புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியின் விளையாட்டு Poll_c10விதியின் விளையாட்டு Poll_m10விதியின் விளையாட்டு Poll_c10 
32 Posts - 50%
heezulia
விதியின் விளையாட்டு Poll_c10விதியின் விளையாட்டு Poll_m10விதியின் விளையாட்டு Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
விதியின் விளையாட்டு Poll_c10விதியின் விளையாட்டு Poll_m10விதியின் விளையாட்டு Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
விதியின் விளையாட்டு Poll_c10விதியின் விளையாட்டு Poll_m10விதியின் விளையாட்டு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியின் விளையாட்டு Poll_c10விதியின் விளையாட்டு Poll_m10விதியின் விளையாட்டு Poll_c10 
32 Posts - 50%
heezulia
விதியின் விளையாட்டு Poll_c10விதியின் விளையாட்டு Poll_m10விதியின் விளையாட்டு Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
விதியின் விளையாட்டு Poll_c10விதியின் விளையாட்டு Poll_m10விதியின் விளையாட்டு Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
விதியின் விளையாட்டு Poll_c10விதியின் விளையாட்டு Poll_m10விதியின் விளையாட்டு Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதியின் விளையாட்டு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 8:51 pm

அன்றும் அப்படித்தான்..... ஏதோ சிந்தனையில் திளைத்திருந்த என்னை எதிரில் வந்துக் கொண்டிருந்தவர்களால் கலைந்தது. என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை.. ஆனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை.

அவர் மாறவே இல்லை... நான் என்று அவரை கடைசியாகப் பார்த்தேனோ அப்படியே இன்னும் இருக்கிறார். ஆனால் அவர் பக்கத்தில் இருந்தவரைப் பார்த்ததும் என் அதிர்ச்சியை விவரிக்க வார்த்தைகளே தென்படவில்லை.

"உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் ஒன்றைக் கேட்க ஆசைப்படுகிறேன். நீங்கள் உதயாதானே*" அவர்தான் கேட்டார்.

நானும் "ஆமாம்" என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தேன்.

"என்னை நினைவிருக்கிறதா?" அவர் மேலும் தொடர்ந்தார்.

இப்பிறப்பில் மட்டுமல்ல ஏழ்பிறவியிலும்கூட உங்களை என்னால் மறக்க முடியுமா? என எனது உள் மனம் கூறினாலும் என் உதடுகள் மட்டும் "ம்... நினைவிருக்கிகே நீங்க ரவிதானே" என பதிலளித்தன.

"ஆமாம்... நான் ரவியேதான்... ஓ ஐ எம் சாரி..... இவரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த மறந்துவிட்டேன். மீட் மை ஒய்ஃப்.. கீதா... "

நானும் பதிலுக்கு "ஹலோ" என்றேன்.

"கீதா இவங்க பேரு உதயா... எனக்கு முன்பு நன்கு அறிமுகமானவங்க" என்றார் ரவி.

வணக்கங்களை பறிமாறிக் கொண்டுவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

வீட்டை நோக்கி என் கால்கள் நடைபோட ஆரம்பித்தன. வீட்டை அடைந்த நான் வழக்கமான வீட்டு வேளைகளில் ஈடுபடத் தொடங்கினேன். ஆனால் ரவியின் நினைவுகள் என்னை அலைக்கழித்தன.

அந்நினைவுகளை மறக்க முடியாத நான் அவற்றை மெல்ல அசைபோட்டுப் பார்க்கத் தொடங்கினேன்.

ரவி..... அவர் எனக்கு அறிமுகமான விதமே தனி அலாதியானது.

"வணக்கம்... தயவுசெய்து குமாரி உதயாவுடன் பேச முடியுமா ?..."

தொலைபேசியை எடுத்த எனக்கு... வியப்பும் அதே சமயத்தில் நடுக்கமும் ஒரு சேர ஏற்படவே செய்தது. ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு... "ஆமாம் நான்தான் பேசுகிறேன்... நீங்க யாரென்று தெரிந்துகொள்ளலாமா?" என்றேன் ஒருவித அசட்டு தைரியத்துடன்.

"ம்.. எனது பெயர் ரவி" மறுமுனையிலிருந்து சட்டென்று பதில் வந்தது.

அப்போதுதான் அகல்யா கூறியது என் நினைவிற்கு வந்தது. "உதயா... ரவின்னு எனக்க ஒரு நண்பர் இருக்கார். ரொம்ப நல்லவர்... அவரை உனக்கு அறிமுகம் செய்து வைக்கலாம் என்று நிணைக்கிறேன்.... உன்னைக் கேட்காமல் உன் அலுவலகத் தொலைபேசி எண்ணைக்கூட அவரிடம் கொடுத்துவிட்டேன்... தவறு என்றால் மன்னித்துக் கொள்"

ம்... அகல்யா கூறியது இவராகத்தான் இருக்க வேண்டும் ஆனால் இதை எப்படி ஊர்ஜிதம் செய்து கொள்வது...

இவ்வாறாக சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த எனது சிந்னைப் பறவைகளை... "ஹலோ... உதயா நீங்க என்னைத் தவறாக நினைக்கிற மாதிரி தெரிகிறது. ஊங்க தோழி அகல்யாதான் என்னை உங்களிடம் பேசச் சொன்னாங்க..." என்ற ரவியின் பேச்சு கலைத்தது.

"ம்... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... நீங்க என்னிடம் பேச விரும்புவதாக அகல்யா முன்பே என்னிடம் சொல்லி இருந்தாலும் எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியலே..." நான் சமாளிக்க முயன்றேன்.

"அதனால் என்ன... போகப்போக நீங்களும் ஒரு நல்ல தோழியாக ஆகிவிடுவீங்க மிஸ் உதயா... இப்ப நான் ஆபிசிலிருந்து பேசுறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தா, எனக்கு தாராளமாக ஃபோன் செய்யலாம்" என்றபடி தனது அலுவலக எண்ணையும் வீட்டு எண்ணையும் குறித்துக் கொள்ளச் சொன்னார்.

தொலைபேசியில் ஆரம்பமான எங்களது நட்பு நாளடைவில் எனது அலுவலகத்தில் வேலை செய்யும் சக தோழியருக்கும் தெரிய வந்தது. நான் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் எங்களது உரையாடலுக்கு காதல் சாயம் பூசத் தொடங்கினார்கள்.

எங்களது தொலைபேசி உரையாடல் நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. ஆரம்பத்தில் ரவியை ஒரு சாதாரண நண்பராக மட்டுமே நினைத்துப் பழகிய எனக்கு, அவர் என்னிடம் பேசிய விதம், என்னை அவரிடம் தஞ்சமடையச் செய்தது. அவரது தொலைபேசி உரையாடலுக்காக மனம் ஏங்கித் தவித்தது. சில சமயங்களில் ஒருநாள் முழுக்க என்னிடம் பேசாமல் இருப்பாரேயானால், அதற்காக என் மனம் படும்பாட்டை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இவ்வாறு என் மனம் அவரை நினைத்து மௌனராகம் பாடிக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள்...

"உதயா, உனக்கு ரவியை எதற்காக அறிமுகம் செய்து வைத்தேன் தெரியுமா..? நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில் ஒன்றிணைந்து இல்லறம் நடத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான். ரவி ரொம்ப நல்லவரு... நீதான் அவர்கிட்ட பேசியிருக்கிறாயே... அவர் உன்னை மனமார விரும்புகிறார். ஆனால் உன்னிடம் அதைச் சொல்ல பயப்படுகிறாராம்... ப்ளீஸ்.. உதயா எனக்காக ரவியை நீ சந்தித்துப் பேச வேண்டும்" என்றாள் அகல்யா.

வேலை முடிந்ததும் சுமார் ஆறரை மணிக்கு ரவியை சந்திக்க முடிவு செய்தேன். அன்று முழுவதும் என்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. ஏதோ பெரியதொரு தவற்றைச் செய்யப் போவது போன்ற மனப்பிரம்மை என்னைப் பிடித்து உலுக்கியது. எப்படியோ ஒரு வழியாக என் மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவரை அன்று மாலை சந்தித்தேன்.

ஆனால் அதுவே எங்கள் கடைசிச் சந்திப்பாக இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. அன்று முதல் ரவி அடியோடு மாறிவிட்டார். அவர் அதற்குப் பிறகு ஒரு வார்த்தைகூட என்னிடம் பேச முயலவில்லை. அப்போதுதான் எனக்குப் புரிந்தது அவர் பசுத்தோல் போர்த்திய புலியென்று. ஆவர் விரும்பியதெல்லாம் எனது வெளியழகையே தவிர என்னையல்ல என்பதை நான் புரிந்து கொண்டேன்.

சிவந்த மேனி, அடர்ந்த கருங்கூந்தல், கவி பாடும் கயல்விழிகள், செம்பவளக் கன்னங்கள், துடிப்பான அதரங்கள், முத்துப் பற்கள், கட்டான உடல் என ஒரு பெண்ணிடம் மறைந்து போகக் கூடிய அழகை எதிர்பார்க்கும் இவரைப்போன்றவர்கள் ஏனோ உள்ளத்தழகை ஒரு போதும் சீர்தூக்கிப் பார்ப்பதில்லை.

ரவியைப் போன்ற பச்சோந்தி குணம் படைத்தவர்களை அடியோடு வெறுத்த நான் ரவியை விரும்பியதற்காக வெட்கப்படவே முடிந்தது.

என் வாழ்க்கையில் தென்றலாக வீசி, திடீரென என்னை விட்டுப் பிரிந்துபோன ரவியை இன்றுதான் மீண்டும் சந்தித்தேன்.

முன்பு ஒரு சமயம் ரவியைப் பற்றி பேசிக் கொண்டிருந்துபோது, அகல்யா... "ரவி ரொம்ப கொடுத்து வைத்தவர்... அவருக்குக் கிடைத்த மனைவி அழகில் ரதியையும் மிஞ்சக் கூடியவள் " என்று கூறியது என் நினைவுக்கு வந்தது.

காரணம், இப்போது நான் கண்ட ரவியின் மனைவியின் முகத்தில் தீக் காயத்தால் ஏற்பட்ட வடுக்கள் தெளிவாகத் தெரிந்தன.

இதுதான் விதியின் விளையாட்டா?



விதியின் விளையாட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 9:00 pm

வெளி அழகில் மயங்குபவங்களுக்கு ..இப்படிதான் மனைவி அமையும்
மீனு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மீனு



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 9:01 pm

விதியின் விளையாட்டு 838572 விதியின் விளையாட்டு 838572 விதியின் விளையாட்டு 838572

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 9:02 pm

meenuga wrote:வெளி அழகில் மயங்குபவங்களுக்கு ..இப்படிதான் மனைவி அமையும்

விதியின் விளையாட்டு 677196 விதியின் விளையாட்டு 677196 விதியின் விளையாட்டு 677196



விதியின் விளையாட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக