ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011

4 posters

Go down

தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011 Empty தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011

Post by பிரசன்னா Tue Oct 25, 2011 11:42 am

தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...!

தஞ்சை மாவட்டத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு திராவிட பாரம்பரியக் கட்சியின் வேட்பாளருக்கு எதிராகக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு நல்ல பெயர் உண்டு. பணம் கிடையாது. இந்த நல்ல பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக, "கம்யூனிஸ்ட் வேட்பாளர் உண்மையில் ஏழை அல்ல, அவருக்கு நிறைய விளைநிலம் இன்ன ஊரில் இருக்கிறது' என்று திராவிடக் கட்சி வேட்பாளர் ஒவ்வோர் ஊரிலும் தனக்கே உரித்தான கவர்ச்சிச் சொற்பொழிவாற்றலுடன் துணிந்து பொய்யை உண்மை என்று நம்பும் அளவுக்குப் பேசத் தொடங்கினார்.
தொலைக்காட்சிகளோ, பத்திரிகைகளோ அதிகம் இல்லாத காலம் அது. "என்னைத் தேர்ந்தெடுத்தால் நான் இந்தத் தொகுதிக்கு இன்னவெல்லாம் செய்வேன்' என்று சொல்வதைவிட்டுவிட்டு, "மாற்று வேட்பாளர் சொல்வது உண்மையல்ல. எனக்கு நில புலன்கள் கிடையாது' என்று எல்லா கூட்டங்களிலும் விளக்கம் சொல்வதிலேயே அந்தக் கம்யூனிஸ்ட் வேட்பாளரின் பொழுதெல்லாம் கழிந்து, தேர்தலில் தோற்றும் போனார்.
இப்போது கேஜ்ரிவால், கிரண் பேடி ஆகியோரின் நிலைமையைப் பார்த்தால், இந்தச் சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது. அவர்கள் தங்களது லோக்பால் மசோதாவுக்கான போராட்டத்தையும் அதன் உயரிய நோக்கம் என்ன என்று விளக்குவதையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு சுவாமி அக்னிவேஷ், காங்கிரஸின் திக்விஜய் சிங் போன்றவர்களுக்கு "நாங்கள் நல்லவர்கள், பிழை செய்யவில்லை' என பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். லோக்பால் என்ற சொல்லே ஏறக்குறைய எல்லோரும் மறக்கும் நிலைமைக்கு வந்தாகிவிட்டது.
கேஜ்ரிவால் தற்போதைய தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கும் முன்பாக வருமான வரித் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர். அவர் விரும்பியிருந்தால், அப்பதவியில் இருந்துகொண்டே அவரது தன்னார்வ அமைப்புக்குப் பணத்தை லட்ச லட்சமாகத் திருப்பி விடுவது மிக எளிது. ஆனால், பதவி விலகித் தனது லட்சியத்தைத் தொடர்ந்தவர்.
அவர் மீதான தற்போதைய குற்றச்சாட்டு, "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்புக்கு வந்த பணத்தை அவரது அறக்கட்டளை கணக்கில் வரவு வைத்துள்ளார் என்பதுதான். "சுமார் ரூ.80 லட்சம் இவ்வாறு அந்த அறக்கட்டளைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளையில் அண்ணா ஹசாரே பெயர் இல்லை' என்பதுதான் தற்போது அக்னிவேஷ் முன் வைக்கும் குற்றச்சாட்டு.
இதைச் சொல்லும் அக்னிவேஷ், "அவர் தவறு செய்துவிட்டார் என்று கூறமாட்டேன். இதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றுதான் சொல்கிறேன்' என்று கூறுவதிலிருந்தே கேஜ்ரிவாலின் நேர்மை சந்தேகத்துக்கு இடமில்லாதது என்று தெரிகிறது. இந்த வரவு செலவு அனைத்தையும் ஒழுங்குபடுத்தி இணையதளத்தில் வெளியிடவிருக்கிறோம் என்று கேஜ்ரிவால் விளக்கமும் அளித்துவிட்டார். ஆனால், நமது காட்சி ஊடகங்கள், 24 மணி நேர சேவையைப் பரபரப்பாக நடத்தினால்தான் மக்கள் கவனத்தைக் கவர முடியும் என்பதால், சின்ன விஷயத்தைக்கூடப் பெரிதாக்கி மகிழ்கின்றன.
கிரண்பேடி ஒரு நேர்மையான அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, விமானப் போக்குவரத்து கட்டணத்தில் தான் சலுகை பெற்றதைக் காட்டாமல் முழுத் தொகையையும் வசூலித்து விடுகிறார் என்கிற குற்றச்சாட்டு அபத்தமானது. ஒரு சிறப்பு விருந்தினர் தனது சாப்பாட்டுச் செலவுக்காக ரூ.500 வாங்கிக்கொண்டு, ஆனால் நூறு ரூபாய்க்கு சாதாரண ஓட்டலில் சாப்பிட்டு மீதிப் பணத்தில் மற்றவர்களுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் அது அவரது விருப்பம். அதை எப்படி ஊழல் என்று சொல்ல முடியும்? கிரண்பேடி தனக்குக் கிடைத்த பணத்தை அவர் சொந்தச் செலவுக்காகப் பயன்படுத்துவதில்லை. அதையும் தான் நடத்தும் அறக்கட்டளைக்கு அளித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரையும் இவ்வளவு நுட்பமாகப் பார்த்து, இவர்களது கவனக்குறைவான செயல்களைக் கவனித்து, பொதுஇடத்தில் வைத்து சேறு வீசுவது எதனால்? இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? இவர்கள் தங்கள் பாதையைவிட்டு விலகி, காங்கிரஸýக்கு எதிராக ஹரியாணா மாநில இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ததால்தான் இத்தனை பிரச்னைகளையும் தேவையில்லாமல் எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
லோக்பால் வேண்டும் என்று அண்ணா ஹசாரேவுடன் இவர்கள் கைகோத்து நின்றபோது, அவர்களுக்கு முழுமையான அதரவு கிடைத்தது. கருத்தொற்றுமை இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்று சொன்னபோது கருத்து பேதங்கள் தோன்றிவிட்டன. காங்கிரஸýக்கு வாக்களிக்கக் கூடாது என்றால், நீங்கள் என்ன பாஜக ஆதரவு நபர்களா? என்ற கேள்வி முன் வைக்கப்படுவது நியாயம்தானே?
ஒரு பொதுக்காரியம், ஒரு பொதுநலன் அரசியலுக்கு அப்பாற்றப்பட்டதாக இருக்கும்வரை அதற்குக் கிடைக்கும் மரியாதை வேறு. அதில் அரசியல் கலந்துவிட்டால் அதற்குக் கிடைக்கும் மரியாதை வேறு. லோக்பால் போராட்டத்தைப் பொருத்தவரை ஆளும்கட்சி காங்கிரஸô அல்லது பாஜகவா என்பதல்ல பிரச்னை. லோக்பால் சட்டமாக வேண்டும் என்பது மட்டும்தான் இலக்கு. ஆட்சி பீடத்தில் யார் இருந்தாலும் அதுபற்றி அந்தப் போராட்டக்காரர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
"பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை' என்பதை அண்ணா ஹசாரே குழு கவனத்தில் நிறுத்த வேண்டும். அவர்களது இலக்கு லோக்பால் மட்டுமாகத்தான் இருக்க வேண்டும். அரசியல் ஆசை வந்துவிட்டால் இவர்களும் சுயநல அரசியல்வாதிகளாகி விடுவார்கள்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011 Empty Re: தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011

Post by சோழன் Tue Oct 25, 2011 11:51 am

இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.... ஊழல் கறை படிந்திருக்கும் ஆட்சியாளர்கள் எப்படி அதற்கான சட்டத்தை கொண்டு வருவார்கள்... அதனால் அவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்வதை அரசியல் ஆசை என்று எடுத்து கொள்ள கூடாது அப்படியே இவர்களை போன்றவர்கள் அரசியலில் வருவதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்வார்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்றும் தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011 599303 அன்புடன்,
சோழவேந்தன் தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011 Empty Re: தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011

Post by பிளேடு பக்கிரி Tue Oct 25, 2011 11:53 am

சோழன் wrote:இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.... ஊழல் கறை படிந்திருக்கும் ஆட்சியாளர்கள் எப்படி அதற்கான சட்டத்தை கொண்டு வருவார்கள்... அதனால் அவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்வதை அரசியல் ஆசை என்று எடுத்து கொள்ள கூடாது அப்படியே இவர்களை போன்றவர்கள் அரசியலில் வருவதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்வார்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011 Empty Re: தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011

Post by கேசவன் Tue Oct 25, 2011 11:59 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011 1357389தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011 59010615தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011 Images3ijfதினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011 Empty Re: தினமணி தலையங்கம்: குறி தவறுகிறது...! - 25/10/2011

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum