புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 12:06 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
96 Posts - 49%
heezulia
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
7 Posts - 4%
prajai
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
2 Posts - 1%
cordiac
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
223 Posts - 52%
heezulia
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
16 Posts - 4%
prajai
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
2 Posts - 0%
Barushree
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்???


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 30, 2011 2:46 am

வெண்ணிலவு தேனிறைக்க
வேளை நடுச்சாமத்திலே
கண்ணிரண்டும் தான்கலக்க
காதல்செய்யும் மன்னவரே
எண்ணியிவள் உன்னவளாய்
இங்குமனம் வெந்திருக்க
கண்ணியமும் தாழ்ந்தவளைக்
கண்டுமகிழ் வெய்திடலேன்?

பன்னிரண்டு மணிவரையும்
பக்கமவள் தானிருந்து
சின்னவிரல் கொண்டழைந்து
சேருமின்பம் காணுகிறீர்
என்னைமனம் நோகவிட்டு
என்னருமைச் சக்களத்தி
தன்னில் மோகம்கொண்டதென்ன
தனியிருந்து வாடுகிறேன்

திங்களடி உன் வதனம்
தித்திக்கும் கன்னமிது
பொங்குதடி என்இதயம்
பொன்னென் றன்றுரைத்தீர்
மங்கிமதி கெட்டுழன்று
மன்னவரே இன்றவளின்
அங்கமெலாம் மின்சாரம்
ஆஹா..கா.. என்கின்றீர்

பேசுவது நானென்றால்
போதுமடி மூடென்று
ஏசிமனம் நோகவைத்தீர்
இன்றவளோ எத்தனைதான்
மாசுபட பொய்யுரைக்க
மையலிடும் கதைபடிக்க
கூசும்மனம் ஏதுமின்றி
கோடிமகிழ்வெய்துகிறீர்

என்னபுதிர் கேட்டாலும்,
எடுத்துரைக்க வல்லவளாம்
சொன்னவேலை கச்சிதமாய்
சுறுசுறுப்பாய் ஆற்றிடுவாள்
என்னழகுச் சித்திரமாய்
எழுதுகிறாள் என்றரற்றி
மென்னழகுப் பொருள்ஈந்து
மிகமகிழ்வு கொள்ளுகிறீர்

கல்லெனவே மனதுடையாள்
கண்டதெலாம் சொல்லிடுவாள்
பொல்லாத மாயமிட்டு
பொழுதெல்லாம் அருகிருத்தி
அல்லதொரு சுகமளிப்பாள்
அடுத்தவரின் சேதிசொல்வாள்
உள்ளதொரு ஊர்ப்புதினம்
ஓயாது எடுத் துரைப்பாள்

மின்னும் இதழ் கொண்டுமையே
மோகமுறச் செய்ததென்ன?
இன்னிசைகள் பாடிஉனை
ஏக்கமுறச் வைத்ததுஏன்?
சொன்னகதை எத்தனையோ
சுகமளிக்கும் வித்தையதோ
என்னவகை ஆயிருந்தும்
இதயமற்ற வன்மையலாள்

அன்னமென ஆக்கியுமை
அறுசுவையில் விருந்தளிக்க
சின்னவளால் முடிகிறதோ
செய்வதென்ன நானல்லவோ
சின்னவளைத் தொட்டெவரும்
சில்மிஷங்கள் செய்வரென
கன்னங் கருத்துவிடக்
கட்டிஒரு மந்திரமும்

இட்டுவைத்தும் நீர்வீட்டில்
இல்லாத சமயமெவர்
தொட்டாலும் முகம்மலர்ந்து
சொன்னதெலாம் செய்கின்றாள்
விட்டதொட்ட கதையெல்லாம்
விவரித்துக் கூறுவதை
மட்டும் உமக் குரைத்து விடில்
மனம் வாடிப் போய்விடுவீர்


வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Lady

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Sep 30, 2011 1:13 pm

என்ன கவியே சுகமா? புதிர் கவிதை எழுதிவிட்டு மடி கணனி படத்தினையும் போட்டுவிட்டீர்! நில்லாத பொழுதை வீணடிக்கவும், சொல்லாத செய்திகளை தானியம்பி பொல்லாத போக்கிரித் தனங்களை தளங்களில் தழுவவிடும் இணயதள வசதியைத்தான் இயம்பிநீர் புதிராக!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 30, 2011 7:16 pm

Kaa Na Kalyanasundaram wrote:என்ன கவியே சுகமா? புதிர் கவிதை எழுதிவிட்டு மடி கணனி படத்தினையும் போட்டுவிட்டீர்! நில்லாத பொழுதை வீணடிக்கவும், சொல்லாத செய்திகளை தானியம்பி பொல்லாத போக்கிரித் தனங்களை தளங்களில் தழுவவிடும் இணயதள வசதியைத்தான் இயம்பிநீர் புதிராக!

நன்றிகள் தங்கள் அன்புக்கு!
நலமும், நலம்போலும் நலத்துடன் நலமிழந்து
அதுவுமின்றி இதுவுமின்றி எல்லாமே இருப்பதுபோல்
ஏதோ வாழ்க்கை போகிறது.

முதல் கவியில் எழுதியதுபோல்

குழிந்திடும் கண்கள் குறைந்திடும் பார்வை
கூனிடும் முதுமைதனும்
அழுந்திடு பிணியும் உழன்றிட வலியும்
அதனுடன் சிலராகும்
விழுந்திடும் குரலும் வீம்பத னழிவும்
வெறுமையின் நினைவோடும்
கழிந்திடும் வாழ்வில் கவிதைகள்தானே
காற்றினை உள்நிறுத்தும்

மற்றும்படி உடலால் உறுதியாக உள்ளேன் ! தாங்கள் நலம்தானே?


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக