புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_m10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_m10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_m10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_m10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_m10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_m10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_m10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_m10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_m10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_m10காதுகளை பாதுகாக்கும் வழிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதுகளை பாதுகாக்கும் வழிகள்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Fri Oct 14, 2011 1:23 am

அதிக சத்தத்தை தொடர்ந்து கேட்க கேட்க காது கண்டிப்பாக பாதிக்கப்படத்தான் செய்யும். எந்த நோயும் வராமல் வெறும் அதிக சத்தத்தால் மட்டுமே காது கேட்காமல் போகிறதென்றால் அது ஜீரணிக்கக் கூடிய விஷயமா?
தனக்கு காது சரியாக கேட்கிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்வதை விட தனது குழந்தைகளுக்கு சரியாக காது கேட்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

பிறந்த குழந்தைக்கு காது சரியாக கேட்கிறதா, இல்லையா என்பதை வீட்டிலுள்ள பெரியவர்கள் ஒரு சில விஷயங்களை வைத்தே சரியாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் குழந்தை அழும்போது பால் கொடுப்பதற்காக பால் பாட்டில் மற்றும் அதைச் சேர்ந்த பாத்திரங்களை உருட்டும்போது ஏற்படும் சத்தம் வரும் திசையை நோக்கி குழந்தை தனது தலையைத் திருப்பும். இதை வைத்து குழந்தைக்கு காது கேட்கிறது என்று பெற்றோர்கள் சந்தோஷப்படுவார்கள்.

இப்பொழுதெல்லாம் பிறந்த குழந்தைக்கு கூட காது கேட்கிறதா? இல்லையா என்பதை “ஆட்டோ அக்கவுஸ்டிக் எமிஷன்” என்கிற பரிசோதனையின் மூலம் சரியாகக் கண்டுபிடித்து விடலாம்.

தொழில் சார்ந்த நோய்களில் முதன்மையானது காது கேட்காமல் போவதுதான். அதிக சத்தம் வரும் தொழிற்சாலைகளில் பணி புரிந்து அறுபது வயதைத் தாண்டிய சுமார் 70 சதவீதம் பேருக்கு காது கேட்கும்திறன் மிகவும் குறைந்து விட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் குறிப்பாக அதிக சத்தம் வரும் இடங்களில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், வருடா வருடம் கண்டிப்பாக அருகிலுள்ள காது மூக்கு தொண்டை டாக்டரைச் சந்தித்து ஆடியோகிராம் டெஸ்ட்டை பண்ணி தனக்கு காது கேட்கும் திறன் எப்படியிருக்கிறது? போன வருடத்தைவிட இந்த வருடம் குறைந்திருக்கிறதா அல்லது அப்படியே இருக்கிறதா?

ஒரு வேளை காது கேட்கும் திறன் குறைவதாக தெரிந்தால் நிர்வாகத்தின் அனுமதியுடன் வேறு பிரிவுக்கு மாற்றுதல் வாங்கி வேலை செய்வது நல்லது.

காது கேட்காததால் ஹியரிங் எய்டு கருவியை ஏற்கனவே மாட்டிக் கொண்டிருப்பவர்கள் வருடாவருடம் ஆடியோகிராம் டெஸ்ட் பண்ணி காது கேட்கும் திறன் குறைந்திருக்கிறதா, இல்லையா என்பதை அவசியம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கம்பெனி முதலாளி தனது கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளிகளின் காது கேட்கும் திறனைப் பற்றியும், அதிக அளவில் சத்தத்தை கேட்டால் காது என்னாகும் என்பதைப் பற்றியும், அதிக சத்தத்திலிருந்து காதை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதைப் பற்றியும் தொழிலாளிகளின் மாதாந்திரக் கூட்டத்தில் விளக்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த விளக்கம் தொழிலாளிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் நாம் அதிக சத்தத்தை உண்டு பண்ணக் கூடாது என்ற அக்கறை வரவேண்டும். அது இல்லாவிட்டால் இந்த அதிக சத்தத்தினால் வரும் பாதிப்பை தடுக்க முடியாது. நமக்கென்ன, நமக்கென்ன என்று ஒவ்வொருவரும் நினைத்துக்கொண்டு தட்டிக் கழிக்கவே கூடாது.

எட்டு மணி நேரத்திற்கு மேலே ஒருவர் தொடர்ந்து அதிக சத்தம் வரக்கூடிய ஒரே இடத்தில் வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த தொழிற்சாலையில் சுமார் 85 டெஸிபல் அளவு சத்தம் தொடர்ந்து இருந்தால் அந்த நபர் கண்டிப்பாக காதில் ஒலி அடைப்பான் மாட்டிக் கொண்டுதான் வேலை பார்க்க வேண்டும்.

ஆனால் அந்த தொழிற்சாலையில் 85 டெஸிபல் அளவுக்கு குறைவான சத்தம் இருந்தால் காதில் ஒலி அடைப்பான் மாட்ட வேண்டிய தேவையில்லை. இசைத்துறையில் இருப்பவர்களுக்கும், ரெக்கார்டிங் துறையில் இருப்பவர்களுக்கும் அதிக சத்தத்தினால், காது பாதிக்கப்படுவதுண்டு.

குறிப்பாக ராக் இசைப் பாடகர்கள் அநேகம் பேருக்கு அதிகமான இசையை தினமும் கேட்டு, காது பாதிப்பு ஏற்படுவதுண்டு. டிஸ்கோ நேரடி இசைக்கச்சேரி ஆகியவைகள் இளைஞர்களின் காது கேட்கும் திறனை மிகவும் பாதிக்கச் செய்கிறது என சமீப கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ரோட்டில் இருந்துதான் அதிக சத்தமே வருகிறது.

அவுஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் ரோட்டில் ஏற்படும் அதிக சத்தத்தை குறைக்க சவுண்ட் டியூப் என்று அழைக்கக்கூடிய ஒரு ஸ்பெஷல் குழாய் உபகரணங்களை ரோட்டின் மேல்பகுதியில் வாகனங்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாத வகையில் கூரை போன்று அமைத்து மாட்டியிருக்கிறார்கள்.

இந்தக் குழாய்கள் ரோட்டில் ஏற்படும் அதிக சத்தத்தை ஓரளவு குறைக்குமாம். வாகனங்களின் வேகத்தை குறைத்தல், ரோட்டின் மேல்பகுதியை அதிக சத்தம் வராதவாறு மாற்றுதல், கனரக வாகனங்கள் செல்வதை குறைத்தல், நிறைய இடங்களில் டிராபிக் சிக்னல்களை ஏற்படுத்தி வாகனங்களை ஒரே சீரான வேகத்தில் செல்ல வைத்தல், அதிக சத்தம் வராதவாறு டயர்களை வடிவமைத்தல் போன்ற பல மாற்றங்களை செய்து ரோட்டில் ஏற்படும் அதிக சத்தத்தை குறைக்கப் பார்க்கலாம்.

காரில் தற்போது லேட்டஸ்ட்டாகப் பொருத்தப்படும் ஹாரன் அதிக சத்தத்தை உண்டு பண்ணும், காதைப்பிளக்கும் புதுரக பட்டாசுகள், அதிக சத்தத்தை உண்டு பண்ணும், இசைக் கருவிகள் இவைகளையெல்லாம் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் பொது இடங்களில் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்து அதை அமுல்படுத்தவும் வேண்டும்.

முதலில் அதிகமாக கத்திப் பேசுவதை நாம் குறைக்க வேண்டும். கத்திக்கத்திப் பேசுவதால் தொண்டை உலர்ந்துபோகும். தேவையில்லாமல் உடலின் சக்தி வீணாகும். டென்ஷன் உண்டாகும். ரத்த அழுத்தம் கூடும். இப்படியே தொடர்ந்தால் நிரந்தர அதிக ரத்த அழுத்த நோயாளி ஆகிவிடுவீர்கள் இது தேவையா? என்று யோசித்துப் பாருங்கள்.

வீட்டுக்குள்ளேயே தேவையில்லாமல் ஒருவருக்கொருவர் கத்திப்பேசுவது, டி.வி.யில் அளவுக்கதிகமாக சத்தம் வைத்துக் கேட்பது, ஸ்டீரியோ மியூசிக் அதிக சத்தம் வைத்துக் கேட்பது, அதிக வாகனப் போக்குவரத்து உள்ள ரோட்டில் இரைச்சல்களுக்கு இடையில் நின்று தேவையில்லாமல் காரில், பஸ்ஸில் ஹாரன் அடிப்பது, வாகனங்களை சரிவர பராமரிக்காததால் அவை அதிக இரைச்சலை ஏற்படுத்துவது மேற்கூறிய இவையெல்லாமே தேவை இல்லாத சத்தம் தானே.

அதிக சத்தத்தைக் கேட்காமல் அதிக சத்தத்தை உண்டு பண்ணாமல் காதைப் பாதுகாக்கலாமே.


viduppu



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

காதுகளை பாதுகாக்கும் வழிகள் 154550 காதுகளை பாதுகாக்கும் வழிகள் 154550 காதுகளை பாதுகாக்கும் வழிகள் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக