Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயக்குநராகும் எண்ணம் இல்லை! - 'கோலங்கள்' அபி - தேவயானி
3 posters
Page 1 of 1
இயக்குநராகும் எண்ணம் இல்லை! - 'கோலங்கள்' அபி - தேவயானி
இயக்குநராகும் எண்ணம் இல்லை!
'கோலங்கள்' அபியாகவே தாய்க்குலங்களின் மனதில் தங்கிவிட்ட தேவயானி, இப்போது 'கொடி முல்லை'யாகப் படர ஆரம்பித்திருக்கிறார். ஆம்! ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 'கொடிமுல்லை' சீரியலில் இருபது வயது இளம்பெண்ணாகவும், அறுபது வயது அம்மாவாகவும் அசத்திக் கொண்டிருக்கும் தேவயானிதான் இன்று சீரியல் பார்வையாளர்களின் ஹாட் டாபிக்! எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்பதுபோல் அடுத்த ஷாட்டுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
'கொடிமுல்லை' பற்றிச் சொல்லுங்கள்?
'கொடிமுல்லை' எங்கள் சொந்த தயாரிப்பு. ஆர்.கே. விஷன் என்ற பெயரில் என் கணவர் ராஜகுமாரன்தான் இத்தொடரை தயாரிக்கிறார். 'கோலங்கள்' தொடரில் கோ-டைரக்டராக இருந்த செந்தில் குமார் இயக்குகிறார்.
'கொடிமுல்லை' பெயர்க்காரணம்?
கொடிமுல்லை என்பது ஒரு வித பூச்செடி. அது கொடிமாதிரி வளரும். தொடரின் தலைப்பிலேயே வானம் தாண்டி வளர்பவள் என்று ஒரு வாசகம் கொடுத்திருப்போம். ஒரு கொடி படர்வதற்கு நல்ல ஆதரவு இருந்தால், அது எவ்வளவு உயரம்கூட படர வாய்ப்பிருக்கிறது. அதுபோலத்தான் ஒரு பெண்ணும்.
குடும்பத்திலிருப்பவர்கள் நல்ல நண்பர்கள், அவளைச்சுற்றி இருப்பவர்கள் சப்போர்ட் இருந்தால் அவளால் வானம் வரைகூட வளர முடியும். இதுபோன்ற பாஸிடிவ்வான விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்றுதான் இந்தப் பெயர் வைத்தோம்"
இரட்டை வேடத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?
இருபத்தி நான்கு வயது கல்லூரிப் பெண் மலர்க் கொடியாகவும், அறுபது வயது அம்மா அன்னக்கொடியாகவும் வருவேன். ஒரு ரோல் ரொம்ப மாடர்னான கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்க்கிற பெண்.. இதை சுலபமாக நடித்துவிட்டேன். ஆனால், அம்மா கேரக்டர்தான் ரொம்பவும் சிரமமாக இருந்தது.
அந்த மேக்கப் போட்டுகொள்வதற்கே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது. இருபத்தி ஐந்து வருடமாக ஜெயிலில் இருக்கும் ஒரு பெண், யாரிடமும் பேசாத, ரொம்ப அமைதியான ஒரு பெண் என்பதால் எனக்கு பெரிய சவாலாக இருந்தது.
அறுபது வயதுப் பெண் கேரக்டர் ரிஸ்க் என்று பயம் வரவில்லையா?
ஆரம்பத்தில் பயமாகத்தான் இருந்தது. ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்களா, இந்த வயதிலேயே இவ்வளவு முதிர்ச்சியான கேரக்டரில் நடிக்க வேண்டுமா என்று தயக்கமாக இருந்தது. ஆனால், இப்போது கிட்டத்தட்ட 150 எபிசோட் கடந்துவிட்டது. நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
வெளிநாட்டில் இருப்பவர்கள்கூட இப்போ ஆன்-லைனில் தமிழ் சீரியல்களை விரும்பி பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் 'கொடி முல்லை' தொடரை கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். என்னை அந்த இடத்திற்கு கொண்டு போன ஆடியன்சுக்கு என் நன்றி.
சொந்த ஸ்டுடியோ நிர்வாகம் எப்படி இருக்கிறது?
நான், என் கணவர் இரண்டு பேருமே சினிமாவில் இருப்பதால் சினிமா சம்பந்தப்பட்ட ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென்று நினைத்தோம். அப்படி வந்ததுதான் ஸ்டுடியோ வைக்கும் ஐடியா. அதில் படங்கள், சீரியல்கள் என சின்ன சின்ன விஷயங்கள் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.
எங்களுடைய ஸ்டுடியோவில், எங்களோட சொந்தத் தயாரிப்பில் தயாராகி சேனலில் வெளிவரும் தொடர்களை பார்க்கும்பொழுது சந்தோஷமாக இருக்கிறது. என் மகள் இனியா பெயரில் 'சவுண்ட் அன்ட் எடிட்டிங்' என்றும் நடத்தி வருகிறோம். அந்த டைட்டில் டிவியில் வரும்பொழுது ரொம்ப சந்தோஷமாகவும், ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது. இதன் மூலமாக நிறைய பேருக்கு வேலை கொடுக்கிறோம்ங்கிற திருப்தியும் இருக்கிறது.
இயக்குநராகும் எண்ணம் உண்டா?
அப்படி எதுவும் இல்லை. டைரக்ட் செய்வது என்பது ரொம்ப பெரிய விஷயம். அதற்கு நிறைய அறிவு, அனுபவம் வேண்டும். ரொம்ப பொறுமை வேண்டும். சினிமா சம்பந்தப்பட்ட எடிட்டிங், மியூசிக், ரெக்கார்டிங், என எல்லா விஷயங்களுக்குமான அறிவு இருந்தால்தான் இயக்கத்துக்கு வர முடியும்.
இப்போதைக்கு என்னுடைய வேலை நடிப்பது. அதில் முழுமையான கவனம் செலுத்தி நடித்தால் போதும் என்று நினைக்கிறேன். ஏற்கெனவே வீட்டில் ஒரு டைரக்டர் இருக்கிறார். அதுவே போதும்.
மென்மையான தேவயானியை பார்த்து விட்டோம். இனி வில்லியாகப் பார்க்கலாமா?
வில்லியாகவா, நானா..(சிரிக்கிறார்) இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. எதிர்காலத்தில் செய்யலாம், அது அந்தக் கதையைப் பொருத்தது. அப்படியே வில்லியாக நடித்தாலும், அதை ஈடுகட்டுவது போல ஒரு நல்லவளும் இருக்க வேண்டும். அந்தப் பாஸிட்டிவ் கேரக்டர் யார் என்கிற கேள்வியும் வருகிறதே..
சினிமாவில் அதிகம் பார்க்க முடியவில்லையே ஏன்?
சமீபத்தில் பெரிய திரையில் நான் எந்த படங்களிலும் நடிப்பதில்லை அதுதான் காரணம். ஆனால், தற்போது என் கணவர் இயக்கிக் கொண்டு இருக்கும் 'திருமதி தமிழ்' என்ற படத்தில் நான் இதுவரை செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
மற்றபடி பெரிய திரையில் நடிக்கும் ஒரு ஹீரோவுக்கு இணையாகத்தான் சின்னத்திரையில் ஹீரோயின்கள் வருகிறார்கள். அதனால் சின்னத்திரைதான் திருப்தியாக இருக்கிறது.
குடும்பம் குறித்து?
எனக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். பெரியவளின் பெயர் இனியா, சின்னவள் பெயர் ப்ரியங்கா. குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய லட்சியம். எதிர்காலத்தில் ஹீரோயினாக வர ஆசைப்பட்டாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
TMT
'கோலங்கள்' அபியாகவே தாய்க்குலங்களின் மனதில் தங்கிவிட்ட தேவயானி, இப்போது 'கொடி முல்லை'யாகப் படர ஆரம்பித்திருக்கிறார். ஆம்! ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 'கொடிமுல்லை' சீரியலில் இருபது வயது இளம்பெண்ணாகவும், அறுபது வயது அம்மாவாகவும் அசத்திக் கொண்டிருக்கும் தேவயானிதான் இன்று சீரியல் பார்வையாளர்களின் ஹாட் டாபிக்! எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்பதுபோல் அடுத்த ஷாட்டுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
'கொடிமுல்லை' பற்றிச் சொல்லுங்கள்?
'கொடிமுல்லை' எங்கள் சொந்த தயாரிப்பு. ஆர்.கே. விஷன் என்ற பெயரில் என் கணவர் ராஜகுமாரன்தான் இத்தொடரை தயாரிக்கிறார். 'கோலங்கள்' தொடரில் கோ-டைரக்டராக இருந்த செந்தில் குமார் இயக்குகிறார்.
'கொடிமுல்லை' பெயர்க்காரணம்?
கொடிமுல்லை என்பது ஒரு வித பூச்செடி. அது கொடிமாதிரி வளரும். தொடரின் தலைப்பிலேயே வானம் தாண்டி வளர்பவள் என்று ஒரு வாசகம் கொடுத்திருப்போம். ஒரு கொடி படர்வதற்கு நல்ல ஆதரவு இருந்தால், அது எவ்வளவு உயரம்கூட படர வாய்ப்பிருக்கிறது. அதுபோலத்தான் ஒரு பெண்ணும்.
குடும்பத்திலிருப்பவர்கள் நல்ல நண்பர்கள், அவளைச்சுற்றி இருப்பவர்கள் சப்போர்ட் இருந்தால் அவளால் வானம் வரைகூட வளர முடியும். இதுபோன்ற பாஸிடிவ்வான விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்றுதான் இந்தப் பெயர் வைத்தோம்"
இரட்டை வேடத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?
இருபத்தி நான்கு வயது கல்லூரிப் பெண் மலர்க் கொடியாகவும், அறுபது வயது அம்மா அன்னக்கொடியாகவும் வருவேன். ஒரு ரோல் ரொம்ப மாடர்னான கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்க்கிற பெண்.. இதை சுலபமாக நடித்துவிட்டேன். ஆனால், அம்மா கேரக்டர்தான் ரொம்பவும் சிரமமாக இருந்தது.
அந்த மேக்கப் போட்டுகொள்வதற்கே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது. இருபத்தி ஐந்து வருடமாக ஜெயிலில் இருக்கும் ஒரு பெண், யாரிடமும் பேசாத, ரொம்ப அமைதியான ஒரு பெண் என்பதால் எனக்கு பெரிய சவாலாக இருந்தது.
அறுபது வயதுப் பெண் கேரக்டர் ரிஸ்க் என்று பயம் வரவில்லையா?
ஆரம்பத்தில் பயமாகத்தான் இருந்தது. ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்களா, இந்த வயதிலேயே இவ்வளவு முதிர்ச்சியான கேரக்டரில் நடிக்க வேண்டுமா என்று தயக்கமாக இருந்தது. ஆனால், இப்போது கிட்டத்தட்ட 150 எபிசோட் கடந்துவிட்டது. நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
வெளிநாட்டில் இருப்பவர்கள்கூட இப்போ ஆன்-லைனில் தமிழ் சீரியல்களை விரும்பி பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் 'கொடி முல்லை' தொடரை கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். என்னை அந்த இடத்திற்கு கொண்டு போன ஆடியன்சுக்கு என் நன்றி.
சொந்த ஸ்டுடியோ நிர்வாகம் எப்படி இருக்கிறது?
நான், என் கணவர் இரண்டு பேருமே சினிமாவில் இருப்பதால் சினிமா சம்பந்தப்பட்ட ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென்று நினைத்தோம். அப்படி வந்ததுதான் ஸ்டுடியோ வைக்கும் ஐடியா. அதில் படங்கள், சீரியல்கள் என சின்ன சின்ன விஷயங்கள் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.
எங்களுடைய ஸ்டுடியோவில், எங்களோட சொந்தத் தயாரிப்பில் தயாராகி சேனலில் வெளிவரும் தொடர்களை பார்க்கும்பொழுது சந்தோஷமாக இருக்கிறது. என் மகள் இனியா பெயரில் 'சவுண்ட் அன்ட் எடிட்டிங்' என்றும் நடத்தி வருகிறோம். அந்த டைட்டில் டிவியில் வரும்பொழுது ரொம்ப சந்தோஷமாகவும், ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது. இதன் மூலமாக நிறைய பேருக்கு வேலை கொடுக்கிறோம்ங்கிற திருப்தியும் இருக்கிறது.
இயக்குநராகும் எண்ணம் உண்டா?
அப்படி எதுவும் இல்லை. டைரக்ட் செய்வது என்பது ரொம்ப பெரிய விஷயம். அதற்கு நிறைய அறிவு, அனுபவம் வேண்டும். ரொம்ப பொறுமை வேண்டும். சினிமா சம்பந்தப்பட்ட எடிட்டிங், மியூசிக், ரெக்கார்டிங், என எல்லா விஷயங்களுக்குமான அறிவு இருந்தால்தான் இயக்கத்துக்கு வர முடியும்.
இப்போதைக்கு என்னுடைய வேலை நடிப்பது. அதில் முழுமையான கவனம் செலுத்தி நடித்தால் போதும் என்று நினைக்கிறேன். ஏற்கெனவே வீட்டில் ஒரு டைரக்டர் இருக்கிறார். அதுவே போதும்.
மென்மையான தேவயானியை பார்த்து விட்டோம். இனி வில்லியாகப் பார்க்கலாமா?
வில்லியாகவா, நானா..(சிரிக்கிறார்) இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. எதிர்காலத்தில் செய்யலாம், அது அந்தக் கதையைப் பொருத்தது. அப்படியே வில்லியாக நடித்தாலும், அதை ஈடுகட்டுவது போல ஒரு நல்லவளும் இருக்க வேண்டும். அந்தப் பாஸிட்டிவ் கேரக்டர் யார் என்கிற கேள்வியும் வருகிறதே..
சினிமாவில் அதிகம் பார்க்க முடியவில்லையே ஏன்?
சமீபத்தில் பெரிய திரையில் நான் எந்த படங்களிலும் நடிப்பதில்லை அதுதான் காரணம். ஆனால், தற்போது என் கணவர் இயக்கிக் கொண்டு இருக்கும் 'திருமதி தமிழ்' என்ற படத்தில் நான் இதுவரை செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
மற்றபடி பெரிய திரையில் நடிக்கும் ஒரு ஹீரோவுக்கு இணையாகத்தான் சின்னத்திரையில் ஹீரோயின்கள் வருகிறார்கள். அதனால் சின்னத்திரைதான் திருப்தியாக இருக்கிறது.
குடும்பம் குறித்து?
எனக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். பெரியவளின் பெயர் இனியா, சின்னவள் பெயர் ப்ரியங்கா. குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய லட்சியம். எதிர்காலத்தில் ஹீரோயினாக வர ஆசைப்பட்டாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
TMT
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இயக்குநராகும் எண்ணம் இல்லை! - 'கோலங்கள்' அபி - தேவயானி
ஆத்தாடி நீங்க டைரடக்கரு பண்ணி யார் பார்க்குறது?
கோலங்கள் மூலமாக எல்லாரையும் ரொம்ப நாள் அழ வச்ச பெருமை உங்களுடையதுதான் அம்மணி.
கோலங்கள் மூலமாக எல்லாரையும் ரொம்ப நாள் அழ வச்ச பெருமை உங்களுடையதுதான் அம்மணி.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இயக்குநராகும் மனீஷா!
» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை
» தேவயானி கையில் சின்னத்திரை
» வணக்கம் டீச்சர்! - தேவயானி மிஸ்!
» ரெயில்வேயை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: சென்னையில், ரெயில்வே வாரிய தலைவர் பேச்சு
» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை
» தேவயானி கையில் சின்னத்திரை
» வணக்கம் டீச்சர்! - தேவயானி மிஸ்!
» ரெயில்வேயை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: சென்னையில், ரெயில்வே வாரிய தலைவர் பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|