சொல்லிய அனைத்து எச்சரிக்கை மொழிகளை அவர் எப்படி காதில் வாங்காமல் காலில் போட்டு மிதித்தாரோ அதே போலவே கடந்த எழு வருடமாக இந்திய அரசு சீனாவை பற்றிய எச்சரிக்கை மொழியை கேட்கும் போதெல்லாம் செவிடாக இருக்கிறது அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கண்ணில் பட்டாலும் பார்க்கவே மாட்டேன் என்று குருடாக இருக்கிறது சீனவை கண்டித்து ஒரு சொல் கூட சொல்லமாட்டேன் என்று ஊமையாக இருக்கிறது
இந்த விஷயம் சோனியாவின் அடுப்பங்கரை சம்பந்தப்பட்டது மன்மோகன்சிங்கின் குளியலறை சம்பந்தப்பட்டது என்றால் நாம் யாரும் அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை ஆனால் இது இந்த நாட்டின் பாதுகாப்பு பிரச்சனை இந்த நாட்டின் மண் களவு போகாமல் தடுக்கும் பிரச்சனை தாய் நாட்டின் சுதந்திரத்திற்கு உலை வைக்கும் பிரச்சனை அதனால் நாட்டை நேசிக்கும் எவரும் போனால் போகட்டும் என்று விட்டுவிட முடியாது
பேரறிஞன் சாணக்கியன் இரண்டு பெரிய நாடுகள் சேர்ந்து பங்காளிகளாக அண்டை வீட்டுக்காரர்களாக இருக்க முடியுமே தவிர ஒரு போதும் நண்பர்களாக இருக்க முடியாது என்று சொல்வான் இது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை மட்டும் அல்ல வரலாற்று பூர்வமான ஆதாரமும் ஆகும் ஆசிய பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் மிகப்பெரும் நாடுகள் சீனா ஓரளவு பொருளாதார வல்லரசாக வளர்ந்து வருகிறது தட்டு தடுமாறி இந்தியாவும் அந்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது
நான் வலுவானவனாக வளமானவனாக இருந்து விட்டால் என் தம்பியை என்னையும் விட பெரியவனாக ஆக்கி பார்க்க விரும்ப மாட்டேன் அவன் வளர்ந்து விட்டால் என்னை மதிக்க மாட்டான் மாறாக என் வளர்ச்சிக்கு இடைஞ்சலாக இருப்பான் என்று தான் என்னால் நினைக்க முடியும் இது தான் மனிதனின் அடிப்படை சுபாவம் இது மனிதக்கு மட்டுமல்ல மனிதனால் ஆளப்படுகின்ற நாடுகளுக்கும் பொருந்தும்
உலக சந்தையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது என்றால் அது நிச்சயம் சீனாவை பாதிக்கும் இந்தியர்கள் அவ்வளவு சீக்கிரம் பொருட்களை உற்பத்தி செய்ய மாட்டார்களே தவிர செய்ய ஆரம்பித்து விட்டால் ஓரளவு உருப்படியான பொருட்களை தயாரிப்பார்கள் இது சீனர்களால் ஆகாத விஷயம் நாலணாவிற்கு காற்றாடி செய்து பதினாறு அணாவிற்கு விற்க நினைப்பவன் சீனாகாரன் அவனால் தனக்கு வரும் நஷ்டத்தை தாங்கிகொள்ளவே முடியாது எனவே யாரால் துன்பம் வருமென்று அவன் நினைக்கிறானோ அவர்களுக்கு எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு தொல்லை கொடுப்பது தான் சீனாவில் இயல்பு
பாகிஸ்தான் நரிக்கு பல்தேய்த்து விட்டும் மியான்மர் ஆட்டுக்கு கொம்பு சீவி விட்டும் இலங்கை முயலுக்கு வாலில் கத்தியை கட்டிவிட்டும் சீனா இந்தியாவிற்கு மீண்டும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டது வெளியில் இருந்து சதி வேலை பார்ப்பதோடு மட்டும் அல்ல உள்நாட்டிலும் குழப்பங்களையும் கலவரங்களையும் தூண்டிவிட பொதுவுடைமை தீவிரவாதிகளை ஊக்குவித்ததும் வருகிறது
இந்தியாவின் ஒரு பகுதியான அருணாச்ச பிரதேசத்தின் முற்றிலுமாக ஊடுருவி அந்த பகுதியை சிறிது சிறிதாக ஆக்ரமிக்கும் வேலையையும் துவங்கி விட்டது ஒளிவு மறைவு இல்லாமல் அருணாச்சல பிரதேசம் சீனாவிற்கு சொந்தமானது என்று சொல்லியும் சாலைகளை போடுகின்ற பணியையும் துவங்கி விட்டது இதை விட அபாயகரமாக அந்த பகுதி மக்களை நீங்கள் சீனர்களை போல தோற்றமுடையவர்களாக இருப்பதனால் நீங்கள் இந்தியர் அல்ல சீனர்களே என்று மூளை சலவை செய்யும் கோயபல்ஸ் வேலையையும் ஆரம்பித்து விட்டது
இவைகள் எல்லாம் திரைமறைவில் நடக்க வில்லை பகிரங்கமாகவே நடக்கிறது ஆனாலும் நமது இந்திய அரசு கும்பகர்ண உறக்கத்திலேயே இருக்கிறது எது நடந்தால் என்ன யார்வீடு கொள்ளை போனால் என்ன என் கல்லாபெட்டி நிறைகிறதா அது போதும் என்ற எண்ணத்தில் இந்திய தலைவர்கள் நடந்து கொள்கிறார்களே தவிர தேசத்திற்கு ஏற்பட்டு கொண்டிருக்கும் அபாயத்தை பற்றி யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை எதோ ஒரு சிலர் கவலையோடு நிலைமையை எடுத்து சொன்னால் அதை காதில் வாங்கவும் யாரும் தயாராக இல்லை
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய போனவன் போல் சீனா பாம்பு இந்தியாவை முழுமையாக சுற்றி வளைத்து நெருக்கிய பிறகு கத்தி கூப்பாடு போடுவதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை கடிக்க வரும் பாம்பை அடிப்பதை விட்டு விட்டு அழகு பார்த்த கதையாக ஆகி விடும் இன்றைய இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக அடிப்படை வாதங்களுக்கு எதிராக தீவிரவாதத்திற்கு எதிராக தங்களது மனபோக்கை வளர்த்து வருவது நல்ல அறிகுறி இவைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து செல்பவர்கள் சீன அச்சுறுத்தலையும் கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும் எதிர்கால சமூகம் அவர்களை கையெடுத்து கும்பிடும்.
நன்றி : ujiladevi.blogspot.com
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் ! - Page 2 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் ! - Page 2 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் ! - Page 2 Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் ! - Page 2 Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !
இன்னொரு திறமையான தலைமை வந்தால் தான் நாம் நாட்டை காப்பாற்ற முடியும். பொம்மை மன்மோகன் சிங் அரசு போல இன்னொரு முறை வந்தால் இந்தியா என்ற ஒரு நாட இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது.கேட்டா பொருளாதார மேதை ன்னு சொல்லிக்கிராணுக. ஒன்னுத்துக்கும் துப்பு இல்லாதவனுகா.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !
உதயசுதா wrote:இன்னொரு திறமையான தலைமை வந்தால் தான் நாம் நாட்டை காப்பாற்ற முடியும். பொம்மை மன்மோகன் சிங் அரசு போல இன்னொரு முறை வந்தால் இந்தியா என்ற ஒரு நாட இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது.கேட்டா பொருளாதார மேதை ன்னு சொல்லிக்கிராணுக. ஒன்னுத்துக்கும் துப்பு இல்லாதவனுகா.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !
இன்றைய தேதியில், சீன இராணுவ பலம் நம்மைவிட மிக அதிகம்..
போர் மூண்டால் இந்தியா கடும் விளைவுகளைச் சந்திக்கும்.. அதை வைத்து அரசியல் நடக்கும்.. வரும் தேர்தலில் ஆளும்கட்சி அதல்பாதாளத்துக்குப் போய்விடும்..
இப்போ சொல்லுங்க.. எப்படி இந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்..? எது முக்கியம்..? சம்பாதிப்பதா..? சண்டை போடுவதா..?
போர் மூண்டால் இந்தியா கடும் விளைவுகளைச் சந்திக்கும்.. அதை வைத்து அரசியல் நடக்கும்.. வரும் தேர்தலில் ஆளும்கட்சி அதல்பாதாளத்துக்குப் போய்விடும்..
இப்போ சொல்லுங்க.. எப்படி இந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்..? எது முக்கியம்..? சம்பாதிப்பதா..? சண்டை போடுவதா..?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் ! - Page 2 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் ! - Page 2 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் ! - Page 2 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் ! - Page 2 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
Re: இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !
ராஜா wrote:இவனுங்கள பிடித்துக்கொண்டு போனால் அப்புறம் சீனா இந்தியாவாயிடும் , இந்தியா சீனாவாயிடும்நல்ல ஐடியா
ஹி.. ஹி..!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ஆனா சீனாகாரய்ங்க இதைப்பற்றி சிந்திக்கமாட்டாய்ங்கன்னா நினைக்கிறீங்க..?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் ! - Page 2 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் ! - Page 2 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் ! - Page 2 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் ! - Page 2 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
Re: இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !
வீ.கே. கிருஷன் மேனன் விட்டு சென்ற வெளியுறவு கொள்கை இன்னும் மாறவில்லை!!! உள் நாட்டு அரசியல்வாதிகளுக்கு பொருள் ஈட்ட நேரம் போதியதாக இல்லை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !
நம்மிடம் அவர்களை எதிர்க்கும் அளவுக்கு படை பலம் இல்லையா...ARR wrote:இன்றைய தேதியில், சீன இராணுவ பலம் நம்மைவிட மிக அதிகம்..
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இந்தியாவை விரைவில் சீனா தாக்கும் !
ரா.ரமேஷ்குமார் wrote:நம்மிடம் அவர்களை எதிர்க்கும் அளவுக்கு படை பலம் இல்லையா...ARR wrote:இன்றைய தேதியில், சீன இராணுவ பலம் நம்மைவிட மிக அதிகம்..![]()
![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியாவை தாக்கும் கொடூர நோய்!
» இந்தியாவை தாக்கும் கொடூர நோய்!
» இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா...
» இந்தியாவை அச்சுறுத்த 1,000 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சீன தயாரிப்பு
» இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை
» இந்தியாவை தாக்கும் கொடூர நோய்!
» இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா...
» இந்தியாவை அச்சுறுத்த 1,000 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சீன தயாரிப்பு
» இந்தியாவை அலட்சியப்படுத்தினால் ஆபத்து' சீனா எச்சரிக்கை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|