புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Today at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 8:12 pm
» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Today at 7:41 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Today at 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Today at 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Today at 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Today at 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Today at 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Today at 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Today at 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Today at 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Today at 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm
» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 8:12 pm
» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Today at 7:41 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Today at 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Today at 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Today at 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Today at 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Today at 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Today at 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Today at 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Today at 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Today at 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm
» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Saravananj | ||||
mini | ||||
King rafi | ||||
Srinivasan23 | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹலோ நரகாசுரா...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
"மிஸ்டர் சதுரம்! கண்ணைத் திறந்து பாருங்க!"
எதிரே வெள்ளை வெள்ளையாக ஓரிரு உருவங்கள் தெரியவும், ஏதோ கனவுக்காட்சி போலிருந்தது.
"யாரு? அனுஷ்காவா?"
"டேய் உருப்படாதவனே!" என்று கேட்ட குரல் பாலாவுடையது. "இது ஆஸ்பத்திரிடா! காலையிலே தீபாவளி லேகியம் சாப்பிட்டதும் நீ மயக்கம் போட்டு விழுந்திட்டே! அடிச்சுப்புடிச்சு ஆம்புலன்ஸ்லே போட்டுத் தூக்கிட்டு வந்தா, நர்ஸைப் பார்த்து அனுஷ்காவான்னு கேட்குறியேடா?"
"அடப்பாவீங்களா! லேகியமாடா அது? ரோட்டுக்குப் போடுற தாரை உருட்டி ஒரு உருண்டை கொடுத்து, ஆஸ்பத்திரிக்கு வரவைச்சிட்டீங்களே? உருப்படுவீங்களாடா?"
"மிஸ்டர் சதுரம்! இது ஆஸ்பத்திரி; இப்படியெல்லாம் சத்தம் போடக்கூடாது!" என்று கிட்டத்தட்ட டாக்டர் மாதிரியே, வெள்ளைக்கோட்டும் ஸ்டெதாஸ்கோப்புமாக இருந்த ஒருவர் கடிந்து கொண்டார். "நேத்து ராத்திரி என்ன சாப்பிட்டீங்க? உங்க வயித்தைப் பார்த்து டிராபிக் போலீஸோன்னு சந்தேகப்பட்டுட்டேன்."
"டாக்டர், இவன் என்ன சாப்பிடலேன்னு கேளுங்க!" இது வெங்கட்டின் குரல். "ஒரு அடையாறு ஆனந்த பவனையே முழுங்கியிருக்கான். ஓஸியிலே கிடைச்சாலும் சாப்பிட ஒரு அளவு வேண்டாமா?"
"கவலைப்படாதீங்க, ஒரு ஸ்கேன் பண்ணிப் பார்த்திரலாம்!" என்றார் டாக்டர்.
"என்னது, ஸ்கேனா? நான் என்ன கர்ப்பமாவா இருக்கேன்?"
"மிஸ்டர் சதுரம், உங்களுக்கு வயிறு எவ்வளவு வீங்கியிருக்கோ, அதே மாதிரி வாயும் பெரிசாயிருக்கு! நர்ஸ், இந்த ஆளுக்கு ஒரு ஊசிபோட்டுத் தூங்க வையுங்க! எல்லா நரம்பும் க்ளியராத் தெரியுது பாருங்க! வெயினிலேயே போட்டுருங்க!"
"ஊசியா? ஐயையோ....!"
என் பேச்சை அலட்சியம் செய்தபடி, ஒரு ஜாடையில் ஹன்ஸிகா மாதிரியிருந்த அந்த நர்ஸ், எருமைக்கு ஜூரம் வந்தால் போடுகிற மாதிரி ஒரு பெரிய ஊசியை எனது மணிக்கட்டருகே போட, எனது கண்கள் மெல்ல மெல்ல சொருகிக்கொள்ள, மயக்கமாக வந்தது.
"பாவி நரகாசுரா....!" நான் அரைமயக்கத்தில் முணுமுணுத்தேன்.
"சதுரம்!" என்று யாரோ இருட்டிலிருந்து அழைப்பது போலிருந்தது.
"யாருய்யா அது? நானே மயக்கத்திலிருக்கேன்!"
"நான் தான் நரகாசுரன்! நீ கூப்பிட்டே, நான் வந்திட்டேன்! சொல்லு சதுரம், எதுக்காக என்னைத் திட்டுனே?"
"திட்டாமக் கொஞ்சுவாங்களா? இதுவரைக்கும் எத்தனை அசுரர்கள் இருந்திருக்காங்க, செத்திருக்காங்க! நீ ஒருத்தன்தான்யா இந்த மாதிரி பண்டிகையாக் கொண்டாடணுமுன்னு வரம் வாங்கி எங்க உசிர வாங்கியிருக்கே! அதுலேயும் தீபாவளிக்குன்னு ஸ்பெஷல் லேகியம் வேற! அதைப் பார்த்ததுமே எனக்கு செத்துப்போன எங்க பாட்டி, தாத்தாவெல்லாம் ஞாபகத்துக்கு வந்திட்டாங்க தெரியுமா?"
"சதுரம், அனாவசியமா என் மேலே பழியைப் போடாதே! பண்டிகையாக் கொண்டாடணுமுன்னு சொன்னது என்னவோ வாஸ்தவம் தான்! அதுக்காக ஊருப்பட்ட பலகாரத்தைப் பண்ணி, மூக்கு முட்டத் தின்னுங்கன்னா சொன்னேன்? அந்தக் காலத்துலே ஆஸ்பத்திரி, டாக்டர், நர்ஸெல்லாம் கிடையாதுன்னுதான் அஜீரணம் வராம இருக்க, லேகியம் பண்ணிச் சாப்பிட்டாங்க!"
"இந்த ரோஷத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை! கோயம்பேட்டிலிருந்து கோயமுத்தூருக்குப் போக ஆம்னி பஸ்ஸிலே ஆயிரம் ரூபாய் வாங்குறான்! ஆடித் தள்ளுபடியிலே அம்பது ரூபாய்க்கு வித்த டி-ஷர்ட்டை ரங்கநாதன் தெருவிலே ஐந்நூறு ரூபாய்க்கு விக்குறாங்க, அதையும் ஜனம் முண்டியடிச்சுக்கிட்டுப் போய் வாங்குது! பாழாப்போன குருவி வெடிக்கு வந்த வாழ்வைப் பாருய்யா, ஒரு பாக்கெட் நூறு ரூபாய்! அவனவன் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி தீபாவளி கொண்டாடுறான்! எல்லாத்துக்கும் நீ தான் காரணம்!"
நரகாசுரன் சிரித்தான்.
"ஏன்யா இப்படி சிரிக்கிறே? நீயும் தப்பி தவறி வெடி படம் பார்த்துட்டியா?"
"சதுரம், உங்க தாத்தா, பாட்டியெல்லாம் கடன் வாங்கியா பண்டிகை கொண்டாடுனாங்க? பண்டிகைன்னா ஆடம்பரத்தைக் காட்டுறதுக்கில்லே கண்ணா! சொந்தமும் பந்தமும் ஒண்ணா உட்கார்ந்து சந்தோஷமாப் பேசி, இருக்கிறதைப் பகிர்ந்து சாப்பிட்டுக்கிட்டு, வருசத்துலே ஒரு நாளாவது முடிஞ்சவரைக்கும் பாசாங்கில்லாம இருக்கிறது தான். ஆனா, நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க? பண்டிகைன்னாலே பாசாங்குன்னு ஆக்கிட்டீங்க! பக்கத்து வூட்டுக்காரன் ஆயிர ரூபாய்க்குப் பட்டாசு வாங்குனா, நீங்க ரெண்டாயிரம் ரூபாய்க்குப் பட்டாசு வாங்குகுறீங்க! எதிர்வூட்டுலே காஞ்சீபுரம் பட்டு வாங்குனா, உங்க வூட்டுலே பெனாரஸ் பட்டு வாங்குறீங்க! வூட்டுலெ பலகாரம் பண்ண சோம்பல் பட்டுக்கிட்டு, கடையிலே போய் கண்டதையும் அவன் சொல்லுற விலைக்கு வாங்கித் தின்னறீங்க! அப்புறம் பத்துநாளைக்கு அஜீரணத்துக்கு மாத்திரை சாப்பிட்டுக்கிட்டு அவஸ்தைப்படுறீங்க! பண்ணுறதெல்லாம் நீங்க; பழி என் மேலயா?"
"யோவ் நரகாசுரா! இந்த தீபாவளியையெல்லாம் தமிழன் கொண்டாடவே கூடாதுன்னு நிறைய பேரு சொல்லிட்டிருக்காங்க தெரியுமா?"
"ஆமாய்யா, உங்க வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கிற அரசியல்வாதிங்க பொறந்த நாளுக்கு சந்து,பொந்தெல்லாம் கட்-அவுட் வைக்கிறீங்க! லவுட்-ஸ்பீக்கர் போட்டு இருக்கிறவன் காதையெல்லாம் செவுடாக்கறீங்க! சினிமாக்காரனுக்குப் பொறந்தநாளுன்னு பேப்பர்லே முழுப்பக்கம் விளம்பரம் போடுறீங்க! அதையெல்லாம் தமிழன் பண்ணினாத் தப்புல்லே! வழிவழியா கொண்டாடுற தீபாவளியைக் கொண்டாடிட்டா, உங்க பண்பாடு, கலாச்சாரமெல்லாம் அப்பீட்டு ஆயிருமா?"
"மிஸ்டர் நரகாசுரன், ’சம்சாரம் அது மின்சாரம் படத்துலே விசு சொல்லுறா மாதிரி உன்னை சம்ஹாரம் பண்ணின அன்னிக்கு திவசம் மாதிரி கொண்டாடி எள்ளுருண்டை புடிக்கணுமய்யா! இப்போ பாரு, உன்னாலே நான் தீபாவளி ரிலீஸ் படம் ஒண்ணு கூட பார்க்க முடியாம, ஆஸ்பத்திரியிலே படுத்துக் கெடக்கேன்."
"சதுரம், பார்த்தியா? என் பேரைச் சொல்லி எத்தனை படம் ரிலீஸ் ஆவுது? இந்த தீபாவளிக்குக் கூட டிவியிலே புதுப்புதுப்படமா போடுறாங்க...? உனக்குப் புரியுறா மாதிரியே சொல்லுறேன்... கேட்டுக்கோ....! இந்த தீபாவளிக்கு ஒரே நாளிலே ரெண்டு அனுஷ்கா படம்...!"
"என்னது? மெய்யாலுமா....?"
"ஆமா சதுரம்! ஒண்ணு வேட்டைக்காரன்! அப்புறம் சிங்கம்... ரெண்டு அனுஷ்கா படம் போடுறாங்களே! நரகாசுரனைத் திட்டுனியே! நான் இல்லாட்டா ஒரே நாளிலே ரெண்டு அனுஷ்கா படம் பார்த்திருக்க முடியுமா?"
"ஐயையோ, ரெண்டு அனுஷ்கா படமா? இது தெரியாம கண்டதையும் தின்னுட்டு ஆஸ்பத்திரியிலே வந்து படுத்திட்டிருக்கேனே? யோவ் நரகாசுரா, என்னை டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லுய்யா! அடேய்... நண்பர்களா... வெங்கட், பாலா! யோவ் டாக்டரு! அம்மா தாயே, நர்ஸு....! ரெண்டு அனுஷ்கா படம் பார்க்கணும்...டிஸ்சார்ஜ் பண்ணுங்கப்பா...." ஏலேய் பெருமாளு... இதுக்கெல்லாம் ஒரு பொதுமடல் எழுதமாட்டியே... டிஸ்சார்ஜ் பண்ண சொல்லுப்பா...
டொட்டோடைங்க்...
"பை பை சதுரம்!" என்று சிரித்தபடியே நரகாசுரன் மறைந்தான்.
எதிரே வெள்ளை வெள்ளையாக ஓரிரு உருவங்கள் தெரியவும், ஏதோ கனவுக்காட்சி போலிருந்தது.
"யாரு? அனுஷ்காவா?"
"டேய் உருப்படாதவனே!" என்று கேட்ட குரல் பாலாவுடையது. "இது ஆஸ்பத்திரிடா! காலையிலே தீபாவளி லேகியம் சாப்பிட்டதும் நீ மயக்கம் போட்டு விழுந்திட்டே! அடிச்சுப்புடிச்சு ஆம்புலன்ஸ்லே போட்டுத் தூக்கிட்டு வந்தா, நர்ஸைப் பார்த்து அனுஷ்காவான்னு கேட்குறியேடா?"
"அடப்பாவீங்களா! லேகியமாடா அது? ரோட்டுக்குப் போடுற தாரை உருட்டி ஒரு உருண்டை கொடுத்து, ஆஸ்பத்திரிக்கு வரவைச்சிட்டீங்களே? உருப்படுவீங்களாடா?"
"மிஸ்டர் சதுரம்! இது ஆஸ்பத்திரி; இப்படியெல்லாம் சத்தம் போடக்கூடாது!" என்று கிட்டத்தட்ட டாக்டர் மாதிரியே, வெள்ளைக்கோட்டும் ஸ்டெதாஸ்கோப்புமாக இருந்த ஒருவர் கடிந்து கொண்டார். "நேத்து ராத்திரி என்ன சாப்பிட்டீங்க? உங்க வயித்தைப் பார்த்து டிராபிக் போலீஸோன்னு சந்தேகப்பட்டுட்டேன்."
"டாக்டர், இவன் என்ன சாப்பிடலேன்னு கேளுங்க!" இது வெங்கட்டின் குரல். "ஒரு அடையாறு ஆனந்த பவனையே முழுங்கியிருக்கான். ஓஸியிலே கிடைச்சாலும் சாப்பிட ஒரு அளவு வேண்டாமா?"
"கவலைப்படாதீங்க, ஒரு ஸ்கேன் பண்ணிப் பார்த்திரலாம்!" என்றார் டாக்டர்.
"என்னது, ஸ்கேனா? நான் என்ன கர்ப்பமாவா இருக்கேன்?"
"மிஸ்டர் சதுரம், உங்களுக்கு வயிறு எவ்வளவு வீங்கியிருக்கோ, அதே மாதிரி வாயும் பெரிசாயிருக்கு! நர்ஸ், இந்த ஆளுக்கு ஒரு ஊசிபோட்டுத் தூங்க வையுங்க! எல்லா நரம்பும் க்ளியராத் தெரியுது பாருங்க! வெயினிலேயே போட்டுருங்க!"
"ஊசியா? ஐயையோ....!"
என் பேச்சை அலட்சியம் செய்தபடி, ஒரு ஜாடையில் ஹன்ஸிகா மாதிரியிருந்த அந்த நர்ஸ், எருமைக்கு ஜூரம் வந்தால் போடுகிற மாதிரி ஒரு பெரிய ஊசியை எனது மணிக்கட்டருகே போட, எனது கண்கள் மெல்ல மெல்ல சொருகிக்கொள்ள, மயக்கமாக வந்தது.
"பாவி நரகாசுரா....!" நான் அரைமயக்கத்தில் முணுமுணுத்தேன்.
"சதுரம்!" என்று யாரோ இருட்டிலிருந்து அழைப்பது போலிருந்தது.
"யாருய்யா அது? நானே மயக்கத்திலிருக்கேன்!"
"நான் தான் நரகாசுரன்! நீ கூப்பிட்டே, நான் வந்திட்டேன்! சொல்லு சதுரம், எதுக்காக என்னைத் திட்டுனே?"
"திட்டாமக் கொஞ்சுவாங்களா? இதுவரைக்கும் எத்தனை அசுரர்கள் இருந்திருக்காங்க, செத்திருக்காங்க! நீ ஒருத்தன்தான்யா இந்த மாதிரி பண்டிகையாக் கொண்டாடணுமுன்னு வரம் வாங்கி எங்க உசிர வாங்கியிருக்கே! அதுலேயும் தீபாவளிக்குன்னு ஸ்பெஷல் லேகியம் வேற! அதைப் பார்த்ததுமே எனக்கு செத்துப்போன எங்க பாட்டி, தாத்தாவெல்லாம் ஞாபகத்துக்கு வந்திட்டாங்க தெரியுமா?"
"சதுரம், அனாவசியமா என் மேலே பழியைப் போடாதே! பண்டிகையாக் கொண்டாடணுமுன்னு சொன்னது என்னவோ வாஸ்தவம் தான்! அதுக்காக ஊருப்பட்ட பலகாரத்தைப் பண்ணி, மூக்கு முட்டத் தின்னுங்கன்னா சொன்னேன்? அந்தக் காலத்துலே ஆஸ்பத்திரி, டாக்டர், நர்ஸெல்லாம் கிடையாதுன்னுதான் அஜீரணம் வராம இருக்க, லேகியம் பண்ணிச் சாப்பிட்டாங்க!"
"இந்த ரோஷத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை! கோயம்பேட்டிலிருந்து கோயமுத்தூருக்குப் போக ஆம்னி பஸ்ஸிலே ஆயிரம் ரூபாய் வாங்குறான்! ஆடித் தள்ளுபடியிலே அம்பது ரூபாய்க்கு வித்த டி-ஷர்ட்டை ரங்கநாதன் தெருவிலே ஐந்நூறு ரூபாய்க்கு விக்குறாங்க, அதையும் ஜனம் முண்டியடிச்சுக்கிட்டுப் போய் வாங்குது! பாழாப்போன குருவி வெடிக்கு வந்த வாழ்வைப் பாருய்யா, ஒரு பாக்கெட் நூறு ரூபாய்! அவனவன் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி தீபாவளி கொண்டாடுறான்! எல்லாத்துக்கும் நீ தான் காரணம்!"
நரகாசுரன் சிரித்தான்.
"ஏன்யா இப்படி சிரிக்கிறே? நீயும் தப்பி தவறி வெடி படம் பார்த்துட்டியா?"
"சதுரம், உங்க தாத்தா, பாட்டியெல்லாம் கடன் வாங்கியா பண்டிகை கொண்டாடுனாங்க? பண்டிகைன்னா ஆடம்பரத்தைக் காட்டுறதுக்கில்லே கண்ணா! சொந்தமும் பந்தமும் ஒண்ணா உட்கார்ந்து சந்தோஷமாப் பேசி, இருக்கிறதைப் பகிர்ந்து சாப்பிட்டுக்கிட்டு, வருசத்துலே ஒரு நாளாவது முடிஞ்சவரைக்கும் பாசாங்கில்லாம இருக்கிறது தான். ஆனா, நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க? பண்டிகைன்னாலே பாசாங்குன்னு ஆக்கிட்டீங்க! பக்கத்து வூட்டுக்காரன் ஆயிர ரூபாய்க்குப் பட்டாசு வாங்குனா, நீங்க ரெண்டாயிரம் ரூபாய்க்குப் பட்டாசு வாங்குகுறீங்க! எதிர்வூட்டுலே காஞ்சீபுரம் பட்டு வாங்குனா, உங்க வூட்டுலே பெனாரஸ் பட்டு வாங்குறீங்க! வூட்டுலெ பலகாரம் பண்ண சோம்பல் பட்டுக்கிட்டு, கடையிலே போய் கண்டதையும் அவன் சொல்லுற விலைக்கு வாங்கித் தின்னறீங்க! அப்புறம் பத்துநாளைக்கு அஜீரணத்துக்கு மாத்திரை சாப்பிட்டுக்கிட்டு அவஸ்தைப்படுறீங்க! பண்ணுறதெல்லாம் நீங்க; பழி என் மேலயா?"
"யோவ் நரகாசுரா! இந்த தீபாவளியையெல்லாம் தமிழன் கொண்டாடவே கூடாதுன்னு நிறைய பேரு சொல்லிட்டிருக்காங்க தெரியுமா?"
"ஆமாய்யா, உங்க வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கிற அரசியல்வாதிங்க பொறந்த நாளுக்கு சந்து,பொந்தெல்லாம் கட்-அவுட் வைக்கிறீங்க! லவுட்-ஸ்பீக்கர் போட்டு இருக்கிறவன் காதையெல்லாம் செவுடாக்கறீங்க! சினிமாக்காரனுக்குப் பொறந்தநாளுன்னு பேப்பர்லே முழுப்பக்கம் விளம்பரம் போடுறீங்க! அதையெல்லாம் தமிழன் பண்ணினாத் தப்புல்லே! வழிவழியா கொண்டாடுற தீபாவளியைக் கொண்டாடிட்டா, உங்க பண்பாடு, கலாச்சாரமெல்லாம் அப்பீட்டு ஆயிருமா?"
"மிஸ்டர் நரகாசுரன், ’சம்சாரம் அது மின்சாரம் படத்துலே விசு சொல்லுறா மாதிரி உன்னை சம்ஹாரம் பண்ணின அன்னிக்கு திவசம் மாதிரி கொண்டாடி எள்ளுருண்டை புடிக்கணுமய்யா! இப்போ பாரு, உன்னாலே நான் தீபாவளி ரிலீஸ் படம் ஒண்ணு கூட பார்க்க முடியாம, ஆஸ்பத்திரியிலே படுத்துக் கெடக்கேன்."
"சதுரம், பார்த்தியா? என் பேரைச் சொல்லி எத்தனை படம் ரிலீஸ் ஆவுது? இந்த தீபாவளிக்குக் கூட டிவியிலே புதுப்புதுப்படமா போடுறாங்க...? உனக்குப் புரியுறா மாதிரியே சொல்லுறேன்... கேட்டுக்கோ....! இந்த தீபாவளிக்கு ஒரே நாளிலே ரெண்டு அனுஷ்கா படம்...!"
"என்னது? மெய்யாலுமா....?"
"ஆமா சதுரம்! ஒண்ணு வேட்டைக்காரன்! அப்புறம் சிங்கம்... ரெண்டு அனுஷ்கா படம் போடுறாங்களே! நரகாசுரனைத் திட்டுனியே! நான் இல்லாட்டா ஒரே நாளிலே ரெண்டு அனுஷ்கா படம் பார்த்திருக்க முடியுமா?"
"ஐயையோ, ரெண்டு அனுஷ்கா படமா? இது தெரியாம கண்டதையும் தின்னுட்டு ஆஸ்பத்திரியிலே வந்து படுத்திட்டிருக்கேனே? யோவ் நரகாசுரா, என்னை டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லுய்யா! அடேய்... நண்பர்களா... வெங்கட், பாலா! யோவ் டாக்டரு! அம்மா தாயே, நர்ஸு....! ரெண்டு அனுஷ்கா படம் பார்க்கணும்...டிஸ்சார்ஜ் பண்ணுங்கப்பா...." ஏலேய் பெருமாளு... இதுக்கெல்லாம் ஒரு பொதுமடல் எழுதமாட்டியே... டிஸ்சார்ஜ் பண்ண சொல்லுப்பா...
டொட்டோடைங்க்...
"பை பை சதுரம்!" என்று சிரித்தபடியே நரகாசுரன் மறைந்தான்.
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நல்ல நகைச்சுவையான பதிவு.....
அப்புறம் இன்னொரு விஷ்யம் பாலா அண்ணாவும் , வெங்கட் அண்ணாவும் உங்களை டிஸ்சார்ஜ் பண்ண வர மாட்டாங்க அவங்க இப்போவே அனுஷ்கா படம் பாக்க டிவி முன்னாடி ரெடியா உக்காந்துகிட்டு இருக்காங்க....நீங்கள் இன்னும் 3மாசம் ரெஸ்ட் எடுத்துட்டு ஒரேடிய பொங்கலுக்கு வீட்டுக்கு வந்தா போதுமுனு உங்கள் வீட்டுல சொல்லி அனுபிட்டாங்க....
அப்புறம் இன்னொரு விஷ்யம் பாலா அண்ணாவும் , வெங்கட் அண்ணாவும் உங்களை டிஸ்சார்ஜ் பண்ண வர மாட்டாங்க அவங்க இப்போவே அனுஷ்கா படம் பாக்க டிவி முன்னாடி ரெடியா உக்காந்துகிட்டு இருக்காங்க....நீங்கள் இன்னும் 3மாசம் ரெஸ்ட் எடுத்துட்டு ஒரேடிய பொங்கலுக்கு வீட்டுக்கு வந்தா போதுமுனு உங்கள் வீட்டுல சொல்லி அனுபிட்டாங்க....
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
இந்த அனுஷ்கா மேட்டர் வீட்ல தெரிஞ்சா - சதுரம் செவ்வகமாவோ முக்கோனமாவோ போவப் போவுது.
போற உசிர நரகாசுரன் கிட்டயே குடுத்திருக்கலாம் - இப்ப கேப்பாரில்லாமா அடி வாங்கிப் போவப் போவுது.
பாலா சார் வாங்க நாம ரெண்டு பேரும் - சுதாவோட பிக்கல் பிடுங்கல் இல்லாம அனுஷ்காவ பாப்போம்.
இந்த ஊசிப் பட்டாசு பெருமாள சுதாவ கவனிச்சிக்க இங்கயே விட்டுடலாம்.
அருமை லேகிய சுதா...
போற உசிர நரகாசுரன் கிட்டயே குடுத்திருக்கலாம் - இப்ப கேப்பாரில்லாமா அடி வாங்கிப் போவப் போவுது.
பாலா சார் வாங்க நாம ரெண்டு பேரும் - சுதாவோட பிக்கல் பிடுங்கல் இல்லாம அனுஷ்காவ பாப்போம்.
இந்த ஊசிப் பட்டாசு பெருமாள சுதாவ கவனிச்சிக்க இங்கயே விட்டுடலாம்.
அருமை லேகிய சுதா...
நட்புடன் - வெங்கட்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:
"ஐயையோ, ரெண்டு அனுஷ்கா படமா? இது தெரியாம கண்டதையும் தின்னுட்டு ஆஸ்பத்திரியிலே வந்து படுத்திட்டிருக்கேனே? யோவ் நரகாசுரா, என்னை டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லுய்யா! அடேய்... நண்பர்களா... வெங்கட், பாலா! யோவ் டாக்டரு! அம்மா தாயே, நர்ஸு....! ரெண்டு அனுஷ்கா படம் பார்க்கணும்...டிஸ்சார்ஜ் பண்ணுங்கப்பா...." ஏலேய் பெருமாளு... இதுக்கெல்லாம் ஒரு பொதுமடல் எழுதமாட்டியே... டிஸ்சார்ஜ் பண்ண சொல்லுப்பா...டொட்டோடைங்க்...
"பை பை சதுரம்!" என்று சிரித்தபடியே நரகாசுரன் மறைந்தான்.
அன்புள்ள மருத்துவமனை நிர்வாகமே !
வணக்கம் ! தங்களின் தொண்டுள்ளம் என்றும் போற்றதக்கது ! சாலையில் சாதாரன மயக்கத்தில் விழுந்து கிடந்த ஒருவரை ,,, மருத்துவமனை மின்சார கட்டணத்திற்காகவாவது தேறுமே என்று எண்ணி , உங்கள் மருத்துவமனையில் படுக்க வைத்திருப்பதாக அறிகிறேன்.
அவர் சாதாரன மனிதர் இல்லை. ஈகரையின் தங்க புதையல். அவரை சிறிதுசிறிதாக உரசி உரசி ,,, இதுவரையில் 3000 மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க மூடைகளை சேர்த்துவைத்திருக்கிறோம். இது நமக்குள்ளே இருக்கட்டும். வேறு யாருக்கும் சொல்ல வேண்டாம். மேலும் அவரது வயிற்றுக்குள் வைர சுரங்கம் இருபப்தாக கணிக்கிறோம். தப்பி தவறி அறுவை சிகிச்சை செய்து அதை திருட முயற்ச்சித்தால் ,,, எச்சரிக்கை ! அவரை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.
நன்றி !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ரேவதி wrote:நல்ல நகைச்சுவையான பதிவு.....
அப்புறம் இன்னொரு விஷ்யம் பாலா அண்ணாவும் , வெங்கட் அண்ணாவும் உங்களை டிஸ்சார்ஜ் பண்ண வர மாட்டாங்க அவங்க இப்போவே அனுஷ்கா படம் பாக்க டிவி முன்னாடி ரெடியா உக்காந்துகிட்டு இருக்காங்க....நீங்கள் இன்னும் 3மாசம் ரெஸ்ட் எடுத்துட்டு ஒரேடிய பொங்கலுக்கு வீட்டுக்கு வந்தா போதுமுனு உங்கள் வீட்டுல சொல்லி அனுபிட்டாங்க....
பாராட்டுக்கு நன்றி....
நீங்கெல்லாம் பாசமலர்களே இல்ல... அனுஷ்கா படம் பாக்க வழிபண்ணுக பிளீஸ்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
பூஜிதா wrote:
நான் அனுஷ்காவை பாக்க முடியாம கவலையா இருக்கேன்... நீங்க சிரிக்கறீங்க...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
நட்புடன் wrote:இந்த அனுஷ்கா மேட்டர் வீட்ல தெரிஞ்சா - சதுரம் செவ்வகமாவோ முக்கோனமாவோ போவப் போவுது.
போற உசிர நரகாசுரன் கிட்டயே குடுத்திருக்கலாம் - இப்ப கேப்பாரில்லாமா அடி வாங்கிப் போவப் போவுது.
பாலா சார் வாங்க நாம ரெண்டு பேரும் - சுதாவோட பிக்கல் பிடுங்கல் இல்லாம அனுஷ்காவ பாப்போம்.
இந்த ஊசிப் பட்டாசு பெருமாள சுதாவ கவனிச்சிக்க இங்கயே விட்டுடலாம்.
அருமை லேகிய சுதா...
நீங்கெல்லாம் ஏதோ திட்டமிட்டு சதி பண்ணிட்டு... போங்கப்பா போங்க.... அனுஷ்கா படம்போடும்போது உங்க வீட்டிலே கரண்ட் இருக்காது
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
உங்க வீட்ல எல்லோருடன் சேந்து அனுஷ்கா படம் பார்க்கணும் சொல்லுங்க ஏதோ எங்களாள முடிஞ்ச உதவி செய்ரோம்,dsudhanandan wrote:பூஜிதா wrote:
நான் அனுஷ்காவை பாக்க முடியாம கவலையா இருக்கேன்... நீங்க சிரிக்கறீங்க...
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|