புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!  Poll_c10அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!  Poll_m10அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!  Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!  Poll_c10அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!  Poll_m10அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!  Poll_c10 
3 Posts - 8%
heezulia
அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!  Poll_c10அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!  Poll_m10அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!  Poll_c10அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!  Poll_m10அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!  Poll_c10அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!  Poll_m10அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Oct 13, 2011 6:51 pm


அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!

உண்டு, உடுத்தி, அனுபவித்து இன்பமயமாக இவ்வுலகில் வாழ ஆசைப்படும் மனிதன் அதன் பொருட்டு மேற்கொள்ளும் முயற்சிகள் பிரமிக்கத்தக்கவை. ஒழுங்காக அமர்ந்து உண்பதற்கும் நேரமின்றி ஓடுகிறான், ஓடுகிறான், ஓடிக்கொண்டேயிருக்கின்றான்.

ஒருவரையொருவர் விஞ்சும் விதத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் Fast Foods எனப்படும் அவசர உணவுகளின் தேவைகள் தற்காலம் அதிகரித்து விட்டன. அதற்கேற்றாற் போல் வீதிக்கு வீதி, முக்குக்கு முக்கு அவசர உணவு விடுதிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

பாரம்பரியமான உணவுகளை ஆற அமர ரசித்து ருசித்துச் சாப்பிடும் காலம் மெல்ல மெல்ல மலையேறி வருகிறது. இன்று அவசர உணவுகளை அள்ளி விழுங்கிவிட்டு ஓடும் அவல நிலையே எங்கும் நிலவுகிறது. குறிப்பாக குழந்தைகளை இந்த வகை உணவுகள் அதிகம் கவர்கின்றன. விளைவு - சிறு வயது முதல் அவர்களுக்குப் பலவித நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக உடல் பருமன் (Obesity), நீரிழிவு(சர்க்கரை நோய்) ஆகியவற்றுக்கு குழந்தைகள் எளிய இலக்காகிறார்கள்.

இதனாலேயே பிரிட்டிஷ் அரசு தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் அவசர உணவுகளின் விளம்பரங்களை 2006-ம் ஆண்டு முதல் தடை செய்தது.

நகர வாழ்க்கையும், அவசர உணவுகளும் பிரிக்க முடியா ஜோடிகளாக மாறிவிட்டன.

2006-ம் ஆண்டு மட்டும் உலக அவசர உணவுச் சந்தையின் வளர்ச்சி 4.8 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சந்தையான இந்தியாவில் வருடத்திற்கு 4.1 சதவீதம் இது வளர்ச்சியடைந்து வருகின்றது.

அவசர உணவின் ஜாம்பவானான மெக்டோனால்ட் 6 கண்டங்களில், 126 நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பியுள்ளது. மொத்தம் 31,000 கடைகள் அதற்கு உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அவசர உணவுகளின் சந்தைகள் அதிகரித்து வருகின்றன என்பது இதன் மூலம் விளங்கும்.

மெக்டோனால்டுக்கு அடுத்து அதிரடி உணவு ஜாம்பவானாக விளங்கும் பிஸ்ஸா ஹட் 97 நாடுகளில் கால் பதித்துள்ளது. அவசர உணவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதன்மையானதாக வருவதும் அமெரிக்காதான்.

கடந்த 2003ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, உடல் பருமன்தான் அமெரிக்கர்களின் உடல்நலப் பாதிப்புகளுக்கு தலையாய காரணம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் நான்கு லட்சம் அமெரிக்கர்கள் மரணிக்கிறார்களாம். சுமார் 6 கோடி பேர் உடல் பருமனுள்ளவர்களாக அமெரிக்காவில் உள்ளனர். சுமார் 12.7 கோடி பேர் அதிக எடையுள்ளவர்களாக இருக்கின்றனர்.

அவசர உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்த்தீர்களா?


நமது இந்தியத் திருநாட்டிலும் இந்த அவசர உணவுகளால் பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்திகளின் மூலம் அறிய முடிகிறது


மும்பையில் வசிக்கும் அந்த இல்லத்தரசியின் பெயர் சுஜாதா. இரு பிள்ளைகளுக்குத் தாயான அவருக்கு மருத்துவர்கள் ஓர் அதிர்ச்சி செய்தியினைச் சொன்னார்கள். அவருடைய இரு பிள்ளைகளுக்கும் (Type 2) இரண்டாம் ரக நீரிழிவு முற்றி வருகிறது என்பது தான் அந்த அதிர்ச்சிச் செய்தி. “நமக்கெல்லாம் இந்த வெளிநாட்டுக்கார நோய்கள் வராது என்றல்லவா நினைத்திருந்தேன்” என்கிறார் இந்தத் தாய்.

சத்தான உணவுகள் பற்றாக்குறை, உணவுத்தட்டுப்பாடு என்று ஒருபக்கம் துயருறும் இந்தியாவில்தான் அதிஉணவு, உடல்பருமன் போன்ற பிரச்னைகளும் வளர்ந்து வருகின்றன என்பது கசப்பான முரண்பாடு.

“உடற்பயிற்சி, பாரம்பரியமான கள விளையாட்டுகள் யாவும் குறைந்துபோய், மாறிவரும் நாகரீகத்துக்கேற்ப, தொலைக்காட்சி, கணினியில் விளையாடி, கடைத்தெருவில் சுற்றி ஓடி, கடைசியில் ஜங்க்ஃபுட் எனப்படும் அவசர உணவுகளை அள்ளிக் கொறித்துவிட்டு உறங்கச் செல்கிறார்கள் இன்றைய சிறுவர்கள்” என்று வருத்தப்படுகிறார் டாக்டர் பவுலா கோயல். மும்பையின் ஃபெய்த் கிளினிக் மருத்துவர் இவர்.

இந்த அவசர உணவுகளால் நீரிழிவு நோயும் எளிதாகத் தாக்குகிறதாம். உலகளவில் மக்கள்தொகையில் 1.2 பில்லியன் என்றிருந்து சைனாவை முந்தாவிட்டாலும் கூட, அவர்களுள் 51 மில்லியன் பேர் நீரிழிவு நோயாளிகள் என்ற புள்ளிவிவரத்தின் மூலம் இந்தியாவே முதலிடம் பெற்றுள்ளது.

இப்படியே போனால், இன்னும் இருபதே வருடங்களில் இந்த நோயால் தாக்கப்படுபவர்களின் தொகை 150 சத வளர்ச்சியைப் பெறும் என்பதில் தான் இன்னும் திகைப்பு.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், நாலாயிரம் குழந்தைகளிடம் 15 இந்திய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், ஐந்திலிருந்து பதினான்கு வயதுக்குட்பட்ட நகரக் குழந்தைகளில் 23 சதமானம் பேருக்கு அதிக உடல் எடை உள்ளதாம். அதனால் உடல் பரும வியாதிக்கு எளிதில் ஆளாகும் சாத்தியதை உண்டாம்.

ஆக, ஆபத்தைத் தவிர்க்க, அவசர உணவை அறவே தவிர்ப்போம் என்பதே அறிய வேண்டிய செய்தி.


inneram



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக