ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தை கொன்று விடு

Go down

கோபத்தை கொன்று விடு Empty கோபத்தை கொன்று விடு

Post by முஹைதீன் Wed Oct 05, 2011 6:58 pm

கோபத்தை கொன்று விடு

மனிதனுக்கு தாபங்கள் இருக்கலாம். கோபங்கள் இருப்பது சரியா... இது பலரது கேள்வி. காரணம்- அதீத கோபமே பல சிக்கல்களை உற்பத்தி செய்கிறது. சிரிப்பு, அழுகையை போல் கோபமும் ஒரு வித உணர்ச்சி... கோபப் பட வேண்டிய இடத்தில் நாம் கோபப் படாமல் போனால், நாம் கோழையாக அல்லது முட்டாளாக அல்லது வாழவே தகுதி அற்றவனாக அல்லவா அடையாளம் காட்டப்படுவோம்- அதனால் தாபம் இருப்பதை
போல் கோபமும் அவசியமே என்கின்றனர்.

அது சரியாகவும் கூட இருக்கலாம்... ஏன் எனில் கோபம் குறித்து, அங்கங்கே நல்ல பொன்மொழிகளும் உள்ளன. "கோபம் இருக்கிற இடத்தில் தான் குணம் இருக்கும்" என்பதும் சான்றோர் வாக்கு.

கோபத்தில் பல வகைகள் உள்ளன. பொய் கோபம் ,நிஜக் கோபம்... நியாயமான கோபம், நியாயமற்ற கோபம்... தேவையான கோபம், தேவையற்ற கோபம்... என்று கோபங்கள் பல வகையாக விரிகிறது. கோபக்காரனாக இருப்பதிலும் சில நன்மைகள் உள்ளன. யாரும் அவரிடத்தில் கடன் கேட்க மாட்டார்கள். அவரை பார்த்து பலரும் அச்சப் படுவார்கள். யாரும் அவரை ஏமாற்ற நினைக்க மாட்டார்கள். நிச்சயம் பிறரால் ஒரு வட்டத்துக்குள்ளேயே வைக்கப் படுவார்.

ஆனால், அதே நேரம் சில பாதகங்களும் உள்ளது. மனைவி கூட கோபக்காரனை காதலிக்க யோசிப்பாள். யாரும் அவருக்கும் உதவ மாட்டார்கள். "கொடுத்து கெட்ட பேரு வாங்கறதுக்கு, கொடுக்காம்ம கெட்ட பேரை வாங்கிக்கலாம் " என்று ஒதுங்கி கொள்வார்கள். மரியாதை சில நேரம், மண்ணை கவ்வும்.

கோபங்களிலேயே சிறந்த கோபம் என்று ஒன்று உள்ளது. ஆச்சர்யமாக உள்ளதா... அது தான் நியாயமான கோபம்... கோபப்பட வேண்டிய இடத்தில் பட வேண்டிய கோபம். இந்த கோபத்திற்கு தனி மரியாதையும் உண்டு. கோபமே படாத ஒருவன், கோபமே படத் தெரியாத ஒருவன், கோபப்படுகிறான் என்றால் அதில் ஏதோ ஒரு நியாயம் இருக்கிறது என்று அந்த கோபம் பிறரால் கவனிக்கப்படுகிறது. பிறரால் கவனிக்கப் படும் கோபம் சரித்திரப் புகழை பெறும்.

சமுக அவலங்களை கண்டு பெரியார் அடைந்த கோபம், பல கதவுகள் திறக்க காரணமானது இல்லையா. நம் கோபம், நமக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் நல்லது செய்ய வேண்டும். எந் நேரமும் கோபப்படும் ஒருவனின் கோபம், எவராலும் ஏற்று கொள்ளப் படுவதே இல்லை. "இவனுக்கு வேற வேலையே இல்ல" என்கிற விமர்சனம் தான் மிச்சமாகும். கவனிக்கவே படாத கோபத்தால், யாருக்கென்ன நன்மை விளையும்.

கோபம் எதன் அடிப்படையில் வருகிறது... எதன் அடிப்படையில் வரலாம்... எதிர்பார்த்த ஒன்று- கிடைக்காமல் போகும் போது, அந்த ஏமாற்றம் கோபமாய் மலர்கிறது. தான் சொல்வதை, பிறர் கேட்காமல் போகும் போதும்- கோபம் மலர்கிறது. இன்னும், இன்னும் நிறைய காரணங்கள் இருக்கிறது- கோபம் வர.

இரண்டு பேர் இருக்கிறார்கள். இரண்டு பேருக்குமே ஒரே விதமான சம்பவம் அல்லது ஒரே விதமான ஏமாற்றம், தோல்வி ஏற்படுகிறது. ஒருவர் கோபப்படுகிறார். மற்றவர் நிகழ்வுகளை கோபப் படாமல் ஆராய்கிறார். தன் தோல்விக்கு, பிறர் காரணமாகும் போது, வரும் கோபம் நியாயமானது. நம் தோல்விக்கு நாமே காரணமாகி, அதற்கும் அதே கோபப்பட்டால், இந்த கோபத்தை என்னவென்று சொல்வது.

வயது வித்தியாசம் பாராமல், எல்லோராலும் வெறுக்கப்படுவது- பிறர் காட்டும் கோபத்தையே. அதே போல் எல்லோராலும் விரும்பப்படுவது- தாம் கோபப்படாமல் இருக்க வேண்டும் என்பதே. ஆனால் அவ்வாறு இருக்க முடியாது போவதே சோகம். கோபத்தின் ஒரு பகுதி, பிறராலேயே ஏற்படுத்தப் படுகின்றது அல்லது தூண்டப்படுகிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.

இந்த கோப விஷயத்தில், இரண்டு முகங்கள் உள்ளன. "எப்படிங்க கோபப்படாம்ம இருக்கீங்க. ரெம்ப பொறுமை சார்- நீங்க" என்று சிலர் கேட்பார்கள். அதே வேறு சிலர், "ஏங்க இப்படி எரிஞ்சு, எரிஞ்சு விழுறிங்க. உங்களுக்கு பொறுமையாவே பேச தெரியாதா" என்றும் கேட்பார்கள். அப்படியெனில் எது "நாம்". இரண்டுமே நாம் தான். நமது இரண்டு குணாதிசயத்தையுமே- நம்மை சுற்றி உள்ளவர்களே உருவாக்குகிறார்கள் அல்லது தீர்மானிக்கிறார்கள்.

இரண்டு பேர்- ஒரே கேள்வியை கேட்கிறார்கள். ஒருவருக்கு கோபம் படாமல் பதில் சொல்கிறோம். மற்றவர்களுக்கு கோபமாய் சொல்கிறோம். ஏன் இந்த பாகுபாடு. கேள்வி கேட்கும் முறை. பதிலை உள்வாங்கும் முறை... அவ்வளவே. எப்படி நமக்கும், நம் கதையில் வரும் கதாபாத்திரத்திற்கும் சற்றும் தொடர்பு இல்லையோ- அப்படித்தான் சில நேரம்-
நமக்கும், நமது கோபத்திற்கும் சம்பந்தமில்லாத நிலையை நாம் அடைகிறோம்... அவ்வளவே.

"கோபத்தை கட்டுப்படுத்துங்க" என்று நண்பனாக சொன்னால்- யாரும், ஒரு போதும் ஏற்று கொள்வதில்லை. அதே நேரம் மருத்துவர். "டென்ஷனை குறைங்க" என்றால் கேட்டு விடுகிறோம். கோபம், ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையையும் திசை திருப்பக் கூடிய வல்லமையை பெற்றுள்ளது. ஆனால் அது பல நேரம், மோசமான திசைக்கு தள்ளக் கூடிய திசை காட்டியாகவே உள்ளது என்பதே வருத்தத்திற்குரிய செய்தி.

கோபம், நிச்சயம் குடும்ப வாழ்க்கைக்கு எதிரி. கோபக்காரர்களின் துணைகள்," கோபத்தின் காரணமாகவே, விவாகரத்து கோருவது" யதார்த்தமான உண்மைதானே.

"கோபப்பட்டு- இந்த உலகத்துல் சாதிக்கப் போறது ஒண்ணுமே இல்ல" என்று பாமரர்கள் மிக எளிமையாக, ஆணித்தரமாக சொல்ல கேட்டு இருக்கிறோம். இன்று பல நோய்களை பெற்றெடுப்பது கோபங்களே... அதனால் கோபங்களை கட்டுபடுத்த- மனிதர்கள் தேவையற்று கோபமும் பட வேண்டாம். பிறரை கோபப்படுத்தவும் வேண்டாம்

http://tamiluthayam.blogspot.com/2010/05/blog-post.எச்‌டி‌எம்‌எல்

உண்மையான வீரன் கோப நேரத்தில் தம்மை கட்டுப்படுத்தி கொள்பவனே
(நபிமொழி)
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum