ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை )

+3
இளமாறன்
ஹர்ஷித்
ayyamperumal
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Empty சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை )

Post by ayyamperumal Sat Oct 29, 2011 12:53 pm




பொதிகை தொலைக்காட்சியில் வெளிச்சத்தின் மறுபக்கம் என்கிற நிகழ்ச்சி , மக்கள் தொலைகாட்சியில் இவர்கள் என்கிற நிகழ்ச்சி , இவைமட்டுமல்ல பிரபலமான சில தொலைக்காட்சிகளுக்கும் இவர் குரல் பரிட்சையம். வெறும் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்து , சமூகத்தின் இருளில் மறைந்துகிடந்த சோக கதைகளை ,மற்றவர்கள் புறக்கணித்த அவலங்களை , எல்லோரும் வெறுப்பவர்களை எல்லாவற்றையும் வெளிச்சத்தின் மறுபக்கம் என்கிற நிகழ்ச்சியில் உலகிற்கு எடுத்துரைத்து , நம்மை உண்மைகளை உணரச்செய்தவர்,.
வீகேடி. பாலன். அவர்கள் தாகம் இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளை சொல்ல துடிக்குது மனசு என்கிற தலைப்பில் புத்தகமாய் எழுதியிருக்கிறார். அதில் இருந்த ஒரு கட்டுரை இதோ உங்களுக்காக ...........................





இவர்கள் பிறக்க என்ன காரணம் என்று மருத்துவத்துறை சொல்கின்ற உண்மை என்ன என்றால், ரத்த சொந்தங்களுக்குள் திருமணம் முடிபப்தால் , நெருங்கிய ரத்த ஒற்றுமையின் காரணமாக இத்தகைய குழந்தைகள் பிறக்கின்றனர் என்பதுதான் . ஒரே தாய் வழியில் பிறந்த அண்ணன் , தங்கையின் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு திருமணம் முடிப்பது , சித்தப்பா , பெரியப்பா குழந்தைகளுக்குள் திருமணம் முடிப்பது போன்றவற்றை மருத்துவர்கள் தவிர்க்க சொல்கிறார்கள்.

சித்தப்பா பெரியப்பா குழந்தைகளுக்கிடையே திருமணமா ? என உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கக்கூடும். இன்றும் கூட திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இந்த நடைமுறை இருக்கத்தான் செய்கிறது.அத்தகைய உறவு முறைகளால் தான் இத்தகைய மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதாக கூறுகிறார்கள். குடும்ப சொத்து வெளியே போய்விட கூடாது என்பதை தவிர வேறு எந்த நோக்கமும் இத்தகைய திருமணங்களுக்கு இல்லை. குழந்தைகளே சொத்தாக இருக்க வேண்டிய குடும்பங்களில் வெறும் சொத்துக்காக இப்படி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பிறக்க செய்துவிடுகிறார்கள்.

மனவளர்ச்சி குன்றிய இத்தகைய குழந்தைகளுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாத கள்ளங்கபடம் அற்ற மனம் வாய்க்கபெற்றிருக்கிறது.தங்களுக்கு சுற்றுப்புற சூழலால் ஏற்படும் பாதிப்புகளை கூட அவர்கள் அறிவதில்லை. ஒருநாள் அவர்களுடன் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது ...

என்னுடைய பிறந்தநாளை அறிவிபப்தும் இல்லை கொண்டாடுவதும் இல்லை.அண்மையில் எனக்கு பிறந்தநாள் வந்தபோது , மனவளர்ச்கி குன்றிய குழந்தைகளுடன் நேரத்தை செல வழிக்க தீர்மானித்தேன்.குடும்பத்தினருடன் மணாலி அருகில் உள்ள ''அருணோதயம் " என்கிற காப்பகத்திற்கு சென்றேன். அய்யப்பன் எனபவர்தான் இதனை நடத்தி வருகிறார். திருமணம் முடிக்காத இளைஞர். உள்ள நுழைந்த பொது , ஷோபா மீது ஒருவன் , பக்கத்தில் அலமாரி மெது ஒருவன் , கீழே படுத்துக்கொண்டு சிலர் , என் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்தார்கள். நேர்த்தியான முறையில் அமரவும் பேசவும் இல்லை.50 60 குழந்தைகள் இருக்கும் . ஒவ்வொரு குழந்தைகளின் கதையையும் சொல்லிக்கொண்டே வந்தார்.

அய்யப்பன் கூறிய இன்னொரு தகவல் என்னை அதிர வைத்தது. அந்த குழந்தைக்கு ஒரு வயது இருக்கும்போது மூளை வளர்ச்சி குன்றியிருக்கிறது எனத் தெரிந்தவுடன் நடுத்தெருவில் விட்டுவிட்டு தாய் (பேய்) சென்றுவிட்டாள். குப்பை தொட்டியின் பகக்த்திலேயே அந்த குழந்தை கிடக்க அதனை , ஒரு தெருநாய் கடித்து குதறி சின்னாபின்னமாக்கி இருந்தது.கொஞ்சம் உயிர் ஒட்டிக்கொண்டிருந்த நிலையில் , விடிகாலை வேளையில் அய்யப்பனுக்கு சிலர் தகவல் தெரிவிக்க , அவர் அந்த குழந்தையை எடுத்து தனது கபாப்காத்திற்கு கொண்டுவந்து , மருத்துவ சிகிச்சைகள் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார். பெற்றவர்களே மிருங்களைவிட கேவலமாய் நடந்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெறத்தான் செய்கின்றன. அந்த நாய் கடித்ததை விட , தாய் தூக்கிவீசி விட்டு சென்ற சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்தியது.

அந்த குழந்தையின் சோகக்கதையை கேட்டு முடித்த மறுநொடி, இன்னொரு சிறுவன் என் சட்டையை பிடித்துவிட்டான்.என்னை உலுக்கி , சட்டைபையிலிருந்த பேனா, பர்ஸ் எல்லாவற்றையும் தூக்கிவீசிவிட்டான்.சட்டையை கிழிக்க ஆரமித்தான்.அவன் கையிலிருந்த அழுக்கெல்லாம் என் உடம்பில் ஒட்டியது.மனவளர்ச்சி குன்றிய அந்த சிறுவன் நடந்துகொள்வதை பார்த்துவிட்டு , என் மனைவியும் . அய்யப்பனும் பதறிபோனார்கள்.என்னிடமிருந்த அந்த சிறுவனை இழுக்க அய்யப்பன் முயற்ச்சி செய்தார்.நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.அவன் முழுவதும் என் சட்டைகளை கிழித்துவிட்டான்.

அதன் பின் நான் அவனை கட்டி அணைத்தேன்.அவன் எவ்வளவுக்கெவ்வளவு கோபமாக நடந்தானோ நான் அவனிடம் அவ்வளவிற் கவ்வளவு அவனிடம் அன்பாய் நடந்தேன். சிறிது நேரத்தில் அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. என் அரவணைப்பில் இருந்த அவன் , என் கிழிந்த சட்டையின் துண்டுகளை எல்லாம் ஒட்டமுடியுமா ? என பார்த்தான். பேனாவை என் சட்டை பையில் வைத்தான். என் முகத்தை துடைத்துவிட்டான் என்னோடு அவன் நெருங்கிவிட்டான்.

எல்லா ஜீவராசிகளுக்கும் அன்பு ஒன்றே மருந்து . அதைத்தான் அந்த சிறுவன் என்னிடம் எதிர்பார்த்தான்.


Last edited by அய்யம் பெருமாள் .நா on Sat Oct 29, 2011 1:06 pm; edited 1 time in total


சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Empty Re: சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை )

Post by ஹர்ஷித் Sat Oct 29, 2011 1:01 pm

எல்லா ஜீவராசிகளுக்கும் அன்பு ஒன்றே மருந்து . அடித்தான் அந்த சிறுவன் என்னிடம் எதிர்பார்த்தான்.வீகேடி. பாலன் அவர்களுக்கு ஒரு சலாம்.

இந்த நெழிச்சியான பகிர்வை பகிர்ந்த்திட்ட அய்யம் பெருமாளுக்கும் ஒரு நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Empty Re: சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை )

Post by ayyamperumal Sat Oct 29, 2011 1:07 pm

ஜேன் செல்வகுமார் wrote:எல்லா ஜீவராசிகளுக்கும் அன்பு ஒன்றே மருந்து . அடித்தான் அந்த சிறுவன் என்னிடம் எதிர்பார்த்தான்.வீகேடி. பாலன் அவர்களுக்கு ஒரு சலாம்.
இந்த நெழிச்சியான பகிர்வை பகிர்ந்த்திட்ட அய்யம் பெருமாளுக்கும் ஒரு நன்றி

நன்றி ஜேன் ! நன்றி நன்றி நன்றி


சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Empty Re: சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை )

Post by இளமாறன் Sat Oct 29, 2011 1:11 pm

ஆராக்கியமில்லா குழந்தைகளுக்கு சரியான அன்பு கிடப்பதில்லை

நல்ல கட்டுரை பெருமாள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

திருமணம் செய்பவர்கள் முதலில் இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் இரத்தம ஒன்றாக இருந்தால் நிச்சயம் குறை உடைய குழைந்தைகள் பிறக்க அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை இவர்கள் உணர வேண்டும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Empty Re: சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை )

Post by ayyamperumal Sat Oct 29, 2011 1:20 pm

இளமாறன் wrote:ஆராக்கியமில்லா குழந்தைகளுக்கு சரியான அன்பு கிடப்பதில்லை திருமணம் செய்பவர்கள் முதலில் இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் இரத்தம ஒன்றாக இருந்தால் நிச்சயம் குறை உடைய குழைந்தைகள் பிறக்க அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை இவர்கள் உணர வேண்டும்

நன்றி இளா ! இங்கே கிராம புரத்தில்கூட ஒரு திருமண மண்டபத்தில் ரத்த பரிசோதனை சான்றிதல்களை காட்டினால்தான் திருமணம் நடக்க அனுமதிக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு ரத்த பரிசோதனை செய்வதை கலாச்சாரமாக்கினால் பெரும் பாலான நோய்களை தவிர்க்கலாம்.

நன்றி ! நன்றி நன்றி நன்றி நன்றி


சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Empty Re: சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை )

Post by பூஜிதா Sat Oct 29, 2011 3:28 pm

கட்டுரை படித்ததிலுருந்து மனம் வருத்தமாக உள்ளது, கடவுள் அருள் அந்த குழந்தைகளுக்கு எப்பவும் இருக்க வேண்டுகிறேன்
பகிர்வுக்கு நன்றி நன்றி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Empty Re: சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை )

Post by ராஜா Sat Oct 29, 2011 3:42 pm

இளமாறன் wrote:திருமணம் செய்பவர்கள் முதலில் இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் இரத்தம ஒன்றாக இருந்தால் நிச்சயம் குறை உடைய குழைந்தைகள் பிறக்க அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை இவர்கள் உணர வேண்டும்
பாசிட்டிவ் , நெகட்டிவ் சேர்ந்தால் தான் இது போல நடக்க வாய்ப்பு உள்ளது , அதனால் தான் முன்னோர்கள் நெகட்டிவ் blood group உள்ளவர்களை செவ்வாய் தோஷம் என்று சொல்லி வைத்தார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Empty Re: சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை )

Post by ayyamperumal Sun Oct 30, 2011 1:57 pm

ராஜா wrote:பாசிட்டிவ் , நெகட்டிவ் சேர்ந்தால் தான் இது போல நடக்க வாய்ப்பு உள்ளது , அதனால் தான் முன்னோர்கள் நெகட்டிவ் blood group உள்ளவர்களை செவ்வாய் தோஷம் என்று சொல்லி வைத்தார்கள்.

புதிய தகவல் நன்றி அய்யா !

கட்டுரை படித்ததிலுருந்து மனம் வருத்தமாக உள்ளது, கடவுள் அருள் அந்த குழந்தைகளுக்கு எப்பவும் இருக்க வேண்டுகிறேன்
பகிர்வுக்கு நன்றி
நன்றி தங்கையே ( பூஜிதா ) நன்றி நன்றி நன்றி


சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Empty Re: சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை )

Post by நட்புடன் Sun Oct 30, 2011 2:51 pm

அன்பினால் அடைவது கோடி நன்மைகள்
அதை உணர மறுத்து தர மறுத்தால் தீமையே
என்பதையும் விளக்குகிறது கட்டுரை அதோடு சமூகத்தில்
உள்ள சில அவலங்களையும் படம் பிடித்துக் காட்டுகிறது
பகிர்வுக்கு நன்றி பெருமாள்...

சரி திடீர்ன்னு இந்த மாதிரி நல்ல விஷயங்கள் பற்றி
எழுத ஆரம்பிச்சுட்டீங்களே - அதெப்படி?
தலைல ஏதாவது அடி பட்டிடுச்சா?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Empty Re: சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை )

Post by ayyamperumal Mon Oct 31, 2011 10:55 am

[quote]
நட்புடன் wrote:அன்பினால் அடைவது கோடி நன்மைகள்
அதை உணர மறுத்து தர மறுத்தால் தீமையே

அன்பே உலகம் ! உண்மைதான் நட்புடன் !

சரி திடீர்ன்னு இந்த மாதிரி நல்ல விஷயங்கள் பற்றி
எழுத ஆரம்பிச்சுட்டீங்களே - அதெப்படி?
தலைல ஏதாவது அடி பட்டிடுச்சா?

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை ) Empty Re: சொல்ல துடிக்குது மனசு ( கட்டுரை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum