புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  Poll_c10தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  Poll_m10தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  Poll_c10தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  Poll_m10தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  Poll_c10தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  Poll_m10தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  Poll_c10தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  Poll_m10தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!


   
   
abuwasmee
abuwasmee
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 04/07/2011

Postabuwasmee Thu Oct 27, 2011 6:39 pm


http://abuwasmeeonline.blogspot.com

திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

உலகில் ஆண்களால் 40 சதவிகிதமும், பெண்களால் 40 சதவிகிதமும், மற்ற காரணங்களால் 20 சதவிகிதமும் குழந்தைப் பேறு இல்லாமை ஏற்படுகிறது. காரணங்கள் எதுவாக இருந்தாலும், குழந்தை இல்லாமையைப் போக்கும் அளவுக்கு நவீன சிகிச்சைகள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.


சாபம் அல்ல!


குழந்தை இல்லாமைக்கு முற்பிறவியில் செய்த பாவம் அல்லது சாபம் என்று நினைப்பது மிகவும் தவறானது. இத்தகைய தவறான மனப்போக்குகள் மாறி வருகின்றன. இது கணவன் & மனைவி இருவரையும் சார்ந்த பிரச்சனை எனப் புரிந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது ஆரோக்கியமான விஷயம். இதனால் கணவன் & மனைவி இருவரும் சேர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

எப்போது டாக்டரிடம் செல்ல வேண்டும்?

புதிதாகத் திருமணம் செய்து கொள்வோர் எந்தவிதக் கருத்தடைச் சாதனங்களையும் பயன்படுத்தாமல், ஒரு வருடம் தாம்பத்ய உறவை மேற்கொண்டும் கூட கருத்தரிக்கவில்லை என்றால், குழந்தைப்பேறு இல்லாமைக்கான காரணம் இருப்பதாகக் கொள்ளலாம். இத்தகையோர் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரிடம் உடனடியாகச் செல்வது அவசியம்.

இயல்பாக கரு உருவாதல் குழந்தைப்பேறு கிடைப்பதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவ ரீதியாகச் சம பங்கு உள்ளது. அதாவது போதுமான அளவுக்கு நல்ல விந்து அணுக்களை ஆண் உற்பத்தி செய்து, பெண்ணின் கர்ப்பப் பைக்குள் கொண்டு சேர்க்கும் தன்மை உடையவராக இருக்க வேண்டும். அந்த விந்தணுக்கள் பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளவையாக இருக்க வேண்டும்.

இதே போன்று, ஒரு பெண்ணுக்கு கருமுட்டையின் உற்பத்தி சரியாக இருக்க வேண்டும். அது கர்ப்பப் பைக்கு வரும் வழி அடைப்பு இல்லாமல் இருக்க வேண்டும். கருமுட்டையையும், விந்தணுவையும் ஏற்ற கருவை வளர்க்கக் கூடிய வலுவான நிலையில் கர்ப்பப்பை இருக்க வேண்டும்.
மேலே சொன்னவை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான அடிப்படை விஷயங்களில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அது குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.

ஆண்களே, புகை வேண்டாம். விந்து அணுக்கள் குறைவாக இருத்தல், உயிர் அணுக்கள் இல்லாமல் இருத்தல் ஆகியவை ஆண்களைப் பொறுத்தவரை, பொதுவாக குழந்தை இல்லாமைக்குக் காரணமாக அமைகிறது. இது தவிர சிகரெட்டும் முக்கிய காரணம். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் உயிர் அணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், அதன் ஊர்ந்து செல்லும் தன்மையையும் வடிவத்தையும் பாதிக்கிறது. சர்க்கரை நோயும் ஆண்மைக் குறைவுக்குக் காரணமாக அமைந்துவிடும்.
இவை தவிர, உணவில் புரதச் சத்துக் குறைவு, வைட்டமின் இ, பி. காம்ப்ளக்ஸ் குறைவு போன்றவை, விந்தணு குறைவுக்குக் காரணங்களாக இருக்கின்றன.

பெண்களைப் பொறுத்தவரை பொதுவாக ஹார்மோன் குறைபாடுகளே குழந்தை இல்லாமைக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஹார்மோன் குறைபாடு காரணமாக, கருமுட்டைகள் உற்பத்தியாகாத நிலை, கர்ப்பப்பை வளர்ச்சி இன்மை ஆகியவை ஏற்படுகின்றன. ரத்தசோகை, புரதச்சத்துக் குறைவு ஆகியவையும் பெண்களுக்கான குறைபாட்டுக்கான காரணங்கள்.
நவீன சிகிச்சைகள் என்றால் என்ன?

குழந்தை இல்லாமைக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, நவீன முறையில் சிகிச்சை அளித்து குழந்தைப் பேறை உருவாக்கும் அளவுக்கு மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1973&ம் ஆண்டில் ‘டெஸ்ட்டியூப் பேபி’ எனப்படும் சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை கண்டுபிடிக்கப்பட்டது. லண்டனில் உள்ள ‘பான்ஹால்’ மருத்துவமனையில் 1978 ஜூலை 25&ம் தேதியன்று முதல் சோதனைக்குழாய் குழந்தை பிறந்தது. முதல் அதிசயக் குழந்தைக்கு ‘லூயிஸ் பிரவுன்’ எனப் பெயரிட்டனர். இச்சாதனையைத் தொடர்ந்து உலகம் முழுவதும் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கும் வசதி படைத்த மருத்துவமனைகளின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் 3 லட்சத்தைத் தொட்டுவிட்டது.

ஐ.வி. எஃப் முறை (I.V.F.)
பெண்ணின் கருக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுவிட்டால், விந்தணுக்கள் அதன் வழியே சென்று கருமுட்டையை அடைய முடியாது. இதற்குத் தீர்வு காண்பதற்காகவே ‘ஐ.வி.எஃப்’ முறை என்ற சோதனைக்குழாய் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இம்முறையில் பெண்ணின் முட்டைப்பை ஊக்குவிக்கப்படும். பின்னர், சேகரித்த முட்டைகளை தரமான உயிர் அணுக்களுடன் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கரு உருவாக்கப்படும்.
நன்கு வளர்ந்த தரமான கரு, பின்னர், ஊசி மூலம் கருப்பையினுள் நேரடியாகச் செலுத்தப்படும். கருக்குழாய் அடைப்பு உள்ளவர்கள் பிள்ளை பெறமுடியாது என்ற நிலையை ஐ.வி.எஃப். முறை தகர்த்தது.

இக்ஸி சிகிச்சை முறை (I.C.S.I.)

சோதனைக் குழாய் முறையில் பெண்ணின் கருமுட்டையையும் ஆணின் விந்து அணுக்களையும் ஒன்றாக இணைத்து, கருவை உருவாக்குவதற்கு சில 100 நல்ல விந்தணுக்கள் தேவைப்பட்டன. ஆனால் ‘இக்ஸி’ முறையில், கருவை உருவாக்க ஒரே ஒரு நல்ல விந்தணுவே போதுமானது. விந்துப் பையிலிருந்து இந்த விந்து அணுவை எடுக்கவும் சாத்தியம் உள்ளது. மேலும் ‘ஐ.வி.எஃப்’ சிகிச்சை முறையினால் குழந்தை பெறுவதற்கான வெற்றி வாய்ப்பு 30 சதவீதம்தான் கிடைத்தது. ஆனால் இக்ஸி முறையில் வெற்றி வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த முறை 1992 முதல் பிரபலமாகத் தொடங்கியது. இந்த நவீன சிகிச்சை முறைகள் மூலம் ஆண், பெண் இருவரின் குறைபாட்டை 100 சதவீதம் போக்கி சிகிச்சை அளிக்க முடியும்.
குழந்தைச் செல்வத்தைப் பற்றி இஸ்லாம்...


(அல்லாஹ்) தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். (அல்குர்ஆன் 42:49-50).


நன்றி: தமிழ்சோர்ஸ்


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 27, 2011 9:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி நண்பரே

இந்த அறிவியல் உலகில் எல்லாமே செயற்கையாக போய் விட்டது .. சாப்பிடும் உணவு கூட கெமிக்கல் அதிகமானதல் நாம் உடலின் கோட்பாடுகளும் மாறுகின்றன என்ன கொடுமை சார் இது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  Ila
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Thu Oct 27, 2011 10:36 pm

பயனுள்ள அறிவியல் தகவல்...

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 29, 2011 12:54 pm

பயனுள்ள அறிவியல் தகவல் ,,,,,,,,,

குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு முற்பிறவியில் செய்த பாவம், சாபம், ஆண்டவன் யாரும் காரணம் இல்லை, அறிவியலும் ஆணும் பெண்ணும் மட்டுமே காரணம் என்று பதிந்தமைக்கு நன்றி.





சதாசிவம்
தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Oct 29, 2011 2:25 pm

நல்ல தகவல் சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  Jjji
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 29, 2011 3:31 pm

abuwasmee wrote:(அல்லாஹ்) தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை
வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். அல்லது
ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான்
நாடியோரை மலடாக ஆக்குகிறான். (அல்குர்ஆன் 42:49-50).
சதாசிவம் wrote:பயனுள்ள அறிவியல் தகவல் ,,,,,,,,,குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு முற்பிறவியில் செய்த பாவம், சாபம், ஆண்டவன் யாரும் காரணம் இல்லை, அறிவியலும் ஆணும் பெண்ணும் மட்டுமே காரணம் என்று பதிந்தமைக்கு நன்றி.
என்ன?

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 29, 2011 3:43 pm

ராஜா wrote:
abuwasmee wrote:(அல்லாஹ்) தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை
வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். அல்லது
ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான்
நாடியோரை மலடாக ஆக்குகிறான். (அல்குர்ஆன் 42:49-50).
சதாசிவம் wrote:பயனுள்ள அறிவியல் தகவல் ,,,,,,,,,குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு முற்பிறவியில் செய்த பாவம், சாபம், ஆண்டவன் யாரும் காரணம் இல்லை, அறிவியலும் ஆணும் பெண்ணும் மட்டுமே காரணம் என்று பதிந்தமைக்கு நன்றி.
என்ன?

பிறக்காமல் இருப்பதற்கு ஒன்றும் காரணம் இல்லை என்றால், பிறப்பதற்கும் ஒன்றும் காரணம் இல்லை என்று தானே பொருள் படும். அறிவியல் மட்டுமே காரணம் என்றால், ஆண்டவன் எதற்கு ? : ஒன்னும் புரியல



சதாசிவம்
தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 29, 2011 3:50 pm

சதாசிவம் wrote:பிறக்காமல் இருப்பதற்கு ஒன்றும் காரணம் இல்லை என்றால், பிறப்பதற்கும் ஒன்றும் காரணம் இல்லை என்று தானே பொருள் படும். அறிவியல் மட்டுமே காரணம் என்றால், ஆண்டவன் எதற்கு ? : தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!  838572
நன்றி அய்யா ,
கட்டுரையாளர் தான் கருத்திலேயே முரண்படுகிறார் , அதை சொல்ல வந்த நான் , உங்களின் கருத்தையும் மேற்கொளில் காட்டிவிட்டேன் , புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக