ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்

2 posters

Go down

கொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்  Empty கொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்

Post by ரேவதி Mon Oct 17, 2011 2:42 pm

ஆகஸ்ட் 15 ல் கொழும்பு மாநகரில் இரு தமிழ் சிறுமிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த செய்தி பெருமளவு தமிழ் ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. காரணம், அந்த தமிழ் சிறுமிகளை கொன்றவர்கள் இனவெறியர்கள் அல்ல, மாறாக பணவெறியர்கள். மலையக ஏழைத் தமிழ் சிறுமிகளை வீட்டு வேலைக்காரிகளாக வைத்திருந்து உழைப்பை சுரண்டும் கொழும்பு பணக்காரர்கள் செய்த கொலை அது. அதனால் அனைத்துலக தமிழ் ஊடகங்கள் வர்க்க பாசத்தால், அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இலங்கையில் "புதிய பூமி" மாதப் பத்திரிகையில் வந்த செய்திக் கட்டுரை இங்கே நன்றியுடன் மறுபிரசுரமாகிறது.


வீட்டுப் பணியாளர் எனும் இனிப்பு

'லயங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை. எங்களால் நல்ல உணவையோ உடையையோ கொடுக்க முடிவதில்லை. நன்கு உண்டு உடுத்தாவது இருக்கட்டும்" என்று சொல்லிச் சொல்லியே தான் மலையகப் பெற்றோர்களில் கணிசமானோர் அவர்களின் பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்காக அனுப்புகின்றனர். அவ்வாறு வீட்டு வேலைகளுக்காகச் செல்வோர் உழைப்புச் சுரண்டலுக்கு மட்டுமன்றி பாலியல் துன்புறுத்தல்கட்கும் மன உளைச்சல்கட்கும் ஆளாகின்றனர். அவர்களில் வருடாந்தம் பலர் அகால மரணமான செய்திக ளையும் கேட்டிருக்கிறோம். ஆகஸ்ட் 15ம் திகதி இரண்டு சிறுமிகளின் சடலங்கள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் கழிவு நீர் கால்வாயில் காணப்பட்டன. அவை லக்~பான தோட்டப் பிரிவைச் சேர்ந்த சுமதி, ஜீவராணி ஆகியோரின் சடலங்கள். அவர்கள் 'வீட்டுப் பணியாளர்களாக" கொழும்புக்கு உழைக்கச் சென்றவர்கள். நல்ல உணவை உண்ணவும் நல்ல உடையை உடுக்கவும் சென்றவர்கள். அதனாலேயே கழிவு நீரில் சடலமாக மிதந்தவர்கள்.

அதுமட்டுமல்ல, இறந்த பிறகு அவர்களுக்கு கௌரவப் பட்டமும் கொடுக்கப்பட்டது: அது தன்னினச் சேர்க்கையாளர்கள். ஜீவராணி (13 வயது) சுமதி (14 வயது) ஆகிய சிறுமிகள் வீட்டுப் பணிக்குச் சென்ற இடத்தில் தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் அதற்கு இடையூறு ஏற்பட்டதால் அவர்கள் கழிவு நீர்க் கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் அவர்களின் எஜமானர்கள் கூறுகின்றனர். வீட்டு வேலைக்காகச் சென்றவர்கள் சடலமாக வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இது முதலாவது தடைவையும் அல்ல கடைசித் தடவையும் அல்ல. 14 வயதானவர்களை வேலைக்கு அமர்த்தலாம் என்று சட்டம் சொல்லுகிற போதிலும் வீட்டு வேலைக்காக 14 வயதுக்கு குறைந்தவர்களும் அமர்த்தப் படுகின்றனர். 14 வயதுக்கு மேற்பட்டவர்களுங் கூட, வேலைக்கு அமர்த்தப்படும் இடங்களில் பாதுகாப்பு அற்றவர்களாகவே இருக்கின்றனர்.

பொதுவாக வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுபவர்கள் தொழிற் சட்டங்களின் ஆளுகைகளுக்கு உட்பட்டவர்களாகவோ அவற்றின் பாதுகாப்புக்கு உட்பட்டவர்களாகவோ இல்லை. இந் நிலையில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களின் நிலை மிகவும் மோசமானது. மலையகச் சிறார்கள் நிலை பரிதாபகரமானது.

அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட சுமதி, ஜீவராணி ஆகியோரை அதே தோட்டத்தைச் சேர்ந்த தரகர் ஒருவர் கொழும்புக்கு கொண்டு சென்று 'ரணா ஏஜன்சி" எனும் வீட்டு வேலைக்களுக்கு சிறுவர்களை வழங்கும் முகவர் நிலையத்தில் ஒப்படைக்க அந் நிலையம் அவர்களை பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இரண்டு வீடுகளுக்கு அனுப்பியுள்ளது. அத் தோட்டத்தைச் சேர்ந்த தரகருக்கு ஒருவரை வேலைக்கு வழங்கும் போது மூவாயிரம் கொடுக்கப் படுவதாகவும் ரணா ஏஜன்சி ஒருவரை வேலைக்கு கொடுக்கும் போது எஜமானர்களிடமிருந்து ரூபா 10,000 பெற்றுக் கொள்வதாகவும் தெரிய வருகிறது. இந்த ரணா ஏஜன்சி தோட்டங்கள் தோறும் தரகர்களை வைத்திருக்கிறார்கள். அந்தத் தரகர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பியே வறுமையில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்புகிறார்கள். இந்த இரண்டு சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அவர்களின் பெற்றோர்கள் சந்தேகம் எழுப்பினர்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் மரண விசாரணை நடத்தும் போது பெற்றோர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் செய்த சமர்ப்பணத்தையடுத்து ஆகஸ்ட் 17ந் திகதி புதைக்கப்பட்ட சடலங்கள் ஆகஸ்ட் 27ந் திகதி தோண்டி எடுக்கப்பட்டன. அவை கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீள் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட 1வது பிரேத பரிசோதனைகள் அறிக்கையின் சடலங்கள் உடல்களில் காயங்கள் இருக்கவில்லை என்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படவில்லை என்றும் நீரில் மூழ்கியதாலேயே மரணம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் சடலங்களை அடையாளங் காணும் போது உடலில் காயங்களைக் கண்டதாக சிறுமிகளின் பெற்றோர்கள் கூறுகின்றனர். அத்துடன் சுமதி என்ற சிறுமி எழுதியதாக காட்டப்படுகின்ற கடிதத்தில் அவர்கள் இருவரின் இறப்புக்கும் எஜமானர்களும் எஜமானிகளும் காரணம் அல்ல என்று எழுதப்பட்டுள்ளது. இக் கையெழுத்து சுமதி உடையது அல்ல என்று சுமதியின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

உண்மை எவ்வாறு இருந்த போதிலும் மரண விசாரணைகளில் அச் சிறுமிகளின் மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது சாட்சியங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஆனால் இந்த இரண்டு சிறுமிகளின் மரணங்கள் மலையகத்தை உலுக்கியுள்ளன. சிறுவர்களை வீட்டு வேலைக்கு அனுப்புவது பற்றி சிந்திக்க வைத்துள்ளன எனலாம்.

சில அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் இச் சம்பவத்தை தங்கள் தங்கள் அரசியல் இருப்பிற்கான பிரசாரமாகப் பயன்படுத்தினர். சில அரசசார்பற்ற நிறுவனங்கள் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான செயல்திட்ட அறிக்கைகளை தயாரிக்கப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அப்பால் நேர்மையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

'மலையகச் சிறார்களை வீட்டு வேலைக்கு அமர்த்துவதும் மலையக தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமும்" என்ற தலைப்பில் பகிரங்க கருத்தரங்கை 'புதிய மலையகம்", செம்ரெம்பர் 6ந் திகதி நடத்தியது. அதில் தொழிலாளர்களின் பிரசன்னம் பெரிய எண்ணிக்கையில் இருக்கவில்லை. ஆனால் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதில் சில தொழிற் சங்கத் தலைவர்கள் உரையாற்றிவிட்டுச் சென்று விட்டனர். கருத்தரங்கின் முடிவுவரை இருந்தவர்கள் முக்கியமான தீர்மானங்களை எடுத்தனர்.

18வயதுக் குறைந்த மலையகச் சிறார்களை வீட்டு வேலைக்கு அனுப்புவதில்லை என்ற பண்பாட்டு ரீதியான முடிவுகளை எடுத்தனர். எவ்வளவு தான் பொருளாதாரப் பிரச்சனை இருந்தாலும் வீட்டு வேலைகளுக்கு சிறார்களை அனுப்புவதில்லை என்று மலையகம் எங்கும் விழிப்புணர்வு வேலைத் திட்டங்களைப் 'புதிய மலையகம்" ஏனைய அமைப்புக்களுடன் ஐக்கியப்பட்டு முன்னெடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

அதே வேளை வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுபவர்களுக்கு தொழிற் சட்ட ரீதியாகவும் விசேட ஏற்பாடுகளின் ஊடாகவும் பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் அங்கு முன்வைக்கப் பட்டது.

சம்பள உயர்வு வேண்டி ஒத்துழையாமைப் போராட்டம் நடைபெறுகின்ற போது அந்த இரண்டு சிறுமிகளின் மரணம் தோட்டத் தொழிலாளர்களின் வறுமையைப் போக்கும் அளவுக்கு சம்பள உயர்வு அவசியம் என்பதையே வலியுறுத்தி வேண்டியுள்ளது.

எமது நாட்டுச் சூழலில் வீட்டு வேலை என்பது அடிமை வேலையே 'வீட்டுப் பணியாளர்கள்" என்ற அழகு தமிழில் அழைக்கப்பட்;டாலும் வீட்டு வேலை செய்வோர் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். அவர்கள் திறன் மிக்க தொழிலாளர்களாக மதிக்கப்படுவதில்லை. அதிலும் சிறுவர்களை வீட்டு வேலைக்கு அனுப்புவதன் மூலம் எதிர்கால அடிமைகளை உருவாக்கவே துணைபோகின்றோம்.

200 வருட மலையக மக்களின் அடிமை வாழ்வு தகர்க்கப்பட போராட்டங்கள் நடைபெறுகின்ற போது மேலும் மேலும் அடிமைகளை பயிற்றுவிக்கத் துணை போவதைத் தவிர்ப்போம். சிறார்களை வீட்டு வேலைக்கு அமர்த்தாது இருப்போம்.

நன்றி புதிய பூமி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்  Empty Re: கொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்

Post by Manik Mon Oct 17, 2011 2:58 pm

படிக்கவே ரொம்ப கோவம் கோவமா வருது

நீதிக்கென்று ஒரு மரியாதை உண்டு அதை அழித்து நாடகமாடும் இவர்கள் மட்டும் இன்னும் உயிருடன் இருக்கிறார்களே

பணம்தான் உலகமா ச்சே சோகம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்!
» ராணுவ வெறியை அடுத்து மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்!
» கொழும்பில் 65 ஆயிரம் தமிழ், இஸ்லாமிய குடும்பங்களை வெளியேற்ற இலங்கை அரசு திட்டம்
» பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்!
» கொழும்பில் சிங்களர்களை விட தமிழர்களே அதிகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum