புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவலி.வகைகள் Poll_c10தலைவலி.வகைகள் Poll_m10தலைவலி.வகைகள் Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
தலைவலி.வகைகள் Poll_c10தலைவலி.வகைகள் Poll_m10தலைவலி.வகைகள் Poll_c10 
3 Posts - 8%
heezulia
தலைவலி.வகைகள் Poll_c10தலைவலி.வகைகள் Poll_m10தலைவலி.வகைகள் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
தலைவலி.வகைகள் Poll_c10தலைவலி.வகைகள் Poll_m10தலைவலி.வகைகள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தலைவலி.வகைகள் Poll_c10தலைவலி.வகைகள் Poll_m10தலைவலி.வகைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவலி.வகைகள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 11, 2011 6:32 pm

தலைவலி.வகைகள்.ஏன்? வகைகள்? கட்டுப்படுத்திவிடலாமா? அடிப்படை தகவல்கள்.


ஒற்றைத் தலைவலியா? இரட்டைத் தலைவலி, மண்டையிடி, மண்டைக் குத்தல், தலைபாரம். ?

எவ்வளவு பொதுவாக ஏற்படுகிறது? மாத்திரைகளால் கட்டுப்படுத்திவிடலாமா? எத்தனை வகைகள் இருக்கிறது? எந்தவிதமாக இருக்கும் போது ஒரு டாக்டரைச் சந்திக்க வேண்டும்? நாம் சாப்பிடுகிற உணவு தலைவலியை உருவாக்க கூடுமா?


உலகம் முழுக்க இப்பொழுது கவனிக்கப்படுகிற பிரச்னை, இல்லாதது போல பிரச்னை ஆகிற விஷயங்களில் மருத்துவ உலகின் கவனத்தைக் கவர்வது தலைவலி. தலைவலியா? என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.

ஆனால் உண்மை அதுதான். 90 சதவிகித மக்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல் பாதிப்பதில் தலைவலி முக்கிய இடத்தைப் பெறுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி உலகில் முன்னணியில் இருக்கிற டிஸ்எபிலிடி ஏற்படுத்தும் முதல் இருபது காரணங்களில் மைக்ரேன் தலைவலியும் இருக்கிறது!

தலைவலிக்கென்று தனி மருத்துவமனைகள் உலகின் முக்கிய நகரங்களில் வர ஆரம்பித்துவிட்டன. தலைவலிக்கு மட்டும் தனியாக டாக்டர்கள் வந்துவிட்டார்கள்.

டாக்டர் ஜெயஸ்ரீ கைலாசம் இதில் சென்னையில் கவனத்திற்கு உரியவர். இன்டர்னல் மெடிசனில் அமெரிக்க பட்டம் பெற்றவர். சிக்காகோ, ஆஸ்டின் மருத்துவமனைகளில் பயிற்சி பெற்றவர். ஹாஸ்டன் தலைவலி மருத்துவமனையில் பல்வேறு ஆய்வுகளில் பங்கு பெற்றவர். தற்சமயம் அப்பல்லோ மருத்துவமனையில் பணி.

தலைவலி பற்றி சில அடிப்படையான கேள்விகளுக்கு அவர் தந்திருக்கும் எளிமையான பதில்கள் இவை...

தலைவலி என்பது எவ்வளவு பொதுவாக ஏற்படுகிறது?
மிக மிக அதிகமாக, மிக மிகப் பொதுவாக ஏற்படுகிற பிரச்னைகளில் தலைவலி தலையானது! உங்கள் குடும்ப மருத்துவரைச் சந்திக்கும் மிக அதிகமான பத்து காரணங்களில் தலைவலியும் ஒன்று என்பதை நீங்கள் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்! ஆனால் உண்மை அதுதான்.

தவிர பொதுமக்களால் அலட்சியமாகக் கையாளப்படுகிற பிரச்னைகளில் தலைவலியும் அதிகமாக இருக்கிறது என்பது மற்றொரு ஆச்சரியமானது!

தலைவலியில் எத்தனை வகைகள் இருக்கிறது?
இரண்டு வகை. முதல் வகையை ப்ரைமரி ஹெட் ஏக் என்கிறார்கள். உடல் ரீதியாக ஒரு மாற்றம் ஏற்படும் போது தலையில் மூளையைச் சுற்றி உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைந்து தளர்ந்து மூளையிலும் அதைச் சுற்றிலும் உள்ள நரம்புகளை அழுத்துகின்றன. இந்த நேரத்தில் ஏற்படும் தலைவலியை ப்ரைமரி ஹெட்ஏக் என்கிறோம்.

மற்றபடி மூளையில் கட்டி, அடிபட்டிருத்தல், நோய்த் தொற்று இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படுகிற தலைவலியை செகன்டரி ஹெட்ஏக் என்கிறோம். பொதுவாக முதல் வகை தலைவலிக்கு எந்த வகையான நேரடி காரணமும் இருக்காது.

எந்தவிதமாக இருக்கும் போது ஒரு டாக்டரைச் சந்திக்க வேண்டும் என்று நீங்கள் அறிவுறுத்துவீர்கள்?
ஒரு தலைவலி கூடவே துணையாக பார்வையில் மாற்றம், இரத்த ஓட்டம் குறைந்த நமநமப்பு, குமட்டல், வாந்தி, மயக்கம் போன்ற ஏதோ ஒன்றோ இருக்குமானால் நீங்கள் கண்டிப்பாக உடனே ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். இது மூளைக்கட்டி, இரத்தக் கசிவு, நோய்த் தொற்று போன்ற ஏதோ ஒன்றோடு தொடர்பில் இருக்கலாம்.

மைக்ரேன் தலைவலி எப்படி இருக்கும்?

தலைவலியில் பிரபலமான ஒற்றைத் தலைவலிதான் இந்த மைக்ரேன் தலைவலி. தாங்க முடியாத ஒருபுறத் தலைவலி ஏற்பட்டு குமட்டல், வாந்தி, வெளிச்சம், தாங்க முடியாத நிலை என கலந்து வரும் இந்தத் தலைவலியில். இந்த வகை தலைவலி 18 சதவிகித பெண்களையும், 6 சதவிகித ஆண்களையும் தாக்குகிறது.

முதல்தர தலைவலியில் ஏதேனும் வகைகள் இருக்கின்றனவா?

இருக்கிறது. இதில் மைக்ரேன் தலைவலி வருகிறது. டென்ஷன் டைப் தலைவலி வருகிறது. கிளஸ்டர் ஹெட் ஏக் என்று சொல்லக் கூடிய கொத்துத் தலைவலி போன்றவை கூட வருகிறது.

முதல் வகை தலைவலிக்கு பிரதான காரணமாக இருப்பது எது? டென்ஷனால் வருகிற தலைவலிதான் முதல் வகை தலைவலிகளில் பிரதானமானது.

இப்படி டென்ஷனால் வருகிற தலைவலி மூன்றில் இரண்டு பங்கு ஆண்களையும், ஏறக்குறைய 80 சதவிகித பெண்களையும் பாதிக்கிறது என்று வளர்ந்த நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே தெரிவிக்கிறது.

மன அழுத்தம் அல்லது டென்ஷன் தலைவலியை உருவாக்குகிறது என்பதல்ல. இது ஒரு வசதிக்காகவே சொல்லப்படுகிறது. டென்ஷனால் ஏற்படுகிற தசை இறுக்கமே அந்த தலைவலிக்கு முக்கிய காரணம்.

கொத்து தலைவலி எப்படி இருக்கும்?
தலையில் ஒரு பக்கம் வலி ஏற்பட்டு அதே பகுதி கண்ணில் சிவப்பும், நீர்ச் செறிவும் நிறைந்து காணப்படும். கை, காலில் வெட்டு ஏற்பட்டால் ஏற்படும் வலியை விட இந்த வகையில் அதிக வலி இருக்கும். பெண்களைவிட ஆண்களையே இந்தத் தலைவலி அதிகம் தாக்குகிறது.

மைக்ரேன் வகை தலைவலியைக் கண்டறிய ஏதேனும் பரிசோதனைகள் செய்ய வேண்டுமா?

இந்த வகைத் தலைவலியைக் கண்டறிய குறிப்பிட்ட பரிசோதனைகள் எதுவும் இல்லை. மற்ற கவலைப்படக் கூடிய காரணங்களால் தலைவலி ஏற்பட்டிருக்கிறதா என்பதை மட்டும் அறிந்து தவிர்க்க சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அடிப்படை இரத்தப் பரிசோதனைகள் சிலருக்குத் தேவைப்படலாம்.

அடிக்கடி மாத்திரை சாப்பிடுவதால் கூட சிலருக்கு தலைவலி ஏற்படும் என்கிறார்களே?
ஆம். உண்மைதான். சிலர் இஷ்டத்திற்கும் மாத்திரைகள் பயன்படுத்துகிறார்கள். இதனைக் குறைக்க முயலும் போது தலைவலி ஏற்படும். இந்த வகை தலைவலியிலிருந்து விடுபட நிச்சயம் ஒரு மருத்துவரின் உதவி தேவை.

ஏன் சிலருக்கு மட்டும் தலைவலி வருகிறது. சிலருக்கு வருவதில்லை? இதற்கு காரணம் மரபு வழி வருகிற சிக்கல்கள்தான். குடும்ப வழி சிலர் சிக்கிக் கொள்கிறார்கள். சிலர் தப்பிக்கிறார்கள். சர்க்கரை நோய், அதிக அளவு இரத்த அழுத்தம் போன்றவை கூட காரணமாக இருக்கலாம்.

மைக்ரேன் தலைவலி ஒருவித மனநோயின் விளைவா?

நிச்சயமாக இல்லை. இந்த வகை தலைவலி உடல் ரீதியான மாற்றங்களால் மட்டுமே ஏற்படுகிறது என்பதற்கு நிறைய பரிசோதனை முடிவுகள் இருக்கின்றன. மைக்ரேன் தலைவலியின் போது மூளையில் பயலாஜிக்கல் மாற்றங்கள் நிகழ்கின்றன. புறக் காரணங்கள், அகக் காரணங்கள் இந்த மாற்றத்திற்கு ஒரு துண்டுகோலாக இருக்கலாம்.

தலைவலிகளுக்கு எந்தவிதமான சிகிச்சைகள் செய்யப்படுகின்றன?
அடிப்படையாகச் சில மருந்துகளைப் பயன்படுத்துதல், டிடாக்சிபிகேஷன் முறைகள், உணவு பற்றிய தகவல்கள் வழி தலைவலிகளைக் குறைத்தல்,. போட்டுலினம் ஊசிகள் வழி நரம்புகளைத் தளர்த்துதல், டிரிகர் பாயிண்ட் இன்ஜக்ஷன்ஸ், ஆக்ஸ்பிடல் நெர்வ் ப்ளாக், பிஸியோதெரபி மற்றும் தேவைப்படுகிறவர்களுக்கு பழக்கவழக்கப் பயிற்சிகள்.

ப்ரைமரி ஹெட்ஏக் என்கிற காரணங்களற்ற முதல் வகை தலைவலிகளை முழுமையாகக் குணப்படுத்த முடியுமா?
பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியும். முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தலைவலியின் அளவு, திரும்ப வரும் அளவு போன்றவற்றை நல்லவிதமாக கட்டுக்குள் கொண்டு வந்து அவருடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் திறனை அதிகரிக்க முடியும். வரவே வராமல் இந்த வகைத் தலைவலிகளைத் துரத்துவது எளிதல்ல.

நாம் சாப்பிடுகிற உணவு தலைவலியை உருவாக்க கூடுமா?
கூடும். காபியில் இருக்கிற காபின், வெண்ணையில் இருக்கிற டைரமைன், வாழைப்பழம் போன்ற சில பழங்கள், சிட்ரஸ் இருக்கிற ஆரஞ்சு, லெமன் போன்ற சில வகை உணவுப் பொருட்களுக்கு தலைவலியைத் தூண்டுகிற சக்தி இருக்கிறது. சாப்பிட முடியாமல் போவது, சாப்பிடும் நேரங்களில் மாற்றம் போன்ற சில பழக்கங்களும் தலைவலியைத் தூண்டும். எம்எஸ்ஜி இருக்கிற அஜினோமோட்டோ கூட ஒரு தலைவலி தூண்டல் இருக்கிற உணவுப் பொருள்தான்.

மாத்திரைகள் இன்றி தலைவலிகளைச் சமாளிக்க இயற்கையான வழிகள் ஏதாவது இருக்கிறதா?
இருக்கிறது. சரியான உணவு, நல்ல தேவையான தூக்கம், மிதமான உடற்பயிற்சிகள், சில மனம், உடல் தளர்வடையச் செய்யும் பயிற்சிகள் போன்றவற்றை முறையாகச் செயல்படுத்தினால் தலைவலிகள் ஏற்படுவதை இயற்கையாகவே தவிர்க்கலாம்.

தலைவலியை மாத்திரைகளால் கட்டுப்படுத்திவிடலாமா?
எப்போதாவது தலைவலிக்கு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் சமாளிக்கலாம்.. ஆனால் அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறவர்கள் ஒரு மருத்துவரின் உதவியோடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நலம். கடைகளில் நேரடியாக நீங்கள் வாங்குகிற வலி மாத்திரைகளால் அல்சர், கிட்னி பிரச்னை போன்ற மிகப் பெரிய தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

http://vanjoor-vanjoor.blogspot.com/2010/05/blog-post_04.html

ஒற்றைத் தலைவலியா? இரட்டைத் தலைவலி, மண்டையிடி, மண்டைக் குத்தல், தலைபாரம். ?

ஒற்றைத் தலைவலி என்பது இப்போது பலரையும் தாக்குகின்ற நோயாக உள்ளது.

இது நீர்க்கோர்வை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்.

அதாவது நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகி குடலுறிஞ்சிகளால் சத்துகள் உறிஞ்சப்பட்டு பித்த நீர் பித்தப் பையில் போகும். திப்பி மலக் குடலுக்குப் போகும்.

கழிவு நீர்கள் வியர்வையாக சிறுநீராகப் பிரியும். அப்படி பிரியும் கழிவு நீர்கள் சில சமயம் தசை நார்களுடன் சேர்ந்து கீழே போகாமல் மேலே போய்விடும்.

இது தலையில் மூளைக்குள், மண்டை ஓட்டுக்கும் நடுவிலுள்ள பகுதியில் தங்கி கீழே இறங்க முடியாமல் அப்படியே தங்கிவிடும்.

இந்த கழிவு நீர்கள் தான் தசை நார்களை தாக்க ஆரம்பிக்கும். அதனால் அத்துடன் பக்கத்திலுள்ள நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும். இதுவே வலியாக மாறிவிடும்.

தலைவலி பல வகைப்படும்
1. ஒற்றைத் தலைவலி
2. இரட்டைத் தலைவலி
3. மண்டையிடி
4. மண்டைக் குத்தல்
5. தலைபாரம்.

இவ்வாறு பல வகையாக பிரிக்கப்பட்டாலும் ஒன்றோடொன்று ஒத்துப் போகின்ற வகையில்தான் இவை இருக்கின்றன.

ஆகவே, தலைவலி வராமல் நமது உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்க...

அதிக குளிர்ச்சி தருகின்ற உணவு வகைகளை அல்லது பழச்சாறு வகைகளை குறைத்து அல்லது அறவே நீக்கிவிட வேண்டும்.

அதைப் போல அதிக சூடு உண்டு பண்ணுகின்ற உணவு வகைகளை அல்லது குளிர்பானங்களை (அய் ஸ் வாட்டர்) போன்றவற்றை சாப்பிடக் கூடாது.

மேலும் குளிர்ச்சியைத் தருகின்ற உணவு வகைகளை குறைத்துச் சாப்பிடவேண்டும்.

குறிப்பாக முள்ளங்கி, முட்டைக் கோசு, பீட்ருட் இவற்றை அளவுடன் சாப்பிடவேண்டும்.

இப்படி உணவு முறைகளில் கட்டுப்படாத ஒற்றைத் தலைவலியை எளிய சித்த மருத்துவ முறைப்படி எளிதாக குணப்படுத்திவிடலாம்.

பல வகையான மருத்துவ முறை இருந்தும் நமக்குத் தெரிந்த சில முறைகளை இங்கே குறிப்பிட்டுள்ளேன். தொடர்ந்து செய்து வந்தால் நிரந்தர குணம் ஏற்படும்.

மெல்லிய ஊசி எடுத்து அதன் முனையில் ஒரு மிளகைக் குத்தி நெய்யில் நனைத்து அப்படியே நெருப்பில் காட்டினால் புகை வரும்.

இந்தப் புகையை மூக்கின் நுனியில் வைத்து இழுக்கும்போது தும்மல் வரும்.
இத்துடன் உடம்பில் வியர்வை வரும். தொடர்ந்து சில நிமிடங்கள் செய்ய தலைவலி நோய் குறைந்துவிடும்.

ஓர் எலுமிச்சம் பழத்தின் தோலை மட்டும் எடுத்து நன்றாக மைபோல அரைத்து வலியுள்ள பக்கத்தில் ஒரு ரூபாய் அகலத்திற்கு கனமாக வட்டமாக ஒரு பற்றுப் போட்டுவிட்டால், கால் மணிநேரத்தில் ஒற்றைத் தலைவலி போய்விடும்.

வெற்றிலை, நல்வேளை இலை, அருகம்புல் இம்மூன்றையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து சேர்த்து கசக்கிப் பிழிந்தால் வருகின்ற சாறை எந்தப் பக்கம் வலியுள்ளதோ அதற்கு எதிர்பக்கம் காதில் சில துளிகள் விடவும்.

இவ்வாறு மூன்று நாள்கள் தொடர்ந்து செய்து வர குணமாகும்.

அரிவாள் மூக்குப் பச்சிலையை தேவையான அளவு எடுத்து அத்துடன் சுக்கைச் சேர்த்து அரைத்து நெற்றியில் கனமான பற்று போட்டு பின்னர் சாம்பிராணி புகை காட்ட குணமாகும்.

நல்ல நயம் சாம்பிராணியுடன் பூண்டுத் தோலை சமமாகக் கலந்து கரி நெருப்பில் போட்டால் இலேசாக புகை வரும். அதை முகர்ந்து வர குணமாகும்.

ஒரு கைப்பிடியளவு கொத்தமல்லியை 300 மில்லி கொதிக்கின்ற வெந்நீரில் இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஊறியிருக்கும் கொத்தமல்லியை நன்கு அரைத்து ஊறிய நீரில் கரைத்து வடிகட்டவும்.

சக்கையை மறுபடியும் அரைத்து அதே நீரில் கரைத்து வடிகட்டவும் இதுபோல மூன்று முறை செய்து வடிகட்டிய நீரில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடவும், மூன்று நாள் சாப்பிட குணமாகும்.

ஜாதி மல்லி இலையை எடுத்து அத்துடன் கொஞ்சம் சுக்குச் சேர்த்து அரைத்து பொட்டில் தடவி தணல் சூடு காண்பித்தால் குணமாகும்.
-- சீ.மா.கு.பெ.ந. விஜயராஜன் SOURCE: INTERNET




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Oct 12, 2011 8:19 pm

மிகவும் அருமையான தகவல் முகைதீன்
நன்றி
சூப்பருங்க அருமையிருக்கு



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தலைவலி.வகைகள் 154550 தலைவலி.வகைகள் 154550 தலைவலி.வகைகள் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 12, 2011 9:47 pm

தலைவலி பற்றி ஒரு நல ஆய்வு பகிர்வுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தலைவலி.வகைகள் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக