புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
92 Posts - 61%
heezulia
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 1%
eraeravi
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
284 Posts - 45%
heezulia
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
19 Posts - 3%
prajai
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_m10மூவா நினைவுகள்   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூவா நினைவுகள் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Oct 21, 2011 11:09 am

மூவா நினைவுகள்

நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி

விஜயா பதிப்பகம் ,கோவை விலை ரூ 40

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மு .வ .நூற்றாண்டு நினைவு சிறப்பு வெளியீடாக வந்துள்ளது .முகப்பு அட்டையில் மு .வ .அவர்களின் புகைப்படம் சிறப்பாக உள்ளது .ஆசிரியப் பெருந்தகை வழி காட்டும் நாயகர் மு .வ .வுக்கு நூற்றாண்டுக்காணிக்கை தந்துள்ளார் .நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி .

மு .வ வின் மாணவர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி .நூலில் தெளிந்த நீரோடை போன்ற நடையில்19 கட்டுரைகள் எழுதி உள்ளார் .
ஆசிரியன் ஓர் அற்புதமான சொல் ஆசு +சிரியன் = குற்றங் குறைகளை ஓடச் செய்பவன் .என்று இச்சொல்லுக்கு விளக்கம் சொல்வார்கள் .இந்த விளக்கத்தை இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

மு .வ .வின் மாணவர் நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி ,ஆசிரியர் மு .வ. அவர்களுக்குச் செய்தச் சிறப்பாக நூல் உள்ளது இது போன்ற ஆசிரியர் மாணவர் உறவு இன்று காண முடிய வில்லை .

எங்களின் ஆசிரியர் மு .வ .அவர்கள் நன்னூல் வழி அறிமுகப்படுத்தப்படும் அத்தனை இலக்கணங்களுக்கும் முற்றிலும் பொருத்தமான ஒரு பெருந்தகை.இந்த வகையில் இன்னுமொரு தெ.பொ.மீ .

கல்வி நிலையத்தின் சுவர்களுக்கு அப்பால் விரிந்து கிடக்கிற உலகத்தைப் பற்றியும் மாணவன் தெரிந்து புரிந்து கொள்கிற வகையில் கற்பிப்பதே ஆசிரியரின் கடமையாகும் .இன்றைய ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய நல்ல கருத்தாகும்.
அறிவுடைமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் இரண்டு குறட்பாக்களில் கல்விக் கூ டத்திற்கும் பொருந்தும் படி பாடி உள்ளார் .என்கிறார் நூல் ஆசரியர் .

1.உலகம் (425)
2.எவ்வது (426)

ஆசிரியர் மு .வ .அவர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தியப் பாங்கை மலரும் நினைவுகளாகப் பதிவு செய்து ,மூவா நினைவுகள் என்று நூலிற்குப் பெயர் சூட்டியது பொருத்தமாக உள்ளது .

நல் ஆசிரியருக்கு இலக்கணமாக வாழ்ந்துக் காட்டிய மாமனிதர் பன்முக ஆற்றலாளர் மு .வ .அவர்கள் பற்றி பல புதிய செய்திகள் அறிய வாய்ப்பாக உள்ளது நூல் .மு .வ பற்றிய மதிப்பை மேலும் ,மேலும் உயர்த்தும் விதமாக நூல் மிகச் சிறப்பாக உள்ளது .பாராட்டுக்கள் .பாடத்திற்கு அப்பாலும் ஆசிரியர் மு .வ .ஒரு புரவலராய் -உற்றுளி உதவும் நண்பராய் -வழி நடத்தும் தந்தையாய் தாயாய் விளங்கியவர் எங்கள் மு .வ . என்கிறார் நூல் ஆசிரியர் .மொத்தத்தில் மு .வ .மாதா ,பிதா ,குரு,நண்பராக வாழ்ந்துக் காட்டி உள்ளார் .

மு வ .விடம் பயின்ற மாணவர்கள் ,மு .வ .இறந்தபின்பு அவரது மனைவி ராதா அம்மையாரிடம் .ஆசிரியர் மு .வ அவர்கள் தந்து உதவிய பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கொடுத்த போது ராதா அம்மையார் வாங்க மறுத்தார் .என் கணவர் தங்களுக்கு என்ன நினைத்துத் தந்தாரோ ? தெரியாது . அந்த நினைப்போடு நன்றாக வாழுங்கள் .என்னிடம் தர வேண்டாம் நான் வாங்க மாட்டேன் என்று மறுத்துவிட்ட செய்தி படித்தபோது ,மு வ அவர்களின் மனைவி மு வ .போலவே நல் அறத்துடன் வாழ்ந்தார் .என்பதை உணர முடிந்தது .

பேச்சைக் குறைப்பீர் உழைப்பைப் பெருக்குவீர் என்ற பொன் மொழியை மு .வ .வாழ்வில் கடைப்பிடித்தார் என்பதை உணர முடிகின்றது .
மேடைப்பேச்சுக்களில் எனக்கும் நம்பிக்கை இல்லை .வீண் பொழுது போக்கு. அந்த நேரத்தில் எழுதி வைத்தால் பயன் உண்டு .பேசிப் பேசி தமிழ்நாடு வெறும் பேச்சுக் கூடமாகிவிட்டது. செயல்கள் இங்கே மிக மிகக் குறைவு .என்னை சொற் பொழிவிற்கு அழைக்காதே என்று நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி அவர்களிடம் மு .வ .கூறி உள்ளார் .

இலக்கிய இமயம் மு .வ .அன்று சொன்னது தமிழகத்திற்கு இன்றும் பொருந்துவதாகவே உள்ளது . நூல் முழுவதும் மு .வ .அவர்களின் உயர்ந்த கருத்துக்களை விதை போல தூவி உள்ளார் நூல் ஆசிரியர் .
மு .வ அவர்களின் நூலிற்கு மெய்ப்புத் திருத்த, நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி அவர்களிடம் தந்த போது மு .வ .எழுதியிருந்த சொற்களான சின்ன பையன் ,சின்ன காடு என்பதை சின்னப் பையன் சின்னக் காடு என்று திருத்தி நூல் வெளி வந்து விட்டது .தவறாக மெய்ப்புத் திருத்தியதற்குத் தண்டனையாக அன்றிலிருந்து மெய்ப்புத் திருத்தத் தர வில்லையாம்.

இது போன்ற பல்வேறு சுவையான நிகழ்வுகள் நூலில் உள்ளது .
நூல் ஆசிரியர் ம .ரா .பொ.குருசாமி மாணவனாக இருந்தபோது தேர்வு எழுதாமல் போராட்டம் நடத்தியபோது மு .வ .சொன்ன வைர வரிகள்
ஒழுங்காக படிபதையே கடமையாகக் கொண்டு நடந்து கொண்டீர்களானால் ,இதே மன்றத்தில் உங்களை வாழ்த்திப் பாராட்டுக் கூட்டம் நடத்துவேன். ஒழுங்கு பேணாமல் நீங்களெல்லாம் எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்தாலும் நான் மதிக்க மாட்டேன் .
ஒழுக்கத்திற்கு மு .வ .எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து உள்ளார் என்பதை உணர முடிகின்றது .இந்த வரிகளை இன்றைய மாணவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
மு. வ .அவர்கள் உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு மிகச் சிறந்த உரை எழுதினார்கள் .அவர் எழுதிய உரை .210 வது பதிப்பு 2011ஆம் ஆண்டில் வந்துள்ளது என்றால் அவர் உரையின் மதிப்பை உணரமுடியும் .

மு. வ .அவர்கள் திருக்குறளுக்கு மிகச் சிறந்த உரை எழுதியதோடு நின்று விடாமல் ,திருக்குறள் வழி வாழ்வில் நின்ற காரணத்தால்தான் நூற்றாண்டு அடைந்தும் போற்றப்படுகின்றார் .வாசகர்களின் உள்ளத்தில்,மாணவர்களின் உள்ளத்தில் இன்றும் நிற்கின்றார் .மு வ .என்ற மிகச் சிறந்த ஆளுமையின் மதிப்பிற்கு மேலும் மதிப்புச் சேர்க்கும் விதமாக வந்துள்ள
மூவா நினைவுகள் என்ற நூல் எழுதியுள்ள முனைவர் ம .ரா .பொ.குருசாமி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.



--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!



View previous topic View next topic Back to top

Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக