Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயக்குநராகும் எண்ணம் இல்லை! - 'கோலங்கள்' அபி - தேவயானி
3 posters
Page 1 of 1
இயக்குநராகும் எண்ணம் இல்லை! - 'கோலங்கள்' அபி - தேவயானி
இயக்குநராகும் எண்ணம் இல்லை!
'கோலங்கள்' அபியாகவே தாய்க்குலங்களின் மனதில் தங்கிவிட்ட தேவயானி, இப்போது 'கொடி முல்லை'யாகப் படர ஆரம்பித்திருக்கிறார். ஆம்! ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 'கொடிமுல்லை' சீரியலில் இருபது வயது இளம்பெண்ணாகவும், அறுபது வயது அம்மாவாகவும் அசத்திக் கொண்டிருக்கும் தேவயானிதான் இன்று சீரியல் பார்வையாளர்களின் ஹாட் டாபிக்! எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்பதுபோல் அடுத்த ஷாட்டுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
'கொடிமுல்லை' பற்றிச் சொல்லுங்கள்?
'கொடிமுல்லை' எங்கள் சொந்த தயாரிப்பு. ஆர்.கே. விஷன் என்ற பெயரில் என் கணவர் ராஜகுமாரன்தான் இத்தொடரை தயாரிக்கிறார். 'கோலங்கள்' தொடரில் கோ-டைரக்டராக இருந்த செந்தில் குமார் இயக்குகிறார்.
'கொடிமுல்லை' பெயர்க்காரணம்?
கொடிமுல்லை என்பது ஒரு வித பூச்செடி. அது கொடிமாதிரி வளரும். தொடரின் தலைப்பிலேயே வானம் தாண்டி வளர்பவள் என்று ஒரு வாசகம் கொடுத்திருப்போம். ஒரு கொடி படர்வதற்கு நல்ல ஆதரவு இருந்தால், அது எவ்வளவு உயரம்கூட படர வாய்ப்பிருக்கிறது. அதுபோலத்தான் ஒரு பெண்ணும்.
குடும்பத்திலிருப்பவர்கள் நல்ல நண்பர்கள், அவளைச்சுற்றி இருப்பவர்கள் சப்போர்ட் இருந்தால் அவளால் வானம் வரைகூட வளர முடியும். இதுபோன்ற பாஸிடிவ்வான விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்றுதான் இந்தப் பெயர் வைத்தோம்"
இரட்டை வேடத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?
இருபத்தி நான்கு வயது கல்லூரிப் பெண் மலர்க் கொடியாகவும், அறுபது வயது அம்மா அன்னக்கொடியாகவும் வருவேன். ஒரு ரோல் ரொம்ப மாடர்னான கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்க்கிற பெண்.. இதை சுலபமாக நடித்துவிட்டேன். ஆனால், அம்மா கேரக்டர்தான் ரொம்பவும் சிரமமாக இருந்தது.
அந்த மேக்கப் போட்டுகொள்வதற்கே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது. இருபத்தி ஐந்து வருடமாக ஜெயிலில் இருக்கும் ஒரு பெண், யாரிடமும் பேசாத, ரொம்ப அமைதியான ஒரு பெண் என்பதால் எனக்கு பெரிய சவாலாக இருந்தது.
அறுபது வயதுப் பெண் கேரக்டர் ரிஸ்க் என்று பயம் வரவில்லையா?
ஆரம்பத்தில் பயமாகத்தான் இருந்தது. ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்களா, இந்த வயதிலேயே இவ்வளவு முதிர்ச்சியான கேரக்டரில் நடிக்க வேண்டுமா என்று தயக்கமாக இருந்தது. ஆனால், இப்போது கிட்டத்தட்ட 150 எபிசோட் கடந்துவிட்டது. நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
வெளிநாட்டில் இருப்பவர்கள்கூட இப்போ ஆன்-லைனில் தமிழ் சீரியல்களை விரும்பி பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் 'கொடி முல்லை' தொடரை கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். என்னை அந்த இடத்திற்கு கொண்டு போன ஆடியன்சுக்கு என் நன்றி.
சொந்த ஸ்டுடியோ நிர்வாகம் எப்படி இருக்கிறது?
நான், என் கணவர் இரண்டு பேருமே சினிமாவில் இருப்பதால் சினிமா சம்பந்தப்பட்ட ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென்று நினைத்தோம். அப்படி வந்ததுதான் ஸ்டுடியோ வைக்கும் ஐடியா. அதில் படங்கள், சீரியல்கள் என சின்ன சின்ன விஷயங்கள் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.
எங்களுடைய ஸ்டுடியோவில், எங்களோட சொந்தத் தயாரிப்பில் தயாராகி சேனலில் வெளிவரும் தொடர்களை பார்க்கும்பொழுது சந்தோஷமாக இருக்கிறது. என் மகள் இனியா பெயரில் 'சவுண்ட் அன்ட் எடிட்டிங்' என்றும் நடத்தி வருகிறோம். அந்த டைட்டில் டிவியில் வரும்பொழுது ரொம்ப சந்தோஷமாகவும், ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது. இதன் மூலமாக நிறைய பேருக்கு வேலை கொடுக்கிறோம்ங்கிற திருப்தியும் இருக்கிறது.
இயக்குநராகும் எண்ணம் உண்டா?
அப்படி எதுவும் இல்லை. டைரக்ட் செய்வது என்பது ரொம்ப பெரிய விஷயம். அதற்கு நிறைய அறிவு, அனுபவம் வேண்டும். ரொம்ப பொறுமை வேண்டும். சினிமா சம்பந்தப்பட்ட எடிட்டிங், மியூசிக், ரெக்கார்டிங், என எல்லா விஷயங்களுக்குமான அறிவு இருந்தால்தான் இயக்கத்துக்கு வர முடியும்.
இப்போதைக்கு என்னுடைய வேலை நடிப்பது. அதில் முழுமையான கவனம் செலுத்தி நடித்தால் போதும் என்று நினைக்கிறேன். ஏற்கெனவே வீட்டில் ஒரு டைரக்டர் இருக்கிறார். அதுவே போதும்.
மென்மையான தேவயானியை பார்த்து விட்டோம். இனி வில்லியாகப் பார்க்கலாமா?
வில்லியாகவா, நானா..(சிரிக்கிறார்) இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. எதிர்காலத்தில் செய்யலாம், அது அந்தக் கதையைப் பொருத்தது. அப்படியே வில்லியாக நடித்தாலும், அதை ஈடுகட்டுவது போல ஒரு நல்லவளும் இருக்க வேண்டும். அந்தப் பாஸிட்டிவ் கேரக்டர் யார் என்கிற கேள்வியும் வருகிறதே..
சினிமாவில் அதிகம் பார்க்க முடியவில்லையே ஏன்?
சமீபத்தில் பெரிய திரையில் நான் எந்த படங்களிலும் நடிப்பதில்லை அதுதான் காரணம். ஆனால், தற்போது என் கணவர் இயக்கிக் கொண்டு இருக்கும் 'திருமதி தமிழ்' என்ற படத்தில் நான் இதுவரை செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
மற்றபடி பெரிய திரையில் நடிக்கும் ஒரு ஹீரோவுக்கு இணையாகத்தான் சின்னத்திரையில் ஹீரோயின்கள் வருகிறார்கள். அதனால் சின்னத்திரைதான் திருப்தியாக இருக்கிறது.
குடும்பம் குறித்து?
எனக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். பெரியவளின் பெயர் இனியா, சின்னவள் பெயர் ப்ரியங்கா. குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய லட்சியம். எதிர்காலத்தில் ஹீரோயினாக வர ஆசைப்பட்டாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
TMT
'கோலங்கள்' அபியாகவே தாய்க்குலங்களின் மனதில் தங்கிவிட்ட தேவயானி, இப்போது 'கொடி முல்லை'யாகப் படர ஆரம்பித்திருக்கிறார். ஆம்! ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 'கொடிமுல்லை' சீரியலில் இருபது வயது இளம்பெண்ணாகவும், அறுபது வயது அம்மாவாகவும் அசத்திக் கொண்டிருக்கும் தேவயானிதான் இன்று சீரியல் பார்வையாளர்களின் ஹாட் டாபிக்! எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்பதுபோல் அடுத்த ஷாட்டுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
'கொடிமுல்லை' பற்றிச் சொல்லுங்கள்?
'கொடிமுல்லை' எங்கள் சொந்த தயாரிப்பு. ஆர்.கே. விஷன் என்ற பெயரில் என் கணவர் ராஜகுமாரன்தான் இத்தொடரை தயாரிக்கிறார். 'கோலங்கள்' தொடரில் கோ-டைரக்டராக இருந்த செந்தில் குமார் இயக்குகிறார்.
'கொடிமுல்லை' பெயர்க்காரணம்?
கொடிமுல்லை என்பது ஒரு வித பூச்செடி. அது கொடிமாதிரி வளரும். தொடரின் தலைப்பிலேயே வானம் தாண்டி வளர்பவள் என்று ஒரு வாசகம் கொடுத்திருப்போம். ஒரு கொடி படர்வதற்கு நல்ல ஆதரவு இருந்தால், அது எவ்வளவு உயரம்கூட படர வாய்ப்பிருக்கிறது. அதுபோலத்தான் ஒரு பெண்ணும்.
குடும்பத்திலிருப்பவர்கள் நல்ல நண்பர்கள், அவளைச்சுற்றி இருப்பவர்கள் சப்போர்ட் இருந்தால் அவளால் வானம் வரைகூட வளர முடியும். இதுபோன்ற பாஸிடிவ்வான விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்றுதான் இந்தப் பெயர் வைத்தோம்"
இரட்டை வேடத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?
இருபத்தி நான்கு வயது கல்லூரிப் பெண் மலர்க் கொடியாகவும், அறுபது வயது அம்மா அன்னக்கொடியாகவும் வருவேன். ஒரு ரோல் ரொம்ப மாடர்னான கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்க்கிற பெண்.. இதை சுலபமாக நடித்துவிட்டேன். ஆனால், அம்மா கேரக்டர்தான் ரொம்பவும் சிரமமாக இருந்தது.
அந்த மேக்கப் போட்டுகொள்வதற்கே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது. இருபத்தி ஐந்து வருடமாக ஜெயிலில் இருக்கும் ஒரு பெண், யாரிடமும் பேசாத, ரொம்ப அமைதியான ஒரு பெண் என்பதால் எனக்கு பெரிய சவாலாக இருந்தது.
அறுபது வயதுப் பெண் கேரக்டர் ரிஸ்க் என்று பயம் வரவில்லையா?
ஆரம்பத்தில் பயமாகத்தான் இருந்தது. ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்களா, இந்த வயதிலேயே இவ்வளவு முதிர்ச்சியான கேரக்டரில் நடிக்க வேண்டுமா என்று தயக்கமாக இருந்தது. ஆனால், இப்போது கிட்டத்தட்ட 150 எபிசோட் கடந்துவிட்டது. நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
வெளிநாட்டில் இருப்பவர்கள்கூட இப்போ ஆன்-லைனில் தமிழ் சீரியல்களை விரும்பி பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் 'கொடி முல்லை' தொடரை கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். என்னை அந்த இடத்திற்கு கொண்டு போன ஆடியன்சுக்கு என் நன்றி.
சொந்த ஸ்டுடியோ நிர்வாகம் எப்படி இருக்கிறது?
நான், என் கணவர் இரண்டு பேருமே சினிமாவில் இருப்பதால் சினிமா சம்பந்தப்பட்ட ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென்று நினைத்தோம். அப்படி வந்ததுதான் ஸ்டுடியோ வைக்கும் ஐடியா. அதில் படங்கள், சீரியல்கள் என சின்ன சின்ன விஷயங்கள் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.
எங்களுடைய ஸ்டுடியோவில், எங்களோட சொந்தத் தயாரிப்பில் தயாராகி சேனலில் வெளிவரும் தொடர்களை பார்க்கும்பொழுது சந்தோஷமாக இருக்கிறது. என் மகள் இனியா பெயரில் 'சவுண்ட் அன்ட் எடிட்டிங்' என்றும் நடத்தி வருகிறோம். அந்த டைட்டில் டிவியில் வரும்பொழுது ரொம்ப சந்தோஷமாகவும், ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது. இதன் மூலமாக நிறைய பேருக்கு வேலை கொடுக்கிறோம்ங்கிற திருப்தியும் இருக்கிறது.
இயக்குநராகும் எண்ணம் உண்டா?
அப்படி எதுவும் இல்லை. டைரக்ட் செய்வது என்பது ரொம்ப பெரிய விஷயம். அதற்கு நிறைய அறிவு, அனுபவம் வேண்டும். ரொம்ப பொறுமை வேண்டும். சினிமா சம்பந்தப்பட்ட எடிட்டிங், மியூசிக், ரெக்கார்டிங், என எல்லா விஷயங்களுக்குமான அறிவு இருந்தால்தான் இயக்கத்துக்கு வர முடியும்.
இப்போதைக்கு என்னுடைய வேலை நடிப்பது. அதில் முழுமையான கவனம் செலுத்தி நடித்தால் போதும் என்று நினைக்கிறேன். ஏற்கெனவே வீட்டில் ஒரு டைரக்டர் இருக்கிறார். அதுவே போதும்.
மென்மையான தேவயானியை பார்த்து விட்டோம். இனி வில்லியாகப் பார்க்கலாமா?
வில்லியாகவா, நானா..(சிரிக்கிறார்) இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. எதிர்காலத்தில் செய்யலாம், அது அந்தக் கதையைப் பொருத்தது. அப்படியே வில்லியாக நடித்தாலும், அதை ஈடுகட்டுவது போல ஒரு நல்லவளும் இருக்க வேண்டும். அந்தப் பாஸிட்டிவ் கேரக்டர் யார் என்கிற கேள்வியும் வருகிறதே..
சினிமாவில் அதிகம் பார்க்க முடியவில்லையே ஏன்?
சமீபத்தில் பெரிய திரையில் நான் எந்த படங்களிலும் நடிப்பதில்லை அதுதான் காரணம். ஆனால், தற்போது என் கணவர் இயக்கிக் கொண்டு இருக்கும் 'திருமதி தமிழ்' என்ற படத்தில் நான் இதுவரை செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
மற்றபடி பெரிய திரையில் நடிக்கும் ஒரு ஹீரோவுக்கு இணையாகத்தான் சின்னத்திரையில் ஹீரோயின்கள் வருகிறார்கள். அதனால் சின்னத்திரைதான் திருப்தியாக இருக்கிறது.
குடும்பம் குறித்து?
எனக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். பெரியவளின் பெயர் இனியா, சின்னவள் பெயர் ப்ரியங்கா. குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய லட்சியம். எதிர்காலத்தில் ஹீரோயினாக வர ஆசைப்பட்டாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
TMT
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இயக்குநராகும் எண்ணம் இல்லை! - 'கோலங்கள்' அபி - தேவயானி
ஆத்தாடி நீங்க டைரடக்கரு பண்ணி யார் பார்க்குறது?
கோலங்கள் மூலமாக எல்லாரையும் ரொம்ப நாள் அழ வச்ச பெருமை உங்களுடையதுதான் அம்மணி.
கோலங்கள் மூலமாக எல்லாரையும் ரொம்ப நாள் அழ வச்ச பெருமை உங்களுடையதுதான் அம்மணி.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» இயக்குநராகும் மனீஷா!
» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை
» தேவயானி கையில் சின்னத்திரை
» வணக்கம் டீச்சர்! - தேவயானி மிஸ்!
» ரெயில்வேயை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: சென்னையில், ரெயில்வே வாரிய தலைவர் பேச்சு
» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை
» தேவயானி கையில் சின்னத்திரை
» வணக்கம் டீச்சர்! - தேவயானி மிஸ்!
» ரெயில்வேயை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: சென்னையில், ரெயில்வே வாரிய தலைவர் பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|