Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்லாமலே
+10
dsudhanandan
பூஜிதா
உமா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ayyamperumal
பிஜிராமன்
dhilipdsp
இளமாறன்
கேசவன்
ரேவதி
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சொல்லாமலே
First topic message reminder :
"வணக்கம் சார்! டாங்க் ஃபில் பண்ணணுமா சார்..?"
"இரண்டு ஆயில் ஒரு லிட்டர்"
"ஓ.கே. சார்! ரவுண்டா 90 ரூபாய்க்குப் போட்டுடட்டுமா சார்"
வண்டியோடு நின்றவன் தலையாட்ட,
"மீட்டரப் பாருங்க சார்.."
தமிழ்ச்செல்வி பட்டனைத் தட்டிவிட்டு டேங்க்கில் பெட்ரோலை கொட்டத் தொடங்கினாள்.
அடுத்து வந்த நான்கு பேருக்கும் பெட்ரோல் போட்டதும், ஐந்தாவதாய் சுரேஷ்.
"வணக்கம் சார்"
"வித் அவுட் ஆயில் இரண்டு லிட்டர்"
"ஓகே சார்! வண்டிய விட்டு இறங்கி நில்லுங்க சார்"
"ஏன் உட்கார்ந்திருந்தா போடமாட்டீங்களோ..?"
"சார் ப்ளீஸ்.. வண்டிய ஸ்டேண்ட் போட்டாத்தான் பெட்ரோல் போடணும்னு எங்க கம்பெனி ஆர்டர் சார். தயவுசெய்து இறங்கி நில்லுங்க..."
"என்ன பெரிய தொல்லையாப் போச்சு.. என்ன இது அதிகாரம்..? மத்த பங்க்ல இந்த மாதிரி இல்லையே?"
"இங்க இப்படித்தான் சார்.. நீங்க இறங்காட்டி எங்களுக்குக்கு திட்டு விழும் சார்"
இவள் சொல்லி நாம் இறங்குவதா என்ற கோபத்துடனும் சலிப்புடனும் வேண்டா வெறுப்பாக சுரேஷ் வண்டியைவிட்டு இறங்கினான். இடுப்பில் இருந்த செல்போன் கிச்சுக்கிச்சு மூட்டியது. அதை எடுத்துப்பேசப் போனவனைத் தடுத்து,
"சார்.. இங்க செல்போன்ல பேசக்கூடாது சார்.."
"அப்புறம் எங்க வெச்சு பேசுறதாம்.? ரிங்க் அடிக்கும்போது எடுக்காம வீட்டுல போயா எடுப்பாங்க.."
"இது பெட்ரோல் பங்க் சார்.. இங்க செல் உபயோகிக்கக்கூடாது"
"என்ன பிரச்னை உங்களுக்கு.. இதுக்கு பேசாம பெட்ரோல் போட வராதீங்கன்னு சொல்லிட வேண்டியதுதானே?"
மீதி சில்லைரையை வாங்கியவன், கோபத்தை கிக்கரில் காட்டினான்.
***
மாலைப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு என்ற செய்தி தூக்கில் தொங்குவது போல தொங்கிக்கொண்டிருந்தது!
பக்கத்தில் டீக்கடை. ஆபிஸ் நண்பர்களோடு சுரேஷ் வந்திருந்தான்.
"மாஸ்டர்.. நாலு டீ.. கப்ல! ஒண்ணு வித் அவுட் சுகர்! "
கொடுமை! முப்பது வயசுக்குள்ளேயே சக்கரை இல்லாமல் டீ.. ஹூம்ம்.
சுரேஷ் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான். டீயை எடுத்துக்கொண்டு, "ஏம்ப்பா இது வித் அவுட் இல்லையே.. மாத்திடாதீங்க.."
இது சக்கரை வியாதி எனக்கில்லை என்று சொல்லாமல் சொல்வது!
"என்ன மச்சி இது.. ராக்கொள்ளைக்காரன் மாதிரி மறுபடியும் பெட்ரோல் விலைய உயர்த்திருக்கான் பாரு.."
"இப்படியே போனா.. வண்டிய உருட்டிக்கிட்டுத்தான் வரணும்"
"டேய் நீ வண்டியில வரப்போயிதாண்டா ஒண்ணு ரெண்டு ஃபிகருங்களாவது உன்னப் பாக்குது. அதுக்காகவாச்சும் வண்டிய தள்ளிக்கிட்டு வா.."
"டேய் இந்தத் தொல்லத் தாங்கமுடியலைன்னா.. பெட்ரோல் பங்க்ல வேற விதமான கொடுமைடா. வண்டியவிட்டு இறங்குன்னு சொல்றான். ஸ்டாண்ட் போடுங்கறான்.. என்னா அதிகாரம்ப்பா! விட்டா அட்டென்ஷன்ல நின்னா தான் பெட்ரோல் போடுவோம்னு ஆர்டர் போடுவாங்க போல" சுரேஷ் ஆதங்கப்பட,
"ஆமாடா மச்சான்.. சில பெட்ரோல் பங்க்ல இப்படி படுத்தி எடுக்கிறாங்க.."
சிகரெட்டின் நெருப்பு உதட்டை முத்தமிட நெருங்க, கீழே போட்டு நசுக்கியவன் அலுவலகம் நோக்கி அவர்களோடு நடக்கத் தொடங்கினான்.
***
இரவு எட்டு மணியான பின்னரும் ரோட்டில் கொஞ்சம் கூட கூட்டம் குறைந்தபாடில்லை. உண்மையாகவே வண்டியை உருட்டத்தான் வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு சிக்கனலாய் கடந்து எப்போது வீடு போய்சேருவது? கிடைத்த கேப்பில் வண்டியை விரட்டியபோது செல் போனின் ரிங்க்டோன் காதுக்குள் வண்டாய் குடைந்தது.
"ஹலோ.."
"டேய்.. கார்த்திக் பேசுரேன்டா.."அவன் குரலில் பதட்டம்.
"மச்சான் சொல்லுடா.."
"நான் இப்போ SRK ஆஸ்பத்திரியில இருக்கேன்டா.."
சுரேஷ் கொஞ்சம் தள்ளிப்போய் வண்டியை ஓரங்கட்டினான்.
"என்னாச்சுடா..? லீவுலதான இருக்கே? என்ன செய்யுது.?"
"எனக்கில்லடா.. எங்க அண்ணா பொண்ணுக்கு.. ஆக்சிடென்ட்"
"அப்படியா? சாரிடா..ரொம்ப பெரிசா அடி ஏதும் படலையே.."
"இல்ல சுரேஷ்.. ரோட் ஆக்சிடெண்ட் இல்ல.. முடிஞ்சா நேர்ல வா சொல்றேன்.. உங்க அக்கா இந்த ஆஸ்பிடல்ல தானே வேலை பாக்குறாங்க..?"
"ஆமா.. சரிடா.. நான் இப்பவே அங்க வர்றேன்"
***
பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.
கார்த்திக்கின் குடும்பமே அங்கே திரண்டிருந்தது. எல்லோர் கண்களிலும் கண்ணீரும் கவலையும்.
"ஆண்டவா காப்பாத்து.. பொம்பள பிள்ளையாச்சம்மா.. அதுதான் ரொம்ப கவலையா இருக்கு. ஒண்ணு கிடக்க ஒண்ணி ஆயிடுச்சின்னா? முருகா.. நினக்கவே கொல நடுங்குதே.." பாட்டியம்மா அரற்றிக் கொண்டிருந்தாள்.
சுரேஷ் கார்த்திக்கை ஓரங்கட்டி, "என்னடா ஆச்சு.. இவங்க நிக்கறதைப் பாத்தா ரொம்ப சீரியசான விஷயமாத் தெரியுதே.. யாரு அந்த சுட்டிப் பொண்ணா..?"
"ஆமாடா. அத ஏன் கேக்குறே.. மத்தியானம் வண்டிய எடுத்துட்டு வெளியே போனேன். அவ நானும் வர்றேன் சித்தப்பான்னா.. எப்பவும் போல சரின்னு சொல்லிட்டு கூட்டிட்டுப் போனேன்.. கடைக்குப் போய் ஐஸ் க்ரீம் எல்லாம் வாங்கிக் கொடுத்திட்டு வரும்போது பெட்ரோல் போடப்போனேன்டா.. அங்க தான் வினையே.. அவ வண்டில முன்னாடி உட்கார்ந்து இருந்தா.. பெட்ரோல் போட சொன்னேன்.. போட்டுகிட்டிருந்தான். காசெடுக்க பர்சை எடுக்க திரும்பறேன்.. என்னாச்சுன்னு தெரியல குழந்தை அலற ஆரம்ப்பிச்சிட்டா.. முகம் பூரா பெட்ரோல்.. பெட்ரோல் போடுறவன் சொல்றான் குழந்தை தட்டிட்டான்னு.. கொஞ்சமாத்தான் முகத்துல தெரிச்சிருக்கு, ஆனா கண்ணுல நிறைய விழுந்துடுச்சு போல.. வீட்டுக்கு வந்து தண்ணிய விட்டுக் கழுவியும் போகல.. வலியில துடிக்க ஆரம்பிச்சுட்டா.. என்ன செய்யுறதுன்னே தெரியல.. எல்லோரும் என்னையே திட்டுறாங்க. வந்து பாத்த டாக்டர் கூட என்னை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாரு.."
" மடையா.. ஏண்டா குழந்தைய முன்னால உட்காரவச்ச.. பெட்ரோல் போட்டவன் இறங்க சொல்லலையா..?"
"இல்லடா சுரேஷ்.. எப்பவும் அங்கேதான் பெட்ரோல் போடுவேன். எத்தனையோ தடவ இவ எங்கூட வந்திருக்கா. இப்படி ஆகும்னு நினைக்கலையே.."
"சரிடா.. ஒண்ணும் ஆகாது.. கவலைப்படாதே. எங்க அக்கா இருக்கா.. நல்ல கவனிச்சுக்குவா.."
ஆறுதல் சொல்லிவிட்டு வெளியேறினான்.
***
டி.வி.யில் செய்திகளை சுவாரஸ்யம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவனை அக்காவின் பேச்சு திரும்பிப் பார்க்க வைத்தது. வந்தவள் களைப்புடன் சோபாவில் சாய்ந்தாள்.
"அக்கா.. கார்த்திக்கோட அண்ணன் பொண்ணு எப்படி இருக்கா..?"
"கொஞ்சமாச்சும் அறிவிருந்தா அப்படிச்செய்வானா..? முட்டாள். பெட்ரோல் பங்க்குக்கு சின்னக்குழந்தைய ஏன் கூட்டிட்டுப் போணும்..? சரி போனது தான் போனே.. பெட்ரோல் போடும்போதாவது முன்னாடி இருந்த பொண்ணை இறக்கி விட்டிருக்கக்கூடாதா..? அறிவுகெட்டப்பய.. என்ன படிச்சி என்ன..?"
"ஏன் என்னாச்சு..?"
"இனியும் என்ன ஆகணும்..? சின்னக்குழந்தடா.. பர்ஸ்ட் எய்ட் கொடுத்து ஸ்பெஷல் டாக்டர் பாக்கட்டும்னு கண் ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்கோம்.. இனி அங்க தான் தெரியும்.. கண்ணுக்கு ஏதும் ஆச்சா ஆகலையான்னு.. இந்த மாதிரி சில கேஸ்ல கண்ணு தெரியாம போகக்கூட வாய்ப்பிருக்கு. ஆண்டவன் புண்ணியத்துல அப்படி ஏதும் நடக்காம இருக்கணும்."
சுரேஷ்க்கு மனசே சரியில்லை. சின்னக்குழந்தை..கண்ணுக்கு ஏதும் ஆச்சுன்னா..? நினைத்து பார்க்கக்கூட முடியவில்லை.. "ஆண்டவா குழந்தை கண்ணுக்கு ஏதும் ஆகக்கூடாது !"
***
தெருவில் போய்க்கொண்டிருந்தவன் ஞாபகம் வந்தவனாக வண்டியை பெட்ரோல் பங்க்கை நோக்கித் திருப்பினான். கூட்டம் கொஞ்சம் அதிகம் இருந்தது.
இவனுக்கு முன்னே நான்கு பேர் இருந்தனர்.
"வணக்கம் சார்.."
"நூறு ரூபாய்க்குப் போடும்மா.."
"சார் வண்டிய விட்டு இறங்கி நில்லுங்க சார்"
"எதுக்கும்மா.. பரவாயில்ல போடு.."
"இல்ல சார்.. இறங்குங்க.."
"நான் உட்காந்தா என்ன.. நின்னா உனக்கென்ன.. பெட்ரோல் போடவேண்டியதுதானே.. இது என்ன அதிகப்பிரசங்கித்தனம்.."
அவர் வாக்குவாதம் செய்ய, தமிழ்செல்வி "இல்லை சார்.. ப்ளீஸ்.. இறங்கிடுங்க.. " என்று சொல்லிக் கொண்டிருக்க, சுரேஷ்
வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அவர் அருகே போனான்.
" ஹலோ.. அதான் சொல்றாங்க இல்ல... இறங்கி நில்லுங்க சார்.. அவங்க சில ரூல்ஸ் வச்சிருப்பாங்க. அதுக்கு ஏதாச்சும் அர்த்தமிருக்கும்.. உங்களை நிக்க வெக்கணும்னு அவங்களுக்கு என்ன வேண்டுதலையா.. இறங்குங்க சார்" என்ற சுரேஷை, வரும்போதெல்லாம் சண்டை போடும் சுரேஷை, தான் எதுவும் சொல்லாமலேயே வண்டியை விட்டு இறங்கி நிற்கும் சுரேஷை ஆச்சர்யத்தில் பார்த்தாள் தமிழ்செல்வி.
நன்றி - டி. எம். ஃப்ராங்க்
"வணக்கம் சார்! டாங்க் ஃபில் பண்ணணுமா சார்..?"
"இரண்டு ஆயில் ஒரு லிட்டர்"
"ஓ.கே. சார்! ரவுண்டா 90 ரூபாய்க்குப் போட்டுடட்டுமா சார்"
வண்டியோடு நின்றவன் தலையாட்ட,
"மீட்டரப் பாருங்க சார்.."
தமிழ்ச்செல்வி பட்டனைத் தட்டிவிட்டு டேங்க்கில் பெட்ரோலை கொட்டத் தொடங்கினாள்.
அடுத்து வந்த நான்கு பேருக்கும் பெட்ரோல் போட்டதும், ஐந்தாவதாய் சுரேஷ்.
"வணக்கம் சார்"
"வித் அவுட் ஆயில் இரண்டு லிட்டர்"
"ஓகே சார்! வண்டிய விட்டு இறங்கி நில்லுங்க சார்"
"ஏன் உட்கார்ந்திருந்தா போடமாட்டீங்களோ..?"
"சார் ப்ளீஸ்.. வண்டிய ஸ்டேண்ட் போட்டாத்தான் பெட்ரோல் போடணும்னு எங்க கம்பெனி ஆர்டர் சார். தயவுசெய்து இறங்கி நில்லுங்க..."
"என்ன பெரிய தொல்லையாப் போச்சு.. என்ன இது அதிகாரம்..? மத்த பங்க்ல இந்த மாதிரி இல்லையே?"
"இங்க இப்படித்தான் சார்.. நீங்க இறங்காட்டி எங்களுக்குக்கு திட்டு விழும் சார்"
இவள் சொல்லி நாம் இறங்குவதா என்ற கோபத்துடனும் சலிப்புடனும் வேண்டா வெறுப்பாக சுரேஷ் வண்டியைவிட்டு இறங்கினான். இடுப்பில் இருந்த செல்போன் கிச்சுக்கிச்சு மூட்டியது. அதை எடுத்துப்பேசப் போனவனைத் தடுத்து,
"சார்.. இங்க செல்போன்ல பேசக்கூடாது சார்.."
"அப்புறம் எங்க வெச்சு பேசுறதாம்.? ரிங்க் அடிக்கும்போது எடுக்காம வீட்டுல போயா எடுப்பாங்க.."
"இது பெட்ரோல் பங்க் சார்.. இங்க செல் உபயோகிக்கக்கூடாது"
"என்ன பிரச்னை உங்களுக்கு.. இதுக்கு பேசாம பெட்ரோல் போட வராதீங்கன்னு சொல்லிட வேண்டியதுதானே?"
மீதி சில்லைரையை வாங்கியவன், கோபத்தை கிக்கரில் காட்டினான்.
***
மாலைப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு என்ற செய்தி தூக்கில் தொங்குவது போல தொங்கிக்கொண்டிருந்தது!
பக்கத்தில் டீக்கடை. ஆபிஸ் நண்பர்களோடு சுரேஷ் வந்திருந்தான்.
"மாஸ்டர்.. நாலு டீ.. கப்ல! ஒண்ணு வித் அவுட் சுகர்! "
கொடுமை! முப்பது வயசுக்குள்ளேயே சக்கரை இல்லாமல் டீ.. ஹூம்ம்.
சுரேஷ் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான். டீயை எடுத்துக்கொண்டு, "ஏம்ப்பா இது வித் அவுட் இல்லையே.. மாத்திடாதீங்க.."
இது சக்கரை வியாதி எனக்கில்லை என்று சொல்லாமல் சொல்வது!
"என்ன மச்சி இது.. ராக்கொள்ளைக்காரன் மாதிரி மறுபடியும் பெட்ரோல் விலைய உயர்த்திருக்கான் பாரு.."
"இப்படியே போனா.. வண்டிய உருட்டிக்கிட்டுத்தான் வரணும்"
"டேய் நீ வண்டியில வரப்போயிதாண்டா ஒண்ணு ரெண்டு ஃபிகருங்களாவது உன்னப் பாக்குது. அதுக்காகவாச்சும் வண்டிய தள்ளிக்கிட்டு வா.."
"டேய் இந்தத் தொல்லத் தாங்கமுடியலைன்னா.. பெட்ரோல் பங்க்ல வேற விதமான கொடுமைடா. வண்டியவிட்டு இறங்குன்னு சொல்றான். ஸ்டாண்ட் போடுங்கறான்.. என்னா அதிகாரம்ப்பா! விட்டா அட்டென்ஷன்ல நின்னா தான் பெட்ரோல் போடுவோம்னு ஆர்டர் போடுவாங்க போல" சுரேஷ் ஆதங்கப்பட,
"ஆமாடா மச்சான்.. சில பெட்ரோல் பங்க்ல இப்படி படுத்தி எடுக்கிறாங்க.."
சிகரெட்டின் நெருப்பு உதட்டை முத்தமிட நெருங்க, கீழே போட்டு நசுக்கியவன் அலுவலகம் நோக்கி அவர்களோடு நடக்கத் தொடங்கினான்.
***
இரவு எட்டு மணியான பின்னரும் ரோட்டில் கொஞ்சம் கூட கூட்டம் குறைந்தபாடில்லை. உண்மையாகவே வண்டியை உருட்டத்தான் வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு சிக்கனலாய் கடந்து எப்போது வீடு போய்சேருவது? கிடைத்த கேப்பில் வண்டியை விரட்டியபோது செல் போனின் ரிங்க்டோன் காதுக்குள் வண்டாய் குடைந்தது.
"ஹலோ.."
"டேய்.. கார்த்திக் பேசுரேன்டா.."அவன் குரலில் பதட்டம்.
"மச்சான் சொல்லுடா.."
"நான் இப்போ SRK ஆஸ்பத்திரியில இருக்கேன்டா.."
சுரேஷ் கொஞ்சம் தள்ளிப்போய் வண்டியை ஓரங்கட்டினான்.
"என்னாச்சுடா..? லீவுலதான இருக்கே? என்ன செய்யுது.?"
"எனக்கில்லடா.. எங்க அண்ணா பொண்ணுக்கு.. ஆக்சிடென்ட்"
"அப்படியா? சாரிடா..ரொம்ப பெரிசா அடி ஏதும் படலையே.."
"இல்ல சுரேஷ்.. ரோட் ஆக்சிடெண்ட் இல்ல.. முடிஞ்சா நேர்ல வா சொல்றேன்.. உங்க அக்கா இந்த ஆஸ்பிடல்ல தானே வேலை பாக்குறாங்க..?"
"ஆமா.. சரிடா.. நான் இப்பவே அங்க வர்றேன்"
***
பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.
கார்த்திக்கின் குடும்பமே அங்கே திரண்டிருந்தது. எல்லோர் கண்களிலும் கண்ணீரும் கவலையும்.
"ஆண்டவா காப்பாத்து.. பொம்பள பிள்ளையாச்சம்மா.. அதுதான் ரொம்ப கவலையா இருக்கு. ஒண்ணு கிடக்க ஒண்ணி ஆயிடுச்சின்னா? முருகா.. நினக்கவே கொல நடுங்குதே.." பாட்டியம்மா அரற்றிக் கொண்டிருந்தாள்.
சுரேஷ் கார்த்திக்கை ஓரங்கட்டி, "என்னடா ஆச்சு.. இவங்க நிக்கறதைப் பாத்தா ரொம்ப சீரியசான விஷயமாத் தெரியுதே.. யாரு அந்த சுட்டிப் பொண்ணா..?"
"ஆமாடா. அத ஏன் கேக்குறே.. மத்தியானம் வண்டிய எடுத்துட்டு வெளியே போனேன். அவ நானும் வர்றேன் சித்தப்பான்னா.. எப்பவும் போல சரின்னு சொல்லிட்டு கூட்டிட்டுப் போனேன்.. கடைக்குப் போய் ஐஸ் க்ரீம் எல்லாம் வாங்கிக் கொடுத்திட்டு வரும்போது பெட்ரோல் போடப்போனேன்டா.. அங்க தான் வினையே.. அவ வண்டில முன்னாடி உட்கார்ந்து இருந்தா.. பெட்ரோல் போட சொன்னேன்.. போட்டுகிட்டிருந்தான். காசெடுக்க பர்சை எடுக்க திரும்பறேன்.. என்னாச்சுன்னு தெரியல குழந்தை அலற ஆரம்ப்பிச்சிட்டா.. முகம் பூரா பெட்ரோல்.. பெட்ரோல் போடுறவன் சொல்றான் குழந்தை தட்டிட்டான்னு.. கொஞ்சமாத்தான் முகத்துல தெரிச்சிருக்கு, ஆனா கண்ணுல நிறைய விழுந்துடுச்சு போல.. வீட்டுக்கு வந்து தண்ணிய விட்டுக் கழுவியும் போகல.. வலியில துடிக்க ஆரம்பிச்சுட்டா.. என்ன செய்யுறதுன்னே தெரியல.. எல்லோரும் என்னையே திட்டுறாங்க. வந்து பாத்த டாக்டர் கூட என்னை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாரு.."
" மடையா.. ஏண்டா குழந்தைய முன்னால உட்காரவச்ச.. பெட்ரோல் போட்டவன் இறங்க சொல்லலையா..?"
"இல்லடா சுரேஷ்.. எப்பவும் அங்கேதான் பெட்ரோல் போடுவேன். எத்தனையோ தடவ இவ எங்கூட வந்திருக்கா. இப்படி ஆகும்னு நினைக்கலையே.."
"சரிடா.. ஒண்ணும் ஆகாது.. கவலைப்படாதே. எங்க அக்கா இருக்கா.. நல்ல கவனிச்சுக்குவா.."
ஆறுதல் சொல்லிவிட்டு வெளியேறினான்.
***
டி.வி.யில் செய்திகளை சுவாரஸ்யம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவனை அக்காவின் பேச்சு திரும்பிப் பார்க்க வைத்தது. வந்தவள் களைப்புடன் சோபாவில் சாய்ந்தாள்.
"அக்கா.. கார்த்திக்கோட அண்ணன் பொண்ணு எப்படி இருக்கா..?"
"கொஞ்சமாச்சும் அறிவிருந்தா அப்படிச்செய்வானா..? முட்டாள். பெட்ரோல் பங்க்குக்கு சின்னக்குழந்தைய ஏன் கூட்டிட்டுப் போணும்..? சரி போனது தான் போனே.. பெட்ரோல் போடும்போதாவது முன்னாடி இருந்த பொண்ணை இறக்கி விட்டிருக்கக்கூடாதா..? அறிவுகெட்டப்பய.. என்ன படிச்சி என்ன..?"
"ஏன் என்னாச்சு..?"
"இனியும் என்ன ஆகணும்..? சின்னக்குழந்தடா.. பர்ஸ்ட் எய்ட் கொடுத்து ஸ்பெஷல் டாக்டர் பாக்கட்டும்னு கண் ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்கோம்.. இனி அங்க தான் தெரியும்.. கண்ணுக்கு ஏதும் ஆச்சா ஆகலையான்னு.. இந்த மாதிரி சில கேஸ்ல கண்ணு தெரியாம போகக்கூட வாய்ப்பிருக்கு. ஆண்டவன் புண்ணியத்துல அப்படி ஏதும் நடக்காம இருக்கணும்."
சுரேஷ்க்கு மனசே சரியில்லை. சின்னக்குழந்தை..கண்ணுக்கு ஏதும் ஆச்சுன்னா..? நினைத்து பார்க்கக்கூட முடியவில்லை.. "ஆண்டவா குழந்தை கண்ணுக்கு ஏதும் ஆகக்கூடாது !"
***
தெருவில் போய்க்கொண்டிருந்தவன் ஞாபகம் வந்தவனாக வண்டியை பெட்ரோல் பங்க்கை நோக்கித் திருப்பினான். கூட்டம் கொஞ்சம் அதிகம் இருந்தது.
இவனுக்கு முன்னே நான்கு பேர் இருந்தனர்.
"வணக்கம் சார்.."
"நூறு ரூபாய்க்குப் போடும்மா.."
"சார் வண்டிய விட்டு இறங்கி நில்லுங்க சார்"
"எதுக்கும்மா.. பரவாயில்ல போடு.."
"இல்ல சார்.. இறங்குங்க.."
"நான் உட்காந்தா என்ன.. நின்னா உனக்கென்ன.. பெட்ரோல் போடவேண்டியதுதானே.. இது என்ன அதிகப்பிரசங்கித்தனம்.."
அவர் வாக்குவாதம் செய்ய, தமிழ்செல்வி "இல்லை சார்.. ப்ளீஸ்.. இறங்கிடுங்க.. " என்று சொல்லிக் கொண்டிருக்க, சுரேஷ்
வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அவர் அருகே போனான்.
" ஹலோ.. அதான் சொல்றாங்க இல்ல... இறங்கி நில்லுங்க சார்.. அவங்க சில ரூல்ஸ் வச்சிருப்பாங்க. அதுக்கு ஏதாச்சும் அர்த்தமிருக்கும்.. உங்களை நிக்க வெக்கணும்னு அவங்களுக்கு என்ன வேண்டுதலையா.. இறங்குங்க சார்" என்ற சுரேஷை, வரும்போதெல்லாம் சண்டை போடும் சுரேஷை, தான் எதுவும் சொல்லாமலேயே வண்டியை விட்டு இறங்கி நிற்கும் சுரேஷை ஆச்சர்யத்தில் பார்த்தாள் தமிழ்செல்வி.
நன்றி - டி. எம். ஃப்ராங்க்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சொல்லாமலே
சொல்லாமலே செய்ய வேண்டியதை
சொல்லி கட்டியதற்க்கு நன்றி.
சொல்லி கட்டியதற்க்கு நன்றி.
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011
Re: சொல்லாமலே
நல்லா கதை விட்டுருக்கீங்க... சாரி நல்ல கதை பதிஞ்சிருக்கீங்க... வாழ்த்தும் நன்றியும்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: சொல்லாமலே
தன்னை முன் நிறுத்தும் பதிவுகள் பதிய கூடாதுரேவதி wrote:
நன்றி......
இன்று ஒரு பேய் கதை பதிய உள்ளேன்
Re: சொல்லாமலே
என்ன சொன்னிங்ககே. பாலா wrote:தன்னை முன் நிறுத்தும் பதிவுகள் பதிய கூடாதுரேவதி wrote:
நன்றி......
இன்று ஒரு பேய் கதை பதிய உள்ளேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சொல்லாமலே
ஏன் ரேவா நீ பெட்ரோல் போட போகும் போது இப்படித்தான் வண்டியை விட்டு இறங்க சொன்னாங்களா
செரி செரி விடு முறைக்காத
செரி செரி விடு முறைக்காத
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சொல்லாமலே
உதயசுதா wrote:அடடா எப்ப இருந்து இந்த சேவை ரேவதி.
நீ பகிர்ந்த கதை ரொம்ப நல்லா இருக்கு
ரேவா பைக்ல இருந்து கீழ இறங்கியதிலிருந்து
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சொல்லாமலே
Manik wrote:உதயசுதா wrote:அடடா எப்ப இருந்து இந்த சேவை ரேவதி.
நீ பகிர்ந்த கதை ரொம்ப நல்லா இருக்கு
ரேவா பைக்ல இருந்து கீழ இறங்கியதிலிருந்து
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சொல்லாமலே
கே. பாலா wrote:தன்னை முன் நிறுத்தும் பதிவுகள் பதிய கூடாதுரேவதி wrote:
நன்றி......
இன்று ஒரு பேய் கதை பதிய உள்ளேன்
அவர் இன்னும் ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ,, தங்களின் அயராத உழைப்பிற்கு அளித்த பட்டத்தை மறக்கவில்லை என நினைக்கிறேன்.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சொல்லாமலே
» காதலை சொல்லாமலே ....!
» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» காதலை சொல்லாமலே ....!
» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|