Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி
+2
balakarthik
முஹைதீன்
6 posters
Page 1 of 1
வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி
தமிழ்நாட்டில் 40 தபால் நிலையங்களில் அறிமுகம்
வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி
தமிழ்நாடு தலைமை தபால் துறை அதிகாரி சாந்தி நாயர் தகவல்
சென்னை, அக்.௨
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தபால் நிலையம் வழியாக பணம் பெறும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 40 தபால் நிலையங்களில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்று தமிழ்நாடு வட்ட தலைமை தபால் துறைத் தலைவர் சாந்தி நாயர் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை தபால் நிலையம் மூலம் கொடுப்பதற்காக சர்வதேச பணப் பரிவர்த்தனை சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக அமெரிக்காவில் உள்ள மணி கிராம் பேமண்ட் சிஸ்ட்ம் என்ற நிறுவனத்துடன் இந்திய தபால் துறை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மணி கிராம் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தை டெல்லியில் மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மந்திரி கபில்சிபல் 29ந் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த முன்னோடித் திட்டம், தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 40 தபால் நிலையங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம், படிப்படியாக அனைத்து தபால் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணத்தைப் பெறும் முறை...
ஒருவர் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்ப வேண்டுமானால், வெளிநாடுகளில் எந்த நாட்டில் இருக்கிறாரோ அந்த நாட்டு பணத்தையோ அல்லது அமெரிக்க டாலரையோ இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினர் முகவரிக்கு அனுப்புவார். அப்போது அவரிடம் 8 இலக்க எண் ஒன்று தரப்படும். அவர் அந்த எண்ணை, இந்தியாவில் பணம் பெற இருக்கும் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். பணம் பெறுபவர் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்கு சென்று பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அந்த நேரம் தபால் நிலையத்தில் ஒரு படிவம் கொடுத்து நிரப்பச் சொல்வார்கள். அதை நிரப்பிக் கொடுத்ததும், ஒரு ரசீது தருவார்கள். அதில் கையெழுத்துப் போட்டுவிட்டு பணத்தை வாங்கிச் செல்லலாம்.
வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தனது குடும்ப பராமரிப்பு அல்லது வெளிநாட்டு சுற்றுலா தேவைக்காக மட்டும் இந்த திட்டத்தின் மூலம் பணத்தை அனுப்ப முடியும். இந்தியாவில் சொத்துகளை வாங்குவதற்கோ, முதலீடு செய்வதற்காகவோ, நன்கொடை கொடுப்பதற்காகவோ இந்த திட்டத்தின் மூலம் பணத்தை அனுப்ப முடியாது.
190 நாடுகளில் இருந்து அனுப்பலாம்
வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு அதிகபட்சமாக 2500 டாலர் (ரூ.1,22,500) வரை அனுப்பலாம். மாதத்திற்கு ஒரு தடவை வீதம் ஓராண்டில் 12 தடவைகள் மட்டுமே பணம் அனுப்ப முடியும். இந்திய ரூபாய் கணக்கின்படி, ரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொகை காசோலையாகத்தான் கொடுக்கப்படும்.
மொத்தம் 190 வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பலாம். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இந்தியாவிற்கு பணம் அனுப்பும்போது ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக பெறப்படும். உதாரணத்திற்கு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஆயிரம் டாலர் (ரூ.49,000) அனுப்பினால், அதில் 13 டாலர் கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதமுள்ள 987 டாலர் மட்டும் தரப்படும்.
சென்னை மண்டலத்தில் 10 தபால் நிலையங்களிலும், திருச்சி மண்டலத்தில் 14 தபால் நிலையங்களிலும், மதுரை மண்டலத்தில் 10 தபால் நிலையங்களிலும், கோவை மண்டலத்தில் 6 தபால் நிலையங்களிலும் ஆக மொத்தம் 40 தபால் நிலையங்களில் இந்தப் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை மண்டலத்தில், சென்னை அண்ணா சாலை, புதுச்சேரி, வேலூர், தாம்பரம், தி.நகர், திருவண்ணாமலை, பரங்கிமலை, விழுப்புரம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஜெனரல் தபால் நிலையத்திலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
திருச்சி மண்டலத்தில், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டினம், விருத்தாசலம், சீர்காழி, மன்னார்குடி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், மதுரை மண்டலத்தில், காரைக்குடி, நாகர்கோவில், மதுரை, தக்கலை, ராமநாதபுரம், பரமக்குடி, பாளையங்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை, கோவில்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், கோவை மண்டலத்தில், உதகமண்டலம், கோவை, திருப்பத்தூர், சேலம், குடியாத்தம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், கோவை ஜெனரல் தபால் நிலையத்திலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி; தினத்தந்தி 02 -10 -2011
வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி
தமிழ்நாடு தலைமை தபால் துறை அதிகாரி சாந்தி நாயர் தகவல்
சென்னை, அக்.௨
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தபால் நிலையம் வழியாக பணம் பெறும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 40 தபால் நிலையங்களில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்று தமிழ்நாடு வட்ட தலைமை தபால் துறைத் தலைவர் சாந்தி நாயர் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை தபால் நிலையம் மூலம் கொடுப்பதற்காக சர்வதேச பணப் பரிவர்த்தனை சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக அமெரிக்காவில் உள்ள மணி கிராம் பேமண்ட் சிஸ்ட்ம் என்ற நிறுவனத்துடன் இந்திய தபால் துறை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மணி கிராம் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தை டெல்லியில் மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மந்திரி கபில்சிபல் 29ந் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த முன்னோடித் திட்டம், தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 40 தபால் நிலையங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம், படிப்படியாக அனைத்து தபால் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணத்தைப் பெறும் முறை...
ஒருவர் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்ப வேண்டுமானால், வெளிநாடுகளில் எந்த நாட்டில் இருக்கிறாரோ அந்த நாட்டு பணத்தையோ அல்லது அமெரிக்க டாலரையோ இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினர் முகவரிக்கு அனுப்புவார். அப்போது அவரிடம் 8 இலக்க எண் ஒன்று தரப்படும். அவர் அந்த எண்ணை, இந்தியாவில் பணம் பெற இருக்கும் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். பணம் பெறுபவர் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்கு சென்று பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அந்த நேரம் தபால் நிலையத்தில் ஒரு படிவம் கொடுத்து நிரப்பச் சொல்வார்கள். அதை நிரப்பிக் கொடுத்ததும், ஒரு ரசீது தருவார்கள். அதில் கையெழுத்துப் போட்டுவிட்டு பணத்தை வாங்கிச் செல்லலாம்.
வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தனது குடும்ப பராமரிப்பு அல்லது வெளிநாட்டு சுற்றுலா தேவைக்காக மட்டும் இந்த திட்டத்தின் மூலம் பணத்தை அனுப்ப முடியும். இந்தியாவில் சொத்துகளை வாங்குவதற்கோ, முதலீடு செய்வதற்காகவோ, நன்கொடை கொடுப்பதற்காகவோ இந்த திட்டத்தின் மூலம் பணத்தை அனுப்ப முடியாது.
190 நாடுகளில் இருந்து அனுப்பலாம்
வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு அதிகபட்சமாக 2500 டாலர் (ரூ.1,22,500) வரை அனுப்பலாம். மாதத்திற்கு ஒரு தடவை வீதம் ஓராண்டில் 12 தடவைகள் மட்டுமே பணம் அனுப்ப முடியும். இந்திய ரூபாய் கணக்கின்படி, ரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொகை காசோலையாகத்தான் கொடுக்கப்படும்.
மொத்தம் 190 வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பலாம். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இந்தியாவிற்கு பணம் அனுப்பும்போது ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக பெறப்படும். உதாரணத்திற்கு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஆயிரம் டாலர் (ரூ.49,000) அனுப்பினால், அதில் 13 டாலர் கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதமுள்ள 987 டாலர் மட்டும் தரப்படும்.
சென்னை மண்டலத்தில் 10 தபால் நிலையங்களிலும், திருச்சி மண்டலத்தில் 14 தபால் நிலையங்களிலும், மதுரை மண்டலத்தில் 10 தபால் நிலையங்களிலும், கோவை மண்டலத்தில் 6 தபால் நிலையங்களிலும் ஆக மொத்தம் 40 தபால் நிலையங்களில் இந்தப் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை மண்டலத்தில், சென்னை அண்ணா சாலை, புதுச்சேரி, வேலூர், தாம்பரம், தி.நகர், திருவண்ணாமலை, பரங்கிமலை, விழுப்புரம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஜெனரல் தபால் நிலையத்திலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
திருச்சி மண்டலத்தில், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டினம், விருத்தாசலம், சீர்காழி, மன்னார்குடி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், மதுரை மண்டலத்தில், காரைக்குடி, நாகர்கோவில், மதுரை, தக்கலை, ராமநாதபுரம், பரமக்குடி, பாளையங்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை, கோவில்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், கோவை மண்டலத்தில், உதகமண்டலம், கோவை, திருப்பத்தூர், சேலம், குடியாத்தம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், கோவை ஜெனரல் தபால் நிலையத்திலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி; தினத்தந்தி 02 -10 -2011
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி
பாஸ் இன்னைக்கு பாட்டி தொட்டி எல்லாம் எஸ்பிஐ அல்லது ஐசிஐசிஐ வங்கிகள் இருக்கிறது மேலும் அனைத்து இடங்களிலும் தனியார் வங்கிகளும் அரசிடமை ஆக்கப்பட்ட வங்கிகளும் இருக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்ப ஆயிரம் வழி இருக்கு எளிமையா உடனே கிடைக்கும்படி அனைத்து வங்கிகளும் சேவை புரிகிறது இதுல யாரு தபால் மூலமாக பணம் அனுப்புவா இது ராணுவத்திர்க்கு வேணும்னா உபயோகமா இருக்கலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி
கார்த்திக் சொன்னது போல இன்று பல வழிகள் உள்ளன பணம் அனுப்ப!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி
நடக்கட்டும் நடக்கட்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி
நேர்மையாக பணம் அனுப்ப பாங்க் வழியாக அனுப்பலாம் அல்லது வெஸ்டர்ன் யூனியன் வழியாக அனுப்பலாம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து பார்சல்களில் அனுப்பி வைக்கும் போதைப்பொருட்களை திருடி விற்ற தபால் ஊழியர்கள் 4 பேர் கைது
» 800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
» கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று கடல் வழியாக முற்றுகை
» காந்தியைப் போற்றும் சேலம் அஸ்தம்பட்டி தபால் நிலையம்!
» ரூ. ஆறு லட்சம் கோடி இந்திய பணம் வெளிநாடுகளில் முடக்கம்
» 800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
» கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று கடல் வழியாக முற்றுகை
» காந்தியைப் போற்றும் சேலம் அஸ்தம்பட்டி தபால் நிலையம்!
» ரூ. ஆறு லட்சம் கோடி இந்திய பணம் வெளிநாடுகளில் முடக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|