புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Poll_c10ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Poll_m10ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Poll_c10ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Poll_m10ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Poll_c10ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Poll_m10ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Poll_c10ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Poll_m10ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Poll_c10ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Poll_m10ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம்


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 10, 2011 1:13 pm

நாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மேலும் ஒரு தி.மு.க.,வின் மாஜி மத்திய அமைச்சர் தயாநிதி, சன் டி.வி., கலாநிதி (கருணாநிதி பேரன்கள்) மீது சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கையை ( எப்.ஐ.ஆர்., ) பதிவு செய்தது. இதனையடுத்து சென்னை, டில்லி, ஐதராபாத் பகுதியில் உள்ள இவர்களது வீடுகள், சன் டி.வி., அலுவலகங்களில் இன்று ( திங்கட்கிழ‌மை) காலை சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பல்லோ நிறுவனம் மற்றும் வீடுகளில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தி வருகிறது. சி.பி.ஐ., ரெய்டு அடுத்து சன் டி.வி., நிறுவன பங்குகள் கடுமையாக சரிந்தன. தொலை தொடர்பு துறையில் ராஜாவுக்கு முன்பாக அமைச்சராக இருந்து அவரை ஜெயிலுக்கு தள்ளி விட்டு அவர் பிந்தி செல்லவிருக்கிறார் என்பதுதான் கூடுதல் விஷயம். எப்.ஐ.ஆர். அடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரிக்கவும் சி.பி.ஐ., முடிவு செய்திருப்பதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.




கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ.,தயாநிதி விவகாரம் தொடர்பாக எடுத்து வரும் நடவடிக்கையை விவர அறிக்கையாக தாக்கல் செய்தது. சீல் இட்ட கவரை நீதிபதிகள் ஜி.எஸ்.,சிங்வி மற்றும் ஏ.கே.,கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு தெரிவித்தபோது தயாநிதி மீதான ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. எனவே இன்னும் ஒரிரு நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார். இதனையடுத்து சி.பி.ஐ., இன்று எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளது.



வாசற்கதவை திறக்க மறுப்பு : இன்று காலையில் நடந்தது என்ன ? : சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்காக அதிகாரிகள் ராஜாஅண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள தயாநிதி வீட்டிற்கு காலை 7.00 மணிக்கு அதிகாரிகள் வந்தனர். கதவை திறக்குமாறு கேட்டபோது வாசலில் நின்ற காவல்காரனிடம் கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். வீட்டில் உள்ளே இருக்கும் நபர்களிடம் வாட்ச்மேன் இந்த தகவலை சொல்லியிருக்கிறார். ஆனால் எவ்வித பதிலும் இல்லை. அரை மணி நேரமாக காத்திருந்த அதிகாரிகள் சீக்கிரம் கதவை திறய்யா இல்லைன்னா உன்னை கைது செய்ய வேண்டியது இருக்கும் என்று மிரட்டிய பின்னர் கதவு திறந்து விடப்பட்டது. 7. 35 க்கு சி.பி.ஐ., அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து ரெய்டு நடந்து வருகிறது. காலை 10 .30 மணியளவில் மு.க., தமிழரசு தயாநிதி வீட்டிற்கு வந்தார். அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார்.




ஊழலுக்கு வித்திட அமைச்சர் குழு பரிந்துரையை நிராகரித்தார் : தி.மு.க., கூட்டணியுடன் மத்திய அமைச்சரவை அமைந்ததும் எனக்கு தொலை தொடர்பு துறை தான் வேண்டும் என அடம் பிடித்து பெற்றுக்கொண்டார். மே மாதம் 23 ம் தேதி 2004 முதல் மே மாதம் 15 ம் தேதி 2007 வரை இத்துறைக்கான அமைச்சர் பதவியில் இருந்த போது ஸ்பெக்ட்ரம் அலை வரிசை தனியாருக்கு விற்க பாதுகாப்பு துறை ஒப்புதல் கொடுத்தது. அந்நேரத்தில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான விலையை நிர்ணயிப்பதில் அமைச்சரவை குழுவை பிரதமர் 2006 ஜனவரி மாதம் அமைச்சர் குழு பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கினார் . ஆனால் இதற்கு பொறுக்காத தயாநிதி பிரதமரை, சந்தித்து ( பிப். 1ல் ) பேசினார். பொறுமினார். இதனையடுத்து அவர் பிரதமருக்கு 2006 பிப்., 28 ம் தேதி கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பினார். இதில் தொலை தொடர்பு துறையில் அமைச்சக குழு தலையிடுவதை நான் விரும்பவில்லை. இது எனது துறையில் தலையிடாக இருக்கும் இதனால் நான் சுதந்திரமாக செயல்பட முடியாது என்று கூறி முடித்து கொண்டார். இதனையடுத்து முந்தி வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்டரத்தை விற்க துவங்கினார்.


என்ன குற்றம்தான் செய்தார் தயாநிதி ? : தயாநிதி தனது காலக்கட்டத்தில் ஏர்செல் நிறுவனர் சிவசங்கரனுக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து இந்த தொழிலில் நிற்க முடியாமல் கம்பெனியை விற்றார். இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலான விவர அறிக்கையில் சி.பி.ஐ., கூறியிருந்ததாவது:


கடந்த 2004 -2007 காலகட்டத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். அப்போது, ஏர்செல் தனது சேவையை விரிவாக்கம் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கான உரிமம் கேட்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பம் செய்தது. ஏர்செல் நிறுவனத்தோடு மேலும் இரு நிறுவனங்களும்உரிமம் கேட்டு விண்ணப்பித்தன. உரிமம் வழங்குவதற்காக, ஏர்செல் நிறுவனத்திடம், தேவையில்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த நடைமுறையை மற்ற இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம், அமைச்சகம் மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு உடனடியாக உரிமம் வழங்கப்பட்டுவிட்டது. அதே நேரம், ஏர்செல்லுக்கு உரிமம் வழங்குவதில் இழுத்தடிப்பு நடந்தது. இவ்விவகாரத்தில் சி.பி.ஐ., யின் முதற்கட்ட விசாரணையில், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர், ஏர்செல் நிறுவனத்திற்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளைவிற்கும்படி, ஏர்செல்லின் அப்போதைய அதிபர் சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இறுதியில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் பங்குகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. அந்த நெருக்கடியின் விளைவாக, ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்ற பின்தான், ( 2006, மார்ச் மாதத்திற்கு பின்) ஏர்செல் நிறுவனத்திற்கான ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கும் நடவடிக்கைகள் துவங்கின. இவ்வாறு கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சன் குழுமத்தில் 600 கோடி முதலீடு: ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதும் , ஸ்பெக்ட்ரம் கைமாறியதும், மேக்சிஸ்ஸின் துணை நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் 600 கோடியை முதலீடு செய்தது. இந்த முதலீடு என்ன காரணத்தினால் எந்த ரூபத்தில் நடந்தது என்பது தற்போதைய கேள்வி. இதனையடுத்து சி.பி.ஐ,., தொடர்ந்து பல மாதங்களாக தயாநிதி தொடர்பான விவரத்தை சேகரித்து வந்தது. அவருக்கு நெருங்கிய தொலை தொடர்பு அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர். இவர்களும் தயாநிதி காலம் தாழ்த்திய விஷயத்தை ஒத்துக்கொண்டனர். இந்த அடிப்படையில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


பதவியை இழந்த தயாநிதி : தி.மு.க.,வில் டில்லி அரசியல் என்றால் தயாநிதிதான் எதற்கெடுத்தாலும் முன் நிறுத்தப்பட்டு வந்தார். கட்சி தலைவர் கருணாநிதியின் கோபத்திற்கு ஆளானதை அடுத்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் ஜவுளித்துறையை தயாநிதி பெற்றார். இதனால் தொலை தொடர்பு துறை ராஜாவுக்கு போனது.


ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தயாநிதி மீதான குற்றத்திற்கு ஆதாரம் இருப்பதாக சி.பி.ஐ., தெரிவித்ததையடுத்து எதிர்கட்சிகள் இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தின. பார்லி., கூட்டம் முடங்கியது. இதனையடுத்து வேறு வழி இல்லாமல் கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்தார். ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக மத்திய அமைச்சர் பதவியை இழந்த 2 வது நபர் என்ற இடத்தை பிடித்தார் தயாநிதி. அமைச்சர் பதவியை இழந்ததுடன் முடிந்து விடக்கூடாது, தொடர் குற்ற நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என எதிர்கட்சிகள் மற்றும் ஊழல் எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தி வந்தனர். சிலர் சி.பி.ஐ.,விசாரணை மீது சந்தேக பார்வை வைத்தனர். ஆனால் காலம் கடந்தாலும் தயாநிதியை தப்பிக்க விடாமல் பெரும் ஆதார திரட்டுடன் எப்.ஐ.ஆர்., பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ.,


4 மாதங்களுக்கு மேல் சிறையில் கனிமொழி : தயாநிதி தனது அமைச்சர் பதவியை இழந்த பின்னர் தி.மு.க.,வில் அடுத்து யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கட்சி வட்டாரத்தில் கடும் எதிர்பார்ப்பு இருந்தாலும், தலைவர் கருணாநிதியோ யாருக்கும் அமைச்சர் பொறுப்பு வாங்கிட இஷ்டம் இல்லாமல் இருந்தார். மேலும் கனிமொழியை வழக்கில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு எவ்வித உதவியும் செய்யாததால் காங்,.மீது அதிருப்தியில் இருந்த தி.மு.க., இதனையடுத்து தி.மு.க., தரப்பில் யாரும் அமைச்சராக பொறுப்பேற்கவில்லை. ஸ்பெக்ட்ரமில் ஆதாயம் பெற்ற ஸ்வான் கம்பெனி, கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி வழங்கியது என்ற ஆதாரத்தின்படி கருணாநிதி மகள் கனிமொழி கடந்த மே மாதம் 20 ம் தேதி கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 4 மாதங்களுக்கு மேலாக திகார் சிறையில் உள்ளார். தயாநிதி மற்றும் கலாநிதி விரைவில் கைது செய்யப்படுவர் என பேசப்படுகிறது.

சொந்த உபயோகத்திற்கு 323 தொலைபேசி இணைப்புகள்: தயாநிதியின் வீட்டிற்கு, 323 தொலைபேசி இணைப்புகளை சட்ட விரோதமாக வழங்கியது தொடர்பான பைல்களை, தொலைத்தொடர்புத் துறை சமர்ப்பிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., உத்தரவிட்டிருந்தது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி பதவி வகித்த காலத்தில், சென்னையில் உள்ள அவரின் போட் ஹவுஸ் இல்லத்திற்கு, பி.எஸ். என்.எல்., பொது மேலாளர் பெயரில், 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டன. சன் "டிவி' அலுவலகத்தில் இருந்து பூமிக்கு அடியில் தயாநிதியின் வீட்டிற்கு அமைக்கப்பட்ட பிரத்யேக கேபிள்கள் மூலம், இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டன. இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம், கட்டணம் அதிகமான ஐ.என்.டி.என்., வசதிகளை கொண்டிருந்தன. அதன் மூலம் சன் "டிவி'க்குத் தேவையான தகவல்கள், செய்திகள் மற்றும் "டிவி' நிகழ்ச்சிகள், உலகம் முழுவதிலும் இருந்து வெகு விரைவாகப் பெறப்பட்டன . இந்த புகார் தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

என்ன, என்ன பிரிவுகளில் வழக்கு: தயாநிதி மற்றும் அவரது சகோதரர் கலாநிதி, அனந்த கிருஷ்ணன் மற்றும் ரால்ப் மார்ஷல் ஆகியோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 120 பி பிரிவு 13(2) மற்றும்13 (1) (டி) மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு செக்ஷன் 7 மற்றும் 12ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., செய்தித்தொடர்பாளர் தரணி மிஸ்ரா தெரிவித்தார்.

-- தினமலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 1:26 pm

dsudhanandan wrote:

தயாநிதியின் வீட்டிற்கு, 323 தொலைபேசி இணைப்புகளை சன் "டிவி' அலுவலகத்தில் இருந்து பூமிக்கு அடியில் தயாநிதியின் வீட்டிற்கு அமைக்கப்பட்ட பிரத்யேக கேபிள்கள் மூலம், இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டன. இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம், கட்டணம் அதிகமான ஐ.என்.டி.என்., வசதிகளை கொண்டிருந்தன.
-- தினமலர்


நன்றி சுதனா !
இது பற்றிய கட்டுரை முன்பே ஹிந்து நாளிதலில் வந்திருக்கிறதாம். இன்று காலை புதிய தலைமுறை டிவியில் கூட பேசினார்கள். திமுக விற்கும் காங்கிரசிற்கும் இனி சரி வராது என்பதால் இவரையும் சிறைக்கு அனுப்பி பணிய வைக்கிறார்களா ? அல்லது அதிமுகா ஆதரவிற்க்கு இவ்வாறு செய்கிறார்களா ?

ஏனென்றால் அப்போதே குற்றம் கண்டறியப்பட்டதே. இதுவரை ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை. என்கிற கேள்விக்கு பதில் யாருக்கு தெரியும் ?
நன்றி சுதனா !



ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Thank-you015
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 10, 2011 1:30 pm

தி மு க -- இவர்களை என்றோ கைவிட்டு விட்டது... உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் ரெய்டு என்பது அ தி மு க வுக்கு சாதகமாகவா என எண்ண தோன்றுகிறது....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 1:38 pm

dsudhanandan wrote:தி மு க -- இவர்களை என்றோ கைவிட்டு விட்டது... உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் ரெய்டு என்பது அ தி மு க வுக்கு சாதகமாகவா என எண்ண தோன்றுகிறது....

இருக்கலாம் சுதனா !

தயாநிதி அவர்களும் பதவியில் இருக்கும் போது, டாடா போன்றவர்களுடன் மோதி கொண்டார். அவர்கள் கொடுக்கிற குடைச்சலின் கரணமாகக்கூட இந்த கைது சம்பவம் அரங்கேறலாம் !



ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம் Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக