ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளைக்கு மகளாய் தாய்

+4
பூஜிதா
அருண்
கே. பாலா
செய்தாலி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிள்ளைக்கு மகளாய் தாய் Empty பிள்ளைக்கு மகளாய் தாய்

Post by செய்தாலி Thu Oct 20, 2011 11:47 am

பிள்ளைக்கு மகளாய் தாய் Appamakal7959az


ம்மா ...
திடுக்கிட்டு எழுந்தவன்
கண்ணைக் கசக்கி விழிதிறக்க
ஆறுமணியை காட்டியது கடிகாரம்

எழுந்தவன்
மெல்ல சோம்பலை முறிக்க
படுக்கையில் உதிர்ந்து விழுந்தது
அதுவரையிலான உறக்கம்


அம்மான்னு
சத்தம் போட்டது கேட்டுச்சு
கனவுல உங்க அம்மாவா
நக்கல் கேள்வியுடன் மனைவி

அம்மா
கூப்பிடுவது போல் சத்தம்
மனைவிக்கு பதிலத்தபடி
ஆயத்தமானான் காலைக் கடமைகளில்

மேஜையில்
கைபேசி அழைத்தபடி துடிக்க
கையில் எடுத்த மனைவியோ
ஹலோவுக்குப் பின் மௌனமானாள்

வாடிய
முகத்துடன் ஓடிவந்து
அவன்னோக்கி கைபேசியை நீட்டுகையில்
அவள்விழி உதிர்த்தது கண்ணீரை

அண்ணே ...
அம்மா..ம்மா தவறிருச்சி
ஊருக்கு உடனே புறப்பட்டுவா
அழுத குரலுமாய் தங்கை

அச்சேதி
இடியாய் நெஞ்சில் விழ
நாளத்தில் குருதியோட்டம் நிற்க
தளர்ந்து விழுந்தான் அவன்

வார்த்தைகள்
எங்கோ ஓடி ஒளிந்துகொள்ள
பேசா ஊமையைப்போல் மௌனமாக
அழுதது அவன் இதழ்கள்

ஊருக்கான
நாழிகைகளின் பயணத்தில்
வீடுவரை ஏங்கி அழுததில்
விழிகளில் வற்றியது கண்ணீர்

பேரூந்தில்
வந்திறங்கியவன்
தடுமாறி விழுந்தான் ஊர்வீதியில்
ஓடிவந்து எடுத்த உறவுகளோ
அவனைத் தாங்கியபடி அழுதது

நம்ம
வீட்டு வெளிச்சம் அனைச்சிருச்சு
உறவுகாத்த குலசாமியும் சான்ச்சிருச்சு
தலைமாட்டில் கதறினாள் தங்கை

அண்ணே ...
தாரை தாரையாக உதிரும்
கண்ணீருடன் ஓடிவந்த தம்பியோ
நெஞ்சோடு சேர்த்தழுதான் அவனை

உங்களுக்கெல்லாம்
பாலூட்டி வளத்தவளுக்கு
ஒருசொட்டு பாலூத்த ஆளில்லையே
பக்கத்து வீட்டுக் கிழவி

பெத்தபுள்ளங்க
உசுரோட குத்துக்கல்ல இருந்தும்
நாதியற்று உசுரவிட்டுட்டா
புலம்பியபடி அம்மாவின் தங்கை

பொழப்புக்காக
அங்க இங்கன்னு போயிட்டீங்க
கடைசி நேரத்துல பெத்தவள கவனிக்காமல்
சம்பாதிச்சு என்ன புரோஜனம்
உறவுக்காரர்களில் ஒருவர்

ப்பா..அப்பா
பாட்டி துனியைமூடி தூங்குது
எழுதிருக்க சொல்லுங்கப்பா
அவனின் இரண்டுவயது மகன்

பாட்டிக்கு
கொஞ்சம் உடம்பு சரியில்லை
பாட்டி தூங்கட்டும் என்றபடியே
மகனை வாரியெடுத்து அழுதான்

பத்துமாசம்
சுமந்து பெத்த தாயை
பாடையில சுமந்து கொண்டு
மயான பயணத்தில் அவன்

என்னப்பெத்த
தெய்வத்திற்கு கொள்ளி வைக்கவா
தலைப் புள்ளையாய் பிறந்தேன்
வாய்விட்டுக் கதறினான் அவன்

இரண்டாம் நாள்
இறுதிக் கிரிகைகள் முடிந்து
வீட்டுக்கு வந்தவன் கண்டான்
இரவல் புன்னகையிட்டு மனைவி

அவள்
காதில் எதோ முனுமுனுத்தாள்
ஆழ்ந்த துயர துக்கத்திலும்
மெல்ல மலர்ந்தது அவன்முகம்

நிச்சயமா
இது பெண்குழந்தை தான்
எங்கம்மா மறுபடியும் பிறக்கபோரா
எனக்கு மகளாய்

பிள்ளைக்கு
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்



Last edited by செய்தாலி on Thu Oct 20, 2011 12:38 pm; edited 1 time in total


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பிள்ளைக்கு மகளாய் தாய் Empty Re: பிள்ளைக்கு மகளாய் தாய்

Post by கே. பாலா Thu Oct 20, 2011 11:52 am

படித்தபின்னும் நெஞ்சம் கனத்தது !ஆழமான வரிகள்
படிப்பவர்கள் மனதில் அவரவர்களின் தாய் வந்து போவது நிச்சயம் நன்றி செய்தாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பிள்ளைக்கு மகளாய் தாய் Empty Re: பிள்ளைக்கு மகளாய் தாய்

Post by அருண் Thu Oct 20, 2011 11:57 am

சூப்பர்! அண்ணா.! படிக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது! மகிழ்ச்சி

இன்றய பெரும்பாலும் இது போலதான் நடந்து கொண்டிருக்கிறது திருமணம் ஆகி தனியாகி சென்று விடுகிறார்கள் அம்மாவும் ஆதரவு அற்று நிற்கிறார்கள்..!
மகிழ்ச்சி அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பிள்ளைக்கு மகளாய் தாய் Empty Re: பிள்ளைக்கு மகளாய் தாய்

Post by பூஜிதா Thu Oct 20, 2011 12:08 pm

சூப்பருங்க படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பிள்ளைக்கு மகளாய் தாய் Empty Re: பிள்ளைக்கு மகளாய் தாய்

Post by உமா Thu Oct 20, 2011 12:17 pm

கடைசி வரிகளில் அப்படியே கண்ணீர் மல்க உடல் சிலிர்த்தேன் செய்தாலி...
என்ன சொல்வது என்றே தெரில..மெய் மறந்து படித்தேன் மீண்டும் ஒருமுறை...
தாய்மை பிரிந்த வேதனை சுமந்த அவன் இன்னொரு தாயை வர வேர்க்க தயார் ஆகிறான்...

இந்த மாதிரி நிறைய நான் கேள்வி பட்டு இருக்கேன்..
இருந்தும் ஒரு நம்பிக்கையே மனிதனுக்கு...

சிறந்த கவிதை செய்தாலி.... 10 கவிதைகளை படித்தால் போலே உங்களின் ஒரே கவிதை...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிள்ளைக்கு மகளாய் தாய் Empty Re: பிள்ளைக்கு மகளாய் தாய்

Post by ஹிஷாலீ Thu Oct 20, 2011 12:34 pm

நான்கு வரிகள் நாளும் பொழுதுமாய் மிளிர்கிறது கவிதையில். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பிள்ளைக்கு மகளாய் தாய் Empty Re: பிள்ளைக்கு மகளாய் தாய்

Post by அ.இராஜ்திலக் Thu Oct 20, 2011 12:41 pm

பிள்ளைக்கு
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்

அருமை அருமை


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

பிள்ளைக்கு மகளாய் தாய் Empty Re: பிள்ளைக்கு மகளாய் தாய்

Post by செய்தாலி Thu Oct 20, 2011 1:20 pm

கே. பாலா wrote:படித்தபின்னும் நெஞ்சம் கனத்தது !ஆழமான வரிகள்
படிப்பவர்கள் மனதில் அவரவர்களின் தாய் வந்து போவது நிச்சயம் நன்றி செய்தாலி

மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பிள்ளைக்கு மகளாய் தாய் Empty Re: பிள்ளைக்கு மகளாய் தாய்

Post by செய்தாலி Thu Oct 20, 2011 1:22 pm

அருண் wrote:சூப்பர்! அண்ணா.! படிக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது! மகிழ்ச்சி

இன்றய பெரும்பாலும் இது போலதான் நடந்து கொண்டிருக்கிறது திருமணம் ஆகி தனியாகி சென்று விடுகிறார்கள் அம்மாவும் ஆதரவு அற்று நிற்கிறார்கள்..!
மகிழ்ச்சி அருமையிருக்கு

மிக்க நன்றி அருண்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பிள்ளைக்கு மகளாய் தாய் Empty Re: பிள்ளைக்கு மகளாய் தாய்

Post by செய்தாலி Thu Oct 20, 2011 1:28 pm

பூஜிதா wrote: சூப்பருங்க படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பிள்ளைக்கு மகளாய் தாய் Empty Re: பிள்ளைக்கு மகளாய் தாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum