ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2025-ல் குடிநீர் பஞ்சம்....

2 posters

Go down

2025-ல் குடிநீர் பஞ்சம்.... Empty 2025-ல் குடிநீர் பஞ்சம்....

Post by தாமு Thu Sep 24, 2009 7:58 am

2025-ல் குடிநீர் பஞ்சம்....
ஒரு அதிர்ச்சி தகவல்



பஞ்ச பூதங்களில் ஒன்றும், ஒவ்வொரு உயிரின் ஜீவனுமாக உள்ளது தண்ணீர்.

2025-ல் குடிநீர் பஞ்சம்.... L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljNy9yYWlucy5qcGc=


நீரின்றி அமையாது உலகெனில் யார்யார்க்கும்

வானின்றி அமையாது ஒழுக்கு.

என்ற வள்ளுவரின் வாக்குப்படி, உயிர்களின் ஆதாரம் நீர்தான். இயற்கை வழிபாட்டில் நீரை வருணபகவானாக நம் முன்னோர்கள் வணங்கி வந்தனர்.

மழை பெய்தால்தான் தாவரம்முதல் மனிதன் வரை உயிர்வாழ முடியும். நம் உடலும் இரத்தம் என்ற செந்நீரில்தான் இயங்குகிறது. உயிர்களின் பிரதான சக்தியாக நீர் விளங்குகிறது.

குடிப்பதற்கும், குளிப்பதற்கும் நீர் அவசியம் தேவை. இந்த புவியானது மூன்றுபங்கு நீரால் சூழப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவையான நீரைப் பற்றி ஒரு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை உலக சுகாதார நிறுவனம் (W.H.O.) தந்துள்ளது.

2025ல் உலகின் முக்கியப் பகுதியான ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்றும், மேலும் நிலத்தடி நீர் சில இடங்களில் கிடைக்காது என்றும், மற்ற இடங்களில் உவர்ப்பு நீர்தான் கிடைக்கும் என்றும் நீருக்காக நாட்டுக்கு நாடு போர் தொடுக்கும் நிலை வரலாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் அந்த ஆய்வறிக்கையில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் மூன்றில் இரண்டு சதவிகித மக்கள் நோய்களால் அவதிப்படுவார்கள் என்றும் தெரிவிக்கின்றது.

இந்தியாவில் ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மராட்டியம், குஜராத், இராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதியுறும் என்றும் கூறியுள்ளது. ஏன் நீர் இல்லாமல் போகிறது. இந்த நிலை வரக் காரணம் என்ன? இதற்கு தீர்வுதான் என்ன என்பதை கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தோமானால் மனிதனே முதல்காரணமாகத் தெரிகிறான்.

தற்போதுகூட ஆப்பிரிக்கக் கண்டத்தில் சோமாலிய நாட்டில் வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. அங்கு பிறக்கும் குழந்தைகளை பறவைகளும், மிருகங்களும் வேட்டையாடுவதை அண்மையில் நாளிதழ் ஒன்று படமாக வெளியிட்டுள்ளது.

இத்தகைய கொடுமையான நிகழ்வுகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கமோ புயல், மழை, பூகம்பம் என்ற இயற்கை நிகழ்வுகளால் மனிதன் இனம் அஞ்சி அஞ்சி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இயற்கையின் சீற்றத்திற்கும் மனித இனமே காரணமாகியுள்ளது.

வற்றாத ஜீவநதிகளும், பொங்கிவரும் ஆறுகளும் நிறைந்த தேசத்தில் குடிநீர் பற்றாக்குறையா என்று நினைக்கத் தோன்றும். ஆண்டுதோறும் மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் இருந்தும் இந்த நிலை உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் பெருகி வந்ததும், மனித இனம் வாழ காடுகளையும், மரங்களையும் அழித்ததன் விளைவே இது.

மழை நீரை நம் முன்னோர்கள் ஏரி, குளங்களில் தேக்கி வைத்து தங்களின் குடிநீர் தேவைக்கும் விவசாயத் தேவைக்கும் பயன்படுத்திவந்தனர்.

இன்றுகூட தென்மாவட்டங்களில் ஒவ்வொரு கிராமத்தின் நடுவில் பெரிய குளம் இருக்கும். அதைச் சுற்றி முள்வேலி அமைத்து குடிநீராக பயன்படுத்துகின்றனர். இந்த குளத்திற்கு நீர் வரத்து உள்ள வாய்க்கால்கள் கூட சுத்தமாக பராமரிக்கப் பட்டிருக்கும்.

அதுபோல் கிணற்று நீர், ஊற்றுநீர், ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது தொழிற்சாலைகளின் கழிவு நீரால் கிணற்று நீர், ஊற்றுநீர், ஆற்று நீரும் மாசடைந்துள்ளது. இந்த நீரை குடிக்கும் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். மாநகரங்களில் குளோரின் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் சுத்தமான குடிநீர் என்று கூறமுடியாது.

மக்களைத் தாக்கும் நோய்களில் நீரினால் பரவும் நோய்கள் 62% ஆக உள்ளது. நல்ல சுத்தமான சுகாதாரமான நீரே ஆரோக்கிய வாழ்வுக்கு உதவுகிறது.

ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குளிர்பான கம்பெனிகள், தொழிற்கூடங்கள் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி வறட்சியடையச் செய்துவிட்டன. ஆற்றுநீர் அனைத்தும் சாக்கடை நீராக மாறி குடிநீருக்கு பயன்படாமல் போய்விட்டது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் எந்த அளவுக்கு நிவர்த்தி செய்யும் என்று புரியவில்லை. தற்போது உள்ள நிலை நீடித்தால் 2025க்கு பின் குடிநீருக்காக ஆயுதம் ஏந்தி போராடும் நிலை நிச்சயம் உருவாகும். தற்போது பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளில் அடைக்கப்பட்டு விற்பனையில் உள்ள நீர் எந்த அளவுக்கு சுகாதாரமாக உள்ளது என்பதை ஆராய்ந்தோமானால் அதிலும் தோல்விதான் மிஞ்சும்.

இந்த நிலையை மாற்ற மனிதர்களாகிய நம்மால்தான் முடியும். ஏரி குளங்களை ஆக்கிரமிக்காமல் அவற்றை சீராக தூர்வாரி மழைக்காலங்களில் கடலில் கலந்து உதவாமல் போகின்ற நீரை தேக்கி வைக்க வேண்டும்.

அரசின் அறிவுரைப்படி வீட்டின் சுற்றுப்புறங்களில் சிமெண்ட் தளம் அமைக்காமல் புல்தரைகளை அமைக்கவேண்டும். வீட்டிற்கு வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து மழை நீரை சேகரிக்க வேண்டும்.

(குறிப்பு - 2002-ல் அரசின் கடுமையான உத்தரவால் சென்னை போன்ற பெரு நகரங்களில் மழை நீர் சேகரிப்புத் திட்டம் செயல் படுத்தப்பட்டதன் விளைவாக நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது)

விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி

என்ற வாசகத்திற்கு ஏற்ப மழைநீரை உயிர் நீராக நினைத்து சேகரித்து எதிர்கால சந்ததியினருக்கு குடிநீர் கிடைக்கச் செய்வோம். ஏரி, குளங்களை சீர் செய்தும், ஆற்று நீரில் தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலக்காமலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இப்போதே குடிநீரின் தேவை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே குடிநீர் என்னும் உயிர் நீர் பாதுகாக்கப்படுவதோடு, எதிர்கால தலைமுறைக்கும் உதவும். அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்று கருதாமல் ஒவ்வொருவரும் நீர் சேகரிப்பில் ஆர்வம் கொண்டு செயல்பட்டால்தான் குடிநீர் பற்றாக் குறையிலிருந்து விடுபட முடியும்
by
sikaar
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

2025-ல் குடிநீர் பஞ்சம்.... Empty Re: 2025-ல் குடிநீர் பஞ்சம்....

Post by தாமு Thu Sep 24, 2009 7:58 am

by
sikaar 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

2025-ல் குடிநீர் பஞ்சம்.... Empty Re: 2025-ல் குடிநீர் பஞ்சம்....

Post by சபீர் Wed Jun 02, 2010 2:43 pm

2025-ல் குடிநீர் பஞ்சம்.... Affraid 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

2025-ல் குடிநீர் பஞ்சம்.... Empty Re: 2025-ல் குடிநீர் பஞ்சம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum