ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்

+8
உதயசுதா
அ.இராஜ்திலக்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிஜிராமன்
நட்புடன்
கேசவன்
தர்மா
முஹைதீன்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம் - Page 2 Empty தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்

Post by முஹைதீன் Wed Oct 19, 2011 7:16 pm

First topic message reminder :

தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்

இன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில் தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது.

மணல் கொள்ளை – முல்லைப் பெரியாறு :

முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் தொடர்ந்து நமக்கு தொல்லை கள் கொடுத்து வரும் மலையாளிகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினையும் மதிக்கா மல் புதிய அணைகட்ட தீர்மானித் துள்ளனர்.

புதிய அணை கட்டப்படுமானால் முல்லைப் பெரியாறு அணை யில் தமிழகத்திற்குள்ள 1999 ஆண்டு ஒப்பந்தம் செல்லாததாகிவிடும். இந்த உண்மை கேரள அரசுக்கும், தமிழக அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், மன்மோகன் சிங் – சோனியாவிற்கும் நன்றாகத் தெரியும்.

ஆனால் பாதிப்பைக் கண்டு பதை பதைக்க வேண்டிய முதல்வர் கருணா நிதி கடிதம் எழுதிக் காலம் கழித்துக் கொண்டிருக்கிறார். புதிய அணை கட்ட தமிழக ஆறுகளிலிருந்து நாற்பதாயிரத்தி லிருந்து அறுபதாயிரம் யூனிட் அளவு மணல் கொள்ளையடிக்கப்பட்டு கேரள வனப்பகுதியில் குவிக்கப்பட்டு வரு கின்றது. (ஒரு லாரியில் ஒன்றரை யூனிட் மணல் நிரப்பலாம்).

நிலம் கைப்பற்றுதல்

தமிழக – கேரள எல்லை மாவட் டங்களான நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி என ஏழு மாவட்டங்களின் எல்லைப் பகுதியிலிருந்து தமிழகத்தினுள் நூறு கி.மீ. அளவிற்கு உள்ளே நுழைந்து நிலங்களை வாங்கியுள்ளனர் மலையாளி கள். வளைகுடா நாடுகளில் பெரும்பணம் சம்பாதிக்கும் மலையாளிகள் முதலீடு என்ற பெயரில் தமிழ்நாட்டில் நிலங் களை வளைத்துப்போட்டு வருகிறார்கள். தமிழ்நாடடுத் தமிழர்களைவிட அதிக விலைகொடுத்து மலையாளிகள் நிலங்களை வாங்குவதால் தமிழர்கள் மலையாளிகளிடம் நிலத்தை விற்றுவிட்டு வெளியேறுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பில் இன்று 8ல் 1 பகுதி மலையாளிகளின் கையில் உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எல்லையோர மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் பல இடங்களிலும் இடத்தை வளைத்துப் போடுவதில் குறியாக இருக்கின்றனர். நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் உள்ள தமிழக வனத்துறைக்குச் சொந்தமான மரங்களை வெட்டி கப்பல் மூலம் ஜப்பான், கொரியா போன்ற நாடு களுக்குக் கடத்தும் தொழிலையும் பகிரங்கமாகச் செய்து வருகிறார்கள்.

நகை வணிகம் :

ஐம்பது, அறுபது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மார்வாடிகள் நகை வணிகம், வட்டிக் கடை நடத்தி வந்தா லும் ஒரே பெயரில் தமிழ்நாடு முழுவதும் கடைகள் திறந்து கிளை பரப்பவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நகை வணிகத் தில் நுழைந்த மலையாளிகள் இன்று ஜோஸ் ஆலுகாஸ், ஜெய் ஆலுகாஸ், மணப்புரம் கோல்டு ஹவுஸ் என நூற்றுக்கணக்கான கிளைகளைப் பரப்பி விட்டார்கள். இந்த நகைக்கடைகளில் கண்ணாடிக் கதவைத் திறந்து விடுப வன் தொடங்கி கல்லாப்பெட்டியில் இருப்பவன் வரை மலையாளிகளே.

நகைக்கடை என்றால் 10 ஷ் 15 அளவில் கடைகள் என்று நினைத்து விட வேண்டாம். ஐந்தடுக்கு மாடிகள், நூற்றுக்கணக்கான மலையாள ஊழியர் கள், குளிரூட்டப்பட்ட அறைகள் என விரிந்து கிடக்கின்றன.

மார்வாடிகளால் தமிழர்களின் நகைத்தொழில் நசிந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சோக வரலாற்று நிகழ்வின் வலி ஆறும் முன்பே மலையாளிகளின் ஆதிக்கத்தால் தமிழக நகை வணிகர் களும் தொழிலாளர்களும் நடுத்தெரு விற்கு வரவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதில் வேதனை யும் வேடிக்கையும் என்னவென்றால் அண்மையில் ஜோஸ் ஆலுக்காசின் கிளைத் திறப்புவிழா கடலூரில் நடந்தது. கடையைத் திறந்து வைத்தவர் யார் தெரியுமா? தமிழக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சரான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். மலை யாளிகள் நம்மீது ஆதிக்கம் செலுத்தும் இரகசியம் தெரிகிறதா?

முத்தூட் பைனான்ஸ்:

மலையாளிகளால் சில ஆண்டு களுக்கு முன் சென்னை, மதுரை போன்ற மாநகரங்களில் மட்டும் முத்தூட் பைனான்ஸ் தொடங்கப் பட்டது. பிறகு குறைவான வட்டி, நகைக் கிராமிற்கு அதிக பணம் நாள் கணக்கில் மட்டுமே கணக்கிடப்படும் வட்டித்தொகையென தமிழக மக்களி டம் கவர்ச்சி காட்டி நகராட்சி தகுதியுள்ள தமிழக நகரங்களில் தமது வட்டிக்கடையை விரிவாக்கம் செய்த முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தினர் இன்று ஐந்தாயிரம், பத்தாயிரம் மக்கள் தொகை கொண்ட சிற்றூர்ப் பகுதிகளில் கூட தனது கிளையைத் தொடங்கி வட் டிக்கடை என்ற பெயரில் தமிழர்களின் சொத்துக்களை ஏமாற்றி பறித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட முத்தூட் பைனான்ஸ் கிளைகள் தமிழகத்தில் வேர்ப்பிடித்து வளர்ந்து வரும் பேரா பத்து புரியாமல் மலையாளிகளிடம் நகைகளை அடகு வைத்து மனை வாங்கும் தமிழர்கள் பின் வீட்டை விற்று வட்டி கட்டி நடுத்தெருவிற்கு வருகிறார்கள்.

கட்டுமானத் தொழிலிலும் கைவரிசை:

அரை கிரவுண்ட், ஒரு கிர வுண்ட் அளவில் வீடு கட்டிக் கொடுப் பதை நாம் பெருமையாக பீற்றிக் கொள்கிறோம்.

ஆனால் தமிழ்நாட்டில் இன்று பெருமளவில் மதிப்பிடக்கூடிய கட்டிடங்களைக் கட்டும் தொழில் மலையாளிகளின் கையில். தமிழகக் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ஏக்கர் கணக்கிலான பெரிய பெரிய பங்களாக்கள், மாளிகைகளை தமிழ்நாட்டில் எழுப்பிக் கொண்டிருக்கும் பென்னிகுரியகோஸ் என்ற மலையாளியின் கையில்தான் இன்று கட்டுமானத்துறை உள்ளது.

தமிழகத்திலுள்ள பாரம்பரியமான செட்டி நாட்டு வீடுகளை எல்லாம் வாஸ்து சரியல்ல என்று இடித்து, அதில் உள்ள பொருட்களை எல்லாம் கொள்ளையடித்து தமிழகக் கட்டிடக் கலைகளைச் சிதைத்து மலையாள கட்டிடக் கலைகளைப் புகுத்திக் கொண்டிருக்கிறார் பென்னி குரியகோஸ்.

இவரது ஆண்டு வருமானம் 500 கோடியைத் தாண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதே போல ஆண்டுக்கு பலநூறு கோடிகளை இலாபமாக ஈட்டும் எம்.ஆர்.எப். டயர் நிறுவனமும் மலையாளிகளுடையதுதான்.

பண்பாட்டுப் படையெடுப்பு :

தமிழகத்தில் மார்வாடிகளின் ஹோலிப் பண்டிகையைவிட இன்று பிரபலமாகிக் கொண்டிருக்கின்றது மலையாளிகளின் பண்டிகையான ஓணம்.

தெலுங்கு வருடப் பிறப்பிற்கு விடுமுறை விட்டு அண்டை மாநிலத்துடன் நட்பை வளர்ப்பதுபோல் கேரளத்துடனும் நட்போடு இருக்க வேண்டாமா? இதற்காக தமிழக முதல்வர் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஓணம் திருவிழாவிற்காக மதுரை, நெல்லை, சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, நாகர்கோவில், குமரி என பதினைந்திற்கும் மேற்பட்ட நகரங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்தார்.

இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மலையாளிகள் தமிழக பள்ளி – கல்லூரிகளில் மலை யாளப் பண்பாட்டின் பெருமைகளையும், உள்ளூர் தொலைக்காட்சிகளை ஒரு நாள் குத்தகைக்கு எடுத்து ஓணம் பண்டிகை யின் சிறப்பையும் பரப்புகிறார்கள். இதேபோல கதகளிக்கும் தமிழகத்தில் அண்மைக் காலமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

விளம்பரப் படங்களில்கூட கதகளி இடம் பெறும் அளவிற்கு இன்று நம்மிடையே மலை யாளப் பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்து வருகின்றது.

செண்டா மேளம் :

மாவீரன் முத்துக்குமார் தீக்குளித்து மாண்ட நாளில் மதுரையில் மு.க. அழகிரி தனது பிறந்த நாளை கிடாவும், கேக்கும் வெட்டிக் கொண்டாடினார் என்பது தெரிந்த கதைதான்.

மேலும் அன்றைய சிறப்பாக கேரளத்திலிருந்து செண்டா மேளக் குழுவினர் வரவழைக்கப்பட்டு ஆட்டம் பாட்டம் போட்டு ஆனந்தத்தில் மூழ்கித் திளைத்தார்கள்.

கேரளத்தில் மட்டுமே பிரபலமடைந்திருந்த செண்டா மேளத்தை தமிழகத்திற்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியது மு.க. அழகிரி தான். இன்று மேல்தட்டு வர்க்கத்தினர் மற்றும் அரசியல் பிரமுகர்களின் இல்ல விழாக்களில் செண்டா மேளக் குழுவினர் தவறாமல் இடம் பெறுகிறார்கள் என்றால் அதற்கு மு.க. அழகிரியே முழுமுதல் காரணமாவார்.

அய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்கள் கன்னிபூசை நடத்தும் போதுகூட இன்று செண்டா மேளம் இடம் பிடித்துக் கொள்ளும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்று வருகின்றது. மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் அரசு விழாக்களில் கூட செண்டா மேள இசை நிகழ்ச்சி நடைபெறுவதுதான் பெறும் வேதனை.

இதன் உச்சக் சட்டமாக அண்மை யில் கோவையில் கூடிக்கலைந்த செம்மொழி மாநாட்டிலும் செண்டா மேளக் கச்சேரி இடம் பெற்றது செம் மொழி மாநாட்டுப் பாடலை இயக்கிய வரும் பாடியவர்களில் பெரும்பாலா னோரும் மலையாளிகளே.

வந்தேறி களைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதில் தமிழர்களுக்கு நிகர் எவருமில்லை என்பதைத் தெரிந்து கொண்ட கேரள அரசு செண்டா மேளத்திற்கென பள்ளி – கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் தொடங்கி இசைப்பயிற்சி முடித்தவர் களுக்கு சான்றளித்து, அவர்களைத் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது..

முன்பெல்லாம் கேரளத்திலிருந்து செண்டா மேளக் குழுவினர் வந்து போனார்கள். தற்போது தமிழ்நாட்டி லேயே தங்கிவிட்டார்கள். இதனால் நமது பாரம்பரிய இசைக் கலைஞர்களின் வாழ்வில் இருள் சூழும்நிலை தோன்றியுள்ளது.

சூழல் கேடுகள் :

தமிழ்நாட்டிலிருந்து மலையாளி களுக்கு அரிசி, பருப்பு, பால், காய்கறி முதலான அத்தியாவசிய பொருட்களும், ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளும் செல்கின்றன. இதில் கோழியின் கழிவுப் பொருட்களையும், பிளாஸ்டிக் போன்ற திடக் கழிவுகளையும் மருந்துக் கழிவுகளையும் தமிழக எல்லையில் மலையாளிகள் கொட்டிச் செல்வது வழக்கமாகிவிட்டது.

அவ்வப் போது உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரி விப்பது பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தாலும் தடுக்க வேண்டிய தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க் கிறது.

கோவை மாவட்டத்தில் கடலூர், பொள்ளாச்சி, நடுப்புணி, கிணத்துக்கடவு, வளந்தாயமரம், கோபாலபுரம், செமணாம் பதி, மூணாறு போன்ற இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக கேரளக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

தமிழக எல்லைகளில் சோதனைச் சாவடிகள் இருந்தும், அதிகாரிகளின் மெத்தனத்தால் மலையாளிகள் தமிழகப் பகுதிகளில் கழிவுகளை கொட்டிச் செல்கிறார்கள்.

கடந்த 09-07-2010 அன்று பொள்ளாச்சியில் மருத்துவக் கழிவைக் கொட்டவந்த கேரள லாரியைத் தடுத்து நிறுத்திய பெரியார் திராவிடர் கழக பொள்ளாச்சி வட்டச் செயலாளர் சா.சு. நாகராசன் கைது செய்யப்பட்டார். கைது செய்தது கேரள காவல்துறையோ என்று அவசரப்பட்டு விடாதீர்கள். நம் தமிழக காவல்துறைதான். பின்னே அண்டை மாநில உறவை வலுப்படுத்த வேண் டாமா? (இல்லாவிட்டால் சூரியா தொலைக்காட்சி கேரளத்தில் ஓடாது).

அரசியல் ஆதிக்கம் :

மத்திய அமைச்சரவையில் மகனுக்கும் பேரனுக்கும் வருமானம் வரும் துறையாக கேட்டுப் பெற்ற கலைஞரைவிடக் கேரளத்தவர்கள் வித்தியாச மானவர்கள்.

நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் ஏ.கே. அந்தோணி, வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் வயலார் ரவி, குடியேற்றத்துறை அமைச்சராக இருப்பவர் ஈ. அகமது எனத் தம் மாநில மக்களின் நலம் காக்கும் துறைகளைக் கேரளத்தவர்கள் பெற்றுள்ளார்கள்.

இந்தியாவில் உள்ள தேசிய இனங்களில் தமிழர்கள்தான் அதிக நாடுகளில் பரவி வாழ்கிறார்கள். முதல்வர் கலைஞர் அவர்கள், வயலார் ரவி, அகமது போன்றோர் வகிக்கும் துறைகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும்.

அப்படி பெறாததற்குக் காரணம் அந்தத் துறைகளில் அதிகம் சுருட்ட முடியாது என்பதுதான். ஆனால் மலையாளிகளின் கணக்கு வேறு. இந்தத் துறைகளின் மூலம் தமது இனத்திற்கு எந்தவகை யான பாதுகாப்பை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் உத்திரவாதப்படுத்தலாம் பொருளாதாரத்தைப் பெருக்கலாம் என்று எண்ணிச் செயல்படுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. பிரதமர் அலுவலகத்தில் குரூப்-1 தேர்வெழுதி தேர்ச்சி பெற்று தற்போது பணிபுரிபவர்கள் 57 பேர். இதில் மலையாளிகள் மட்டும் 37 பேர். இதுமட்டுமல்ல வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் நிரூபமா ராவ், பாதுகாப்பு ஆலோசகரான சிவங்கர் மேனன் மற்றும் எம்.கே.நாராயணன், பிரதமரின் ஆலோசகர் ஜோஷி, சோனியாவின் உச்சபட்ச ஆலோசகரான ஜார்ஜ், உள்துறைச் செயலாளர் கே.ஜி.பிள்ளை ஆகிய அனைவருமே மலையாளிகள் ஆவர். இந்தியாவில் மட்டுமல்லாது இந்தியாவிற்கான ஐ.நா. சிறப்புத் தூதுவராக கோபிநாத் அச்சங்குளங்கரே என்ற மலையாளியும், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் தனிச்செயலாளராக விஜய் நம்பியார் என்ற மலையாளியும் உள்ள னர். விஜய்நம்பியாரின் தம்பி மேஜர் ஜெனரல் சதீஷ் நம்பியார் இலங்கை ராணுவத்தினருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் பொறுப்பில் இருக்கிறார்.

நிர்வாகத்தின் கீழிருந்துமேலடுக்கு வரை எல்லாப் பொறுப்புகளிலும் மலையாளிகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது.

உண்மையில் மத்தியில் நடப்பது மன்மோகன் – சோனியா ஆட்சி என்பதைவிட மலையாளிகளின் ஆட்சி என்பதுதான் பொருத்தமான தாகும். இவர்களின் சூழ்ச்சியால்தான் ஈழத்தில் நம் உறவுகள் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக இந்திய அரசை ஆட்டிப்படைக்கும் அரசியல் சக்தியாக மலையாளிகள் திகழ்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கேரளத்தில் தமிழர்களின் நிலை :

தமிழ்நாட்டில் வசதி வாய்ப்பு களோடும், அரசியல் செல்வாக்கோடும் வாழும் மலையாளிகள் போல் கேரளத் தில் நம் தமிழர்கள் வாழ்கிறார்களா?

கடந்த ஆண்டு தமிழகத்தில் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை விட்டதுபோல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக திருவனந்தபுரம் நகரத்திற்கு மட்டும் ஒரு நாள் விடுப்பு கேட்டு கேரள அரசிடம் திருவனந்தபுரத் தமிழர்கள் விண்ணப்பித்தார்கள்.

ஆனால் விடுமுறை கிடையாது என்று கேரள அரசு அறிவித்தது. இதைக் கண்டித்து அங்குள்ள தமிழர்கள் கேரளத் தலைமைச் செயலகத்தின் முன் பொங்கல் வைக்கும் போராட்டத்தினை நடத்தி சிறை சென்றார்கள்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஒரு காலத்தில் கேரளாவில் பெரும் ஏலக்காய் எஸ்டேட் முதலாளி களாக இருந்தவர்கள். இவர்களின் கதை பெரும் துயரம் நிறைந்தது. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியானாலும், கம்யூ னிஸ்ட் ஆட்சியானாலும் ஏலக்காய் எஸ் டேட்டிற்குச் சென்று ஒரு ஏக்கருக்கு ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மிரட்டி பணம் பறித்தார்கள். மலையாளி களுக்கு அதிகக்கூலி கொடுத்து கட்டுப் படியாகாததால் விவசாய வேலைக்கு தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களை அடித்து விரட்டினார்கள்.

பிறகு முழுக்க முழுக்க மலையாளிகளையே வேலைக் குச் சேர்க்க வேண்டும் என்று மிரட்டினார்கள். இதனால் வந்த விலைக்கு நிலத்தை விற்று விட்டு மீண்டும் தமிழகத்திற்கே வந்து காலம் கழிக் கிறார்கள் நம் தமிழர்கள். மலையாளிகள் எந்த அளவிற்கு விழிப்புடனும் ஒரு கட்டுக்கோப்புடனும் திகழ்கிறார்கள் என்பதற்கு மேற்சொன்ன சம்பவங்கள் எல்லாம் சின்னச் சின்ன எடுத்துக் காட்டுகள்தான்.

இதையெல்லாம் தடுத்து நிறுத்த ஒரு தற்காப்புப் போருக்காகவாவது தமிழர்கள் தயாராக வேண்டாமா?

அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்திலேயே காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்புச் சட்டப்பிரிவான 370 கொண்டு வரப் பட்டது. அதன்படி காஷ்மீரில் பிறமா நிலங்களைச் சேர்ந்தவர்கள் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்க முடியாது.

அவரவர் தாய்மொழியில் வரவு செலவு கணக்கெழுதிக் கொள்ளலாம் என்ற சிறப்பு விதியும் வகுக்கப்பட்டது. இதன்படி இன்று தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் கடைகள் நடத்தி வரும் மார்வாடி, குஜராத்தி, மலையாளிகள் அவர்களின் தாய்மொழியிலேயே வரவு செலவுக் கணக்கு எழுதுவதால் நமது வருமான மற்றும் விற்பனை வரித்துறை அதிகாரி களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

இதைத் தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டவந்தேறிகள் விற்பனை வருமான வரித்துறை யினரை ஏமாற்றி வருகின்றனர். அல்லது லஞ்சம் கொடுத்து சரிக்கட்டுகின்றனர்.

இப்படி பிறமொழியினரின் பொருளாதார ஆதிக்கம் தமிழ் மண் ணில் வேர்பிடித்து நிற்பதை பிடுங்கி எறிய வேண்டுமானால் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட 1956க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறி சொத்து வாங்கியவர்களின் சொத்துக்கள் செல் லாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்த துணிச்சலான செயலைச் செய்ய முதுகெலும்புள்ள முதலமைச்சரால் மட்டுமே முடியும்.


1948-ல் செல்லாராம் என்ற மார்வாடி சென்னையில் துணிக்கடை திறந்ததை எதிர்த்து தந்தை பெரியார் ஆறுமாத காலம் தொடர்போராட்டம் நடத்தினார்.

ஒரு மார்வாடி உள்ளே வந் தால் பிறகு படிப்படியாக மார்வாடிகளின் ஆதிக்கம் பெருகிவிடும் என்று பெரி யார் அஞ்சினார். ஆனால் பெரியார் பெயரை மேடையில் முழங்கும் நமது முதலமைச்சர் தங்கச் சாலை என்ற தமிழ்ப்பெயரை மாற்றி மார்வாடியின் பெயரைச் சூட்டி செம்மொழியான நம் தமிழுக்கு இழுக்குத் தேடித்தந்தவர் களின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துவிட்டார்.


களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்று வரலாற்றில் படிக்கிறோம்.

ஆனால் கலைஞரின் காலம் இருண்ட காலமென நிகழ்காலத்தில் பார்க்கிறோம். நம் இனத்தைக் காட்டிக் கொடுப்பவர் கள் நம்மைக் காப்பாற்றப் போகிறார்களா என்று தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆசியாவில் சீனர்கள் வலிமை பெற்றுத் திகழ்வதைப் போல இந்தியாவில் இன்று வலுவுள்ள இனக்குழுவாக மலையாள இனம் திகழ்கிறது. மலையாளிகளின் ஆதிக்கப் போக்கு தொடருமேயானால் விரைவில் தமிழகம் கேரளமாகிவிடும்.

தமிழர்கள் பொருளாதார அடிமைகளாய் இடம் பெயரக்கூடிய அபாயம் ஏற்படும். அல்லது யூதர்களிடம் நிலத்தைப் பறிகொடுத்துவிட்டு போராடிக் கொண்டிருக்கும் அராபிய இனத்தைப் போல தமிழினம் தள்ளப்பட்டுவிடும்.

இந்த ஆபத்தை உணர்ந்து தமிழக அளவில் மலையாள ஆதிக்க எதிர்ப்பு இயக்கம் தொடங்கி தமிழர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் உடனடிக் கடமையாகும்.


மெயிலில் வந்தவை


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம் - Page 2 Empty Re: தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Oct 20, 2011 10:43 am

ராஜா wrote:தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தேசபக்தியோடு வழிநடத்தி செல்லும் தலைவர்கள் வரும்வரை இது போல ஆக்ரமிப்புகள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும்.
திராவிடர் கழகங்கள் என்ற மாயவலையில் இருந்து எப்போது தமிழன் வெளியே வருகிறானோ அப்போ தான் அவனுக்கு நல்ல காலம்.



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம் - Page 2 Empty Re: தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்

Post by சதாசிவம் Thu Oct 20, 2011 11:12 am

நல்ல பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி.

மலையாளிகள் மேல் குற்றம் ஒன்றும் இல்லை. அவர்கள் ஒருவர் ஆக சென்றாலும் தங்கள் மீது தன்னம்பிக்கையுடன் தான் வாழ்கிறார்கள். நாம் தாம் தலைவனை தேடுகிறோம்,. இங்கு எத்தனை பேருக்கு தமிழ் என்ற வார்த்தையை சரியாக உச்சரிக்க தெரியும். நம் பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவதையும், பிள்ளைகளுக்கு வட மொழியில் பேர் வைப்பதையும் தான் நாம் அனைவரும் விரும்புகிறோம். மலையாளிகள் எங்கு சென்றாலும் மலையாளத்தில் தான் உரையாடுகிறார்கள். தூய தமிழ் என்று பல தமிழ் வார்த்தைகளை படிக்க, புரிந்து கொள்ள, பேச நாம் விரும்புவதில்லை. யாராவது வந்து நம்மை தூக்கி விடுவார்கள் என்று தான் நாம் எதிர்பார்க்கிறோம். இதை தலைவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள். ஒரு தமிழன் தன் குடும்பத்துக்குள் தமிழை, தமிழன் என்ற உணர்வை உருவாக்கினால், தமிழன் என்று தமிழ்நாடு உணர்வு தானாக வரும். ஆனால் இதை செய்ய நாம் தயாராக இல்லை.

சரியான தலைவர் வரும் வரை காத்திருப்போமா அல்லது இன்றே தமிழன் என்ற உணர்வை வீட்டில் விதைப்போமா என்று யோசிக்க வேண்டும். குறைந்த பட்சம் அடுத்த தலைமுறையாவது தமிழன் என்ற உணர்வோடு இருக்கட்டும்.


Last edited by சதாசிவம் on Thu Oct 20, 2011 11:28 am; edited 1 time in total


சதாசிவம்
தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம் - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம் - Page 2 Empty Re: தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்

Post by பிரசன்னா Thu Oct 20, 2011 11:21 am

உதயசுதா wrote:சும்மா எதுக்குப்பா மலையாளிகளை குறை சொல்றீங்க?
இதுக்கெல்லாம் காரணம் நமக்குள்ள ஒற்றுமை இல்லாமல் இருப்பது.தமிழன் காலை தமிழனே வாரிவிடுவதுதான்.
நான் இங்கு பெரும்பாலும் பார்த்து வியந்த விஷயம் எப்படி இந்த மலையாளிகள் இத்தனை ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றுதான்.ஒரு மலையாளிக்கும்,தமிழனுக்கும் சண்டை என்றால் மலையாளிக்கு ஆதரவாகவே மற்ற மலையாளிகள் ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள்.இதில் வேதனையான விஷயம் என்ன என்றால் மலையாளிக்களுக்குதான் இங்கு இருக்கும் தமிழர்களும் ஆதரவு தருகிறார்களே தவிர தமிழனுக்கு இல்லை.
ஒரு மலையாளி விபத்தில் அடிபட்டால் எத்த்நை மலையாளிகள் உதவிக்கு வருகிறார்கள்.ஆனால் இதே ஒரு தமிழன் அடிபட்டால் அவன் அனாதையாக மருத்துவமனையில் இருந்து அவனே உடல்நிலை சரி ஆகி திரும்ப வேலைக்கு வந்தால் தான் உண்டு.இன்னும் நிறைய இருக்கு.
அதனால் சும்மா மத்த மொழிகாரங்களை குறை சொல்றதை விட்டுட்டு நாம எப்படி ஒற்றுமையா இருக்கிறது என்று பாருங்கள்

எதார்த்தமான உண்மை சோகம் - வேதனைக்குரியதும் கூட !!! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம் - Page 2 Empty Re: தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்

Post by பிரசன்னா Thu Oct 20, 2011 11:29 am

இந்தியாவில் உள்ள தேசிய இனங்களில் தமிழர்கள்தான் அதிக நாடுகளில் பரவி வாழ்கிறார்கள். முதல்வர் கலைஞர் அவர்கள், வயலார் ரவி, அகமது போன்றோர் வகிக்கும் துறைகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும்.

அப்படி பெறாததற்குக் காரணம் அந்தத் துறைகளில் அதிகம் சுருட்ட முடியாது என்பதுதான். ஆனால் மலையாளிகளின் கணக்கு வேறு. இந்தத் துறைகளின் மூலம் தமது இனத்திற்கு எந்தவகை யான பாதுகாப்பை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் உத்திரவாதப்படுத்தலாம் பொருளாதாரத்தைப் பெருக்கலாம் என்று எண்ணிச் செயல்படுகிறார்கள்.

மலையாளிகள் - அரசியவாதிகள், தொழிலதிபர்கள், மற்றும் அனைவரும், அவர்கள் சமூகம் நலமுடன் வாழ அதனை சிரத்தை எடுக்கிறார்கள்.

உண்மை சுடும், சுட்டாலும் உண்மை உண்மையே - பொதுவாக தமிழன் சுயநலவாதியாக இருக்கிறான்... அதனால் தான் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலமை தொடர்கிறது... நாம் மலையாளிகள்யிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது... வேற என்ன சொல்றது...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம் - Page 2 Empty Re: தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Oct 20, 2011 11:40 am

தமிழ் மொழியில் இருந்து உருவானதே மலையாளம்

மிகப் பண்டைக் காலத்தில் இந்தியா முழுவதிலும், இலங்கையிலும், பேச்சு வழக்கிலிருந்த பழந்திராவிடம் என்ற ஒருமொழியிலிருந்து பிரிந்து பல மொழிகளாக இன்று நிலவி வரும் மொழிகளையே திராவிட மொழிகள் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவில் இன்று இருபத்தைந்துக்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. (சிவசாமி வி 1973) என்பதை அறிய முடிகின்றது.

இவற்றுள் வட இந்தியத் திராவிட மொழி யாகப் பலுஸ்தானத்திலுள்ள பிராஹால் மொழி விளங்குகின்றது. மத்திய இந்தியாவில், திராவிட மொழிகளாக, பர்ஜி, கட்பி, குய் குவி கொண்ட பென்கோ, கோய, டோர்ரி, கொண்டிருக்க மல்டா ஆகியவை விளங்குகின்றன.

தென்னகத் திராவிட மொழிகளை இலக்கிய வளமுள்ள திராவிடமொழிகள், இலக்கிய வளமற்ற திராவிட மொழிகள் எனப் பிரிக்கலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், முதல் வகுப்பில் அடங்குகின்றன. இரண்டாவது வகுப்பில், தோட, கோத, படக, குடகு, துளு, சவர, கொலமி, நயினி, போன்ற மொழிகள் அடங்குகின்றன. (பண்டைய தமிழகம், பக். 141 கலாநிதி சி.க. சிற்றம்பலம் 1991)

கி.மு 2500 ஆம் ஆண்டளவில் இந்தியா விலும், இலங்கையிலும் பேச்சு மொழியாக நிலவி வந்த பழந்திராவிடம் என்ற மூலத் திராவிட மொழியிலிருந்தே மேற்குறிப்பிடப்பட் டுள்ள திராவிட மொழிகள் அனைத்தும் தோன்றின. இதனை ஆய்வுகள் உணர்த்தும்.

கிமு. 2500 ஆம் ஆண்டளவில் இந்தியா முழுவதிலும்,, இலங்கையிலும் பண்டைத்திரா விடம் பழந்திராவிடம் என்ற மொழியே பேச்சு மொழியாக இருந்து வந்தது. கி.மு 2000 ஆம் ஆண்டளவில்ஆரியர் இந்தியாவுக்குள் நுழைந்த காலத்தில் (துரை ஜெகநாதன் 1982) வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த பழந்திராவிட மொழியானது இடத்துக்கிடம் வேறுபட்டிருந்த போதும், ஒரே மொழியாகவே விளங்கி வந்தது.

அவ்வேளையிலேயே வட மேற்கு கணவாய் வழியாக ஆரியர் வந்து சிந்து நதிக்கரையில் குடியேறி, அங்கு வாழ்ந்து வந்த திராவிடரோடு (திராவிடக் குலங்கள்) கலந்தனர். (இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு பக்.கில்பர்ட் சிலேட்டர் தமிழில் கா. அப்பாத்துரை 1963) இக்காலத்தில் (கி.மு 2000 1500) அங்கு பேசப் பட்டு வந்த (வட இந்தியாவில்) பழந்திராவிட மொழியானது பல வகை மாறுதல் பெற்றது.

வட மொழி, திராவிட (பழந்) மொழி கலப்பின் பயனாக பிராகிருதம், பாளி முதலிய மொழி களும், வட இந்தியத் திராவிட மொழியான பிரா ஹுய் மொழியும் தோன்றின. இந்நிலையிலும், வட இந்தியாவின் சில இடங்களில் பழந்திராவிட மொழியின் திரிபுகள் பேசப்பட்டு வந்தன.

இம் மொழிகளைப் பேசி வந்த திராவிட மக்கள் குடியேறிய ஆரியர்களுடன் கலக்காது தனித்து ஒவ்வொரு பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.

இக் காரணங்களால் அம்மொழிகள் திராவிட மொழிகளாகவே அந்தந்த இடங்களில் நிலை கொண்டன. கோலமி, பார்ஜி, நாய்கி, கோந்தி, கூ. குவி. கோண்டா, மால்டா, ஒரோவன் முதலிய மொழிகள் இன்றும் திராவிட மொழியி னத்தைச் சார்ந்தவைகளாக இருப்பதற்குக் காரணம் அதுவேயாகும் (தமிழிலக்கிய வரலாறு பக்.1. டாக்டர் மு.வ).

தென் திராவிட மொழிகளின்

தோற்றம்

சிந்து வெளி நாகரிக காலத்தில் குறிப்பாக கிமு. 2000 ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதிலும் பேச்சு மொழியாக நிலவி வந்த பழந்திராவிடம் என்ற மூலத்திராவிட மொழியானது வட இந்தியாவில், வட மொழி, திராவிட மொழி கலப்பின் காரணமாக பிராகிருதம், பாளி ஆகிய மொழிகள் தோன்றி செல்வாக்குப் பெற்றதைத் தொடர்ந்து தென்னிந்தியா அளவில் குறுகி விட்டது.

பல்துறை சார்ந்த ஆய்வுகள் மூலமாக நோக்குமிடத்து இந்தியா முழுவதிலும் பேசப்பட்டு வந்த பழந்திராவிட மொழியானது கி.மு 17 ஆம் நூற்றாண்டளவில் தென்னிந்தியா அளவில் குறுகி விட்டது என்பதை அறிய முடிகின்றது.

கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன்னரே பழந்திராவிடம் என்ற ஆதித் திராவிடத்திலிருந்து தென் திராவிட மொழிக்குடும்பம் பிரிந்து விட்டது என கமில் சுவல பில் குறிப்பிடுகின்றார். (கூடச்ணடிணச்தூச்ஞ்ச்ட் ஙீ.கு. 1970) கிமு பதினைந்தாம் நூற்றாண்டளவில், தென்னிந்தி யாவில் (விந்தியம் தொடங்கி) நிலவியிருந்த மூலத்திராவிட மொழி பல்வேறு இடங்களில் பலவாறாக பேசப்பட்டு வந்தது. (இந்தியப் பண்பாடும் தமிழரும். பக். 51).

இவ்வாறு அக்காலத்தில் பல்வேறு இடங் களிலும் பலவாறாக பேசப்பட்டு வந்த பழந்தி ராவிட (ஆதித்திராவிடம்) மொழியைப் பேச்சு மொழியாகக் கொண்டிருந்த மக்களின் வாழ்க் கையில் ஏற்றத் தாழ்வுகள் பல பிற்காலத்தில் நிகழ்ந்தன.

இக்காரணங்களால் விளைந்த பரிணாமத்தால் தான் இன்று நாம் முக்கியமானவையெனக் கருதும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் ஆகியனவும் துளுவமும் குடகு மொழி யும் தோன்றின. (மலையாள இலக்கிய வரலாறு, பக் ,5)

இதனை மேலும் விளக்கமாகக் குறிப்பிடு மிடத்து, அக்காலத்தில் ஒரு பகுதியில், வாழ்ந்தி ருந்த மக்கள் பேசிய திராவிட மொழிக்கும், மற் றொரு பகுதியில் வாழ்ந்து வந்த திராவிட மக்கள் பேசிய மொழிக்குமிடையில் வளர்ந்து வந்த வேற்றுமை மற்றும் ஆட்சி வேறுபாடு, மலை ஆறுகளின் எல்லை வரையறை ஆகியன பழந்திராவிட மொழியிலிருந்து, பிற்காலத்தில் திராவிட மொழிகள் தோன்றக் காரணிகளாக அமைந்தன. (தமிழ், இலக்கிய வரலாறு பக். 2 டாக்டர் மு.வ) எனலாம்.

இந்த வகையில் பழந்திராவிடத்திலிருந்த (தென் திராவிடம்) முதலில் துளிர்ந்த திராவிட மொழி தமிழாகும். (மூலத்தமிழ்) இம் மொழியானது. தென் திராவிடத்திலிருந்து குறைந்தது கிமு 1000 ஆம் ஆண்டளவில் அதா வது பெருங்கற்காலப் பண்பாட்டின் தோற்றக் காலத்திலேயே பிரிந்து விட்டது எனக் கொள்ளல் பொருத்தமானதாகும்.(பண்டைய தமிழகம் 141).

இம் மூலத்தமிழ் மொழியானது கிமு ஐந்தாம் நூற்றாண்டளவில் இலக்கியம் படைக்கும் நிலையினை (செழுமை) ப் பெற்றிருந்ததை இலக் கியத் தொல்லியல் சான்றுகள் உணர்த்துகின்றன.

கி.மு. ஐந்தாம் நான்காம் நூற்றாண்டுக ளிலிருந்து தமிழ் நாட்டில், தமிழ் மொழிக்கு எழுத்தாக, தமிழ்ப் பிராமி, அல்லது தமிழி (வரிவடிவம்) வழக்கத்திலி ருந்திருக்கின்றது. (கி.மு. 4 ம் நூ கிபி. 3 ஆம் நூ வரை) தொல் காப்பியம் போன்ற பழந்தமிழ் இலக்கியங் கள். தமிழ் (திராவிடி) என்ற தமிழ் பிராமியில் உருவான வைகளாகும். (கல்லெ ழுத்துக்கலை பக், 120, 121 நடன காசி நாதன்89).

அசோகர் காலத்துக்கு முந்திய காலத்திலிருந்து வழக்கத்திலிருந்து தமிழ் அல்லது திராவிடி என்ற தமிழ்ப் பிராமி, கல்வெட்டுக்கள், குறிப் பாகத் தமிழகம் பாண்டிய நாட்டிலும் (மதுரை) இலங் கையில் பெருங் கற்காலப் பண்பாடு நில வியிருந்த மையங்களிலும் காணக் கிடைக்கின் றன.திருப்பதி மலைக்கு வடக்கே, கிருஷ்ணா கோதாவரி, நதிக்கரைகளில் வாழ்ந்து வந்த மக்கள் பேசி வந்த பழந்திராவிடமானது நாளடைவில் திரிபுபெற்று இம்மொழியை விட்டு விலகி வேறொரு மொழியாக வளர்ந்து வந்தது.

\"\"மூலத் தெலுங்கு'' என்று குறிப்பிடப்படும் இம்மொழியே பிற்காலத்தில் நன்னயப்பட்டர் முதலான வட மொழி அறிஞர்களின் கைகளில் அகப்பட்டு வட சொற்கள் கலந்து தெலுங்கானது.

இதேபோன்று மைசூர் பகுதியில் பேசப்பட்டு வந்த பழந்திராவிட மொழியின் திரிபுகளி லொன்றே பிற்காலத்தில் மேலும் திரிந்து உருமாறி, (மூலக்கன்னடம்) இருந்த காலத்தில், கேசவா முதலிய அறிஞர்கள், எழுத்து முறையும், இலக்கணமும், இலக்கியமும் தந்து வாழ்வு நல்கியதைத் தொடர்ந்து கன்னடம் என்ற பெயருடன் தனிமொழியானது.

பழந்திராவிடத்திலிருந்து (தென்) மூலத் தெலுங்கு, மூலக் கன்னடம், ஆகியன கிமு. ஒன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் கிமு. ஆறாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் தோன்றியிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்தாகும் (கலா நிதி சி.க. சிற்றம்பலம்1991)

சேர நாட்டில் இன்று பேசப்பட்டு வரும் திராவிட மொழிகளிலொன்றான மலையாளம், பண்டைக்காலத்தில் தூய தமிழ் மொழியாக மிளிர்ந்து வந்தது. மிகவும் பிற்பட்ட காலத்தி லேயே திரிந்து மலையாளமாக மாறியது.

மலையாளத்தை தமிழோடு ஒத்து கிளை மொழி என்று கொள்வதை விட தமிழின் (மிகத் திரிந்த) கிளைமொழி என்று கொள்வதே பொருத் தமாகும் (மலையாள இலக்கிய வரலாறு பக்7).

பண்டைக்காலம் தொடக்கம் சேரநாட்டில் (கேரளம்) பேச்சு மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், இலக்கிய மொழியாகவும், தமிழே இருந்து வந்தது. சிலப்பதிகாரம், பதிற்றுப் பத்து என்னும் நூல்களும், புறநானூற்றில் சில பாடல்களும், (சங்க இலக்கியங்கள்) சேர நாட்டுத் தமிழாகும்,(மொழி வரலாறு, பக், 349) கி.பி. ஏழு எட்டு, ஒன்பதாம், நூற்றாண்டுகளில் வாழ்ந்து, பக்திப் பாடல்கள் பாடிய, ஆழ்வார், நாயன்மார்களில் சேரமான பெருமாள் நாயனாரும், குலகேசர ஆழ்வாரும், கேரள நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.

கி.பி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட, தமிழ் இலக்கண நூலாகிய புறப் பொருள் வெண் பாமாலையின் ஆசிரியர் ஐயனாரிதனார் சேரநாட்டைச் சேர்ந்தவர். (தமிழ் இலக்கிய வரலாறு பக் 3 மு.வ) சேரநாட்டில் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரையும், எழுதப் பெற்ற சாசனங்கள் யாவும், தமிழிலேயே எழுதப் பெற்று வந்துள் ளன. இவ்வாறு ஸ்மித் என்ற வெளிநாட்டு அறி ஞர் குறிப்பிடுகின்றார். (பண்டைத்தமிழர் வரலாறு பக்.26,27).

இவ்வாறு பழங்காலத்திலிருந்து கேரள நாட்டில் நிலவி வந்த தூய தமிழே வட மொழியாளரின் தாக்கத்தால் (வட மொழி செல்வாக்கு) மிக, மிகத் திரிபுற்று கலப்பு மொழி யான மலையாளமாக மாறியது. அப்போதும் தூய தமிழ் வழக்குகள் காப்பாற்றப்பட்டுள்ளன. (இலக்கிய ஆய்வு, பக் 212 )

மலையாளம் தமிழிலிருந்து தோன்றியது என்ற உண்மை, கிழக்கு திசையை அது உணர்த்த அது ஆளும் சொல்லினாலேயே விளங்கப் பெறும் அச்சொல் கிழக்கு ஆகும். இவ்வாறு டாக்டர் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணம் பக், 37 தமிழில் புலவர் தா. கோவிந்தன், எம்.ஏ.க.இரத்தினம் எம்.ஏ. 1992) குறிப்பிடு கின்றார்.மலையாளத்தில், ஐம்பது வீதம் தமிழ்ச் சொற்கள் உள்ளன. இவ்வாறு, முத்தமிழ் காவலர், கி.ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் குறிப்பிடு கின்றார்.

சுருங்கக் கூறுமிடத்து பழந்திராவிடத்திலிருந்து பெருங்கற்கலாசார தொடக்க காலத்தில் பிரிந்த ஆதித் தமிழிலிருந்துதான் பழந்தமிழும் அதனுடன் தொடர்புடைய மலையாளம், போன்ற கிளைமொழிகளும் துளிர்த்தன எனலாம்.

நன்றி வீரகேசரி


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம் - Page 2 Empty Re: தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Oct 20, 2011 2:57 pm

தமிழ்பிரியன் விஜி அவர்களுக்கு என் நன்றி...நல்ல கட்டுரையய் எடுத்து தந்துள்ளீர்கள். விருப்ப பொத்தானை அமுக்கினேன். பிரச்சனை மலயாளத்தை குறித்து அல்ல. மலயாளிகளைக் குறித்தாகும். அவர்களின் ஆதிக்கம் தமிழ் நாட்டில் எவ்வாறு பரவி வருகிறது என்பதைக் குறித்தாகும். புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம் - Page 2 Empty Re: தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum