ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகரிஷியை நேசித்த பிராணிகள்

Go down

மகரிஷியை நேசித்த பிராணிகள் Empty மகரிஷியை நேசித்த பிராணிகள்

Post by சிவா Mon Oct 03, 2011 7:49 pm

ஆசிரமத்துச் செல்வங்கள் மகான் ரமண மகரிஷியை பிராணிகளும் நேசித்தன. (அவரது காலத்திலிருந்து)

ரமண மகரிஷி தற்போதுள்ள ஆசிரமத்துக்கு வந்தபின் மகரிஷிகளின் நாய், குரங்கு முதலாகிய நண்பர்களின் கூட்டம் மிகவும் குறைந்து விட்டது. மலைமேல் இருந்தபோது நாய்களும் குரங்குகளும் அவருடன் அளவளாவிப் பழகி வந்தன.

சின்னக் கருப்பன்

இதில் சின்னக் கருப்பன் என்னும் நாயைப் பற்றி மகரிஷிகள் பின்வருமாறு கூறுகிறார்.

''சின்னக் கருப்பன் மிக மேன்மையான குணங்களை உடையவன். விருபாக்ஷ குகையில் இருக்குபோது, ஏதோ ஒரு கருப்பு உருவம் தூரத்தில் போவதை அடிக்கடி பார்த்தோம். சில சமயங்களில் புதருக்கு மேல் தலை மட்டும் நீட்டிக்கொண்டிருப்பது தெரியும். ஆனால் பக்கத்தில் வருவதே இல்லை. சின்னக் கருப்பனின் வைராக்கியம் தீவிரமிக்கது ஒருவரிடமும் அவன் நெருங்குவதில்லை. ஆள் உள்ள இடம் அவனுக்கு ஆகாதுபோலத் தோன்றியது. நாங்களும் அவனுடைய சுயேச்சையையும் வைரக்கியத்தையும் மதித்து, அந்த இடத்தில் உணவை வைத்து விட்டு தூரப் போய்விடுவோம். இப்படி நடந்து கொண்டிருக்கையில் ஒருநாள் எல்லோரும் மலைமேல் ஏறிப் போனபோது, கருப்பன் பாதைமேல் திடீரென்று பாய்ந்து சந்தோஷத்துடன் வாலைக் குழைத்துக்கொண்டு என் மேல் விழுந்து விளையாட ஆரம்பித்தான். மற்றவர்களையெல்லாம் விட்டு என்னை மட்டும் கருப்பன் குறிப்பாகக் கண்டு கொண்டதை யாவரும் வியந்தனர்.

''இதற்குப் பின் கருப்பன் ஓர் ஆசிரமவாசி ஆகிவிட்டான்; அத்தியந்த நண்பன்; உபகாரி; மேன்மையான குணம். இதற்கு முன்னிருந்த கூச்சமெல்லாம் அபார அன்பாக மாறியது. எல்லோரையும் சகோதரராகப் பாவித்த, வருவோர்போவோருடன் அளவளாவிப் பழகி மடிமீது ஏறித் தாவிக் குலாவுவான். எல்லோரும் அனேகமாக அவனிடம் பிரியமாகவே இருந்தனர். ஆனால் சிலர் மட்டும் கருப்பனைக் கண்டால் சற்று விலகிச் சென்றனர். அவர்களையும் அவன் எளிதில் விட்டுவிடுவதில்லை; எந்த வெறுப்பையும் முடிவாக எடுத்துக் கொள்வதில்லை; ஆனால் 'போ' என்று சொல்லிவிட்டால் வேறு பேச்சின்றிச் சாதுவாக வெளியேறிவிடுவான்.

''ஒரு நாள் குகைக்கு அருகிலிருந்த வில்வ மரத்தடியில் ஒரு வைதிகப் பிராம்மணர் ஜபம் செய்தகொண்டிருந்தார். சின்னக் கருப்பன் அவருக்குவெகு சமீபத்தில் சென்றுவிட்டான். நாய் என்றால் 'தீட்டு' என்பது வைதிகரின் நம்பிக்கை. நாயைக் கண்டால்கூடச் சற்று விலகித் தூரத்தில் போவது வழக்கம். ஆனால் கருப்பன் அநுஷ்டிப்பதும் அவனுக்குத் தெரிந்ததும் இயற்கை நியதியான சமத்துவந்தான். ஆகவே துரத்தினால்கூடக் கருப்பன் அந்த இடத்துக்கே திரும்பிச்சென்றுகொண்டிருந்தான். இதைக் கவனித்த ஆசிரமவாசி ஒருவர், பிராம்மணரின் சங்கடத்தைத் தவிர்க்கும் நிமித்தம் அதை மிரட்டி மெதுவாக ஓர் அடி கொடுத்தார். கருப்பன் ஊளையிட்டுக் கொண்டு ஓட்டமெடுத்தான். அதன் பிறகு கருப்பனைக் காணவே இல்லை. ஏதோ ஒரு தடவையாக இருந்தால்கூட, தன்னை அவமதித்து அடித்த இடத்தைக் கண்ணெடுத்தும் பார்க்கமாட்டான் கருப்பன்.''

மற்றோர் சிறு நாயும் இவ்வாறே மிகுந்த ரோஷத்துடன் நடந்துக்கொண்டது. ஆசிரமவாசி ஒருவர் வைதுவிட்டார் என்பதற்காக நேரே சங்க தீர்த்தத்துக்கு ஓடிப் போய் விழுந்த உயிரை மாய்த்துக்கொண்டது.

மற்றோர் ஆச்சர்யமான நாய் கமலா. ''இதோ பார், இவர் புதியவர். இவரைக் கூட்டிக்கொண்டு போய் எல்லாவற்றையும் காட்டி விட்டு வா'' என்பார் மகரிஷி. கமலா உடனே புறப்படுவாள்; மலையைச் சுற்றி எல்லாவற்றையும் புதிதாக வந்தவர்க்குக் காட்டிவிட்டுத்தான் திரும்புவாள்.

ஜாக் என்பவன் வேறு வகை. அவன் பெரிய தபஸ்வி. குறிப்பிட்ட வேளைகளில், அதுவும் அநேகமாகச் சுவாமி பிரசாதங்களைத்தான் அவன் புசிப்பவன். மிகுந்த நேரங்களில் மகரிஷிகளின் அருகில் நிச்சலமாக வீற்றிருப்பான்.

வானர நண்பர்கள்

மலையின்மேல் குரங்குகளுக்குக் குறைவில்லை. மகரிஷிகளுக்கு இவைகளினிடத்தும் மிகுந்த பிரியம்.

குரங்குகளுக்குள்ளே ஒரு கண்டிப்பான திட்டம் உண்டு; மனிதர் தம்மைத் தொடவிடும் வானரங்களைத் தங்களுடன் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் இந்த விதிக்கு மகரிஷிகள் மட்டும் விலக்கு! இதோடு நில்லாமல் மகரிஷிகளுக்கு மற்றோர் உயர்ந்த கெளரவமும் கிடைத்தது. காயமடைந்து கிடந்த நொண்டிக் குரங்கு ஒன்றை மகரிஷிகள் எடுத்து வளர்த்துக் காப்பற்றினார். தங்களுக்குள்ளே பலம் மிகுந்த ஒருவனையே குரங்குகள் ராஜாவாகத் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனாலும் மகரிஷிகளின் அன்பைப் பெற்ற அந்த நொண்டிக் குரங்கையே மற்ற வானரங்கள் ராஜாவாகக் கொண்டன.

இதைத் தவிர வானர யுத்தங்களைத் தடுத்து மத்தியஸ்தம் செய்துவைக்கும் உரிமையும் அவருக்கு உண்டு. காட்டுப்புறங்கள் வெவ்வேறு கூட்டங்களுக்கெனப் பிரித்துவைக்கப்பட்டிருக்கும். ஒரு கூட்டத்தின் எல்லையில் மற்றோர் வானரக்கூட்டம் சென்றால் சண்டை ஏற்பட்டுவிடும். இதைத் தூதர்கள் மூலம் சமரசமாகத் தீர்த்துக்கொள்வதும் உண்டு. சமரசம் ஏற்படாவிட்டால் வெகு கோரமான வாரையுத்தந்தான். மகரிஷிகள் மலைமீதிருந்த வரைக்கும் இந்த யுத்தங்கள் வெகு அபூர்வமாக இருந்தன; தகராறு ஏற்பட்டால் அவர் இரு கட்சியினரையும் அழைத்துச் சமாதானம் செய்து அனுப்பிவிடுவார்.

இந்த வானர நண்பர்களைப் பற்றி மகரிஷிகள் எத்தனையோ கதைகள் சொல்வது உண்டு. ஒரு குரங்குக்கூட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெரிய குரங்குகளை ராஜா பிரஷ்டம் செய்து தள்ளி வைத்துவிட்டானாம். இதனால் வானரங்களுக்குள் மிகுந்த கிளர்ச்சி ஏற்பட்ட பிரஜைகள் யாவரும் பயந்து பணிந்துவிட்டனர். இரண்டு வாரத் தபசின் பலன் அது என்று கூறுவார் மகரிஷி.

சிறு சேஷ்டை செய்த குரங்குகள் கூட உடனே அதற்காக வருந்தி மகரிஷிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும். பொதுவாக எல்லாக் குரங்குகளும் மகரிஷிகளிடம் மிகவும் அன்பாகவும் நன்றியறிவுடனுந்தான் நடந்து வந்தன.

ஒருநாள் கடும் வெயிலில் மகரிஷிகள் சில பக்தர்களுடன் வெகுதூரம் நடந்து விட்டுத் திரும்பி வந்துக்கொண்டிருந்தார். வெயில் கொடுமையுடன் பசியும் தாகமும் அதிகரித்தன. பக்கத்தில் எங்கும் தண்ணீரே இல்லை.

அந்த வழியே ஒரு குரங்குக் கூட்டம் போய்க் கொண்டிருந்தது. அவை மகரிஷிகளையும் பக்தர்களையும் பார்த்ததும் அவர்கள் நிலையை எப்படியோ ஊகித்து உணர்ந்து கொண்டன போலும்! உடனே பக்கத்தில் உள்ள ஒரு நாவல் மரத்தின்மீது தாவி கிளைகளைக் குலுக்கிப் போதுமான நாவற் பழங்களை உதிரித்துவிட்டுப் பேசாமல் இறங்கிப் போய்விட்டன. அந்தக் கூட்டத்தில் ஒரு குரங்குகூட அந்தப் பழங்களைத் தின்னவில்லை!

அபாயகரமான ஜந்துக்களிடமும் மகரிஷிகள் சினேகமாகவே இருந்திருக்கிறார். மகரிஷிகளின் குகைகளில் எத்தனையோ பாம்புகள் வசித்துவந்தன.

''அவைகளின் வீட்டுக்கல்லவா நாம் வந்திருக்கிறோம்? அவைகளைத் தொந்தரவு செய்யவோ துன்புறுத்தவோ நமக்குச் சிறிதும் உரிமை இல்லை. அவைகள் நம்மை ஒன்றும் செய்யமாட்டா'' என்று மகரிஷிகள் அடிக்கடி கூறுவார்.

ஒரு நாள் மகரிஷிகள் மலைமீது ஒரு காட்டுப் பாதையிற் சென்றுகொண்டிருந்தார். ஒரு குளவிக் கூட்டை இடதுகால் மிதித்துவிட்டது. உடனே குளவிகள் துரத்திக்கொண்டு வந்து அதே காலில் கொட்டின.

''வேணும், வேணும். கூட்டைக் கலைத்தது இந்தக் கால்தானே'' என்று கூறிக்குளவியின் ஆத்திரம் தீரக் கொட்டித் திரும்பும் வரை அசையாமல் அங்கேயே அமர்ந்திருந்தார்.


மகரிஷியை நேசித்த பிராணிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum