புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_m10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10 
10 Posts - 71%
heezulia
பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_m10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_m10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10 
1 Post - 7%
viyasan
பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_m10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_m10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10 
202 Posts - 41%
heezulia
பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_m10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_m10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_m10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10 
21 Posts - 4%
prajai
பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_m10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_m10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_m10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_m10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_m10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_m10பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி


   
   
திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Sat 15 Oct 2011 - 17:07

அரசுத் துறைகளானாலும் சரி தனியார் துறைகளானாலும் சரி, அதிகாரம் உடைய, மிகுந்த ஊதியம் தரும், உடலுழைப்பு தேவைப்படாத, நாட்டின் அனைத்து வேலைகளிலும் பார்ப்பனர்கள் நிரம்பி வழிகின்றனர். அவர்கள் அனைவரும் திறமைசாலிகள் என்பதால் அப்படி முடிகிறதா? நிச்சயமாக இல்லை. பார்ப்பன அரசு எந்திரத்தின் அயோக்கியத்தனமான செயல்பாடுகள் தான் பார்ப்பனர்கள் உயர்நிலைகளுக்குச் செல்வதற்கும், அங்கேயே நிலைகொண்டு இருப்பதற்கும் அடிப்படையாக இருக்கின்றன. எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீட்டின் மூலம் வெற்றி பெற்று உயர் நிலைகளுக்குச் சென்றிருக்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் பார்ப்பனர்களை விடத் திறமைசாலிகள் என்று காலப் போக்கில் ஐயந் திரிபற மெய்ப்பித்து இருக்கிறார்கள்.

ஆனால் பார்ப்பனர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இருப்பதால், தங்களுடைய உரிமை பாதிக்கப்படுகிறது என்றும் தங்களிடையே உள்ள திறமைசாலிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும் தங்களை விடத் திறமை குறைவான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுகிறார்கள் என்றும் நேரம் கிடைத்த பொழுதெல்லாம் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். ஒடுக்கப்பட்ட மக்களில் மிகப் பலருக்கு உண்மை நிலவரங்கள் சரியாகத் தெரியாத நிலையில், பார்ப்பனர்களின் புலம்பல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒரு கருத்துப் பரவலாக அமைந்து விடுகிறது.

பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்கள் இருப்பார்களே! அப்படிப்பட்ட திறமைக் குறைவான பார்ப்பனர்களும், அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி, சொகுசான வேலைகளுக்குச் சென்று நிலைகொள்ளவும் முடிகிறதே? இது எப்படி முடிகிறது என்று கேட்டால், தங்கள் புலம்பல்களை திடுதிப்பென்று நிறுத்தி விட்டு, வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் பார்ப்பனர்களுக்கு எதிரான வினாக்களைச் சரியாகத் தொடுப்பவர்கள் இல்லை என்றால், அங்கே அவர்களது புலம்பலை - அதாவது பொய்ப் பிரச்சாரத்தை எடுத்து விடத் தவறுவது இல்லை. ஏனெனில் பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் ஏற்படுத்தும் கருத்துப் பரவல் தான் தங்களுடைய ஆதிக்கத்தின் உயிர்நாடி என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்து இருக்கின்றனர்.

தன்னந்தனியாகவே துணிச்சலுடன் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், தங்களுக்குச் சார்பான நிறுவனங்கள் மூலம் செய்யாமல் இருப்பார்களா? அப்படிப்பட்ட ஒரு செயலைத் தான் இந்திய தொழில்களின் கூட்டமைப்பு (Confederation of Indian Industry) என்ற இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பு, ப்ரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (Pricewaterhouse Coopers) என்ற நிறுவனத்துடன் இணைந்து செய்திருக்கிறது. இந்நிறுவனங்கள் நாளைய உழைப்போரை (இன்றைய மாணவர்கள்) மேலாண்மை செய்தல் என்பதைப் பற்றி ஆய்வு செய்தனவாம். அந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளை 16.9.2011 அன்று சென்னையில் அவர்கள் வெளியிட்டனர்.

நாளைய உழைக்கும் கூட்டத்தினர் (அதாவது இன்றைய மாணவர்கள்) ஒரே மாதிரியான வேலையைச் செய்வதை விரும்பவில்லை என்றும், பல தரப்பட்ட வேலைகளைச் செய்ய விரும்புவதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்தும் படித்தும் அனுபவம் பெற்று இந்தியாவிற்குத் திரும்பி வரவே விரும்புகின்றனர் என்றும், வெளிநாட்டிலேயே தங்க விரும்வவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

அவர்கள் தங்களுக்கு வேலை தருபவர்கள் மீது விசுவாசமாக இருப்பது, அவர் தங்களுக்கு அளிக்கும் மன நிறைவின் அடிப்படையில்தான் இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

முத்தாய்ப்பாக இந்த ஆய்வை மேற்கொண்டதன் உண்மையான நோக்கம் வெளியிடப்பட்டு உள்ளது. தங்களை விடத் திறமை குறைந்தோரைப் பணிக்கு எடுத்துக் கொள்வதும், அவர்களுக்குப் பதவி உயர்வு அளிப்பதும் தங்களுக்குப் பிடிக்காது என்றும் அப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு விசுவாசமாக இருக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

அதாவது உயர்நிலைப் பணிகளில் பார்ப்பனர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றும் அதை மீறி ஒடுக்கப்பட்ட மக்களிடம் திறமை இருக்கிறது என்பதற்காக அவர்களுக்கு உயர்நிலை வேலைகளைக் கொடுத்து விடக் கூடாது என்றும், அப்படிக் கொடுத்தால் அந்நிறுவனங்களைப் பாழடித்து விடுவோம் என்றும் இந்த ஆய்வின் மூலம் மிரட்டலை விடுத்து இருக்கிறார்கள். தனியார் நிறுவனங்களில் திறமை இல்லாதோர் நிலைத்து இருக்க முடியாது என்று கூப்பாடு போடும் பார்ப்பனர்கள், திறமை இல்லாதவர்களுக்கு வேலை கொடுப்பதும், அவர்களுக்குப் பதவி உயர்வு கொடுப்பதும் தங்களுக்குப் பிடிக்காது; அப்படிப்பட்ட நிறுவனங்கள் மீது விசுவாச‌மாக இருக்க மாட்டோம் என்று கூற வேண்டிய அவசியம் என்ன?

உண்மையில் இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் பார்ப்பனர்களை விடத் திறமைசாலிகள் என்று தொடர்ந்து மெய்ப்பித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து, கதிகலங்கிப் போயிருக்கும் பார்ப்பனர்கள், ஆய்வு என்ற போர்வையில் புகுந்து கொண்டு, இப்படிப் பட்ட ஒரு கொடூரமான மிரட்டலை விடுத்து இருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடுவதைத் தடுத்தே தீர வேண்டும் என்ற விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் ஏற்படுத்த வேண்டாமா? நாம் இந்தத் திசையில் செயல்படாமல் இருந்தால் பார்ப்பனர்களின் பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப்படாமலேயே போய்விடும் அல்லவா?

திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் அமர்வதால், நிர்வாகம் சீர்கெட்டுப் போகிறதே! இது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் தேசத் துரோகச் செயல் அல்லவா? திறமைக் குறைவான பார்ப்பனர்களைக் கீழ் நிலை வேலைகளுக்கு அனுப்பாமல் உயர்நிலைகளில் பாதுகாத்து வைத்துக் கொள்ளும் மற்ற பார்ப்பனர்கள் நிர்வாகச் சீர்கேடுகளுக்குத் துணை போகும் தேசத் துரோகிகள் அல்லவா? அப்படிப்பட்டவர்கள் உயர்நிலைகளில் இருப்பதும் தேசத்திற்குப் பெரிய அபாயம் அல்லவா?

இந்நிலையில் மண்ணின் மைந்தர்களாகிய நம் கடமை என்ன?

திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடக் கூடாது என்றும் இதற்கு ஒத்துழைக்காத மற்ற பார்ப்பனர்கள் அப்படிப்பட்ட தேசத் துரோகக் குற்றத்திற்காகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் ஏற்படுத்த வேண்டும். பார்ப்பனர்கள் நமக்கு எதிராகப் பயங்கரமான சதித் திட்டம் போட்டுக் கொண்டு இருக்கும் பொழுது நாம் தூங்கிக் கொண்டு இருப்பது நம் இந்திய நாட்டிற்கும் நம் குழந்தைகளுக்கும் நாம் செய்யும் கொடூரமான துரோகம் ஆகும். நம் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் நம் சந்ததிகளின் அடிப்படை உரிமைகளுக்காகவும் நாம் இதைச் செய்தே ஆக வேண்டும்.

நன்றி இராமியா கீற்று



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat 15 Oct 2011 - 17:19

திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் அமர்வதால், நிர்வாகம் சீர்கெட்டுப் போகிறதே! இது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் தேசத் துரோகச் செயல் அல்லவா? திறமைக் குறைவான பார்ப்பனர்களைக் கீழ் நிலை வேலைகளுக்கு அனுப்பாமல் உயர்நிலைகளில் பாதுகாத்து வைத்துக் கொள்ளும் மற்ற பார்ப்பனர்கள் நிர்வாகச் சீர்கேடுகளுக்குத் துணை போகும் தேசத் துரோகிகள் அல்லவா? அப்படிப்பட்டவர்கள் உயர்நிலைகளில் இருப்பதும் தேசத்திற்குப் பெரிய அபாயம் அல்லவா?


மிக சரியாக கூறி உள்ளீர்கள் அதே சமயம் இட ஒதுக்கீடு என்ற பெயரில் எத்தனை பதர்களை நீங்கள் பதவியில் அமர்த்தி இருக்குறீர்கள் அறிவீர்களா, நான் பார்ப்பனர் இல்லை மிக பிற்படுத்தபட்ட இனத்தில் இருந்து வந்த ஒரு இந்து, பார்ப்பனரோ கள்ளரோ,வன்னியரோ,தலித்தோ, படிக்கும் பொழுது இவர்களை இனம் பிரித்து வேண்டுமானால் பயிற்ச்சி தரட்டும் , உதவிகள் செய்யட்டும், அதே சமயம் வேலை என வரும்போது இடஒதுக்கீடு இல்லாமல் திறமை அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கபடட்டுமே

திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Sat 15 Oct 2011 - 17:33

பார்ப்பனர்கள் தூக்கிப் பிடிக்கும் குஜராத்

பொய்ப் பிரச்சாரமே பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர்நாடி  Cho-ramaswamy-267x300

துக்ளக் ஆண்டு விழாவாக இருந்தாலும் சரி, கேள்வி - பதில் பகுதியாக இருந்தாலும் சரி, தலையங்கப் பகுதியாக இருந்தாலும் சரி, குஜராத் மாநில முதல் அமைச்சர் - உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டப்பட்ட நரேந்திரமோடியைத் தூக்கிப் பிடிக்கும் வேலையில் மும்முரமாக இருக்கக் கூடியவர்தான் துக்ளக் சோ ராமசாமி அய்யர்.

இந்த வார துக்ளக் இதழிலும் (26.1.2011) வழக்கம்போல அந்த வேலையைச் செய்துள்ளார்.


இவ்வளவுக்கும் நரேந்திரமோடி ஒன்றும் பார்ப்பனர்அல்லர். நரேந்திரமோடி பார்ப்பனர் அல்லாதாராக இருப்பது அவாளுக்கு ஒரு வசதியாகப் போய்விட்டது. ஒரு பார்ப்பனராக இருந்து குஜராத்தில் மதக் கலவரத்தைத் தூண்டியிருந்தால் அது பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்ற கலவரமாக திசை மாறியிருக்கும். குஜராத்தில் மட்டுமல்ல - குமரிமுனையில் உள்ள பார்ப்பான்கூட உதைபட்டு இருப்பான்.

பார்ப்பனர்கள் உதை படவும் கூடாது; அதே நேரத்தில் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்கள் கொலை செய்யப்பட வேண்டும்; அவர்களின் வீடுகள் தீக்கு இரையாக வேண்டும்; வணிக நிறுவனங்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட வேண்டும் என்றால் பார்ப்பனர்களுக்கு ஒரு பார்ப்பனர் அல்லாத ஆசாமி சிக்க வேண்டும்.

அப்படிச் சிக்கிக் கொண்டவர்தான், தேவைப்பட்டவர்தான் இந்த நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி. இந்த இந்து மத வெறியன்மீது படிந்துள்ள பாசிச ரத்தக்கறையைக் கழுவுவதற்குப் பார்ப்பனர்கள் கண்டுபிடித்த பொய்ப் பிரச்சாரம்தான் - இந்தியாவிலேயே நரேந்திரமோடி ஆளும் குஜராத்துதான் பொருளாதாரத் திலே சிறந்து விளங்குகிறது.

அங்கு செல்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.

இதோ ஒரு கேள்வி - பதில்:

கேள்வி: குஜராத்தில் ரூபாய் 10 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் தரும் டாஸ்மாக் துறை இல்லை; மக்கள் பிறர் கையை எதிர்பார்க்க வைக்கும் இலவசங்கள் இல்லை. ஆனால், அய்.நா. சபையே உலகத்தின் இரண்டாவது சிறந்த மாநிலம் என்று பாராட்டும் அளவுக்கு, மாநிலத்தின் வளர்ச்சி அபாரமாக உள்ளதே?

பதில்: அது மட்டுமல்ல. வெளிப்படையான நிருவாகம்; பொறுப்பு ஏற்கிற தன்மை; பொதுச் சேவையில் மக்கள் கருத்துக்கு மதிப்பு.... போன்றவற்றில் பெரும் முன்னேற்றம் கண்டிருப்பதற்காக, குஜராத் மாநிலத்துக்கு, அய்.நா. சபையின் பொதுச் சேவை பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் சொல்கிற மாதிரி, டாஸ்மாக் இல்லாமல், இலவசங்கள் இல்லாமல், எப்படி இது சாத்தியமாயிற்று என்றால் - ஒரே ஒரு காரணம்தான்; நேர்மை, பொதுப் பணம் திருட்டுப் போகவில்லை; மக்கள் நலனுக்காகப் பயன்படுகிறது. அதனால்தான் இது சாத்தியமாகிறது என்கிறார் சோ.

டாஸ்மாக் இல்லாத குஜராத் என்று பெருமையாகக் கூறப்படுகிற பா.ஜ.க., ஆளும் மோடி முதல்வராக உள்ள அந்த மாநிலத்தில் உண்மை நிலை என்ன?

போலி மது பானங்கள் காட்டாறாக ஓடும் மாநிலம் குஜராத்துதான். போலி மது குடித்து மாண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

2010 மார்ச்சு 21ஆம் தேதி ஏடுகளில் ஒரு செய்தி வெளிவந்தது. ஆள் இல்லாத ஒரு கார் நின்று கொண்டி ருந்தது. சந்தேகத்தின் பேரில் அதனை காவல்துறை சோதனையிட்டபோது, 31 பெட்டிகளில் 372 மதுபாட்டில்கள் இருந்தன.

காரின் முன்புறத்தில் டீசா எம்.எல்.ஏ., என்று எழுதப்பட்டு இருந்தது. அவர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., ஆவார். ஆளும் கட்சி யினர் போலி மது பான தொழிலை ஒரு சாம்ராஜ்ஜியமாக நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சிறு அத்தாட்சி அவ்வளவுதான். ஆளும் கட்சிக்காரர்களே போலி மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருவதால் காவல்துறை கண்டு கொள்வதில்லை.

துக்ளக் பெருமையடித்துக் கொள்ளும் டாஸ்மாக் இல்லாத குஜராத் மாநிலத்தின் இலட்சணம் இதுதான்.

வெளிப்படையான நிருவாகம் குஜராத்தில் நடக்கிற தாம். இதனைப் படிக்கும் பொழுது வாயால் சிரிக்க முடியவில்லை.

குஜராத்தில் அரச பயங்கரவாதம் தலைதூக்கி ஆயிரக்கணக்கான முசுலிம் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கலவரங்கள் மீதான விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை. உச்சநீதி மன்றமே புலனாய்வுக் குழு ஒன்றை நியமித்து விசாரிக்க ஆணை ஒன்றினைப் பிறப்பித்தது.

புலன் விசாரணைக் குழுவின் விசாரணையில் பல மோசடிகள் அம்பலமாயின. அதன் விளைவு குஜராத் மாநில காவல்துறைத் துணைத் தலைவர் வன்ஜாரா உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டனர்.

மோடி ஆட்சியில் நிருவாகம் மிக வெளிப்படையானது என்று திருவாளர் சோ எழுதுகிறாரே, இதற்கு என்ன பதிலாம்?

இதைவிட உலகம் இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு பூகம்பப் பொய் ஒன்று இருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டால் சோ சொல்லும் அந்த வெளிப்படையான (?) மோடியின் நிருவாகத்தின்மீது காரித்தான் உமிழ் வார்கள்.

கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்ட சிலரிடம் ஆயுதங்கள் இருந்தன என்றும், அவை பறிமுதல் செய்யப்பட்டன என்றும், அதற்குச் சாட்சியாக கோத்ரா அருகில் உள்ள பம்ப்ரோலி கிராமத்தைச் சேர்ந்த ஸ்மஷான் சாலையில் வாழும் மாலாஜி ஓடாஜி என்ற மார்வாடி என்பவர் சேர்க்கப்பட்டு இருந்தார்.

சாட்சியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அந்தச் சாட்சிக்கு நீதிமன்றத்தால் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அவரோ சாட்சி சொல்ல வரவில்லை. அவர் எப்படி வருவார்? கோத்ரா நிகழ்வுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்தவர் ஆயிற்றே அவர்! அவர் எப்படி சாட்சிக் கூண்டு ஏறுவார்?

ஏழாண்டுகளுக்கு முன் செத்தவரை சாட்சியாகப் பதிவு செய்த நரேந்திரமோடிஆட்சியைப் போல வெளிப்படை யான நிருவாகத்தை எங்குப் போய்த் தேட முடியும்?

முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டும் முப்புரிக் கூட்டம் எந்த அளவுக்கும் பொய்ச் சொல்லத் தயங்காதே..

நன்றி தமிழ் ஓவியா



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Sat 15 Oct 2011 - 17:37

இவர்கள் இவ்வளவு வெளிப்படையாக தமிழ் விரோத செயல்களில் ஈடுபடுவது எந்த தைரியத்தில்? சமச்சீர் கல்வியை எதிர்த்து சோ எழுதுகிறான். ராமன் கட்டியது என்று சேது கால்வாய் திட்டத்தை நிறுத்துகிறான்,தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில் தீட்ஷிதனுக்கு சொந்தம் என்று சுப்ரீம் கோர்ட்ல தடை வாங்குறான் சூ.சாமி.ஒரு திறமையும் இல்லாத சசிகலாவின் கைப்பாவையான ஜெயலலிதாவை அறிவாளி திறமையாளர் பெரிய நிர்வாகி இரும்பு பெண்மணி என்று பக்கத்துக்கு பக்கம் காது கூசும் அளவு கதை கட்டும் தினமலர் மற்றும் தினமணி…ராஜாஜி துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடியது போல் இவர்கள் ஓடும் நாள் தொலைவில் இல்லை.



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Sat 15 Oct 2011 - 17:44

இட ஒதுக்கீட்டின் ஒரு முகம்

பாலக்காட்டு பார்ப்பன வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஒரு சாதி வெறியன். வழக்கறிஞர் தொழில் மூலமாக தன்னுடைய சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் ஆசை கொண்டவர். சமூக நீதிக்கு எதிரான வழக்குகள் எல்லாவற்றிலும் இவருடைய பங்கு நேரடியாக அல்லது மறைமுகமாக இருக்கும். மண்டல குழு அறிக்கையைத் தொடர்ந்து நடுவண் அரசு, தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அரசு கல்லூரிகள், உயர்கல்வி மையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு செய்தது. இந்த இட ஒதுக்கீடு என்பது ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் 10 வருடங்களுக்கு முன்பே ஒத்துக் கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால் அதை நடைமுறைப்படுத்த சட்ட விதி இப்பொழுதுதான் வருகிறது. ஆனால் அதையும் முறையாகச் செயல்படுத்தவிடாமல் தடுப்பதற்கு என்று ஒரு பார்ப்பனக் கூட்டம் உள்ளது. அந்த வழக்கிலும் சமூக நீதியை எதிர்த்து வழக்காடிக் கொண்டிருப்பவர் திருவாளர் கே.கே.வேணுகோபால் அவர்கள்தான். வழக்குத் தொடுத்தவர் சென்னை தொழில் நுட்ப கழகத்தின் முன்னாள் இயக்குனர் பி.வி. இந்திரேசன் அவர்கள். சாதி வெறியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதிலும் இவருக்கு இணை இவரே.

மண்டல குழு அறிக்கை வெளிவிடப்பட்டபோது சாதி வெறியும் பார்ப்பனிய மேலாதிக்கமும் சொட்ட சொட்ட அவர் இந்து நாளிதழில் எழுதிய கட்டுரைகள் மிகக் கொடியவை. பிற்படுத்தப்பட்டோர் வயிற்றில் வைத்த தீ. இந்த இரட்டையர்கள் தான் தற்பொழுது பிற்படுத்தப்பட்டோருக்கு உயர் கல்வி மையத்தில் இட ஒதுக்கீடு கூடாது. அப்படிக் கொடுத்தாலும் அது எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்ற தர வரிசையில் தான் கொடுக்கப்பட வெண்டும் என்று வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்படும் மாணவர்களின் மதிப்பெண் எவ்வளவு என்று கணக்கிட்டு அதில் 10% விழுக்காடு மதிப்பெண் குறைத்துப் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டும்தான் 27% இட ஒதுக்கீடு இடம் வழங்க வேண்டும். அதற்கும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இடம் வழங்கக்கூடாது என்பது இவர்கள் வாதம் ஆகும்.

மேலும் இங்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பவர்கள் வடிக்கட்டப்பட்டவர்கள் ஆகும். அதாவது கிரிமிலேயர் எனப்படும் பணக்கார பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இந்த 27% பொருந்தாது. பணக்கார பிற்படுத்தப்பட்டோர் என்பவர்கள் யார்? சற்று கல்வி அறிவு பெற்று அரசு பணியில் உள்ள கடை நிலை ஊழியர்கள் கூட பணக்காரர்கள்தாம். எனவே இவர்களின் வாரிசுகளுக்கும் இந்த இட ஒதுக்கீடு பயன்படாது. அவர்களிலும் கீழானவர்கள் யாராக இருக்க முடியும்? அவர்கள் கல்வி அறிவு பெறுவதற்கு என்று நடுவண் அரசின் உயர் மையக் கல்வி நிலையங்களைப் பற்றி கனவிலும் நினைக்க இயலுமா? ஆனால் அவர்களுக்கு மட்டும்தான் 27% இட ஒதுக்கீடு. அதையும் தடுக்கிறது பார்ப்பனீய கூட்டம். அந்தக் குழுவின் தலைவர்கள் தான் வேணு கோபால். இவருடைய வாதம் இப்படி இருக்கிறது.

வடிக்கட்டப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவன் ஒருவன் 99% விழுக்காடு மதிப்பெண் பெற்று நடுவண் அரசின் உயர் கல்வி மையத்தில் சேர வருகிறான் என்று வைத்துக்கொள்வோம். தர வரிசைப்படி 100% விழுக்காடு பெற்ற மாணவர்கள் என்பது இப்பொழுது மிக எளிய செய்தியாகிவிட்டது. எனவே அவர்களுக்கு இடம் ஒதுக்கிய பிறகு தரவரிசையில் (MERIT LIST) இந்த மாணவனுக்கு தர வரிசையில் இடம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது இரண்டு கேள்விகள் எழுகின்றன.

1. அவரை தரவரிசையில் சேர்ப்பதா? அல்லது 27% இட ஒதுக்கீட்டில் சேர்ப்பதா? வேணுகோபால் வாதப்படி அவருக்கு 27% இட ஒதுக்கீட்டில் இடம் வழங்க வேண்டும். அந்த இடத்தை 98.9% மதிப்பெண் பெற்ற உயர் சாதி மாணவர் இருந்தால் அவருக்கு வழங்கிவிட வேண்டும்.

2. இப்பொழுது இட ஒதுக்கீட்டிற்கு தகுதியுடைய பிற்படுத்தப்பட்ட மாணவர் யார்?

எந்த அளவு மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு உரியவர்கள்? இந்த கல்வி மையத்தில் தகுதி மதிப்பெண் எது? அதை எப்படி நிர்ணயிப்பது? கே.கே. வேணுகோபால் வாதப்படி தரவரிசையில் கடைசி மதிப்பெண் 98.9%. எனவே இதில் இருந்து 10% குறைத்து 88.9% மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான் தகுதி பெற்றவர்கள். அதாவது தகுதி மதிப்பெண் என்பதே 88.9% என்று இருக்க வேண்டும். (இந்த வாதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு மட்டும் அட்டவணைப்பட்டியலில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அல்ல. அவர்களுக்கு வேறு ஒரு தகுதி மதிப்பெண் இருக்கும்.)

இவர் வாதப்படி 88.9% மதிப்பெண் பெற்ற மாணவர்கள்தான் இட ஒதுக்கீட்டிற்கு தகுதி உடையவர். ஒரு மாணவன் 87% மதிப்பெண் பெற்று இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராயிருந்தாலும் அவர் தகுதி படைத்தவர் அல்ல. அவருக்கு இட ஒதுக்கீட்டில் இடம் கிடையாது. அதாவது அவர் அந்த உயர் கல்வி மையத்தில் நுழைய இயலாது. அப்படி என்றால் காலியான இடம் இருந்தால் என்ன செய்வது? அதை அப்படியே விட்டுவிடலாம். அல்லது அதை பொதுப்பட்டியலில் தரவரிசையில் உள்ள உயர் சாதி மாணவனுக்கு அளிக்க வேண்டும். இப்படிப்பட்ட வாதத்தை கேட்ட‌ உச்ச நீதிமன்ற நீதிபதிகளே திகைத்துப்போய் விட்டனர். இப்படி அளவுகோல் வைத்தால் 27% பயன் எந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கிடைக்காதே என்று வெளிப்படையாகச் சொல்லும் அளவிற்கு திகைத்துப்போய் விட்டனர். இதை எதிர்த்து இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வாதமிடும் வழக்கறிஞர் தகுதி மதிப்பெண் என்ன இருக்கிறதோ அதிலிருந்து 10% விழுக்காடு குறைத்துக் கொண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று வாதிட்டு வருகிறார். அதாவது 75% மதிப்பெண் (நுழைவுத் தேர்வில் அல்லது தகுதித் தேர்வில்) இருந்தால்தான் விண்ணப்பிக்கலாம் என்பது விதியாக இருப்பின் அதில் இருந்து 10% விழுக்காடு குறைத்து 65% மதிப்பெண் இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டின்படி அவர்களுக்கு இடம் கிடைத்தால் அவர்கள் அந்த உயர் கல்வி மையத்தில் பயிலலாம் என்று வாதிட்டு வருகின்றனர். ஆனால் 10% விழுக்காடு தகுதி மதிப்பெண் குறைந்தால் உயர் கல்வி மையத்தின் தகுதியும் தரமும் உன்னதமும் குறைந்துவிடும் என்று ஊளையிடுகிறது பார்ப்பனர்கள் கூட்டம்.
K.K.வேணுகோபால் P.P.ராவ் போன்ற வழக்கறிஞர்களின் அதிரடியான வாதத்தால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (இருவர் கொண்ட குழு) இட ஒதுக்கீடு பற்றி வழக்கினையே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அனுப்பிவிட்டது. இறுதி முடிவை அதாவது நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி மையங்களில் (மேலாண்மைக்கழகம்...IIM......) தொழில் நுட்பக்கழகம்.. IIT.. உயர் மருத்துவக்கழகம் (AIIMS........) ஆகியவற்றில் நுழைய முயல்கின்ற ஒரு பிற்படுத்தப்பட்ட மாணவனின் தகுதி மதிப்பெண் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற முடிவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும்.

இதில் இருந்து நாம் அறிய வேண்டிய சில செய்திகள்

1. பார்ப்பனர்கள் தங்களுடைய நலன் பறிக்கப்படும்போது எவ்வளவு கடுமையாக விடாப்பிடியாக போராடுகிறார்கள்.

2. உச்ச நீதிமன்ற நீதி அரசர்களையே அலற வைக்கும் திறன் படைத்த பார்ப்பன வழக்கறிஞர்கள் உண்டு.

3. இட ஒதுக்கீட்டின் மூலம் படித்துவிட்டு சற்று மேல்நிலை அடைந்தவுடன் தம்மையும் புதிய பார்ப்பனர்களாக எண்ணிகொண்டு இருக்கும் சிலர் உண்டு. குறிப்பாக அரசுப்பணியில் இல்லாத ஊடகம் மற்றும் சிறிய / பெரிய திரைகள் (டிவி மற்றும் சினிமா துறைகள்) போன்ற துறைகளில் காலூன்றி தடம் பதிக்கும் இவர்கள் இட ஒதுக்கீட்டை கேலி செய்து தங்களுடைய பார்ப்பனியத்தைப் பதிவு செய்துகொள்ளுகிறார்கள். அதை ஒரு பெருமையாகவும் நினைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு இன்றும் போராட வேண்டிய நிலை இருப்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

வழக்கு நடைபெற்று வருகிறது. முடிவினைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பி.கு
உச்ச நீதிமன்றம் பாலக்காட்டு பார்ப்பன வழக்கறிஞ்ர் வாதத்தை தள்ளுபடி செய்துவிட்டது.10 % பிறபடுததப்பட்ட மாணவர்களுக்கு தகுதி மதிப்பெண் மற்றவர்களைவிட 10% குறைவாக அமைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது இந்து நாளிதழ் 19/8/2011

நன்றி கீற்று



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Sat 15 Oct 2011 - 17:48

maniajith007 wrote:திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் அமர்வதால், நிர்வாகம் சீர்கெட்டுப் போகிறதே! இது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் தேசத் துரோகச் செயல் அல்லவா? திறமைக் குறைவான பார்ப்பனர்களைக் கீழ் நிலை வேலைகளுக்கு அனுப்பாமல் உயர்நிலைகளில் பாதுகாத்து வைத்துக் கொள்ளும் மற்ற பார்ப்பனர்கள் நிர்வாகச் சீர்கேடுகளுக்குத் துணை போகும் தேசத் துரோகிகள் அல்லவா? அப்படிப்பட்டவர்கள் உயர்நிலைகளில் இருப்பதும் தேசத்திற்குப் பெரிய அபாயம் அல்லவா?


மிக சரியாக கூறி உள்ளீர்கள் அதே சமயம் இட ஒதுக்கீடு என்ற பெயரில் எத்தனை பதர்களை நீங்கள் பதவியில் அமர்த்தி இருக்குறீர்கள் அறிவீர்களா, நான் பார்ப்பனர் இல்லை மிக பிற்படுத்தபட்ட இனத்தில் இருந்து வந்த ஒரு இந்து, பார்ப்பனரோ கள்ளரோ,வன்னியரோ,தலித்தோ, படிக்கும் பொழுது இவர்களை இனம் பிரித்து வேண்டுமானால் பயிற்ச்சி தரட்டும் , உதவிகள் செய்யட்டும், அதே சமயம் வேலை என வரும்போது இடஒதுக்கீடு இல்லாமல் திறமை அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கபடட்டுமே

இட ஒதுக்கீடு அவசியம் என்றால் இது என்ன சகோ !



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக